முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » சைவ சித்தாந்த சாத்திரங்கள் » திருக்களிற்றுப்படியார்
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஒன்றுரைத்த தொன்றுரையாச் சாத்திரங்க ளொன்றாக நின்றுரைத்து நிச்சயிக்க மாட்டாவால் - இன்றுரைக்க என்னா லியன்றிடுமோ வென்போல்வா ரேதேனுஞ் சொன்னால்தா னேறுமோ சொல். |
81 |
யாதேனுங் காரணத்தா லெவ்வுலகி லெத்திறமு *மாதேயும் பாக னிலச்சினையே - ஆதலினாற் பேதமே செய்வா யபேதமே செய்திடுவாய் பேதாபே தஞ்செய்வாய் பின். |
82 |
*யாதேயும் பாகனிலச்சினையே |
நின்றபடி நின்றவர்கட் கன்றி *நிறந்தெரியா மன்றினுணின் றாடன் மகிழ்ந்தானுஞ் - சென்றுடனே எண்ணுறுமைம் பூதமுத லெட்டுருவாய் நின்றானும் பெண்ணுறநின் றாடும் பிரான். |
83 |
*நிறந்தெரியான் |
சிவமே சிவமாக யானினைந்தாற் போலச் சிவமாகி *யேயிருப்ப தன்றிச் - சிவமென் றுணர்வாரு மங்கே யுணர்வழியச் சென்று புணர்வாரு முண்டோ புவி. |
84 |
*யேயிருத்த |
அதுவிது வென்று மவனானே யென்றும் அதுநீயே யாகின்றா யென்றும் - அதுவானேன் என்றுந் தமையுணர்ந்தா ரெல்லா மிரண்டாக ஒன்றாகச் சொல்வரோ வுற்று. |
85 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், திருக்களிற்றுப்படியார், சாத்திரங்கள், சித்தாந்த, யென்றும், இலக்கியங்கள்