புறநானூறு - 180. நீயும் வம்மோ!
பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்.
திணை: வாகை.
துறை: வல்லாண்முல்லை; பாணாற்றுப் படையும் ஆம்.
நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே; இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே; இறையுறு விழுமம் தாங்கி, அமர்அகத்து இரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய் தீர்ந்து, மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி, |
5 |
வடுவின்றி வடிந்த யாக்கையன், கொடையெதிர்ந்து, ஈர்ந்தை யோனே, பாண்பசிப் பகைஞன்; இன்மை தீர வேண்டின், எம்மொடு நீயும் வம்மோ? முதுவாய் இரவல! யாம்தன் இரக்கும் காலைத், தான்எம் |
10 |
உண்ணா மருங்குல் காட்டித், தன்ஊர்க் கருங்கைக் கொல்லனை இரக்கும், திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 178 | 179 | 180 | 181 | 182 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 180. நீயும் வம்மோ!, அவன், நீயும், இலக்கியங்கள், வம்மோ, இல்லை, புறநானூறு, அவனிடத்தில், இருக்கும், அவனிடம், வறுமை, நான், உதவும்படி, மறுக்கும், சங்க, எட்டுத்தொகை, கொடுக்கும், செல்வமும், கொண்ட, இலனே, இரக்கும்