முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » 14.திருஉந்தியார் - ஞான வெற்றி
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 14.திருஉந்தியார் - ஞான வெற்றி

14.திருஉந்தியார் - ஞான வெற்றி
(தில்லையில் அருளியது)
கலித்தாழிசை
(தில்லையில் அருளியது)
கலித்தாழிசை
வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீபற ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. | 295 |
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற ஒன்றும் பெருமிகை உந்தீபற. | 296 |
தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும் அச்சு முறிந்ததென் றுந்தீபற அழந்தன முப்புரம் உந்தீபற. | 297 |
உய்யவல் லாரெரு மூவரைக் காவல்கொண் டெய்யவல் லானுக்கே உந்தீபற இளமுலை பங்கனென் றுந்தீபற. | 298 |
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள் ஓடிய வாபாடி உந்தீபற உருந்திர நாதனுக் குந்தீபற. | 299 |
ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று சாவா திருந்தானென் று தீபற சதுர்முகன் தாதையென் றுந்தீபற. | 300 |
வெய்யவன் அங்கி விழுங்கத்திரட்டிய கையைத் தறித்தானென் றுந்தீபற கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற. | 301 |
பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப் பார்ப்பதென் னேயேடி யந்தீபற பணைமுலை பாகனுக் குந்தீபற. | 302 |
புரந்தர னாரொரு பூங்குயி லாகி மரந்தனி லேறினார் உந்தீபற வானவர் கோனென்றே உந்தீபற. | 303 |
வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை துஞ்சிய வாபாடி உந்தீபற தொடர்ந்த பிறப்பற உந்தீபற. | 304 |
ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக் கூட்டிய வாபாடி உந்தீபற கொங்கை குலுங்கிநின் றுந்தீபற. | 305 |
உண்ணப் புகுந்த பகனொளிந் தோடாமே கண்ணைப் பறித்தவா றுந்தீபற கருக்கெட நாமெல்லாம் உந்தீபற. | 306 |
நாமகள் நாசி சிரம்மி மன்படச் சோமன் முகன் நெரித் துந்தீபற தொல்லை வினைகெட உந்தீபற. | 307 |
நான்மறை யோனும் அகத்திய மான்படப் போம்வழி தேடுமா றுந்தீபற புரந்தரன் வேள்வியி லுந்தீபற. | 308 |
சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை வாரி நெரித்தவா றுந்தீபற மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற. | 309 |
தக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கன் மக்களைச் சூழநின் றுந்தீபற மடிந்தது வேள்வியென் றுந்தீபற. | 310 |
பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட கோலச் சடையற்கே யந்தீபற குமரன்தன் தாதைக்கே உந்தீபற. | 311 |
நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை ஒல்லை யரிந்ததென் றுந்தீபற உகிரால் அரிந்ததென் றுந்தீபற. | 312 |
தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம் ஈரைந்தும் இற்றவா றுந்தீபற இறுபதும் இற்றதென் றுந்தீபற. | 313 |
ஏகாசமிட்ட இருடிகள் போகாமல் ஆகாசங்காவலென் றுந்தீபற அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற. | 314 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
14.திருஉந்தியார் - ஞான வெற்றி - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - றுந்தீபற, உந்தீபற, வேள்வியென், முப்புரம், வாபாடி, னார்தலை, யந்தீபற, வேள்வி, குந்தீபற