முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » 51.அச்சோப் பதிகம் - அனுபவவழி அறியாமை
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 51.அச்சோப் பதிகம் - அனுபவவழி அறியாமை

51.அச்சோப் பதிகம் - அனுபவவழி அறியாமை
(தில்லையில் அருளியது)
(தில்லையில் அருளியது)
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. | 650 |
நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச் சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம் குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. | 651 |
பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித் தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம் ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. | 652 |
மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன் கண்ணவெண்ணீ றணிவித்துத் தூய்நெறியே சேரும்வண்ணம் அண்ணல்எனக் கருளியவா றார்வபெறுவார் அச்சோவே. | 653 |
பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன் உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே. | 654 |
வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக் கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப் பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. | 655 |
தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப் பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி உய்யும்நெறி காட்டுவித்திட் டோ ங்காரத் துட்பொருளை ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. | 656 |
சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக் காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம் ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. | 657 |
செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான் நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. | 658 |
செத்திடமும் பிறந்திடமு மினிச்சாவா திருந்திடமும் அத்தனையு மறியாதார் அறியுமறி வெவ்வறிவோ ஒத்தநில மொத்தபொருள் ஒருபொருளாய் பெரும்பயனை அத்ததெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே. | 659 |
படியதினிற் கிடந்திந்தப் பசு பாசந் தவிர்ந்துவிடும் குடிமையிலே திறிந் தடியேன் கும்பியிலே விழாவண்ணம் நெடியவனும் நான்முகனும் நீர்கான்றுங் காணவொண்ணா அடிகளெனக் கருளியவா றார்பெறுவா ரச்சாவே. | 660 |
பாதியெனு மிரவுதங்கிப் பகலெமக்கெ யிரைதேடி வேதனையி லகப்பட்டு வெந்துவிழக் கடவேனை சாதிகுலம் பிறப்பறுத்துச் சகமறிய வெனையாண்ட ஆதியெனுக் கருளியவா றார்பெறுவா ரச்சாவே. | 661 |
திருச்சிற்றம்பலம்
திருவாசகம் முற்றிற்று.
திருவாசகம் முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
51.அச்சோப் பதிகம் - அனுபவவழி அறியாமை - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கருளியவா, அச்சோவே, றார்பெறுவார், சேரும்வண்ணம், றார்பெறுவா, கடவேனை, ரச்சாவே, ஐயன்எனக், மெய்யென்று, அறியாத, தன்கழலே