பதினோராம் திருமுறை - 4.3. திருக்கயிலாய ஞான உலா

300 | திருமாலும் நான்முகனுந் தேர்ந்துணரா தன்றங் கருமால் உறஅழலாய் நின்ற - பெருமான் பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான் துறவாதே யாக்கை துறந்தான் - முறைமையால் ஆழாதே ஆழ்ந்தான் அகலா தகலியான் ஊழால் உயராதே ஓங்கினான் - சூழொளிநூல் ஓதா துணர்ந்தான் நுணுகாது நுண்ணியான் யாதும் அணுகா தணுகியான் - ஆதி அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான் அரனாய் அழிப்பவனும் தானே ௭ பரனாய |
5 |
தேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான் மேவிய வாறே விதித்தமைத்தான் - ஓவாதே எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் - எவ்வுருவும் தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம் ஏனோர்க்குங் காண்பரிய எம்பெருமான் - ஆனாத சீரார் சிவலோகந் தன்னுள் சிவபுரத்தில் ஏரார் திருக்கோயில் உள்ளிருப்ப - ஆராய்ந்து செங்கண் அமரர் புறங்கடைக்கட் சென் றீண்டி எங்கட்குக் காட்சியருள் என்றிரப்ப - அங்கொருநாள் |
10 | |
பூமங்கை பொய்தீர் தரணி புகழ்மங்கை நாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த - சேமங்கொள் ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை தேன் மொய்த்த குஞ்சியின்மேற் சித்திரிப்ப - ஊனமில்சீர் நந்தா வனமலரும் மந்தா கினித்தடஞ்சேர் செந்தா மரைமலர்நூ றாயிரத்தால் - நொந்தா வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் - பயன்கொள் குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு நலமலிய ஆகந் தழீஇக் - கலைமலிந்த |
15 | |
கற்பகம் ஈன்ற கமழ்பட் டினைஉடுத்துப் பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து - விற்பகரும் சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர் வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத் - தோளா மணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்தாங் கணிவயிரக் கண்டிகை பொன்னாண் - பணிபெரிய ஆரம் அவைபூண் டணிதிக ழுஞ்சன்ன வீரந் திருமார்பில் வில்லிலக - ஏருடைய எண்டோட்கும் கேயூரம் பெய்துதர பந்தனமும் கண்டோர் மனமகிழக் கட்டுறீஇக் - கொண்டு |
20 | |
கடிசூத் திரம்புனைந்து கங்கணங்கைப் பெய்து வடிவுடைய கோலம் புனைந்தாங் - கடிநிலை மேல் நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து வந்து வசுக்கள் இருக்குரைப்ப - அந்தமில்சீர் எண்ணருங் கீர்த்தி எழுவர் இருடிகளும் அண்ணல்மேல் ஆசிகள் தாமுணர்த்த - ஒண்ணிறத்த பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப மன்னும் அகத்தியன்யாழ் வாசிப்பப் பொன்னியலும் அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் - செங்கண் |
25 | |
நிருதி முதலோர் நிழற்கலன்கள் ஏந்த வருணன் மணிக்கலசந் தாங்கத் -தெருவெலாம் வாயு நனிவிளக்க மாமழை நீர்தெளிப்பத் தூயசீர்ச் சோமன் குடையெடுப்ப - மேவியசீர் ஈசானன் வந் தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள் வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத் - தூய உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன் திருத்தகு மாநிதியஞ் சிந்தக் - கருத்தமைந்த கங்கா நதியமுனை உள்ளுருத்த தீர்த்தங்கள் பொங்கு கவரி புரையிரட்டத் - தங்கிய |
30 | |
பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண் கைந்நாகம் எட்டும் கழல்வணங்க - மெய்ந்நாக மேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய் மேகத் துருமு முரசறையப் - போகஞ்சேர் தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும் கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட - எம்பெருமான் விண்ணோர் பணிய உயர்ந்த விளங்கொளிசேர் வெண்ணோர் மழவிடையை மேற்கொண்டாங் - கெண்ணார் கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத் திருக்கடைகள் ஏழ்கழிந்த போதில் - செருக்குடைய |
35 | |
சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல் ஆனாப்போர் இந்திரன் பின்படர - ஆனாத அன்னத்தே ஏறி அயன்வலப்பால் கைபோதக் கன்னவிலுந் திண்டோட் கருடன்மேல் ௭ மன்னிய மால்இடப்பாற் செல்ல மலரார் கணைஐந்து மேலிடப்பால் மென்கருப்பு வில்லிடப்பால் - ஏல்வுடைய சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல் எய்வான் கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த - ஐங்கணையான் காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி வாமன் புரவிமேல் வந்தணைய - நாமஞ்சேர் |
40 | |
வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்துச் சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டை ஒண்கண் - தாழ்கூந்தல் மங்கை எழுவருஞ் சூழ மடநீலி சிங்க அடலேற்றின் மேற்செல்லத் - தங்கிய விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர் அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும் சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம் கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத் தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும் |
45 | |
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ் இடமாந் தடாரி படகம் - இடவிய மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால் எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும் கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் - தங்கிய ஆறாம் இருதுவும் யோகும் அருந்தவமும் மாறாத முத்திரையும் மந்திரமும் - ஈறார்ந்த காலங்கள் மூன்றுங் கணமுங் குணங்களும் வால கிலியரும் வந்தீண்டி - மேலை |
50 | |
இமையோர் பெருமானே போற்றி எழில்சேர் உமையாள் மணவாளா போற்றி - எமையாளும் தீயாடி போற்றி சிவனே அடிபோற்றி ஈசனே எந்தாய் இறைபோற்றி - தூயசீர்ச் சங்கரனே போற்றி சடாமகுடத் தாய்போற்றி பொங்கரவா பொன்னங் கழல்போற்றி - அங்கொருநாள் ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப் பாசுபதம் ஈந்த பதம்போற்றி - தூய மலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர் தலைமேலாய் போற்றிதாள் போற்றி - நிலைபோற்றி |
55 | |
போற்றியெனப் பூமாரி பெய்து புலன்கலங்க நாற்றிசையும் எங்கும் நலம்பெருக - ஏற்றுக் கொடியும் பதாகையும் கொற்றக் குடையும் வடிவுடைய தொங்கலுஞ் சூழக் -கடிகமழும் பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான் வாமான ஈசன் வரும்போழ்திற் - சேமேலே |
வாமான ஈசன் மறுவில்சீர் வானவர்தம் கோமான் படைமுழக்கம் கேட்டலுமே -தூமாண்பில் வானநீர் தாங்கி மறையோம்பி வான்பிறையோ டூனமில் சூலம் உடையவாய் - ஈனமிலா |
60 | |
வெள்ளை அணிதலால் வேழத் துரிபோர்த்த வள்ளலே போலும் வடிவுடைய - ஒள்ளிய மாட நடுவில் மலரார் அமளியே கூடிய போர்க்கள மாக்குறித்துக் - கேடில் சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா விலங்கு கொடும்புருவம் வில்லா - நலந்திகழும் கூழைபின் தாழ வளையார்ப்பக் கைபோந்து கேழ்கிளரும் அல்குலாந் தேருந்திச் - சூழொளிய கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனங்கவர அங்கம் பொருதசைந்த ஆயிழையார் - செங்கேழற் |
65 | |
பொற்கலசத் துள்ளால் மணிநீர் முகஞ்சேர்த்தி நற்பெருங் கோலம் மிகப்புனைந்து - பொற்புடைய பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக மாதரவர் சேர மகிழ்ந்தீண்டிச் - சோதிசேர் சூளிகையுஞ் சூட்டுஞ் சுளிகையுஞ் சுட்டிகையும் வாளிகையும் பொற்றோடும் மின்விலக - மாளிகையின் மேல்ஏறி நின்று தொழுவார் துயர்கொண்டு மால்ஏறி நின்று மயங்குவார் - நூல்ஏறு தாமமே தந்து சடாதாரி நல்கானேல் யாமமேல் எம்மை அடுமென்பார் - காமவேள் |
70 | |
ஆமென்பார் அன்றென்பார் ஐயறுவார் கையெறிவார் தாம்முன்னை நாணோடு சங்கிழப்பார் - பூமன்னும் பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டு துன்னரி மாலையாச் சூடுவார் - முன்னம் ஒருகண் எழுதிவிட் டொன்றெழுதாதோடித் தெருவம் புகுவார் திகைப்பார் - அருகிருந்த கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளிஎன்று பண்ணாடிச் சொற்பந்துக் குற்றுரைப்பார் - அண்ணல்மேற் கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார் திண்ண நிறைத்தாழ் திறந்திட்டார் - ஒண்ணிறத்த |
75 |
பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால் தூதைச் சிறுசோ றடுதொழிலாள் - தீதில் இடையாலும் ஏக்கழுத்த மாட்டாள் நலஞ்சேர் உடையாலும் உள்ளுருக்க கில்லாள் - நடையாலும் கெளவைநோய் காளையரைச் செய்யாள் கதிர்முலைகள் எவ்வநோய் செய்யுந் தொழில்பூணாள் - செவ்வனேர் நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள்தன் செவ்வாயின் வாக்கும் பிறர்மனத்தை வஞ்சியாள் - பூக்குழலும் பாடவந் தோன்ற முடியாள் இளவேய்த்தோள் ஆடவர் தம்மை அயர்வுசெய்யாள் - நாடொறும் |
80 | |
ஒன்றுரைத் தொன்றுன்னி ஒன்றுசெய் தொன்றின்கண் சென்ற மனத்தினளாஞ் சேயிழையாள் - நன்றாகத் தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி நீல அறுவை விரித்துடுத்துக் - கோலஞ்சேர் பந்தரிற் பாவை கொண்டாடும்இப் பாவைக்குத் தந்தையார் என்றொருத்தி தான்வினவ - அந்தமில்சீர் ஈசன் எரியாடி என்ன அவனையோர் காய்சின மால்விடைமேற் கண்ணுற்றுத் - தாய்சொன்ன இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமன்நூல் நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள் - பொற்புடைய |
85 |
பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள் காரொளிசேர் மஞ்ஞைக் கவின்இயலாள் - சீரொளிய தாமரை ஒன்றின் இரண்டு குழையிரண்டு காமருவி கெண்டையோர் செந்தொண்டை - தூமருவு முத்த முரிவெஞ் சிலைசுட்டி செம்பவளம் வைத்தது போலும் மதிமுகத்தாள் - ஒத்தமைந்த கங்கணஞ் சேர்ந்திலங்கு கையாள் கதிர்மணியின் கிங்கணி சேர்ந்த திருந்தடியாள் - ஒண்கேழல் அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள் ஆய்பொதியிற் சந்தனந் தோய்ந்த தடந்தோளாள் - வந்து |
90 | |
திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள் கடல்பட்ட இன்னமுதம் அன்னாள் - மடல்பட்ட மாலை வளாய குழலாள் மணம்நாறு சோலை இளங்கிளிபோல் தூமொழியாள் - சாலவும் வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக் கஞ்சனத்தை இட்டங் கழகாக்கி - எஞ்சா மணியாரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி அணியார் வளைதோள்மேல் மின்ன - மணியார்த்த தூவெண் மணற்கொண்டு தோழியருந் தானுமாய்க் காமன் உருவம் வரஎழுதிக் - காமன் |
95 | |
கருப்புச் சிலையும் மலரம்புந் தேரும் ஒருப்பட் டுடன் எழுதும் போழ்தில் - விருப்பூரும் தேனமருங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன் வானமால் ஏற்றின்மேல் வந்தணையத் - தானமர நன்றறிவார் சொன்ன நலந்தோற்று நாண்தோற்று நின்றறிவு தோற்று நிறைதோற்று - நன்றாகக் கைவண்டுங் கண்வண்டும் ஓடக் கலைஓட நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் - மொய்கொண்ட |
மங்கை யிடங்கடவா மாண்பினாள் வானிழிந்த கங்கைச் சுழியனைய உந்தியாள் - தங்கிய |
100 | |
|
105 | |
பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும் சொற்கோட்டி கொண்டிருந்த ஏல்வைக்கண் - நற்கோட்டு வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல் ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு - தெள்ளியநீர் தாழுஞ் சடையான் சடாமகுடந் தோன்றுதலும் வாழுமே மம்மர் மனத்தளாய்ச் - சூழொளியான் தார்நோக்குந் தன்தாரும் நோக்கும் அவனுடைய ஏர்நோக்குந் தன்ன தெழில் நோக்கும் - பேரருளான் தோள்நோக்குந் தன்தோளும் நோக்கும் அவன்மார்பின் நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து - நாண் நோக்கா |
110 | |
துள்ளம் உருக ஒழியாத வேட்கையாம் வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள் - ஒள்ளிய |
தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர் |
115 | |
|
120 | |
|
125 | |
மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால அணியேறு தோளானைக் கண்டாங் - கணிஆர்ந்த கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக் கோட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி - நாட்டார்கள் எல்லாருங் கண்டார் எனக் கடவுள் இங்காயம் நல்லாய் படுமேற் படுமென்று -மெல்லவே செல்ல லுறுஞ்சரணம் கம்பிக்குந் தன்னுறுநோய் சொல்லலுறுஞ் சொல்லி உடைசெறிக்கும் - நல்லாகம் காண லுறுங்கண்கள் நீர்மல்கும் காண்பார்முன் நாண லுறும்நெஞ்சம் ஒட்டாது - பூணாகம் |
130 | |
புல்லலுறும் அண்ணல்கை வாரான்என் றிவ்வகையே அல்லலுறும் அழுந்தும் ஆழ்துயரால் - மெல்லியலாள் தன்னுருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப் பொன்னுருவங் கொண்டு புலம்புற்றாள் - பின்னொருத்தி |
செங்கேழல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா அங்கேழ் அரிவைப் பிராயத்தாள் - ஒண்கேழல் திங்களுந் தாரகையும் வில்லுஞ் செழும்புயலும் தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையாற் - பொங்கொளிசேர் மின்னார்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே தன்னாவார் இல்லாத் தகைமையாள் - எந்நாளும் |
135 | |
|
140 | |
இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம் அண்ணல்மேல் தானிட்ட ஆசையால் - முன்னமே பாடல் தொடங்கும் பொழுதிற் பரஞ்சோதி கேடிலா மால்விடைமேல் தோன்றுதலும் - கூடிய இன்னிசையும் இப்பிறப்பும் பேணும் இருந்தமிழும் மன்னிய வீணையுங் கைவிட்டுப் -பொன்னனையீர் இன்றன்றே காண்ப தெழில் நலம் கொள்ளேனேல் நன்றன்றே பெண்மை நமக்கென்று - சென்றவன்தன் ஒண்களபம் ஆடும் ஒளிவாள் முகத்திரண்டு கண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும் - ஒண்கேழற் |
145 | |
கூந்தல் அவிழ்க்கும் முடிக்கும் கலைதிருத்தும் சாந்தந் திமிரும் முலைஆர்க்கும் - பூந்துகிலைச் சூழும் அவிழ்க்கும் தொழும் அழும் சோர்துயருற் றாழும் அழுந்தும் அயாவுயிர்க்கும் ௭ சூழொளிய அங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவாள் நங்கை இவளும் நலந்தோற்றாள் - அங்கொருத்தி |
ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய |
150 |
|
|
155 | |
அறிவுடையீர் நின்மின்கள் அல்லார்போம் என்று பறையறைவ போலுஞ் சிலம்பு - முறைமையால் சீரார் திருந்தடிமேற் சேர்த்தினாள் தேரல்குல் ஓரா தகலல் உறாதென்று - சீராலே அந்துகிலும் மேகலையும் சூழ்ந்தாள் அணிமுலைகள் மைந்தர் மனங்கவரும் என்பதனால் - முந்துறவே பூங்கச்சி னால்அடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால் காம்பொத்த தோளிணையைக் காப்பேவி - வாய்ந்தசீர் நற்கழுத்தை நல்லாரத் தால்மறைத்துக் காதுக்கு விற்பகருங் குண்டலங்கள் மேவுவித்து - மைப்பகரும் |
160 | |
|
165 | |
பொற்கவற்றின் வெள்ளிப் பலகை மணிச்சூது நற்கமைய நாட்டிப் பொரும்பொழுதில் - விற்பகிரும் தோளான் நிலைபேறு தோற்றங்கே டாய்நின்ற தாளான் சடாமகுடம் தோன்றுதலும் - கேளாய நாணார் நடக்க நலத்தார்க் கிடைஇல்லை ஏணார் ஒழிக எழில்ஒழிக - பேணும் குலத்தார் அகன்றிடுக குற்றத்தார் வம்மின் நலத்தீர் நினைமினீர் என்று - சொலற்கரிய தேவாதி தேவன் சிவனாயில் தேன்கொன்றைப் பூவார் அலங்கல் அருளாது - போவானேல் |
170 | |
கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து வண்டார்பூங் கோதை வளந்தோற்றாள் - ஒண்டாய |
பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள் |
175 |
|
பொற்செப் பிரண்டு முகடு மணியழுத்தி வைத்தன போல வளர்ந்தேந்தி - ஒத்துச் சுணங்கும் திதலையுஞ் சூழ்போந்து கண்டார்க் கணங்கும் அமுதமுமாய்த் தோன்றி - இணங்கொத்த கொங்கையாள் கோலங்கட் கெல்லாமோர் கோலமாம் நங்கையாள் நாகிளவேய்த் தோளினாள் - அங்கையாற் காந்தட் குலம்பழித்தாள் காமவேள் காதலாள் சாந்தம் இலங்கும் அகலத்தாள் - வாய்ந்துடனே ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால் தேய்ந்து துடித்த செழும்பவளம் -காய்த்திலங்கி |
180 | |
|
185 | |
|
190 | |
அரிஅரணஞ் செற்றாங் கலைபுனலும் பாம்பும் புரிசடைமேல் வைத்த புராணன் - எரிஇரவில் ஆடும் இறைவன் அமரர்குழாம் தற்சூழ மாட மறுகில் வரக்கண்டு - கேடில்சீர் வண்ணச் சிலம்படி மாதரார் தாமுண்ட கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் - அண்ணலே வந்தாய் வளைகவர்ந்தாய் மாலும் அருந்துயரும் தந்தாய் இதுவோ தகவென்று - நொந்தாள்போற் கட்டுரைத்துக் கைசோர்ந் தகமுருகி மெய்வெளுத்து மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் - கொட்டிமைசேர் |
195 | |
பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப் பெண்ணார வாரம் பெரிதன்றே - விண்ஓங்கி மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த செஞ்சடையான் போந்த தெரு |
1 |
301 | பெண்ணீர்மை காமின் பெருந்தோள் இணைகாமின் உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீரக் காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன் ஊரேறு போந்த துலா |
2 |
4.3. திருக்கயிலாய ஞான உலா - பதினோராம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - போற்றி, கொண்டு, சீரார், பிராயத்தாள், தங்கிய, போலும், அல்குலாள், வாய்ந்தசீர், தோன்றுதலும், நோக்கும், ஒண்கேழல், குண்டலங்கள், ஒண்ணிறத்த, வடிவுடைய, ஒள்ளிய, வாய்ந்த