முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பதினோராம் திருமுறை » 8.1. சிவபெருமான் திருவந்தாதி
பதினோராம் திருமுறை - 8.1. சிவபெருமான் திருவந்தாதி

8.1. சிவபெருமான் திருவந்தாதி
672 |
ஒன்றுரைப்பீர் போலப் பலஉரைத்திட் டோயாதே ஒன்றுரைப்பீர் ஆயின் உறுதுணையாம் - ஒன்றுரைத்துப் பேரரவம் பூண்டு பெருந்தலையில் உண்டுழலும் பேரரவம் பூணும் பிரான். |
1 |
673 |
பிரானிடபம் மால்பெரிய மந்தாரம் வில்லுப் பிரானிடபம் பேரொலிநா ணாகம் - பிரானிடபம் பேணும் உமைபெரிய புன்சடையின் மேலமர்ந்து பேணும் உமையிடவம் பெற்று. |
2 |
674 |
பெற்றும் பிறவி பிறந்திட் டொழியாதே பெற்றும் பிறவி பிறந்தொழிமின் - பெற்றும் குழையணிந்த கோளரவக் கூற்றுத்தான் தன்னைக் குழையணிந்த கோளரவ நீ. |
3 |
675 |
நீயேயா ளாவாயும் நின்மலற்கு நன்னெஞ்சே நீயேயா ளாவாயும் நீள்வாளின் -நீயே ஏறூர் புனற்சடையா எங்கள் இடைமருதா ஏறூர் புனற்சடையா என்று. |
4 |
676 |
என்றும் மலர்தூவி ஈசன் திருநாமம் என்றும் அலர்தூற்றி யேயிருந்தும் - என்றும் ------ ------ ------ ------ புகலூரா புண்ணியனே என். |
5 |
677 |
என்னே இவளுற்ற மாலென்கொல் இன்கொன்றை என்னே இவளொற்றி யூரென்னும் - என்னே தவளப் பொடியணிந்த சங்கரனே என்னும் தவளப் பொடியானைச் சார்ந்து. |
6 |
678 |
சார்ந்துரைப்ப தொன்றுண்டு சாவாமூ வாப்பெருமை சார்ந்துரைத்த தத்துவத்தின் உட்பொருளைச் - சார்ந்துரைத்த ஆதியே அம்பலவா அண்டத்தை ஆட்கொள்ளும் ஆதியேன் றென்பால் அருள். |
7 |
679 |
அருள்சேரா தாரூர்தீ ஆறாமல் எய்தாய் அருள்சேரா தாரூர்தீ யாடி -அருள்சேரப் பிச்சையேற் றுண்டு பிறர்கடையிற் கால்நிமிர்த்துப் பிச்சையேற் றுண்டுழல்வாய் பேச்சு. |
8 |
680 |
பேச்சுப் பெருகுவதென் பெண்ஆண் அலிஎன்று பேச்சுக் கடந்த பெருவெளியைப் - பேச்சுக் குரையானை ஊனுக் குயிரானை ஒன்றற் குரியானை நன்னெஞ்சே உற்று. |
9 |
681 |
உற்றுரையாய் நன்னெஞ்சே ஓதக் கடல்வண்ணன் உற்றுரையா வண்ணம்ஒன் றானானை - உற்றுரையா ஆனை உரித்தானை அப்பனை எப்பொழுது மானையுரித் தானை அடைந்து. |
10 |
682 |
அடைந்துன்பால் அன்பாய் அணிமணிகொண் டர்ச்சித் தடைந்துன்பால் மேலுகுத்த மாணிக் -கடைந்துன்பால் அவ்வமுதம் ஊட்டி அணிமலருஞ் சூழ்ந்தன்று அவ்வமுதம் ஆக்கினாய் காண். |
11 |
683 |
காணாய் கபாலி கதிர்முடிமேற் கங்கைதனைக் காணாயக் காருருவிற் சேருமையைக் - காணாய் உடைதலைகொண் டூரூர் திரிவானை நச்சி உடைதலைகொண் டூரூர் திரி. |
12 |
684 |
திரியும் புரமெரித்த சேவகனார் செவ்வே திரியும் புரமெரியச் செய்தார் -திரியும் அரியான் திருக்கயிலை என்னாதார் மேனி அரியான் திருக்கயிலை யாம். |
13 |
685 |
------ ------ ------ ------ ஆம்பரிசே செய்தங் கழியாக்கை -ஆம்பரிசே ஏத்தித் திரிந்தானை எம்மானை அம்மானை ஏத்தித் திரிந்தானை ஏத்து. |
14 |
686 |
ஏத்துற்றுப் பார்த்தன் எழில்வான் அடைவான்போல் ஏத்துற்றுப் பார்த்தன் இறைஞ்சுதலும் - ஏத்துற்றுப் பாசுபதம் அன்றளித்த பாசூரான் பால்நீற்றான் பாசுபதம் இன்றளியென் பால். |
15 |
687 |
பாலார் புனல்வாய் சடையானுக் கன்பாகிப் பாலார் புனல்வாய் சடையானாள் - பாலாடி ஆடுவான் பைங்கண் அரவூர்வான் மேனிதீ ஆடுவான் என்றென்றே ஆங்கு. |
16 |
688 |
ஆங்குரைக்க லாம்பொன் மலர்ப்பாதம் அதன்றே ஆங்குரைக்க லாம்பொன் அணிதில்லை - ஆங்குரைத்த அம்பலத்தும் அண்டத்தும் அப்பாலு மாய்நின்ற அம்பரத்தும் அண்டத்தும் ஆம். |
17 |
689 |
மாயனைஓர் பாகம் அமர்ந்தானை வானவரும் மாயவரு மால்கடல்நஞ் சுண்டானை - மாய வருவானை மாலை ஒளியானை வானின் உருவானை ஏத்தி உணர். |
18 |
690 |
உணரா வளைகழலா உற்றுன்பாற் சங்கம் உணரா வளைகழல ஒட்டி - உணரா அளைந்தான மேனி அணிஆரூ ரேசென் றளைந்தானை ஆமாறு கண்டு. |
19 |
691 |
கண்திறந்து காயெரியின் வீழ்ந்து கடிதோடிக் கண்டிறந்து காமன் பொடியாகக் - கண்டிறந்து கானின் உகந்தாடும் கருத்தர்க்குக் காட்டினான் கானினுகந் தாடுங் கருத்து. |
20 |
692 |
கருத்துடைய ஆதி கறைமிடற்றெம் ஈசன் கருத்துடைய கங்காள வேடன் - கருத்துடைய ஆனேற்றான் நீற்றான் அனலாடி ஆமாத்தூர் ஆனேற்றான் ஏற்றான் எரி. |
21 |
693 |
எரியாடி ஏகம்பம் என்னாதார் மேனி எரியாடி ஏகம்ப மாகும் - எரியாடி ஈமத் திடுங்காடு தேரும் இறைபணிப்ப ஈமத் திடுங்காடு தான். |
22 |
694 |
தானயன் மாலாகி நின்றான் தனித்துலகில் தானயன் மாலாய தன்மையான் -தானக் கரைப்டுத்தான் நான்மறையைக் காய்புலித்தோ லாடைக் கரைப்படுத்தான் தன்பாதஞ் சார். |
23 |
695 |
சாராவார் தாமுளரேல் சங்கரன்தன் மேனிமேல் சாராவார் கங்கை உமைநங்கை - சார்வாய் அரவமது செஞ்சடைமேல் அக்கொன்றை ஒற்றி அரவமது செஞ்சடையின் மேல். |
24 |
696 |
மேலாய தேவர் வெருவ எழுநஞ்சம் மேலாயம் இன்றிவே றுண்பொழுதில் - மேலாய மங்கை உமைவந் தடுத்திலளே வானாளும் மங்கை உமைவந் தடுத்து. |
25 |
697 |
அடுத்தபொன் அம்பலமே சார்வும் அதனுள் அடுத்த திருநட்டம் அதே - அடுத்ததிரு ஆனைக்கா ஆடுவதும் மேல்என்பு பூண்பதுவும் ஆனைக்கா வான்தன் அமைவு. |
26 |
698 |
அமைவும் பிறப்பும் இறப்புமாம் மற்றாங் கமைவும் பரமான ஆதி -அமையும் திருவால வாய்சென்று சேராது மாக்கள் திருவால வாய்சென்று சேர். |
27 |
699 |
சென்றுசெருப் புக்காலாற் செல்ல மலர்நீக்கிச் சென்று திருமுடிவாய் நீர்வார்த்துச் - சென்றுதன் கண்ணிடந்தன் றப்பும் கருத்தற்குக் காட்டினான் கண்ணிடந்தன் றப்பாமை பார்த்து. |
28 |
700 |
பார்த்துப் பரியாதே பால்நீறு பூசாதே பார்த்துப் பரிந்தங்கம் பூணாதே - பார்த்திட் டுடையானஞ் சோதாதே ஊனாரைக் கைவிட் டுடையானஞ் சோதாதார் ஊண். |
29 |
701 |
ஊணொன்றும் இல்லை உறக்கில்லை உன்மாலின் ஊணென்று பேசவோர் சங்கிழந்தாள் - ஊணென்றும் விட்டானே வேள்வி துரந்தானே வெள்ளநீர் விட்டானே புன்சடைமேல் வேறு. |
30 |
702 |
வேறுரைப்பன் கேட்டருளும் வேதம்நான் காறங்கம் வேறுரைத்த மேனி விரிசடையான் - வேறுரைத்த பாதத்தாய் பைங்கண் அரவூர்வாய் பாரூரும் பாதத்தாய் என்னும் மலர். |
31 |
703 |
மலரணைந்து கொண்டு மகிழ்வாய்உன் பாத மலரணைந்து மால்நயன மாகும் - மலரணைந்து மன்சக் கரம்வேண்ட வாளா அளித்தனையால் வன்சக்க ரம்பரனே வாய்த்து. |
32 |
704 |
வாய்த்த அடியார் வணங்க மலரோன்மால் வாய்த்த அடிமுடி யுங்காணார் - வாய்த்த சலந்தரனைக் கொன்றிட்டுச் சங்கரனார் என்னோ சலந்தரனாய் நின்றவா தாம். |
33 |
705 |
தாமென்ன நாமென்ன வேறில்லை தத்துறவில் தாமென்னை வேறாத் தனித்திருந்து - தாமென் கழிப்பாலை சேருங் கறைமிடற்றார் என்னோ கழிப்பாலை சேருங் கடன். |
34 |
706 |
கடனாகக் கைதொழுமின் கைதொழவல் லீரேல் கடல்நாகைக் காரோணம் மேயார் கடநாகம் மாளஉரித் தாடுவார் நம்மேலை வல்வினைநோய் மாளஇரித் தாடுமால் வந்து. |
35 |
707 |
வந்தார் வளைகழல்வார் வாடித் துகில்சோர்வார் வந்தார் முலைமெலிவார் வார்குழல்கள் - வந்தார் சுரிதருவார் ஐங்கொன்றைத் தாராரைக் கண்டு சுரிதருவார் ஐங்கொன்றைத் தார். |
36 |
708 |
தாரான் எனினுஞ் சடைமுடையான் சங்கரனந் தாரான் தசமுகனைத் தோள்நெரித்துத் - தாராய நாளுங் கொடுத்தந்த வானவர்கள் தம்முன்னே வாளுங் கொடுத்தான் மதித்து. |
37 |
709 |
மதியாரும் செஞ்சடையான் வண்கொன்றைத் தாரான் மதியாரும் மாலுடைய பாகன் - மதியாரும் அண்ணா மலைசேரார் ஆரோடுங் கூடாகி அண்ணா மலைசேர்வ ரால். |
38 |
710 |
ஆலநிழற்கீழ் இருப்பதுவும் ஆய்வதறம் ஆலம் அமுதுசெய்வ தாடுவதீ - ஆலந் துறையுடையான் ஆனை உரியுடையான் சோற்றுத் துறையுடையான் சோராத சொல்லு. |
39 |
711 |
சொல்லாயம் இன்றித் தொலைவின்றித் தூநெறிக்கண் சொல்லாய்ப் பெருத்த சுடரொளியாய்ச் - சொல்லாய வீரட்டத் தானை விரவார் புரம்அட்ட வீரட்டத் தானை விரை. |
40 |
712 |
விரையாரும் மத்தம் விரகாகச் சூடி விரையாரும் வெள்ளெலும்பு பூண்டு - விரையாரும் நஞ்சுண்ட ஆதி நலங்கழல்கள் சேராதார் நஞ்சுண்ட வாதி நலம். |
41 |
713 |
நலம்பாயும் ஆக்க நலங்கொண்டல் என்றல் நலம்பாயும் மான்நன் குருவ - நலம்பாய்செய் தார்த்தார்க்கும் அண்ணா மலையா னிடந்...... தார்த்தார்க்கும் அண்ணா மலை. |
42 |
714 |
மலையார் கலையோட வாரோடக் கொங்கை மலையார் கலைபோய்மால் ஆனாள்- மலையார் கலையுடையான் வானின் மதியுடையான் காவாத் தலையுடையான் என்றுதொழு தாள். |
43 |
715 |
தாளார் கமல மலரோடு தண்மலரும் தாளார வேசொரிந்து தாமிருந்து - தாளார் சிராமலையாய் சேமத் துணையேயென் றேத்தும் சிராமலையார் சேமத் துளார். |
44 |
716 |
ஆர்துணையா ஆங்கிருப்ப தம்பலவா அஞ்சலுமை ஆர்துணையா ஆனை உரிமூடி - ஆர்துணையாம் பூவணத்தாய் பூதப் படையாளி பொங்கொளியாய் பூவணத்தாய் என்னின் புகல். |
45 |
717 |
புகலூர் உடையாய் பொறியரவம் பூணி புகலூர்ப் புனற்சடையெம் பொன்னே - புகலூராய் வெண்காடா வேலை விடமுண்டாய் வெள்ளேற்றாய் வெண்காடா என்பேனோ நான். |
46 |
718 |
நானுடைய மாடேஎன் ஞானச் சுடர்விளக்கே நானுடைய குன்றமே நான்மறையாய் - நானுடைய காடுடையாய் காலங்கள் ஆனாய் கனலாடும் காடுடையாய் காலமா னாய். |
47 |
719 |
ஆயன் றமரர் அழியா வகைசெய்தாய் ஆயன் றமரர் அழியாமை - ஆயன் திருத்தினான் செங்கண் விடையூர்வான் மேனி திருத்தினான் சேதுக் கரை. |
48 |
720 |
கரையேனு மாதர் கருவான சேதுக் கரையேனு மாது கரையாம் -கரையேனும் கோளிலியெம் மாதி குறிபரவ வல்லையே கோளிலியெம் மாதி குறி. |
49 |
721 |
குறியார் மணிமிடற்றுக் கோலஞ்சேர் ஞானக் குறியாகி நின்ற குணமே- குறியாகும் ஆலங்கா டெய்தா அடைவேன்மேல் ஆடரவம் ஆலங்கா டெய்தா அடை. |
50 |
722 |
அடையும் படைமழுவும் சூலமிலம் பங்கி அடையும் இறப்பறுப்ப தானால் - அடைய மறைக்காடு சேரும் மணாளரென்பாற் சேரா மறைக்காடு சேர்மக்கள் தாம். |
51 |
723 |
தாமேய ஆறு சமய முதற்பரமும் தாமேய வாறு தழைக்கின்றார் - தாமேல் தழலுருவர் சங்கரவர் பொங்கரவம் பூண்ட தழலுருவர் சங்கரர்என் பார். |
52 |
724 |
பார்மேவு கின்ற பலருருவர் பண்டரங்கர் பார்மேவு கின்ற படுதலையர் - பார்மேல் வலஞ்சுழியைச் சேர்வர் மலரடிகள் சேர்வார் வலஞ்சுழியைச் சேர்வாகு வார். |
53 |
725 |
வாரணிந்த கொங்கை உமையாள் மணவாளா வாரணிந்த கொன்றை மலர்சூடி - வாரணிந்த செஞ்சடையாய் சீர்கொள் சிவலோகா சேயொளியாய் செஞ்சடையாய் செல்ல நினை. |
54 |
726 |
நினைமால் கொண்டோடி நெறியான தேடி நினைமாலே நெஞ்சம் நினைய - நினைமால் கொண் டூர்தேடி உம்பரால் அம்பரமா காளாவென் றூர்தேடி என்றுரைப்பான் ஊர். |
55 |
727 |
ஊர்வதுவும் ஆனே றுடைதலையில் உண்பதுவும் ஊர்வதுவு மெல்லுரக மூடுவர்கொல் - ஊர்வதுவும் ஏகம்ப மென்றும் இடைமருதை நேசித்தார்க் கேகம்ப மாய்நின்ற ஏறு. |
56 |
728 |
ஏறேய வாழ்முதலே ஏகம்பா எம்பெருமான் ஏறேறி யூரும் எரியாடி - ஏறேய ஆதிவிடங் காகாறை அண்டத்தாய் அம்மானே ஆதிவிடங் காவுமைநன் மாட்டு. |
57 |
729 |
மாட்டும் பொருளை உருவை வருகாலம் வாட்டும் பொருளாய் மறையானை - வாட்டும் உருவானைச் சோதி உமைபங்கா பங்காய் உருவான சோதி உரை. |
58 |
730 |
உரையா இருப்பதுவும் உன்னையே ஊனின் உரையாய் உயிராய்ப் பொலிந்தாய் - உரையாய அம்பொனே சோதி அணியாரூர் சேர்கின்ற அம்பொனே சோதியே ஆய்ந்து. |
59 |
731 |
ஆய்ந்துன்றன் பாதம் அடையவரும் என்மேல் ஆய்ந்தென்றன் பாச மலமறுத் -தாய்ந்துன்றன் பாலணையச் செய்த பரமா பரமேட்டி பாலணையச் செய்த பரம். |
60 |
732 |
பரமாய பைங்கட் சிரமேயப் பூண்ட பரமாய பைங்கட் சிரமே - பரமாய ஆறடைந்த செஞ்சடையாய் ஐந்தடைந்த மேனியாய் ஆறடைந்த செஞ்சடையாய் அன்பு. |
61 |
733 |
அன்பே உடைய அரனே அணையாத அன்பே உடைய அனலாடி - அன்பே கழுமலத்து ளாடுங் கரியுரிபோர்த் தானே கழுமலத்து ளாடுங் கரி. |
62 |
734 |
கரியார்தாஞ் சேருங் கலைமறிகைக் கொண்டே கரியார்தாஞ் சேருங் கவாலி - கரியாகி நின்ற கழிப்பாலை சேரும் பிரான்நாமம் நின்ற கழிப்பாலை சேர். |
63 |
735 |
சேரும் பிரான்நாமஞ் சிந்திக்க வல்லீரேல் சேரும் பிரான்நாமஞ் சிந்திக்கச் - சேரும் மலையான் மகளை மகிழ்ந்தாரூர் நின்றான் மலையான் மகளை மகிழ்ந்து. |
64 |
736 |
மகிழ்ந்தன்பர் மாகாளஞ் செய்யும் மகளிர் மகிழ்ந்தம் பரமாகி நின்றார் - மகிழ்ந்தங்கம் ஒன்றாகி நின்ற உமைபங்கன் ஒற்றியூர் ஒன்றாகி நின்ற உமை. |
65 |
737 |
உமைகங்கை என்றிருவர் உற்ற உணர்வும் உமைகங்கை என்றிருவர் காணார் - உமைகங்கை கார்மிடற்றம் மேனிக் கதிர்முடியான் கண்மூன்று கார்மிடற்றம் மேனிக் கினி. |
66 |
738 |
இனியவா காணீர்கள் இப்பிறவி எல்லாம் இனியவா ஆகாமை யற்றும் - இனியவா றாக்கை பலசெய்த ஆமாத்தூர் அம்மானை ஆக்கை பலசெய்த அன்று. |
67 |
739 |
அன்றமரர் உய்ய அமிர்தம் அவர்க்கருளி அன்றவுணர் வீட அருள்செய்தோன் - அன்றவுணர் சேராமல் நின்ற அடிகள் அடியார்க்குச் சேராமல் நின்ற சிவம். |
68 |
740 |
சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்சேர்வ தாக்கும் சிவனந்தஞ் செல்கதிக்கோர் கண்ணாம் - சிவனந்தம் சேரும் உருவுடையீர் செங்காஅட் டங்குடி மேல் சேரும் உருவுடையீர் செல். |
69 |
741 |
செல்லு மளவும் சிதையாமற் சிந்திமின் செல்லு மளவும் சிவனும்மைச் - செல்லும் திருமீச்சூர்க் கேறவே செங்கணே றூரும் திருமீச்சூர் ஈசன் திறம். |
70 |
742 |
திறமென்னுஞ் சிந்தை தெரிந்தும்மைக் காணும் திறமென்னுஞ் சிந்தைக்கு மாமே - திறமென்னும் சித்தத்தீர் செல்வத் திருக்கடவூர் சேர்கின்ற சித்தத்தீ ரேசெல்லும் நீர். |
71 |
743 |
நீரே எருதேறும் நின்மலனார் ஆவீரும் நீரே நெடுவானில் நின்றீரும் - நீரே நெருப்பாய தோற்றத்து நீளாரும் பூண்டு நெருப்பாய தோற்றம் நிலைத்து. |
72 |
744 |
நிலைத்திவ் வுலகனைத்தும் நீரேயாய் நின்றீர் நிலைத்திவ் வுலகனைத்தும் நீரே - நிலைத்தீரக் கானப்பே ரீர்கங்கை சூடினீர் கங்காளீர் கானப்பே ரீர்கங்கை யீர். |
73 |
745 |
ஈரம் உடைய இளமதியஞ் சூடினீர் ஈரம் உடைய சடையினீர் - ஈர வருங்காலம் ஆயினீர் இவ்வுலகம் எல்லாம் வருங்கால மாயினீர் வாழ்வு. |
74 |
746 |
வாழ்வார் மலரணைவார் வந்த வருநாகம் வாழ்வார் மலரணைவார் வண்கங்கை - வாழ்வாய தீயாட வானாள்வான் வான்கழல்கள் சேராதார் தீயாட வானாளு மாறு. |
75 |
747 |
மாறாத ஆனையின்தோல் போர்த்து வளர்சடைமேல் மாறாத நீருடைய மாகாளர் - மாறா இடுங்கையர் சேரும் எழிலவாய் முன்னே இடுங்கையர் சேர்வாக ஈ. |
76 |
748 |
ஈயும் பொருளே எமக்குச் சிவலோகம் ஈயும் பொருளே இடுகாட்டில் - நீயும் படநாகம் பூணும் பரலோகீர் என்னீர் படநாகம் பூணும் படி. |
77 |
749 |
படியேறும் பார்த்துப் பரத்தோடும் கூட்டிப் படியேறும் பார்த்துப் பரனெப் - படியேனைப் பாருடையாய் பைங்கண் புலியதளாய் பால்நீற்றாய் பாருடையாய் யானுன் பரம். |
78 |
750 |
பரமாய விட்டுநின் பாதம் பணிந்தேன் பரமாய ஆதிப் பரனே - பரமாய நீதியே நின்மலனே நேரார் புரமூன்றும் நீதியே செய்தாய் நினை. |
79 |
751 |
நினையடைந்தேன் சித்தம் நிலையாகும் வண்ணம் நினையடைந்தேன் சித்த நிமலா - நினையடைந்தேன் கண்டத்தாய் காளத்தி யானே கனலாரும் கண்டத்தாய் காவாலி கா. |
80 |
752 |
காவார் பொழிற்கயிலை ஆதீ கருவேஎம் காவாய்ப் பொலிந்த கடுவெளியே - காவாய ஏறுடையாய் என்னை இடைமருதி லேயென்றும் ஏறுடையாய் நீயே கரி. |
81 |
753 |
கரியானும் நான்முகனு மாய்நின்ற கண்ணன் கரியாருங் கூற்றங் கனியே - கரியாரும் காடுடையாய் காலங்க ளானாய் கனலாடும் காடுடையாய் காலமா னாய். |
82 |
754 |
ஆனாய னாய அடலேறே ஆருர்க்கோன் ஆனாய னாஅமுத மேஆனாய் - ஆனாய் கவரெலும்போ டேந்தி கதநாகம் பூணி கவரெலும்பு தார்கை வளை. |
83 |
755 |
வளைகொண்டாய் என்னை மடவார்கண் முன்னே வளைகொண்டாய் மாசற்ற சோதி - வளைகொண்டாய் மாற்றார் கதுவ மதிலாரூர் சேர்கின்ற மாற்றாரூர் கின்ற மயல். |
84 |
756 |
மயலான தீரும் மருந்தாகும் மற்றும் மயலானார் ஆருர் மயரார் - மயலான கண்ணியர்தம் பாகா கனியே கடிக்கொன்றைக் கண்ணியலான் பாதமே கல். |
85 |
757 |
கலைமான்கை ஏனப்பூண் காண்கயிலை மானின் கலைமான் கறைகாண் கவாலி - கலைமானே ஆடுவதும் பாடுவதும் காலனைப்பொன் அம்பலத்துள் ஆடுவதும் ஆடான் அரன். |
86 |
758 |
அரனே அணியாரூர் மூலட்டத் தானே அரனே அடைந்தார்தம் பாவம் - அரனே அயனார்தம் அங்கம் அடையாகக் கொண்டாய் அயனாக மாக அடை. |
87 |
759 |
அடையுந் திசைஈசன் திண்டோள் ஆகாசம் அடையுந் திருமேனி அண்டம் - அடையும் திருமுடிகால் பாதாளம் ஆடைகடல் அங்கி திருமுடிநீர் கண்கள்சுடர் மூன்று. |
88 |
760 |
மூன்றரணம் எய்தானே மூலத் தனிச்சுடரே மூன்றரண மாய்நின்ற முக்கணனே - மூன்றரண மாய்நின்ற சோதி அணியாரூர் சேர்கின்ற வாய்நின்ற சோதி அறம். |
89 |
761 |
அறமாய்வ ரேனும் அடுகாடு சேர அறமானார் அங்கம் அணிவர் - அறமாய வல்வினைகள் வாரா எனமருக லாரென்ன வல்வினைகள் வாராத வாறு. |
90 |
762 |
ஆறுடையர் நஞ்சுடையர் ஆடும் அரவுடையர் ஆறுடையர் காலம் அமைவுடையர் - ஆறுடைய சித்தத்தீர் செல்வத் திருக்கயிலை சேர்கின்ற சித்தத்தீர் எல்லார்க்குஞ் சேர்வு. |
91 |
763 |
சேர்வும் உடையர் செழுங்கொன்றைத் தாரார்நஞ் சேர்வும் உடையர் அரவுடையர் - சேரும் திருச்சாய்க்காட் டாடுவரேல் செய்தக்க என்றும் திருச்சாய்க்காட் டேநின் உருவு. |
92 |
764 |
உருவு பலகொண் டொருவராய் நின்றார் உருவு பலவாம் ஒருவர் - உருவு பலவல்ல ஒன்றல்ல பைஞ்ஞீலி மேயார் பலவல்ல ஒன்றாப் பகர். |
93 |
765 |
பகரப் பரியானை மேலூரா தானைப் பகரப் பரிசடைமேல் வைத்த - பகரப் பரியானைச் சேருலகம் பல்லுயிர்கள் எல்லாம் பரியானைச் சேருலகம் பண். |
94 |
766 |
பண்ணாகப் பாடிப் பலிகொண்டாய் பாரேழும் பண்ணாகச் செய்த பரஞ்சோதீ -பண்ணா எருதேறி யூர்வாய் எழில்வஞ்சி எங்கள் எருதேறி யூர்வாய் இடம். |
95 |
767 |
இடமாய எவ்வுயிர்க்கும் ஏகம்பம் மேயார் இடமானார்க் கீந்த இறைவர் - இடமாய ஈங்கோய் மலையார் எழிலார் சிராமலையார் ஈங்கோய் மலையார் எமை. |
96 |
768 |
எமையாள வந்தார் இடரான தீர எமையாளும் எம்மை இமையோர் - எமையாளும் வீதிவிடங் கர்விடம துண்டகண் டர்விடையூர் வீதிவிடங் கர்விடையூர் தீ. |
97 |
769 |
தீயான மேனியனே செம்பவளக் குன்றமே தீயான சேராமற் செய்வானே - தீயான செம்பொற் புரிசைத் திருவாரூ ராயென்னைச் செம்பொற் சிவலோகஞ் சேர். |
98 |
770 |
சேர்கின்ற சிந்தை சிதையாமற் செய்வானே சேர்கின்ற சிந்தை சிதையாமற் - சேர்கின்றோம் ஒற்றியூ ரானே உறவாரும் இல்லையினி ஒற்றியூ ரானே உறும். |
99 |
771 |
உறுமுந்த முன்னே உடையாமல் இன்னம் உறுமுந்த முன்னே உடையாமல் - உறுமுந்தம் ஓரைந் துரைத்துற் றுணர்வோ டிருந்தொன்றை ஓரைந் துரைக்கவல்லார்க் கொன்று. |
100 |
772 |
ஒன்றைப் பரணர் உரைத்தஅந் தாதிபல ஒன்றைப் பகரில் ஒருகோடி - ஒன்றைத் தவிரா துரைப்பார் தளரார் உலகில் தவிரார் சிவலோகந் தான் |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
8.1. சிவபெருமான் திருவந்தாதி - பதினோராம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சேரும், சேர்கின்ற, மாய்நின்ற, மலையார், கழிப்பாலை, பார்த்துப், சேருங், காடுடையாய், முன்னே, செஞ்சடையாய், எரியாடி, வந்தார், என்றும், உமைகங்கை, இனியவா, பிரானிடபம், அணியாரூர், வாரணிந்த, பெற்றும், எல்லாம், சிதையாமற், நினையடைந்தேன், வளைகொண்டாய், பூணும், சித்தத்தீர், சிந்தை, நன்னெஞ்சே, அடையும், திருக்கயிலை, மேயார், ஏத்துற்றுப், வாய்த்த, பைங்கண், மலரணைந்து, பூண்டு, தாரான், நானுடைய, கருத்துடைய, திரியும், விரையாரும், மதியாரும், ஆடுவதும்