முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 185. ஆறு இனிது படுமே!
புறநானூறு - 185. ஆறு இனிது படுமே!
பாடியவர்: தொண்டைமான் இளந்திரையன்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
(இது உலகாளும் முறைமையைக் கூறியதாம்.)
கால்பார் கோத்து, ஞாலத்து இயக்கும் காவற் சாகாடு உகைப்போன் மாணின், ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே; உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும், பகைக்கூழ் அள்ளற் பட்டு, |
5 |
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 183 | 184 | 185 | 186 | 187 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 185. ஆறு இனிது படுமே!, என்பது, இலக்கியங்கள், படுமே, அரசன், சிறந்து, இனிது, கோத்து, புறநானூறு, என்னும், விளங்கினால், ஆள்வோன், பார், எட்டுத்தொகை, தொண்டைமான், சாகாடு, பட்டு, சங்க, இளந்திரையன்