முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » 39.திருப்புலம்பல் - சிவானநத முதிர்வு
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 39.திருப்புலம்பல் - சிவானநத முதிர்வு

39.திருப்புலம்பல் - சிவானநத முதிர்வு
(திருவாரூரில் அருளியது)
கொச்சகக் கலிப்பா
(திருவாரூரில் அருளியது)
கொச்சகக் கலிப்பா
பூங்கமலத் தயனெடுமால் அறியாத நெறியானே கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின் பூங்கழல்கள் அவையல்லா தெவையாதும் புகழேனே. | 556 |
சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப் படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை விடையானே விரிபொழில்சூழ் பெருந்துறையாய் அடியேன்நான் உடையானே உனையல்லா துறுதுணை மற் றறியேனே. | 557 |
உற்றாறை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாறை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும் குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே. | 558 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
39.திருப்புலம்பல் - சிவானநத முதிர்வு - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - யான்வேண்டேன், உடையானே