புறநானூறு - 181. இன்னே சென்மதி!
பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பி யார்.
பாடப்பட்டோன்: வல்லார் கிழான் பண்ணன்.
திணை: வாகை.
துறை: வல்லாண்முல்லை.
மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில், கருங்கண் எயிற்றி காதல் மகனொடு, கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும் பெருங்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப், புலாஅல் அம்பின், போர்அருங் கடிமிளை, |
5 |
வலாஅ ரோனே, வாய்வாள் பண்ணன்; உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின், இன்னே சென்மதி, நீயே; சென்று, அவன் பகைப்புலம் படரா அளவை, நின் பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே. |
10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 179 | 180 | 181 | 182 | 183 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 181. இன்னே சென்மதி!, அவன், இலக்கியங்கள், சென்மதி, இன்னே, அந்த, பண்ணன், புறநானூறு, உடனே, செல்க, பகைப்புலம், எயிற்றி, எட்டுத்தொகை, சங்க