முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பதினோராம் திருமுறை » 5.1. கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
பதினோராம் திருமுறை - 5.1. கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி

5.1. கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
302 |
சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா நல்லிடிஞ்சல் என்னுடைய நாவாகச் -சொல்லரிய வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த பெண்பாகர்க் கேற்றினேன் பெற்று. |
1 |
303 |
பெற்ற பயனிதுவே அன்றே பிறந்தியான் கற்றவர்கள் ஏத்துஞ்சீர்க் காளத்திக் - கொற்றவர்க்குத் தோளாகத் தாடவரம் சூழ்ந்தணிந்த அம்மானுக் காளாகப் பெற்றேன் அடைந்து. |
2 |
304 |
அடைந்துய்ம்மின் அம்மானை உம்ஆவி தன்னைக் குடைந்துண்ண எண்ணியவெங் கூற்றம் - குடைந்துநும் கண்ணுளே பார்க்கும் பொழுது கயிலாயத் தண்ணலே கண்டீர் அரண். |
3 |
305 |
அரணம் ஒருமூன்றும் ஆரழலாய் வீழ முரணம்பு கோத்த முதல்வன் சரணமே காணுமால் உற்றவன்றன் காளத்தி கைதொழுது பேணுமால் உள்ளம் பெரிது. |
4 |
306 |
பெரியவர்கா ணீர்என் உள்ளத்தின் பெற்றி தெரிவரிய தேவாதி தேவன் - பெரிதும் திருத்தக்கோர் ஏத்துந் திருக்கயிலைக் கோனை இருத்தத்தான் போந்த திடம். |
5 |
307 |
இடப்பாகம் நீள்கோட் டிமவான் பயந்த மடப்பாவை தன்வடிவே ஆனால் - விடப்பாற் கருவடிசேர் கண்டத்தெங் காளத்தி ஆள்வார்க் கொருவடிவே அன்றால் உரு. |
6 |
308 |
உருவு பலகொண் டுணர்வரிதாய் நிற்கும் ஒருவன் ஒருபால் இருக்கை - மருவினிய பூக்கையிற் கொண் டெப்பொழுதும் புத்தேளிர் வந்திறைஞ்சு மாக்கயிலை என்னும் மலை. |
7 |
309 |
மலைவரும்போல் வானவருந் தானவரும் எல்லாம் அலைகடல்வாய் நஞ்செழல்கண் டஞ்சி -நிலைதளரக் கண்டமையால் நண்சாரல் காளத்தி ஆள்வார்நஞ் சுண்டமையால் உண்டிவ் வுலகு. |
8 |
310 |
உலகம் அனைத்தினுக்கும் ஒண்ணுதல்மேல் இட்ட திலகம் எனப்பெறினுஞ் சீசீ - இலகியசீர் ஈசா திருக்கயிலை எம்பெருமான் என்றென்றே பேசா திருப்பார் பிறப்பு. |
9 |
311 |
பிறப்புடையர் கற்றோர் பெருஞ்செல்வர் மற்றும் சிறப்புடையர் ஆனாலுஞ் சீசீ - இறப்பில் கடியார் நறுஞ்சோலைக் காளத்தி யாள்வார் அடியாரைப் பேணா தவர். |
10 |
312 |
அவரும் பிறந்தவராய்ப் போவார்கொல் ஆவி எவரும் தொழுதேத்தும் எந்தை - சிவமன்னு தேக்குவார் சோலைத் திருக்கயிலை ஏத்தாதே போக்குவார் வாளா பொழது. |
11 |
313 |
வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர் கேளார்கொல் அந்தோ கிறிபட்டார் - கீளாடை அண்ணற் கணுக்கராய்க் காளத்தி யுள்நின்ற கண்ணப்ப ராவார் கதை. |
12 |
314 |
கதையிலே கேளீர் கயிலாயம் நோக்கிப் புதையிருட்கண் மாலோடும் போகிச் - சிதையாச்சீர்த் தீர்த்தன்பால் பாசுபதம் பெற்றுச் செருக்களத்தில் பார்த்தன்போர் வென்றிலனோ பண்டு. |
13 |
315 |
பண்டு தொடங்கியும் பாவித்தும் நின்கழற்கே தொண்டு படுவான் தொடர்வேனைக் - கண்டுகொண்டு ஆளத் தயாவுண்டோ இல்லையோ சொல்லாயே காளத்தி யாய்உன் கருத்து. |
14 |
316 |
கருத்துக்குச் சேயையாய்க் காண்தக்கோர் காண இருத்தி திருக்கயிலை என்றால் - ஒருத்தர் அறிவான் உறுவார்க் கறியுமா றுண்டோ நெறிவார் சடையாய் நிலை. |
15 |
317 |
நிலையிற் பிறவி நெடுஞ்சுழியிற் பட்டுத் தலைவ தடுமாறு கின்றேன் - தொலைவின்றிப் போந்தேறக் கைதாராய் காளத்திப் புத்தேளிர் வேந்தேஇப் பாசத்தை விட்டு. |
16 |
318 |
பாசத்தை விட்டுநின் பாதத்தின் கீழேஎன் நேசத்தை வைக்க நினைகண்டாய் - பாசத்தை நீக்குமா வல்ல கயிலாயா நீஎன்னைக் காக்குமா றித்தனையே காண். |
17 |
319 |
காணா தலக்கின்றார் வானோர்கள் காளத்திப் பூணார மார்பன்தன் பொற்பாதம் - நாணாதே கண்டிடுவான் யானிருந்தேன் காணீர் கடல்நஞ்சை உண்டிடுவான் தன்னை ஒருங்கு. |
18 |
320 |
ஒருங்கா துடனேநின் றோரைவர் எம்மை நெருங்காமல் நித்தம் ஒருகால் -நெருங்கிக் கருங்கலோங் கும்பல் கயிலாயம் மேயான் வருங்கொலோ நம்பால் மதித்து. |
19 |
321 |
நம்பால் மதித்துறையும் காளத்தி நண்ணாதே வம்பார் மலர்தூய் வணங்காதே - நம்பாநின் சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யானிருந்தேன் காலங்கள் போன கழிந்து. |
20 |
322 |
கழிந்த கழிகிடாய் நெஞ்சே கழியா தொழிந்தநாள் மேற்பட் டுயர்ந்தோர் - மொழிந்தசீர்க் கண்ணுதலான் எந்தை கயிலாய மால்வரையை நண்ணுதலாம் நன்மை நமக்கு. |
21 |
323 |
நமக்கிசைந்த வாநாமும் ஏத்தினால் நம்பர் தமக்கழகு தாமே அறிவர் -அமைப்பொதும்பிற் கல்லவா நீடருவிக் காளத்தி ஆள்வாரை வல்லவா நெஞ்சமே வாழ்த்து. |
22 |
324 |
வாழ்த்துவாய் வாழ்த்தா தொழிவாய் மறுசுழியிட் டாழ்த்துவாய் அதறிவாய் நீயன்றே - யாழ்த்தகைய வண்டார் பொழிற்கயிலை வாழ்கென் றிருப்பதே கண்டாய் அடியேன் கடன். |
23 |
325 |
கடநாகம் ஊடாடுங் காளத்திக் கோனைக் கடனாகக் கைதொழுவார்க் கில்லை - இடம்நாடி இந்நாட்டிற் கேவந்திங் கீண்டிற்றுக் கொண்டுபோய் அந்நாட்டில் உண்டுழலு மாறு. |
24 |
326 |
மாறிப் பிறந்து வழியிடை ஆற்றிடை ஏறி இழியும் இதுவல்லால் -தேறித் திருக்கயிலை ஏத்தீரேல் சேமத்தால் யார்க்கும் இருக்கையிலை கண்டீர் இனிது. |
25 |
327 |
இனிதே பிறவி இனமரங்கள் ஏறிக் கனிதேர் கடுவன்கள் தம்மில் -முனிவாய்ப் பிணங்கிவருந் தண்சாரற் காளத்தி பேணி வணங்கவல்ல ராயின் மகிழ்ந்து. |
26 |
328 |
மகிழந்தலரும் வன்கொன்றை மேலே மனமாய் நெகிழ்ந்து நெகிழ்ந்துள்ளே நெக்குத் - திகழ்ந்திலங்கும் விண்ணிறங்கா ஓங்கும் வியன்கயிலை மேயாய்என் பெண்ணுறங்காள் என்செய்கேன் பேசு. |
27 |
329 |
பேசும் பரிசறியாள் பேதை பிறர்க்கெல்லாம் ஏசும் பரிசானாள் ஏபாவம் - மாசுனைநீர்க் காம்பையலைத் தாலிக்குங் காளத்தி என்றென்று பூம்பயலை மெய்ம்முழுதும் போர்த்து. |
28 |
330 |
போர்த்த களிற்றுரியும் பூண்ட பொறியரவும் தீர்த்த மகளிருந்த செஞ்சடையும் - மூர்த்தி குயிலாய மென்மொழியாள் கூறாய வாறும் கயிலாயா யான்காணக் காட்டு. |
29 |
331 |
காட்டில் நடமாடிக் கங்காள ராகிப்போய் நாட்டிற் பலிதிரிந்து நாடோறும் - ஓட்டுண்பார் ஆனாலும் என்கொலோ காளத்தி ஆள்வாரை வானோர் வணங்குமா வந்து. |
30 |
332 |
வந்தமரர் ஏத்தும் மடைக்கூழும் வார்சடைமேல் கொந்தவிழும் மாலை கொடுத்தார்கொல் - வந்தித்து வாலுகுத்த வண்கயிலைக் கோனார்தம் மாமுடிமேல் பாலுகுத்த மாணிக்குப் பண்டு. |
31 |
333 |
பண்டிதுவே அன்றாயிற் கேளீர்கொல் பல்சருகு கொண்டிலங்கத் தும்பிநூற் கூடிழைப்பக் - கண்டு நலந்திக் கெலாம்ஏத்தும் காளத்தி நாதர் சிலந்திக்குச் செய்த சிறப்பு. |
32 |
334 |
செய்த சிறப்பெண்ணில் எங்குலக்குஞ் சென்றடைந்து கைதொழுவார்க் கெங்கள் கயிலாயர் -நொய்தளவிற் காலற்காய்ந் தார்அன்றே காணீர் கழல்தொழுத பாலற்காய் அன்று பரிந்து. |
33 |
335 |
பரிந்துரைப்பார் சொற்கேளாள் எம்பெருமான் பாதம் பிரிந்திருக்க கில்லாமை பேசும் - புரிந்தமரர் நாதாவா காளத்தி நம்பாவா என்றென்று மாதாவா உற்ற மயல். |
34 |
336 |
மயலைத் தவிர்க்கநீ வாராய் ஒருமூன் றெயிலைப் பொடியாக எய்தாய் - கயிலைப் பருப்பதவா நின்னுடைய பாதத்தின் கீழே இருப்பதவா உற்றாள் இவள். |
35 |
337 |
இவளுக்கு நல்லவா றெண்ணுதிரேல் இன்றே தவளப் பொடிஇவள்மேற் சாத்தி - இவளுக்குக் காட்டுமின்கள் காளத்தி காட்டிக் கமழ்கொன்றை சூட்டுமின்கள் தீரும் துயர். |
36 |
338 |
துயர்க்கெலாம் கூடாய தோற்குரம்பை புக்கு மயக்கில் வழிகாண மாட்டேன் - வியற்கொடும்போர் ஏற்றானே வண்கயிலை எம்மானே என்கொலோ மேற்றான் இதற்கு விளைவு. |
37 |
339 |
விளையும் வினையரவின் வெய்ய விடத்தைக் களைமினோ காளத்தி ஆள்வார்- வளைவில் திருந்தியசீர் ஈசன் திருநாமம் என்னும் மருந்தினைநீர் வாயிலே வைத்து. |
38 |
340 |
வாயிலே வைக்கும் அளவில் மருந்தாகித் தீய பிறவிநோய் தீர்க்குமே - தூயவே கம்பெருமா தேவியொடு மன்னு கயிலாயத் தெம்பெருமான் ஓரஞ் செழுத்து. |
39 |
341 |
அஞ்செழுத்துங் கண்டீர் அருமறைகள் ஆவனவும் அஞ்செழுத்துங் கற்க அணித்தாகும் - நஞ்சவித்த காளத்தி யார்யார்க்குங் காண்டற் கரிதாய்ப்போய் நீளத்தே நின்ற நெறி. |
40 |
342 |
நெறிவார் சடையாய் நிலையின்மை நீயொன் றறியாய் கொல் அந்தோ அயர்ந்தாள் - நெறியிற் கனைத்தருவி தூங்குங் கயிலாயா நின்னை நினைத்தருவி கண்சோர நின்று. |
41 |
343 |
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்யாம் என்றும் நினைந்தாலும் என்கொலோ -சென்றுதன் தாள்வா னவர்இறைஞ்சுந் தண்சாரற் காளத்தி ஆள்வான் அருளாத வாறு. |
42 |
344 |
அருளாத வாறுண்டே யார்க்கேனும் ஆக இருளார் கறைமிடற்றெம் ஈசன் -பொருளாய்ந்து மெய்ம்மையே உன்னில் வியன்கயிலை மேயான்வந் திம்மையே தீர்க்கும் இடர். |
43 |
345 |
இடரீர் உமக்கோர் இடம்நாடிக் கொண்டு நடவீரோ காலத்தால் நாங்கள் - கடல்வாய்க் கருப்பட்டோங் கொண்முகில்சேர் காளத்தி காண ஒருப்பட்டோம் கண்டீர் உணர்ந்து. |
44 |
346 |
உணருங்கால் ஒன்றை உருத்தெரியக் காட்டாய் புணருங்கால் ஆரமுதே போலும் - இணரிற் கனியவாஞ் சோலைக் கயிலாயம் மேயாய் இனியவா காண்நின் இயல்பு. |
45 |
347 |
நின்னியல்பை யாரே அறிவார் நினையுங்கால் மன்னியசீர்க் காளத்தி மன்னவனே - நின்னில் வெளிப்படுவ தேழுலகும் மீண்டே ஒருகால் ஒளிப்பதுவும் ஆனால் உரை. |
46 |
348 |
உரையும் பொருளும் உடலும் உயிரும் விரையும் மலரும்போல் விம்மிப் -புரையின்றிச் சென்றவா றோங்குந் திருக்கயிலை எம்பெருமான் நின்றவா றெங்கும் நிறைந்து. |
47 |
349 |
நிறைந்தெங்கும் நீயேயாய் நின்றாலும் ஒன்றன் மறைந்தைம் புலன்காண வாராய் - சிறந்த கணியாருந் தண்சாரற் காளத்தி ஆள்வாய் பணியாயால் என்முன் பரிசு. |
48 |
350 |
பரிசறியேன் பற்றிலேன் கற்றிலேன் முற்றும் கரியுரியாய் பாதமே கண்டாய் - திரியும் புரம்மாளச் செற்றவனே பொற்கயிலை மன்னும் பரமா அடியேற்குப் பற்று. |
49 |
351 |
பற்றாவான் எவ்வுயிர்க்கும் எந்தை பசுபதியே முற்றாவெண் திங்கள் முளைசூடி -வற்றாவாங் கங்கைசேர் செஞ்சடையான் காளத்தி யுள்நின்ற மங்கைசேர் பாகத்து மன். |
50 |
352 |
மன்னா கயிலாயா மாமுத்தம் மாணிக்கம் பொன்னார மாக்கொண்டு பூணாதே - எந்நாளும் மின்செய்வார் செஞ்சடையாய் வெள்ளெலும்பு பூண்கின்ற தென்செய்வான் எந்தாய் இயல்பு. |
51 |
353 |
இயம்பாய் மடநெஞ்சே ஏனோர்பால் என்ன பயம்பார்த்துப் பற்றுவான் உற்றாய் - புயம்பாம்பால் ஆர்த்தானே காளத்தி அம்மானே என்றென்றே ஏத்தாதே வாளா இருந்து. |
52 |
354 |
இருந்தவா காணீர் இதுவென்ன மாயம் அருந்தண் கயிலாயத் தண்ணல் - வருந்திப்போய்த் தான்நாளும் பிச்சை புகும்போலும் தன்னடியார் வான்ஆள மண்ஆள வைத்து. |
53 |
355 |
வைத்த இருநிதியே என்னுடைய வாழ்முதலே நித்திலமே காளத்தி நீள்சுடரே - மொய்த்தொளிசேர் அக்காலத் தாசை அடிநாயேன் காணுங்கால் எக்காலத் தெப்பிறவி யான். |
54 |
356 |
யானென்று தானென் றிரண்டில்லை என்பதனை யானென்றுங் கொண்டிருப்பன் ஆனாலும் - தேனுண் டளிகள்தாம் பாடும் அகன்கயிலை மேயான் தெளிகொடான் மாயங்கள் செய்து. |
55 |
357 |
மாயங்கள் செய்தைவர் சொன்ன வழிநின்று காயங்கொண் டாடல் கணக்கன்று -காயமே நிற்பதன் றாதலாற் காளத்தி நின்மலன்சீர் கற்பதே கண்டீர் கணக்கு. |
56 |
358 |
கணக்கிட்டுக் கொண்டிருந்து காலனார் நம்மை வணக்கி வலைப்படா முன்னம் - பிணக்கின்றிக் காலத்தால் நெஞ்சே கயிலாயம் மேவியநற் சூலத்தான் பாதந் தொழு. |
57 |
359 |
தொழுவாள் பெறாளேதன் தோள்வளையுந் தோற்றாள் மழுவாளன் காளத்தி வாழ்த்தி - எழுவாள் நறுமா மலர்க்கொன்றை நம்முன்னே நாளைப் பெறுமாறு காணீர்என் பெண். |
58 |
360 |
பெண்ணின் றயலார்முன் பேதை பிறைசூடி கண்ணின்ற நெற்றிக் கயிலைக்கோன் - உண்ணின்ற காமந்தான் மீதூர நைவாட்குன் கார்க்கொன்றைத் தாமந்தா மற்றிவளைச் சார்ந்து. |
59 |
361 |
சார்ந்தாரை எவ்விடத்துங் காப்பனவுஞ் சார்ந்தன்பு கூர்ந்தார்க்கு முத்தி கொடுப்பனவும் -கூர்ந்துள்ளே மூளத் தியானிப்பார் முன்வந்து நிற்பனவும் காளத்தி யார்தம் கழல். |
60 |
362 |
தங்கழல்கள் ஆர்ப்ப விளக்குச் சலன்சலனென் றங்கழல்கள் ஆர்ப்ப அனலேந்திப் - பொங்ககலத் தார்த்தா டரவம் அகன்கயிலை மேயாய்நீ கூத்தாடல் மேவியவா கூறு. |
61 |
363 |
கூறாய்நின் பொன்வாயால் கோலச் சிறுகிளியே வேறாக வந்திருந்து மெல்லனவே - நீல் தாவு மஞ்சடையும் நீள்குடுமி வாளருவிக் காளத்திச் செஞ்சடைஎம் ஈசன் திறம். |
62 |
364 |
ஈசன் திறமே நினைந்துருகும் எம்மைப்போல் மாசில் நிறத்த மடக்குருகே - கூசி இருத்தியால் நீயும் இருங்கயிலை மேயாற் கருத்தியாய்க் காமுற்றா யாம். |
63 |
365 |
காமுற்றா யாம்அன்றே காளத்தி யான்கழற்கே யாமுற்ற துற்றாய் இருங்கடலே - யாமத்து ஞாலத் துயிரெல்லாங் கண்துஞ்சும் நள்ளிருள்கூர் காலத்துந் துஞ்சாதுன் கண். |
64 |
366 |
கண்ணுங் கருத்துங் கயிலாய ரேஎமக்கென் றெண்ணி இருப்பன்யான் எப்பொழுதும் - நண்ணும் பொறியா டரவசைத்த பூதப் படையார் அறியார்கொல் நெஞ்சே அவர். |
65 |
367 |
நெஞ்சே அவர்கண்டாய் நேரே நினைவாரை அஞ்சேல்என் றாட்கொண் டருள் செய்வார் - நஞ்சேயும் கண்டத்தார் காளத்தி ஆள்வார் கழல்கண்டீர் அண்டத்தார் சூடும் அலர். |
66 |
368 |
அலரோன் நெடுமால் அமரர்கோன் மற்றும் பலராய்ப் படைத்துக் காத் தாண்டு - புலர்காலத் தொன்றாகி மீண்டு பலவாகி நிற்கின்றான் குன்றாத சீர்க்கயிலைக் கோ. |
67 |
369 |
கோத்த மலர்வாளி கொண் டநங்கன் காளத்திக் கூத்தன்மேல் அன்று குறித்தெய்யப் - பார்த்தலுமே பண்பொழியாக் கோபத்தீச் சுற்றுதலும் பற்றற்று வெண்பொடியாய் வீழ்ந்திலனோ வெந்து. |
68 |
370 |
வெந்திறல்வேல் பார்த்தற் கருள்செய்வான் வேண்டிஓர் செந்தறுகண் கேழல் திறம்புரிந்து -வந்தருளும் கானவனாம் கோலம்யான் காணக் கயிலாயா வானவர்தங் கோமானே வா. |
69 |
371 |
வாமான்தேர் வல்ல வயப்போர் விசயனைப் போல் தாமார் உலகில் தவமுடையார் - தாம்யார்க்குங் காண்டாற் கரியராய்க் காளத்தி ஆள்வாரைத் தீண்டத்தாம் பெற்றமையாற் சென்று. |
70 |
372 |
சென்றிறைஞ்சும் வானோர்தம் சிந்தைக்குஞ் சேயராய் என்றும் அடியார்க்கு முன்னிற்பர் - நன்று கனியவாஞ் சோலைக் கயிலாயம் மேயார் இனியவா பத்தர்க் கிவர். |
71 |
373 |
இவரே முதல்தேவர் எல்லார்க்கும் மிக்கார் இவரல்லர் என்றிருக்க வேண்டா -கவராதே காதலித்தின் றேத்துதிரேல் காளத்தி ஆள்வார்நீர் ஆதரித்த தெய்வமே ஆம். |
72 |
374 |
ஆமென்று நாளை உளஎன்று வாழ்விலே தாமின்று வீழ்கை தவமன்று - யாமென்றும் இம்மாய வாழ்வினையே பேணா திருங்கயிலை அம்மானைச் சேர்வ தறிவு. |
73 |
375 |
அறியாம லேனும் அறிந்தேனுஞ் செய்து செறிகின்ற தீவினைகள் எல்லாம் - நெறிநின்று நன்முகில்சேர் காளத்தி நாதன் அடிபணிந்து பொன்முகிலி ஆடுதலும் போம். |
74 |
376 |
போகின்ற மாமுகிலே பொற்கயிலை வெற்பளவும் ஏகின் றெமக்காக எம்பெருமான் - ஏகினால் உண்ணப் படாநஞ்சம் உண்டாற்கென் உள்ளுறுநோய் விண்ணப்பஞ் செய்கண்டாய் வேறு. |
75 |
377 |
வேறேயுங் காக்கத் தகுவேனை மெல்லியலாள் கூறேயும் காளத்திக் கொற்றவனே - ஏறேறும் அன்பா அடியேற் கருளா தொழிகின்ற தென்பாவ மேயன்றோ இன்று. |
76 |
378 |
இன்று தொடங்கிப் பணிசெய்வேன் யானுனக் கென்றும் இளமதியே எம்பெருமான் - என்றும்என் உட்காதல் உண்மை உயர்கயிலை மேயாற்குத் திட்காதே விண்ணப்பஞ் செய். |
77 |
379 |
செய்ய சடைமுடியென் செல்வனையான் கண்டெனது கையறவும் உள்மெலிவும் யான்காட்டப் -பையவே காரேறு பூஞ்சோலைக் காளத்தி ஆள்வார்தம் போரேறே இத்தெருவே போது. |
78 |
380 |
போது நெறியனவே பேசிநின் பொன்வாயால் ஊதத் தருவன் ஒளிவண்டே - காதலால் கண்டார் வணங்குங் கயிலாயத் தெம்பெருமான் வண்தார்மோந் தென்குழற்கே வா. |
79 |
381 |
வாவா மணிவாயால் மாவின் தளிர்கோதிக் கூவா திருந்த குயிற்பிள்ளாய் - ஓவாதே பூமாம் பொழிலுடுத்த பொன்மதில் சூழ் காளத்திக் கோமான் வரவொருகாற் கூவு. |
80 |
382 |
கூவுதலும் பாற்கடலே சென்றவனைக் கூடுகஎன் றேவினான் பொற்கயிலை எம்பெருமான் - மேவியசீர் அன்பாற் புலிக்காலன் பாலன்பால் ஆசையினால் தன்பாற்பால் வேண்டுதலுந் தான். |
81 |
383 |
தானே உலகாள்வான் தான்கண்ட வாவழக்கம் ஆனால்மற் றார்இதனை அன்றென்பார்- வானோர் களைகண்தா னாய்நின்ற காளத்தி ஆள்வார் வளைகொண்டார் மால்தந்தார் வந்து. |
82 |
384 |
வந்தோர் அரக்கனார் வண்கயிலை மால்வரையைத் தந்தோள் வலியினையே தாம்கருதி - அந்தோ இடந்தார் இடந்திட் டிடார்க்கீழ் எலிபோற் கிடந்தார் வலியெலாங் கெட்டு. |
83 |
385 |
கெட்ட அரக்கரே வேதியரே கேளீர்கொல் பட்டதுவும் ஓராது பண்டொருநாள் - ஒட்டக் கலந்தரனார் காளத்தி ஆள்வார்மேற் சென்று சலந்தரனார் பட்டதுவுந் தாம். |
84 |
386 |
தாம்பட்ட தொன்றும் அறியார்கொல் சார்வரே காம்புற்ற செந்நெற் கயிலைக் கோன் - பாம்புற்ற ஆரத்தான் பத்தர்க் கருகணையார் காலனார் தூரத்தே போவார் தொழுது. |
85 |
387 |
தொழுது நமனுந்தன் தூதுவர்க்குச் சொல்லும் வழுவில்சீர்க் காளத்தி மன்னன் - பழுதிலாப் பத்தர்களைக் கண்டால் பணிந்தகலப் போமின்கள் எத்தனையுஞ் சேய்த்தாக என்று. |
86 |
388 |
வென்றைந்துங் காமாதி வேரறுத்து மெல்லவே ஒன்ற நினைதிரேல் ஒன்றலாம் - சென்றங்கை மானுடையான் என்னை உடையான் வடகயிலை தானுடையான் தன்னுடைய தாள். |
87 |
389 |
தாளொன்றால் பாதாளம் ஊடுருவத் தண்விசும்பில் தாளொன்றால் அண்டங் கடந்துருவித் -தோளொன்றால் திக்கனைத்தும் போர்க்குந் திறற்காளி காளத்தி நக்கனைத்தான் கண்ட நடம். |
88 |
390 |
நடமாடுஞ் சங்கரன்தாள் நான்முகனுங் காணான் படமாடு பாம்பணையான் காணான் - விடமேவும் காரேறு கண்டன் கயிலாயன் தன் உருவை யாரே அறிவார் இசைந்து. |
89 |
391 |
இசையுந்தன் கோலத்தை யான்காண வேண்டி வசையில்சீர்க் காளத்தி மன்னன் - அசைவின்றிக் காட்டுமேல் காட்டிக் கலந்தென்னைத் தன்னோடும் கூட்டுமேல் கூடலே கூடு. |
90 |
392 |
கூடி யிருந்து பிறர்செய்யுங் குற்றங்கள் நாடித்தம் குற்றங்கள் நாடாதே - வாடி வடகயிலை யேத்தாதே வாழ்ந்திடுவான் வேண்டில் அடகயில ஆரமுதை விட்டு. |
91 |
393 |
விட்டாவி போக உடல்கிடந்து வெந்தீயில் பட்டாங்கு வேமாறு பார்த்திருந்தும் - ஒட்டாதாம் கள்ளலைக்கும் பூஞ்சோலைக் காளத்தி யுள்நின்ற வள்ளலைச்சென் றேத்த மனம். |
92 |
394 |
மனமுற்றும் மையலாய் மாதரார் தங்கள் கனமுற்றுங் காமத்தே வீழ்வர் -புனமுற் றினக்குறவர் ஏத்தும் இருங்கயிலை மேயான் தனக்குறவு செய்கலார் தாழ்ந்து. |
93 |
395 |
தாழ்ந்த சடையுந் தவளத் திருநீறும் சூழ்ந்த புலியதளும் சூழ்அரவும் - சேர்ந்து நெருக்கிவா னோர்இறைஞ்சுங் காளத்தி யாள்வார்க் கிருக்குமா கோலங்கள் ஏற்று. |
94 |
396 |
ஏற்றின் மணியே அமையாதோ ஈர்ஞ்சடைமேல் வீற்றிருந்த வெண்மதியும் வேண்டுமோ - ஆற்றருவி கன்மேற்பட் டார்க்குங் கயிலாயத் தெம்பெருமான் என்மேற் படைவிடுப்பாற் கீங்கு. |
95 |
397 |
ஈங்கேவா என்றருளி என்மனத்தில் எப்பொழுதும் நீங்காமல் நீவந்து நின்றாலும் - தீங்கை அடுகின்ற காளத்தி ஆள்வாய் நான்நல்ல படுகின்ற வண்ணம் பணி. |
96 |
398 |
பணியாது முன்னிவனைப் பாவியேன் வாளா கணியாது காலங் கழித்தேன் - அணியும் கருமா மிடற்றெங் கயிலாயத் தெங்கள் பெருமான தில்லை பிழை. |
97 |
399 |
பிழைப்புவாய்ப் பொன்றறியேன் பித்தேறி னாற்போல் அழைப்பதே கண்டாய் அடியேன் - அழைத்தாலும் என்னா தரவேகொண் டின்பொழில்சூழ் காளத்தி மன்னா தருவாய் வரம். |
98 |
400 |
வரமாவ தெல்லாம் வடகயிலை மன்னும் பரமாஉன் பாதார விந்தம் - சிரமார ஏத்திடும்போ தாகவந் தென்மனத்தில் எப்பொழுதும் வைத்திடுநீ வேண்டேன்யான் மற்று. |
99 |
401 |
மற்றும் பலபிதற்ற வேண்டாம் மடநெஞ்சே கற்றைச் சடைஅண்ணல் காளத்தி - நெற்றிக்கண் ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும் சோராமல் எப்பொழுதுஞ் சொல். |
100 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
5.1. கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி - பதினோராம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - காளத்தி, எம்பெருமான், கயிலாயத், கயிலாயம், கயிலாயா, திருக்கயிலை, காளத்திக், கண்டீர், நெஞ்சே, என்கொலோ, ஆள்வார், வடகயிலை, தண்சாரற், எப்பொழுதும், பொற்கயிலை, தெம்பெருமான், பாசத்தை, ஏத்தாதே, மற்றும், யுள்நின்ற, வியன்கயிலை, மேயான், காணீர், கண்டாய்