முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பதினோராம் திருமுறை » 11.1. கோயில் நான்மணிமாலை
பதினோராம் திருமுறை - 11.1. கோயில் நான்மணிமாலை

11.1. கோயில் நான்மணிமாலை
826 |
பூமேல் அயன்அறியா மோலிப் புறத்ததே நாமே புகழ்ந்தளவை நாட்டுவோம் -பாமேவும் ஏத்துகந்தான் தில்லை இடத்துகந்தான் அம்பலத்தே கூத்துகந்தான் கொற்றக் குடை. | 1 |
827 | குடைகொண்டிவ் வையம் எலாங்குளிர் வித்தெரி பொற்றிகிரிப் படைகொண் டிகல்தெறும் பார்த்திவர் ஆவதிற் பைம்பொற் கொன்றைத் தொடைகொண்ட வார்சடை அம்பலத் தான்தொண்டர்க் கேவல்செய்து கடைகொண்ட பிச்சைகொண் டுண்டிங்கு வாழ்தல் களிப்புடைத்தே. | 2 |
828 | களிவந் தமுதூறிக் கல்மனத்தை எல்லாம் வெளிவந் தடியேன் மனம்புகுந்த தென்றால் ஒளிவந்த பொன்னிறமும் தொல்நடமும் காட்டும் எளிவந் தினிப்பிறர்பால் சென்றவர்க்குப் பொய்கொண் 3 | |
829 | உரையின் வரையும் பொருளின் அளவும் இருவகைப் பட்ட எல்லையும் கடந்து தம்மை மறந்து நின்னை நினைப்பவர் செம்மை மனத்தினும் தில்லைமன் றினும்நடம் ஆடும் அம்பல வாண நீடு --------- (5) குன்றக் கோமான் தன்திருப் பாவையை நீல மேனி மால்திருத் தங்கையைத் திருமணம் புணர்ந்த ஞான்று பெருமநின் தாதவிழ் கொன்றைத் தாரும் ஏதமில் வீர வெள்விடைக் கொடியும் போரில் ---- (10) தழங்கும் தமருகப் பறையும் முழங்கொலித் தெய்வக் கங்கை ஆறும் பொய்தீர் விரையாக் கலியெனும் ஆணையும் நிரைநிரை ஆயிரம் வகுத்த மாயிரு மருப்பின் வெண்ணிறச் செங்கண் வேழமும் பண்ணியல் ------ (15) வைதிகப் புரவியும் வான நாடும் மையறு கனக மேருமால் வரையும் செய்வயல் தில்லை யாகிய தொல்பெரும் பதியுமென்று ஒருபதி னாயிரந் திருநெடு நாமமும் உரிமையிற் பாடித் திருமணப் பந்தருள் ------- (20) அமரர் முன்புகுந் தறுகு சாத்திநின் தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து என்னையும் எழுத வேண்டுவன் நின்னருள் ஆணை வைப்பிற் காணொணா அணுவும் வானுற நிமிர்ந்து காட்டும் (25) கானில்வால் நுளம்பும் கருடனா தலினே. | 4 |
830. | ஆதரித்த மாலும் அறிந்திலனென் ற.தறிந்தே காதலித்த நாயேற்கும் காட்டுமே - போதகத் தோல் கம்பலத்தான் நீள்நாக கங்கணத்தான் தென்புலியூர் அம்பலத்தான் செம்பொன் அடி. | 5 |
831. | அடியொன்று பாதலம் ஏழிற்கும் அப்புறம் பட்டதிப்பால் முடியொன்றிவ் அண்டங்கள் எல்லாம் கடந்தது முற்றும்வெள்ளைப் பொடியொன்று தோள்எட்டுத் திக்கின் புறத்தன பூங்கரும்பின் செடியொன்று தில்லைச்சிற் றம்பலத் தான்தன் திருநடமே. | 6 |
832 | நடமாடி ஏழுலகம் உய்யக் கொண்ட திடமாட மதில்தில்லைக் கோயில் கொண்ட இடமாடி இருந்தவளும் விலக்கா விட்டால் தடமாலை முடிசாய்த்துப் பணிந்த வானோர் 7 | |
833. | நஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம் தன்முதல் முருக்க நென்முதற் சூழ்ந்த நீர்ச்சிறு பாம்புதன் வாய்க்கெதிர் வந்த தேரையை வவ்வி யாங்கு யாம்முன் கருவிடை வந்த ஒருநாள் தொடங்கி ----- (5) மறவா மறலி முறைபிறழ் பேழ்வாய் அயில்தலை அன்ன எயிற்றிடைக் கிடந்தாங்கு அருள்நனி இன்றி ஒருவயி றோம்பற்குப் பல்லுயிர் செகுத்து வல்லிதின் அருந்தி அயர்த்தனம் இருந்தும் போலும் பெயர்த்துநின்று --------- (10) எண்டோள் வீசிக் கண்டோர் உருகத் தொல்லெயில் உடுத்த தில்லை மூதூர் ஆடும் அம்பலக் கூத்தனைப் பாடுதல் பரவுதல் பணிதலோ இலமே. | 8 |
834 | இலவிதழ்வாய் வீழ்வார் இகழ்வார் அவர்தம் கலவி கடைக்கணித்தும் காணேன் - இலகுமொளி ஆடகஞ்சேர் அம்பலத்தே ஆளுடையார் நின்றாடும் நாடகங்கண் டின்பான நான். | 9 |
835 | நானே பிறந்த பயன்படைத் தேன்அயன் நாரணன்எம் கோனே எனத்தில்லை அம்பலத் தேநின்று கூத்துகந்த தேனே திருவுள்ள மாகியென் தீமையெல் லாம்அறுத்துத் தானே புகுந்தடி யேன்மனத் தேவந்து சந்திக்கவே. | 10 |
836 | சந்து புனைய வெதும்பி மலரணை தங்க வெருவி இலங்கு கலையொடு பந்து கழல்கள் மறந்து தளிர்புரை பண்டை நிறமும் இழந்து நிறையொடு நந்தி முழவு தழங்க மலைபெறு நங்கை மகிழ அணிந்த அரவுகள் அந்தி மதியொ டணிந்து திலைநகர் அம்பொன் அணியும் அரங்கின் நடநவில் 11 | |
837 | வரையொன்று நிறுவி அரவொன்று பிணித்துக் கடல்தட வாக மிடலொடும் வாங்கித் திண்டோள் ஆண்ட தண்டா அமரர்க்கு அமிர்துணா அளித்த முதுபெருங் கடவுள் கடையுகஞ் சென்ற காலத்து நெடுநிலம் ----- (5) ஆழிப் பரப்பில் ஆழ்வது பொறாஅது அஞ்சேல் என்று செஞ்சேல் ஆகித்தன் தெய்வ உதரத்துச் சிறுசெலுப் புரையில் பெளவம் ஏழே பட்டது பெளவத்தோடு உலகு குழைத்தொரு நாஅள் உண்டதும் ----- (10) உலக மூன்றும் அளந்துழி ஆங்கவன் ஈரடி நிரம்பிற்றும் இலவே தேரில் உரைப்போர்க் கல்ல தவன்குறை வின்றே இனைய னாகிய தனிமுதல் வானவன் கேழல் திருவுரு ஆகி ஆழத்து ----- (15) அடுக்கிய ஏழும் எடுத்தனன் எடுத்தெடுத்து ஊழி ஊழி கீழுறக் கிளைத்தும் காண்பதற் கரியநின் கழலும் வேண்டுபு நிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும் அகில சராசரம் அனைத்தும் உதவிய -------- (20) பொன்னிறக் கடவுள் அன்ன மாகிக் கண்டி லாதநின் கதிர்நெடு முடியும் ஈங்கிவை கொண்டு நீங்காது விரும்பிச் சிறிய பொதுவில் மறுவின்றி விளங்கி ஏவருங் காண ஆடுதி அதுவெனக்கு --------- (25) அதிசயம் விளைக்கும் அன்றே அதிசயம் விளையாது மொழிந்த தெந்தை வளையாது கல்லினும் வலிதது நல்லிதிற் செல்லாது தான்சிறி தாயினும் உள்ளிடை நிரம்ப வான்பொய் அச்சம் மாயா ஆசை -------- (30) மிடைந்தன கிடப்ப இடம்பெறல் அருமையில் ஐவர் கள்வர் வல்லிதிற் புகுந்து மண்மகன் திகிரியில் எண்மடங்கு சுழற்ற ஆடுபு கிடந்த பீடில் நெஞ்சத்து நுழைந்தனை புகுந்து தழைந்தநின் சடையும் ---------- (35) செய்ய வாயும் மையமர் கண்டமும் நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும் எடுத்த பாதமும் தடுத்தசெங் கையும் புள்ளி ஆடையும் ஒள்ளிதின் விளங்க நாடகம் ஆடுதி நம்ப கூடும் --------- (40) வேதம் நான்கும் விழுப்பெரு முனிவரும் ஆதி நின்திறம் ஆதலின் மொழிவது பெரியதிற் பெரியை என்றும் அன்றே சிறியதிற் சிறியை என்றும் அன்றே நிறைபொருள் மறைகள் நான்கும்நின் அறைகழல் --------- (45) இரண்டொடும் அறிவினில் ஆர்த்து வைத்த மறையவர் தில்லை மன்றுகிழ வோனே. | 12 |
838. | கிழவருமாய் நோய்மூப்புக் கீழ்ப்பட்டுக் காமத் துழவரும்போய் ஓயுமா கண்டோம் - மொழிதெரிய வாயினால் இப்போதே மன்றில் நடமாடும் நாயனார் என்றுப்போம் நாம். | 13 |
839 | நாமத்தி னால்என்தன் நாத்திருத் தேன்நறை மாமலர்சேர் தாமத்தி னால்உன் சரண்பணி யேன்சார்வ தென்கொடுநான் வாமத்தி லேயொரு மானைத் தரித்தொரு மானைவைத்தாய் சேமத்தி னாலுன் திருத்தில்லை சேர்வதோர் செந்நெறியே. | 14 |
840. | நெறிதரு குழலை அறலென்பர்கள் நிழலெழு மதியம் நுதலென்பர்கள் அறிகுவ தரிதிவ் விடை யென்பர்கள் அடியிணை கமல மலரென்பர்கள் மறிமழு வுடைய கரனென்கிலர் மறலியை முனியும் அரனென்கிலர் செறிபொழில் நிலவு திலையென்கிலர் திருநடம் நவிலும் இறையென்கிலர் 15 | |
841 | அறிவில் ஒழுக்கமும் பிறிதுபடு பொய்யும் கடும்பிணித் தொகையும் இடும்பை ஈட்டமும் இனையன பலசரக் கேற்றி வினையெனும் தொன்மீ காமன் உய்ப்ப அந்நிலைக் கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப் ----- (5) புலனெனும் கோண்மீன் அலமந்து தொடரப் பிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந் தலைக்கும் துயர்த்திரை உவட்டில் பெயர்ப்பிடம் அயர்த்துக் குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து நிறையெனும் கூம்பு முரிந்து குறையா -------- (10) உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும் மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம் கலங்குபு கவிழா முன்னம் அலங்கல் மதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப் பையர வணிந்த தெய்வ நாயக ----- (15) தொல்லெயில் உடுத்த தில்லை காவல வம்பலர் தும்பை அம்பல வாணநின் அருளெனும் நலத்தார் பூட்டித் திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே. | 16 |
842. | செய்ய திருமேனிச் சிற்றம் பலவருக்கென் தையல் வளைகொடுத்தல் சாலுமே - ஐயன்தேர் சேயே வருமளவில் சிந்தாத மாத்திரமே தாயே நமதுகையில் சங்கு. | 17 |
843. | சங்கிடத் தானிடத் தான்தன தாகச் சமைந்தொருத்தி அங்கிடத் தாள்தில்லை அம்பலக் கூத்தற் கவிர்சடைமேல் கொங்கிடத் தார்மலர்க் கொன்றையென் றாய்எங்கை நீயுமொரு பங்கிடத் தான்வல்லை யேல்இல்லை யேல்உன் பசப்பொழியே. | 18 |
844. | ஒழிந்த தெங்களுற வென்கொ லோஎரியில் ஒன்ன லார்கள்புரம் முன்னொர்நாள் விழந்தெ ரிந்துதுக ளாக வென்றிசெய்த வில்லி தில்லைநகர் போலியார் சுழிந்த உந்தியில் அழுந்தி மேகலை தொடக்க நின்றவர் நடக்கநொந் தழிந்த சிந்தையினும் வந்த தாகிலுமொர் சிந்தை யாயொழிவ தல்லவே. | 19 |
845 | அல்லல் வாழ்க்கை வல்லிதிற் செலுத்தற்குக் கைத்தேர் உழந்து கார்வரும் என்று வித்து விதைத்தும் விண்பார்த் திருந்தும் கிளையுடன் தவிரப் பொருளுடன் கொண்டு முளைமுதிர் பருவத்துப் பதியென வழங்கியும் ---- (5) அருளா வயவர் அம்பிடை நடந்தும் இருளுறு பவ்வத் தெந்திரங் கடாஅய்த் துன்றுதிரைப் பரப்பிற் குன்றுபார்த் தியங்கியும் ஆற்றல் வேந்தர்க்குச் சோற்றுக்கடன் பூண்டும் தாளுழந் தோடியும் வாளுழந் துண்டும் ---- (10) அறியா ஒருவனைச் செறிவந்து தெருட்டியும் சொற்பல புனைந்தும் கற்றன கழறியும் குடும்பப் பாசம் நெடுந்தொடர்ப் பூட்டி ஐவர் ஐந்திடத் தீர்ப்ப நொய்தில் பிறந்தாங் கிறந்தும் இறந்தாங்கு பிறந்தும் ------- (15) கணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும் கொப்புட் செய்கை ஒப்பின் மின்போல் உலப்பில் யோனிக் கலக்கத்து மயங்கியும் நெய்யெரி வளர்த்துப் பெய்முகிற் பெயல்தரும் தெய்வ வேதியர் தில்லை மூதூர் --------- (20) ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும் கடவுட் கண்ணுதல் நடமுயன் றெடுத்த பாதப் போதும் பாய்புலிப் பட்டும் மீதியாத் தசைத்த வெள்ளெயிற் றரவும் சேயுயர் அகலத் தாயிரங் குடுமி ---------- (25) மணிகிடந் திமைக்கும் ஒருபே ராரமும் அருள்பொதிந் தலர்ந்த திருவாய் மலரும் நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும் கங்கை வழங்கும் திங்கள் வேணியும் கண்ணிடைப் பொறித்து மனத்திடை அழுத்தியாங்கு -------- (30) உள்மகிழ்ந் துரைக்க உறுதவஞ் செய்தனன் நான்முகன் பதத்தின் மேல்நிகழ் பதந்தான் உறுதற் கரியதும் உண்டோ பெறுதற் கரியதோர் பேறுபெற் றேற்கே. | 20 |
846 | பெற்றோர் பிடிக்கப் பிழைத்துச் செவிலியர்கள் சுற்றோட ஓடித் தொழாநிற்கும் - ஒற்றைக்கைம் மாமறுகச் சீறியசிற் றம்பலத்தான் மான்தேர்போம் கோமறுகிற் பேதைக் குழாம். | 21 |
847 | பேதையெங் கேயினித் தேறியுய் வாள்பிர மன்தனக்குத் தாதைதன் தாதையென் றேத்தும் பிரான்தண் புலிசைப்பிரான் கோதையந் தாமத்தண் கொன்றை கொடான்இன்று கொல்லஎண்ணி ஊதையும் காரும் துளியொடும் கூடி உலாவியே. | 22 |
848 | உலவு சலதி வாழ்விடம் அமரர் தொழவு ணாஎன நுகரும் ஒருவர் ஊழியின் இறுதி ஒருவர் ஆழிய புலவு கமழ்க ரோடிகை உடைய புனிதர் பூசுரர் புலிசை யலர்செய் போதணி பொழிலின் நிழலின் வாழ்வதோர் கலவ மயில னார்சுருள் கரிய குழலி னார்குயில் கருது மொழியி னார்கடை நெடிய விழியி னார்இதழ் இலவில் அழகி யாரிடை கொடியின் வடிவி னார்வடி வெழுதும் அருமை யாரென திதய முழுதும் ஆள்வரே. | 23 |
849 | ஆளெனப் புதிதின்வந் தடைந்திலம் அத்தநின் தாளின் ஏவல் தலையின் இயற்றி வழிவழி வந்த மரபினம் மொழிவதுன் ஐந்தெழுத் தவைஎம் சிந்தையிற் கிடத்தி நனவே போல நாடொறும் பழகிக் ------ (5) கனவிலும் நவிற்றும் காதலேம் வினைகெடக் கேட்பது நின்பெருங் கீர்த்தி மீட்பது நின்னெறி அல்லாப் புன்னெறி படர்ந்த மதியில் நெஞ்சத்தை வரைந்து நிதியென அருத்திசெய் திடுவ துருத்திர சாதனம் ------- (10) காலையும் மாலையும் கால்பெயர்த் திடுவதுன் ஆலயம் வலம் வரு தற்கே சால்பினில் கைகொடு குயிற்றுவ தைய நின்னது கோயில் பல்பணி குறித்தே ஓயாது உருகி நின்னினைந் தருவி சோரக் ----------- (15) கண்ணிற் காண்பதெவ் வுலகினும் காண்பனஎல்லாம் நீயேயாகி நின்றதோர் நிலையே நாயேன் தலைகொடு சார்வதுன் சரண்வழி அல்லால் அலைகடல் பிறழினும் அடாதே அதனால் பொய்த்தவ வேடர் கைத்தகப் படுத்தற்கு --------- (20) வஞ்சச் சொல்லின் வார்வலை போக்கிச் சமயப் படுகுழி சமைத்தாங் கமைவயின் மானுட மாக்களை வலியப் புகுத்தும் ஆனா விரதத் தகப்படுத் தாழ்த்து வளைவுணர் வெனக்கு வருமோ உளர்தரு --------- (25) நுரையுந் திரையும் நொப்புறு கொட்பும் வரையில் சீகர வாரியும் குரைகுடல் பெருத்தும் சிறுத்தும் பிறங்குவ தோன்றி எண்ணில வாகி இருங்கடல் அடங்கும் தன்மை போலச் சராசரம் அனைத்தும் ------ (30) நின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்நீ ஒன்றினும் தோன்றாய் ஒன்றினும் அடங்காய் வானோர்க் கரியாய் மறைகளுக் கெட்டாய் நான்மறை யாளர் நடுவுபுக் கடங்கிச் செம்பொன் தில்லை மூதூர் ------- (35) அம்பலத் தாடும் உம்பர் நாயகனே. | 24 |
850 | நாயனைய என்னைப் பொருட்படுத்தி நன்களித்துத் தாயனைய னாயருளும் தம்பிரான் - தூயவிரை மென்றுழாய் மாலொடயன் தேட வியன்தில்லை மன்றுளே ஆடும் மணி. | 25 |
851 | மணிவாய் முகிழ்ப்பத் திருமுகம் வேர்ப்பஅம் மன்றுக்கெல்லாம் அணியாய் அருள்நடம் ஆடும் பிரானை அடைந்துருகிப் பணியாய் புலன்வழி போம்நெஞ்ச மேயினிப் பையப்பையப் பிணியாய்க் கடைவழி சாதியெல் லோரும் பிணம்என்னவே. | 26 |
852 | என்னாம் இனிமட வரலாய் செய்குவ தினமாய் வண்டுகள் மலர்கிண்டித் தென்னா எனமுரல் பொழில்சூழ் தில்லையுள் அரனார் திருமுடி அணிதாமம் தன்னால் அல்லது தீரா தென்னிடர் தகையா துயிர்கரு முகிலேறி மின்னா நின்றது துளிவா டையும்வர வீசா நின்றது பேசாயே. | 27 |
853 | பேசு வாழி பேசு வாழி ஆசையொடு மயங்கி மாசுறு மனமே பேசு வாழி பேசு வாழி கண்டன மறையும் உண்டன மலமாம் பூசின மாசாம் புணர்ந்தன பிரியும் ------ (5) நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும் பிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும் ஒன்றொன் றொருவழி நில்லா அன்றியும் செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர் கல்வியிற் சிறந்தோர் கடுந்திறல் மிகுந்தோர் ------ (10) கொடையிற் பொலிந்தோர் படையிற் பயின்றோர் குலத்தின் உயர்ந்தோர் நலத்தினின் வந்தோர் எனையர்எங் குலத்தினர் இறந்தோர் அனையவர் பேரும் நின்றில போலும் தேரின் நீயும்அ. தறிதி யன்றே மாயப் ----- (15) பேய்த்தேர் போன்று நீப்பரும் உறக்கத்துக் கனவே போன்றும் நனவுப்பெயர் பெற்ற மாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக் கல்லினும் வலிதாக் கருதிப் பொல்லாத் தன்மையர் இழிவு சார்ந்தனை நீயும் -------- (20) நன்மையிற் திரிந்த புன்மையை யாதலின் அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி வளைவாய்த் தூண்டிலின் உள்ளிரை விழுங்கும் பன்மீன் போலவும் மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும் ------------- (25) ஆசையாம் பரிசத் தியானை போலவும் ஓசையின் விளிந்த புள்ளுப் போலவும் வீசிய மணத்தின் வண்டு போலவும் உறுவ துணராச் செறுவுழிச் சேர்ந்தனை நுண்ணூல் நூற்றுத் தன்கைப் படுக்கும் ---------- (30) அறிவில் கீடத்து நுந்துழி போல ஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டு இடர்கெழு மனத்தினோ டியற்றுவ தறியாது குடர்கெழு சிறையறைக் குறங்குபு கிடத்தி கறவை நினைந்த கன்றென இரங்கி ------ (35) மறவா மனத்து மாசறும் அடியார்க்கு அருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்தனை மறையவர் தில்லை மன்றுள் ஆடும் இறையவன் என்கிலை என்நினைந் தனையே. | 28 |
854 | நினையார் மெலியார் நிறையழியார் வாளாப் புனைவார்க்குக் கொன்றை பொதுவோ - அனைவீரும் மெச்சியே காண வியன்தில்லை யான்அருளென் பிச்சியே நாளைப் பெறும். | 29 |
855 | பெறுகின்ற எண்ணிலி தாயரும் பேறுறும் யானும்என்னை உறுகின்ற துன்பங்கள் ஆயிர கோடியும் ஒய்வொடுஞ்சென் றிறுகின்ற நாள்களும் ஆகிக் கிடந்த இடுக்கணெல்லாம் அறுகின் றனதில்லை ஆளுடை யான்செம்பொன் அம்பலத்தே. | 30 |
856 | அம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கே அன்புடையர் என்னுமிதென் ஆனையை உரித்துக் கம்பலம் உவந்தருளு வீர்மதனன் வேவக் கண்டருளு வீர்பெரிய காதலறி யாதே வம்பலர் நிறைந்துவசை பேசஒரு மாடே வாடைஉயிர் ஈரமணி மாமையும் இழந்தென் கொம்பல மருந்தகைமை கண்டுதக வின்றிக் கொன்றையரு ளீர்கொடியிர் என்றருளு வீரே. | 31 |
857. | அருளு வாழி அருளு வாழி புரிசடைக் கடவுள் அருளு வாழி தோன்றுழித் தோன்றி நிலைதவக் கறங்கும் புற்பதச் செவ்வியின் மக்கள் யாக்கைக்கு நினைப்பினுங் கடிதே இளமை நீக்கம் --- (5) அதனினுங் கடிதே மூப்பின் தொடர்ச்சி அதனினுங் கடிதே கதுமென மரணம் வாணாள் பருகி உடம்பை வறிதாக்கி நாணாள் பயின்ற நல்காக் கூற்றம் இனைய தன்மைய திதுவே இதனை ----- (10) எனதெனக் கருதி இதற்கென்று தொடங்கிச் செய்தன சிலவே செய்வன சிலவே செய்யா நிற்பன சிலவே அவற்றிடை நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே ஒன்றினும் படாதன சிலவே என்றிவை ----- (15) கணத்திடை நினைந்து களிப்பவும் கலுழ்பவும் கணக்கில் கோடித் தொகுதி அவைதாம் ஒன்றொன் றுணர்வுழி வருமோ அனைத்தும் ஒன்றா உணர்வுழி வருமோ என்றொன்றும் தெளிவுழித் தேறல் செல்லேம் அளிய ------ (20) மனத்தின் செய்கை மற்றிதுவே நீயே அரியை சாலஎம் பெரும தெரிவுறில் உண்டாய்த் தோன்றுவ யாவையும் நீயே கண்டனை அவைநினைக் காணா அதுதான் நின்வயின் மறைத்தோய் அல்லை உன்னை ------- (25) மாயாய் மன்னினை நீயே வாழி மன்னியும் சிறுமையிற் கரந்தோய் அல்லை பெருமையிற் பெரியோய் பெயர்த்தும் நீயே பெருகியும் சேணிடை நின்றோய் அல்லை தேர்வோர்க்குத் தம்மினும் அணியை நீயே -------- (30) நண்ணியும் இடையொன்றின் மறைந்தோய் அல்லை இடையிட்டு நின்னை மறைப்பதும் இல்லை மறைப்பினும் அதுவும் நீயே யாகி நின்றதோர் நிலையே, அ.தான்று நினைப்பருங் காட்சி நின்னிலை இதுவே ------- (35) நினைப்புறுங் காட்சி எம்நிலை அதுவே இனிநனி இரப்பதொன் றுடையம் மனம்மருண்டு புன்மையின் நினைத்துப் புலன்வழி படரினும் நின்வயின் நினைந்தே மாகுதல் நின்வயின் நினைக்குமா நினைக்கப் பெறுதல் அனைத்தொன்றும் -------- (40) நீயே அருளல் வேண்டும் வேய்முதிர் கயிலை புல்லென எறிவிசும்பு வறிதாக இம்பர் உய்ய அம்பலம் பொலியத் திருவளர் தில்லை மூதூர் அருநடங் குயிற்றும் ஆதிவா னவனே. | 32 |
858 | வானோர் பணிய மணியா சனத்திருக்கும் ஆனாத செல்வத் தரசன்றே - மால்நாகம் பந்திப்பார் நின்றாடும் பைம்பொன்னின் அம்பலத்தே வந்திப்பார் வேண்டாத வாழ்வு. | 33 |
859 | வாழ்வாக வும்தங்கள் வைப்பாக வும்மறை யோர்வணங்க ஆள்வாய் திருத்தில்லை அம்பலத் தாய்உன்னை அன்றிஒன்றைத் தாழ்வார் அறியாச் சடுலநஞ் சுண்டிலை யாகில்அன்றே மாள்வார் சிலரையன் றோதெய்வ மாக வணங்குவதே. | 34 |
860 | வணங்குமிடை யீர்வறிது வல்லியிடை யாள்மேல் மாரசர மாரிபொழி யப்பெறு மனத்தோ டுணங்கிவள் தானுமெலி யப்பெறும் இடர்க்கே ஊதையெரி தூவியுல வப்பெறு மடுத்தே பிணங்கிஅர வோடுசடை ஆடநட மாடும் பித்தரென வும்இதயம் இத்தனையும் ஓரீர் அணங்குவெறி யாடுமறி யாடுமது ஈரும் மையலையும் அல்லலையும் அல்லதறி யீரே. | 35 |
861 | ஈரவே ரித்தார் வழங்கு சடிலத்துக் குதிகொள் கங்கை மதியின்மீ தசைய வண்டியங்கு வரைப்பின் எண்தோள் செல்வ ஒருபால் தோடும் ஒருபால் குழையும் இருபாற் பட்ட மேனி எந்தை ----- (5) ஒல்லொலிப் பழனத் தில்லை மூதூர் ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும் இமையா நாட்டத் தொருபெருங் கடவுள் வானவர் வணங்கும் தாதை யானே மதுமழை பொழியும் புதுமந் தாரத்துத் ---- (10) தேனியங் கொருசிறைக் கானகத் தியற்றிய தெய்வ மண்டபத் தைவகை அமளிச் சிங்கம் சுமப்ப ஏறி மங்கையர் இமையா நாட்டத் தமையா நோக்கத் தம்மார்பு பருகச் செம்மாந் திருக்கும் ----- (15) ஆனாச் செல்வத்து வானோர் இன்பம் அதுவே எய்தினும் எய்துக கதுமெனத் தெறுசொ லாளர் உறுசினந் திருகி எற்றியும் ஈர்த்தும் குற்றம் கொளீஇ ஈர்ந்தும் போழ்ந்தும் எற்றுபு குடைந்தும் -------- (20) வார்ந்தும் குறைத்தும் மதநாய்க் கீந்தும் செக்குரல் பெய்தும் தீநீர் வாக்கியும் புழுக்குடை அழுவத் தழுக்கியல் சேற்றுப் பன்னெடுங் காலம் அழுத்தி இன்னா வரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர் --------- (25) நிரயஞ் சேரினும் சேர்க உரையிடை ஏனோர் என்னை ஆனாது விரும்பி நல்லன் எனினும் என்க அவரே அல்லன் எனினும் என்க நில்லாத் திருவொடு திளைத்துப் பெருவளஞ் சிதையாது -------- (30) இன்பத் தழுந்தினும் அழுந்துக அல்லாத் துன்பந் துதையினும் துதைக முன்பில் இளமையொடு பழகிக் கழிமூப்புக் குறுகாது என்றும் இருக்கினும் இருக்க அன்றி இன்றே இறக்கினும் இறக்க ஒன்றினும் -------- (35) வேண்டலும் இலனே வெறுத்தலும் இலனே ஆண்டகைக் குரிசில்நின் அடியரொடும் குழுமித் தெய்வக் கூத்தும்நின் செய்ய பாதமும் அடையவும் அணுகவும் பெற்ற கிடையாச் செல்வம் கிடைத்த லானே. | 36 |
862 | ஆனேறே போந்தால் அழிவுண்டே அன்புடைய நானேதான் வாழ்ந்திடினும் நன்றன்றே - வானோங்கு வாமாண் பொழில்தில்லை மன்றைப் பொலிவித்த கோமானை இத்தெருவே கொண்டு. | 37 |
863 | கொண்டல்வண் ணத்தவன் நான்முகன் இந்திரன் கோமகுடத் தண்டர்மிண் டித்தொழும் அம்பலக் கூத்தனுக் கன்புசெய்யா மிண்டர்மிண் டித்திரி வார்எனக் கென்னினி நானவன்தன் தொண்டர் தொண் டர்க்குத் தொழும்பாய்த் திரியத் தொடங்கினனே. | 38 |
864 | தொடர நரைத்தங்க முன்புள வாயின தொழில்கள் மறுத்தொன்றும் ஒன்றி யிடாதொரு நடைகெட முற்கொண்ட பெண்டிர் பொறாவொரு நடலை நமக்கென்று வந்தன பேசிட மிடலொடி யப்பண்டி லங்கையர் கோன்ஒரு விரலின் அமுக்குண்டு பண்பல பாடிய திடமருள் வைக்குஞ் செழுஞ்சுடர் ஊறிய தெளியமு தத்தின் கொழுஞ்சுவை நீடிய 39 | |
865 | சதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள் ஆழி கொடுத்த பேரருள் போற்றி முயற்சியொடு பணிந்த இயக்கர்கோ னுக்கு மாநிதி இரண்டும் ஆனாப் பெருவளத்து அளகை ஒன்றும் தளர்வின்றி நிறுவிய ----- (5) செல்வங் கொடுத்த செல்வம் போற்றி தாள்நிழல் அடைந்த மாணிக் காக நாண்முறை பிறழாது கோண்முறை வலித்துப் பதைத்துவருங் கூற்றைப் படிமிசைத் தெறிக்க உதைத்துயிர் அளித்த உதவி போற்றி ---- (10) குலைகுலை குலைந்த நிலையாத் தேவர் படுபேர் அவலம் இடையின்றி விலக்கிக் கடல்விடம் அருந்தின கருணை போற்றி தவிராச் சீற்றத் தவுணர் மூவெயில் ஒல்லனல் கொளுவி ஒருநொடி பொடிபட ------ (15) வில்லொன்று வளைத்த வீரம் போற்றி பூமென் கரும்பொடு பொடிபட நிலத்துக் காமனைப் பார்த்த கண்ணுதல் போற்றி தெய்வ யாளி கைமுயன்று கிழித்தெனக் கரியொன் றுரித்த பெருவிறல் போற்றி ------- (20) பண்டு பெரும்போர்ப் பார்த்தனுக் காகக் கொண்டு நடந்த கோலம் போற்றி விரற்பதம் ஒன்றில் வெள்ளிமலை எடுத்த அரக்கனை நெரித்த ஆண்மை போற்றி விலங்கல் விண்டு விழுந்தென முன்னாள் -------- (25) சலந்தரன் தடிந்த தண்டம் போற்றி தாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப் பரிகலங் கொடுத்த திருவுளம் போற்றி நின்முதல் வழிபடத் தன்மகன் தடிந்த தொண்டர் மனையில் உண்டல் போற்றி ------- (30) வெண்ணெய் உண்ண எண்ணுபு வந்து நந்தா விளக்கை நுந்துபு பெயர்த்த தாவுபுல் எலிக்கு மூவுல காள நொய்தினில் அளித்த கைவளம் போற்றி பொங்குளை அழல்வாய்ப் புகைவழி ஒருதனிச் ------ (35) சிங்கங் கொன்ற சேவகம் போற்றி வரிமிடற் றெறுழ்வலி மணியுகு பகுவாய் உரகம் பூண்ட ஒப்பனை போற்றி கங்கையும் கடுக்கையும் கலந்துழி ஒருபால் திங்கள் சூடிய செஞ்சடை போற்றி ------- (40) கடவுள் இருவர் அடியும் முடியும் காண்டல் வேண்டக் கனற்பிழம்பாகி நீண்டு நின்ற நீளம் போற்றி ஆலம் பில்குநின் சூலம்போற்றி கூறுதற் கரியநின் ஏறு போற்றி ------- (45) ஏக வெற்பன் மகிழும் மகட் கிடப் பாகங் கொடுத்த பண்பு போற்றி தில்லை மாநகர் போற்றி தில்லையுட் செம்பொன் அம்பலம் போற்றி அம்பலத் தாடும் நாடகம் போற்றி என்றாங்கு ------ (50) என்றும் போற்றினும் என்தனக் கிறைவ ஆற்றல் இல்லை ஆயினும் போற்றி போற்றிநின் பொலம்பூ அடிக்கே. | 40 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
11.1. கோயில் நான்மணிமாலை - பதினோராம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - போற்றி, தில்லை, கடவுள், போலவும், மூதூர், அம்பலத், என்றும், கொடுத்த, நாடகம், ஒன்றினும், கொண்டு, அம்பலத்தே, வானோர், நின்வயின், செம்பொன், புலன்வழி, ஒருபால், அம்பலக், அனைத்தும், பொதுவில், அளித்த, நவிற்றும், தோன்றி, கோயில்