முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » 19.திருத்தசாங்கம் - அடிமை கொண்ட முறைமை
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 19.திருத்தசாங்கம் - அடிமை கொண்ட முறைமை

19.திருத்தசாங்கம் - அடிமை கொண்ட முறைமை
(தில்லையில் அருளியது)
நேரிசை வெண்பா
(தில்லையில் அருளியது)
நேரிசை வெண்பா
ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன் சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன் செம்பெருமான் வெண்மலாரான் பாற்கடலான் செப்புவபோல் எம்பெருமான் தேவர்பிரான் என்று. | 358 |
ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும் நாதன்மை ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க்கு அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும் தென்பாண்டி நாடே தெளி. | 359 |
தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும் மாதாடும் பாகத்தான் வாழ்பதியென் - கோதட்டிப் பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும் உத்தர கோசமங்கை யூர். | 360 |
செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசேர் ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் - தையலாய் வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும் ஆனந்தங் காணுடையான் ஆறு. | 361 |
கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன் மஞ்சன் மருவும் மலைபகராய் - நெஞ்சத்து இருளகல வாள்வீசி இன்பமரும் முத்தி அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து. | 362 |
இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும் தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப வான்புரவி யூரும் மகிழ்ந்து. | 363 |
கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோள் மாற்றாறை வெல்லும் படைபகராய் - ஏற்றார் அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங் கழுக்கடைகாண் கைக்கொள் படை. | 364 |
இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோள் முன்பால் முழங்கும் முரசியம்பாய் - அன்பாற் பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும் பருமிக்க நாதப் பறை. | 365 |
ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூரும் அன்பர்பால் மேய பெருந்துறையான் மெய்த்தாரென் - தீயவினை நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான் தாளிஅறு காம் உவந்த தார். | 366 |
சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன் கோலம் பொலியுங் கொடிகூறாய் - சாலவும் ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும் கோதிலா ஏறாம் கொடி. | 367 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
19.திருத்தசாங்கம் - அடிமை கொண்ட முறைமை - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மொழிக்கிள்ளாய், பெருந்துறைக்கோன், பெருந்துறைக்கோள், ஆளுடையான், எங்கள், பெருந்துறையான்