முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பத்தாம் திருமுறை - திருமந்திரம் » ஒன்பதாம் தந்திரம்
பத்தாம் திருமுறை - திருமந்திரம் - ஒன்பதாம் தந்திரம்

ஒன்பதாம் தந்திரம்
1. குருமட தரிசனம்
2649 |
பலியும் அவியும் பரந்து புகையும் ஒலியும் ஈசன் தனக்கென்ற உள்கிக் குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த் தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே. |
1 |
2650 |
இவன்இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின் அவனுக்கு இவனில்லம் என்றென்று அறிந்தும் அவனைப் புறம்புஎன்று அரற்றுகின் றாரே. |
2 |
2651 |
நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின் கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி தேட அரியன் சிறப்பிலி எம்இறை ஓடும் உலகுயிர் ஆகிநின் றானே. |
3 |
2652 |
இயம்புவன் ஆசனத் தோடு மலையும் இயம்புவன் சித்தக் குகையும் இடமும் இயம்புவன் ஆதாரத் தோடு வனமும் இயம்புவன் ஈராறு இருநிலத் தோர்க்கே. |
4 |
2653 |
முகம்பீடம் மாமடம் முன்னிய தேயம் அகம்பர வர்க்கமே ஆசில்செய் காட்சி அகம்பர மாதனம் எண்எண் கிரியை சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே. |
5 |
2654 |
அகமுக மாம்பீடம் ஆதார மாகும் சகமுக மாம்சத்தி யாதன மாகும் செகமுக மாம்தெய்வ மேசிவ மாகும் அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே. |
6 |
2655 |
மாயை இரண்டும் மறைக்க மறைவுறும் காயம்ஓர் ஐந்தும் கழியத்தா னாகியே தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள் ஆய்பவர் ஞானாதி மோனத்த ராமே. |
7 |
2. ஞானகுரு தரிசனம்
2656 |
ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில் கூறக் குருபரன் கும்பிடு தந்திடும் வேறே சிவபதம் மேலாய் அளித்திடும் பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே. |
1 |
2657 |
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி அரிய பரசிவம் யாவையும் ஆகி விரிவு குவிவுஅற விட்ட நிலத்தே பெரிய குருபதம் பேசஒண் ணாதே. |
2 |
2658 |
ஆயன நந்தி அடிக்குஎன்தலைபெற்றேன் வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்பெற்றேன் காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன் சேயன நந்திக்குஎன் சிந்தைபெற் றேனே. |
3 |
2659 |
கருடன் உருவம் கருதும் அளவில் பருவிடம் தீர்ந்து பயம்கெடு மாபோல் குருவின் உருவம் குறித்த அப் போதே திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே. |
4 |
2660 |
அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர் அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்கு அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும் அண்ணலைக் காணில் அவன்இவன் ஆமே. |
5 |
2661 |
தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும் மான்ற அறிவு மறிநன வாதிகள் மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்றற ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே. |
6 |
2662 |
சந்திர பூமிக் குள்தன்புரு வத்திடைக் கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும் பந்தம் இலாத பளிங்கின் உருவினள் பந்தம் அறுத்த பரம்குரு பற்றே. |
7 |
2663 |
மனம்புகுந் தான்உலகு ஏழும் மகிழ நிலம்புகுந் தான்நெடு வானிலம் தாங்கிச் சினம்புகுந் தான்திசை எட்டும்நடுங்க வனம்புகுந் தான்ஊர் வடக்கென்பது ஆமே. |
8 |
2664 |
தானான வண்ணமும் கோசமும் சார்தரும் தானாம் பறவை வனமெனத் தக்கன தானான சோடச மார்க்கந்தான் நின்றிடில் தாமாம் தசாங்கமும் வேறுள்ள தானே. |
9 |
2665 |
மருவிப் பிரிவுஅறி யாஎங்கள் மாநந்தி உருவம் நினைக்க நின்று உள்ளே உருக்கும் கருவில் கரந்துஉள்ளம் காணவல் லார்க்குஇங்கு அருவினை கண்சோரும் அழிவார் அகத்தே. |
10 |
2666 |
தலைப்பட லாம்எங்கள் தத்துவன் தன்னைப் பலப்படு பாசம் அறுத்துஅறுத் திட்டு நிலைப்பெற நாடி நினைப்பற உள்கில் தலைப்பட லாகும் தருமமும் தானே. |
11 |
2667 |
நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச் சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத் தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும் கனத்த மனத்தடைந் தால்உயர்ந் தாரே. |
12 |
2668 |
தலைப்படும் காலத்துத் தத்துவம் தன்னை விலக்குறின் மேவை விதியென்றும் கொள்க அனைத்துஉல காய் நின்ற ஆதிப் பிரானை நினைப்புறு வார்பத்தி தேடிக் கொள்வாரே. |
13 |
2669 |
நகழ்வுஒழிந் தார்அவர் நாதனை யுள்கி நிகழ்வுஒழிந் தார்எம் பிரானொடும் கூடித் திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தையின் உள்ளே புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே. |
14 |
2670 |
வந்த மரகத மாணிக்க ரேகைபோல் சந்திடு மாமொழிச் சற்குரு சன்மார்க்கம் இந்த இரேகை இலாடத்தின் மூலத்தே சுந்தரச் சோதியுள் சோதியும் ஆமே. |
15 |
2671 |
உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க் கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது மண்ணு நீரனல் காலொடு வானுமாய் விண்ணு மின்றி வெளியானோர் மேனியே. |
16 |
2672 |
பரசு பதியென்று பார்முழு தெல்லாம் பரசிவன் ஆணை நடக்கும் பாதியால் பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்கு உரிய பதியும்பா ராக்கி நின்றானே. |
17 |
2673 |
அம்பர நாதன் அகலிடம் நீள்பொழில் தம்பர மல்லது தாமறியோம் என்பர் உம்பருள் வானவர் தானவர் கண்டிலர் எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே. |
18 |
2674 |
கோவணங் கும்படி கோவண மாகிப்பின் நாவணங் கும்படி நந்தி அருள்செய்தான் தேவணங் கோம்இனிச் சித்தம் தெளிந்தனம் போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமே. |
19 |
3. பிரணவ சமாதி
2675 |
தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை பாலித்த சூக்கும மேலைப் சொரூபப்பெண் சூலித்த முத்திரை ஆங்கதிற்காரணம் மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே. |
1 |
2676 |
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே. |
2 |
2677 |
ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள் ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம் ஓங்கார தீதத்து உயிர்மூன்றும் உற்றன ஓங்கார சீவ பரசிவ ரூபமே. |
3 |
2678 |
வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும் அருக்கம் சராசரம் ஆகும் உலகில் தருக்கிய ஆதாரம் எல்லாம்தன் மேனி சுருக்கம்இல் ஞானம் தொகுத் துணர்ந் தோரே. |
4 |
2679 |
மலையும் மனோபவம் மருள்வன ஆவன நிலையில் தரிசனம் தீப நெறியாம் தலமும் குலமும் தவம்சித்த மாகும் நலமும்சன் மார்க்கத்து உபதேசம் தானே. |
5 |
2680 |
சோடச மார்க்கமும் சொல்லும்சன்மார்க்கிகட்கு ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற் கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்து ஏறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே. |
6 |
4. ஒளி
2681 |
ஒளியை அறியில் உருவும் ஒளியும் ஒளியும் உருவம் அறியில் உருவாம் ஒளியின் உருவம் அறியில் ஒளியே ஒளியும் உருக உடனிருந் தானே. |
1 |
2682 |
புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும் அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும் பகல்ஒளி செய்தும் அத்தா மரையிலே இகல்ஒளி செய்துஎம் பிரான்இருந் தானே. |
2 |
2683 |
விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன் துளங்கொளி பெற்றன சோதி யருள வளங்கொளி பெற்றதே பேரொளி வேறு களங்கொளி செய்து கலந்து நின்றானே. |
3 |
2684 |
இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள் வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி விளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே. |
4 |
2685 |
மேல்ஒளி கீழ்அதன் மேவிய மாருதம் பால்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம் நீர்ஒளி செய்து நெடுவிசும்பு ஒன்றிலும் மேல்ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே. |
5 |
2686 |
மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி பன்னிய ஞானம் பரந்து பரத்தொளி துன்னிய ஆறுஒளி தூய்மொழி நாடொறும் உன்னிய வாறுஒளி ஒத்தது தானே. |
6 |
2667 |
விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும் உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற வளங்கொளி எங்கும் மருவிநின் றானே. |
7 |
2688 |
விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும் துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான் அளங்கொளி ஆரமு தாகநஞ் சாரும் களங்கொளி ஈசன் கருத்தது தானே. |
8 |
2689 |
இயலங்கியது எவ்வொளி அவ்வொளி ஈசன் துலங்கொளி போல்வது தூங்கருட் சத்தி விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி உளங்கொளி யுள்ளே ஒருங்கிகின் றானே. |
9 |
2690 |
உலங்கொளி யாவதுஎன் உள்நின்ற சீவன் வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி வளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே. |
10 |
2691 |
விளங்கொளி யாய்நின்ற விகிர்தன் இருந்த துளங்கொளி பாசத்துள் தூங்கிருள் சேராக் களங்கிருள் நட்டமே கண்ணுதல் ஆட விளங்கொளி உள்மனத்து ஒன்றிநின் றானே. |
11 |
2692 |
போது கருங்குழற் போனவர் தூதிடை ஆதி பரத்தை அமரர் பிரானொடும் சோதியும் அண்டத்துஅப் பாலுற்ற தூவொளி நீதியின் நல்லிருள் நீக்கிய வாறே. |
12 |
2693 |
உண்டில்லை என்னும் உலகத்து இயல்பிது பண்டில்லை என்னும் பரங்கதி யுண்டுகொல் கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறில் விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே. |
13 |
2694 |
சுடருற ஒங்கிய ஒள்ளொளி ஆங்கே படருறு காட்சிப் பகலவன் ஈசன் அடருறு மாயையின் ஆரிருள் வீசில் உடலுறு ஞாலத் துறவியின் ஆமே. |
14 |
2695 |
ஒளி பவ ளத்திரு மேனிவெண் ணீற்றன் அளிபவ ளச்சொம்பொன் ஆதிப் பிரானும் களிபவ ளத்தினன் காரிருள் நீங்கி ஒளிபவ ளத்தென்னோடு ஈசன் நின் றானே. |
15 |
2696 |
ஈசன்நின் றான்இமை யோர்கள் நின் றார்நின்ற தேசம்ஒன் றின்றித் திகைத்துஇழைக் கின்றனர் பாசம்ஒன் றாகப் பழவினை பற்றற வாசம்ஒன் றாமலர் போன்றது தானே. |
16 |
2697 |
தானே யிருக்கும் அவற்றில் தலைவனும் தானே யிருக்கும் அவனென நண்ணிடும் வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப் பானாய் இருக்கப் பரவலும் ஆமே. |
17 |
5. தூல பஞ்சாக்கரம்
2698 |
ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும் ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும் ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின் ஐம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே. |
1 |
2699 |
அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி உகார முதலாக ஓங்கி உதித்து மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந்து ஏறி நகார முதலாகும் நந்திதன் நாமமே. |
2 |
2700 |
அகராதி ஈரெண் கலந்த பரையும் உகராதி தன்சத்தி உள்ளொளி ஈசன் சிகராதி தான்சிவ வேதமே கோணம் நகராதி தான்மூலமந்திரம் நண்ணுமே. |
3 |
2701 |
வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி ஆய இலிங்கம் அவற்றின்மேல் அவ்வாய்த் தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல் ஆயதுஈ றாம்ஐந்தோடு ஆம்எழுத்து அஞ்சுமே. |
4 |
2702 |
கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக் கரணங்கள் விட்டுயிர் தானெழும் போது மரணம்கை வைத்துஉயிர் மாற்றிடும் போதும் அரணம்கை கூட்டுவது அஞ்செழுத் தாமே. |
5 |
2703 |
ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில் ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலார் சேயுறு கண்ணி திருஎழுத்து அஞ்சையும் வாயுறு ஓதி வழுத்தலும் ஆமே. |
6 |
2704 |
தெள்ளமுது ஊறச் சிவாய நமஎன்று உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும் வெள்ளமுது ஊறல் விரும்பிஉண் ணாதவர் துள்ளிய நீர்போல் சுழல்கின்ற வாறே. |
7 |
2705 |
குருவழி யாய குணங்களில் நின்று கருவழி யாய கணக்கை அறுக்க வரும்வழி மாள மறுக்கவல் லார்கட்கு அருள்வழி காட்டுவது அஞ்செழுத் தாமே. |
8 |
2706 |
வெறிக்க வினைத்துயிர் வந்திடும் போது செறிக்கின்ற நந்தி திருஎழுத்து ஓதும் குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும் குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே. |
9 |
2707 |
நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரான்என்று துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று மஞ்சு தவழும் வடவரை மீதுரை அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே. |
10 |
2708 |
பிரான்வைத்த ஐந்தின் பெருமை யுணராது இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர் பராமுற்றும் கீழோடு பல்வகை யாலும் அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே. |
11 |
6. சூக்கும பஞ்சாக்கரம்
2709 |
எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த் தெளிய ஒதிச்சிவாயநம என்னும் குளிகை யிட்டுப் பொன் னாக்குவன் கூட்டையே. |
1 |
2710 |
சிவன்சத்தி சீவன் செறுமல மாயை அவஞ்சேர்த்த பாச மலம்ஐந்து அகலச் சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர அவம்சேர்த்த பாசம் அணுககி லாவே. |
2 |
2711 |
சிவன்அரு ளாய சிவன்திரு நாமம் சிவன்அருள் ஆன்மா திரோதம் மலமாயை சிவன்முத லாகச் சிறந்து நிரோதம் பவமது அகன்று பரசிவன் ஆமே. |
3 |
2712 |
ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ் ஆதி தனைவிட்டு இறையருள் சத்தியால் தீதில் சிவஞான யோகமே சித்திக்கும் ஓதும் சிவாயமலமற்ற உண்மையே. |
4 |
2713 |
நமாதி நனாதி திரோதாயி யாகித் தம்ஆதிய தாய்நிற்கத் தான்அந்தத் துற்றுச் சமாதித் துரியம் தமதுஆகம் ஆகவே நமாதி சமாதி சிவமாதல் எண்ணவே. |
5 |
2714 |
அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில் ஒருவனை ஈன்றவர் உள்ளுறும் மாயை திரிமலம் நீங்கிச் சிவாயஎன்று ஓதும் அருவினை தீர்fப்பதும் அவ்வெழுத் தாமே. |
6 |
2715 |
சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர் சிவசிவ வாயுவும் தேர்ந்துள் அடங்கச் சிவசிவ ஆய தெளிவின் உள் ளார்கள் சிவசிவ ஆகும் திருவருள் ஆமே. |
7 |
2716 |
சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவசிவ என்னச் சிவகதி தானே. |
8 |
2717 |
நவமென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச் சிவமென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப் பவமது தீரும் பரிசும்அது அற்றால் அவதி தீரும் அறும்பிறப்பு அன்றோ. |
9 |
7. அதிசூக்கும பஞ்சாக்கரம்
2718 |
சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி அவாயம் அறவே அடிமைய தாக்கிச் சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே. |
1 |
2719 |
செஞ்சுடர் மண்டலத்து ஊடுசென்று அப்புறம் அஞ்சண வும்முறை ஏறிவழிக் கொண்டு துஞ்சும் அவன்சொன்ன காலத்து இறைவனை நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே. |
2 |
2720 |
அங்கமும் ஆகம வேதமது ஓதினும் எங்கள் பிரான்எழுத்து ஒன்றில் இருப்பது சங்கைகெட்டு அவ்எழுத்து ஒன்றையும் சாதித்தால் அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே. |
3 |
2721 |
பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர் எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே. |
4 |
8.1 திருக்கூத்து தரிசனம்
2722 |
எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம் எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும் தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே. |
1 |
2723 |
சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச் சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப் பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை அற்புதக் கூத்தனை யார்அறி வாரே. |
2 |
8.2 சிவானந்தக் கூத்து
2724 |
தான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல் தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர் ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு ஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே. |
3 |
2725 |
ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள் ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம் ஆனந்தம் ஆக அகில சராசரம் ஆனந்தம் ஆனந்தக் கூத்துஉகந் தானுக்கே. |
4 |
2726 |
ஒளியாம் பரமாம் உளதாம் பரமும் அளியார் சிவகாமி யாகும் சமயக் களியார் பரமும் கருதுறை யந்தக் தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே. |
5 |
2727 |
ஆன நடம்ஐந்து அகள சகளத்தர் ஆன நடமாடி ஐங்கரு மத்தாக ஆன தொழில்அரு ளால்ஐந் தொழில்செய்தே தேன்மொழி பாகன் திருநட மாடுமே. |
6 |
2728 |
பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகண்ட மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட தாகாண்ட ஐங்கரு மாத்தாண்ட தற்பரத்து ஏகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே. |
7 |
2729 |
வேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆடக் கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப் பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட நாதம்கொண் டாடினான் ஞானாந்தக் கூத்தே. |
8 |
2730 |
பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில் வேதங்கள் ஐந்தின் மிகும்ஆ கமந்தன்னில் ஓதும் கலைகாலம் ஊழியுடன் அண்டப் போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே. |
9 |
2731 |
தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர் மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள் தாபதர் சத்தர் சமயம் சராசரம் யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே. |
10 |
8.3 சுந்தரக் கூத்து
2732 |
அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால் உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சிமேல் கண்டம் கரியான் கருணை திருவுருக் கொண்டுஅங்கு உமைகாணக் கூத்துஉகந் தானே. |
11 |
2733 |
கொடிகட்டி பாண்டுரங் கோடுசங் காரம் நடம் எட்டோடு ஐந்துஆறு நாடியுள் நாடும் திடம்உற்று ஏழும்தேவ தாருவும் தில்லை வடம் உற்ற மாவனம் மன்னவன் தானே. |
12 |
2734 |
பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம் பரமாண்டத்து ஊடே படரொளி ஈசன் பரமாண்டத்து ஊடே படர்தரு நாதம் பரமாண்டத்து ஊடே பரன்நடம் ஆடுமே. |
13 |
2735 |
அங்குசம் என்ன எழுமார்க்கம் போதத்தில் தங்கிய தொந்தி எனும்தாள ஒத்தினில் சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல் பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே. |
14 |
2736 |
ஆன்நந்தி யாடிபின் நவக் கூத்தாடிக் கான்நந்தி யாடிக் கருத்தில் தரித்தாடி மூனச் சுழுனையுள் ஆடி முடிவில்லா ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே. |
15 |
2737 |
சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான்ஐந்தும் முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும் சித்திகள் எட்டும் சிவபதம் தான்எட்டும் சுத்திகள் எட்டுஈசன் தொல்நடம் ஆடுமே. |
16 |
2738 |
மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும் தேகங்கள் சூழும் சிவபாற் கரன் ஏழும் தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும் ஆகின்ற நந்தி அடிக்கீழ் அடங்குமே. |
17 |
8.4 பொற்பதிக் கூத்து
2739 |
தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில் அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும் ஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள் தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே. |
18 |
2740 |
அடிஆர் பவரே அடியவர் ஆமால் அடியார்பொன் அம்பலத்து ஆடல்கண்டாரே அடியார் அரனடி ஆனந்தம் கண்டோர் அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர். |
19 |
2741 |
அடங்காத என்னை அடக்கி அடிவைத்து இடம்காண் பரானநத்தத் தேஎன்னை இட்டு நடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன் படம்தான்செய்து உள்ளுள் படிந்திருந் தானே. |
20 |
2742 |
உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச் செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச் சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை இன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே. |
21 |
2743 |
மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப் பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச் சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை ஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே. |
22 |
2744 |
விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோரும் தம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும் செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள் அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே. |
23 |
2745 |
தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள் வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன் ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்த நாட்ட முறுக்குறும் நாடகங் காணவே. |
24 |
2746 |
காளியோடு ஆடிக் கனகா சலத்துஆடிக் கூளியோடு ஆடிக் குவலயத் தேஆடி நீடிய நீர்தீகால் நீள்வான் இடையாடி நாளுற அம்பலத் தேயாடும் நாதனே. |
25 |
2747 |
மேரு நடுநாடி மிக்கிடை பிங்கனல் கூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும் சாரும் திலைவனத் தண்மா மலயத்தூடு ஏறும் கழுமுனை இவைசிவ பூமியே. |
26 |
2748 |
பூதல மேருப் புறத்தான தெக்கணம் ஓதும் இடைபிங் கலைஒண் சுழுமுனையாம் பாதி மதியோன் பயில்திரு அம்பலம் ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே. |
27 |
8.5 பொற்றில்லைக்கூத்து
2749 |
அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப் பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத் தெண்டினில் சத்தி திருஅம் பலமாகக் கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. |
28 |
2750 |
குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம் சிரானந்தம் பூரித்துத் தென்திசை சேர்ந்து புரானந்த போகனாய்ப் பூவையும் தானும் நிரானந்த மாகி நிருத்தஞ் செய் தானே. |
29 |
2751 |
ஆதி பரன்ஆட அங்கைக் கனலாட ஓதும் சடையாட உன்மத்த முற்றாடப் பாதி மதியாடப் பாரண்ட மீதாட நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே. |
30 |
2752 |
கும்பிட அம்பலத்து ஆடிய கோன்நடம் அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம் செம்பொருள் ஆகும் சிவலோகம் சேர்ந்துற்றால் உம்பரம் மோனஞா ஞானந்தத்தில் உண்மையே. |
31 |
2753 |
மேதினி மூவேழ் மிகும்அண்டம் ஓரேழு சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு நாதமொடு அந்தம் நடானந்தம் நாற்பதம் பாதியோடு ஆடிடும் பரன்இரு பாதமே. |
32 |
2754 |
இடைபிங் கலைஇம வானோடு இலங்கை நடுநின்ற மேரு நடுவாம் சுழுமுனை கடவும் திலைவனம் கைகண்ட மூலம் படர்பொன்றி என்னும் பரமாம் பரமே. |
33 |
2755 |
ஈறான கன்னி குமரியே காவிரி வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்புஏழுள் பேறான வேதா கமமே பிறத்தலான் மாறாத தென்திசை வையகம் சுத்தமே. |
34 |
2756 |
நாதத்தினில் ஆடி நாற்பதத் தேயாடி வேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீதாடி போதத்தில் ஆடி புவனம் முழுதாடும் தீதற்ற தேவாதி தேவர் பிரானே. |
35 |
2757 |
தேவரோடு ஆடித் திருஅம்பலத்து ஆடி மூவரோடு ஆடி முனிசனத் தோடு ஆடிப் பாவினுள் ஆடிப் பராசத் தியில் ஆடிக் கோவினுள் ஆடிடும் கூத்தப் பிரானே. |
36 |
2758 |
ஆறு முகத்தில் அதிபதி நான்என்றும் கூறு சமயக் குருபரன் நானென்றும் தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே. |
37 |
2759 |
அம்பலம் ஆடரங் காக அதன்மீதே எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொளி உம்பர மாம்ஐந்து நாதத்து ரேகையுள் தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே. |
38 |
2760 |
ஆடிய காலும் அதிற்சிலம்பு ஓசையும் பாடிய பாட்டும் பலவான நட்டமும் கூடிய கோலம் குருபரன் கொண்டாடத் தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறே. |
39 |
2761 |
இருதயம் தன்னில் எழுந்த பிராணன் கரசர ணாதி கலக்கும் படியே அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன் குரவனயாய் எங்கணும் கூத்துகந் தானே. |
40 |
8.6 அற்புதக் கூத்து
2762 |
குருவுரு வன்றிக் குனிக்கும் உருவம் அருவுரு வாவது அந்த அருவே திரிபுரை யாகித் திகழ்தரு வாளும் உருவரு வாகும் உமையவள் தானே |
41 |
2763 |
திருவழி யாவது சிற்றம் பலத்தே குருவடி வுள்ளாக்குனிக்கும் உருவே உருஅரு வாவதும் உற்றுணர்ந் தோர்க்கு அருள்வழி யாவதும் அவ்வழி தானே. |
42 |
2764 |
நீரும் சிரிசிடைப் பன்னிரண்டு அங்குலம் ஓடும் உயிர்எழுந்து ஓங்கி உதித்திட நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்து ஆடும் இடந்திரு அம்பலந் தானே. |
43 |
2765 |
வளிமேகம் மின்வில்லு வானகஓசை தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல் களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய் ஒளியுரு வாகி ஒளித்துநின் றானே. |
44 |
2766 |
தீமுதல் ஐந்தும் திசை எட்டும் கீழ்மேலும் ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம் மாயைமா மாயை கடந்துநின் றார்காண நாயகன் நின்று நடஞ்செய்யும் ஆறே. |
45 |
2767 |
கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும் கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம் கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக் கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே. |
46 |
2768 |
இடம்கொண்ட சத்தியும் எந்தை பிரானும் நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன் படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம் அடங்கலும் தாமாய்நின்று ஆடுகின் றாரே. |
47 |
2769 |
சத்தி வடிவு சகல ஆனந்தமும் ஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாம் சத்தி வடிவு சகளத்து எழுந்துஇரண்டு ஒத்த ஆனந்தம் ஒருநட மாமே. |
48 |
2770 |
நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம் பற்றுக்குப் பற்றாற்ப் பரமன் இருந்திடம் சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே. |
49 |
2771 |
அண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவம் தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம் தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. |
50 |
2772 |
மன்று நிறைந்த விளக்கொளி மாமலர் நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை சென்றுஅது தான்ஒரு பத்திரு நூறுள நின்றது தான்நெடு மண்டல மாமே. |
51 |
2773 |
அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி அண்ட நடஞ்செயும் ஆலயம் தானே. |
52 |
2774 |
ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன் ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகண் மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே. |
53 |
2775 |
அம்பல மாவது அகில சராசரம் அம்பல மாவது ஆதிப் பிரானடி அம்பல மாவது அப்புத்தீ மண்டலம் அம்பல மாவது அஞ்செழுத் தாமே. |
54 |
2776 |
கூடிய திண்முழ வம்குழல் ஓமென்று ஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன நாடிய நற்கணம் ஆரம்பல் பூதங்கள் பாடிய வாறுஒரு பாண்டரங் காமே. |
55 |
2777 |
அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள் தெண்டிசை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள் புண்டரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக் கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே. |
56 |
2778 |
புளிக்கண்ட வர்க்குப் புனலூறு மாபோல் களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம் துளிக்கும் அருட் கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும் ஒளிக்குள்ஆ னந்தத்து அமுதூறும் உள்ளத்தே. |
57 |
2779 |
திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது உண்டார்க்கு உணவுண்டால் உன்மத்தம் சித்திக்கும் கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக் கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே. |
58 |
2780 |
அங்கி தமருகம் அக்குமா லைபாசம் அங்குசம் சூலம் கபாலம் உடன்ஞானம் தங்குஉ பயந்தரு நீல மும்உடன் மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே. |
59 |
2781 |
ஆடல் பதினோர் உறுப்பும் அடைவாகக் கூடிய பாதம் சிலம்புகைக் கொள்துடி நீடிய நாதம் பராற்பர நேயத்தே ஆடிய நந்தி புறம்அகந் தானே. |
60 |
2782 |
ஒன்பதும் ஆட ஒருபதி னாறுஆட அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட இன்புறும் ஏழினும் ஏழுஐம்பத் தாறுஆட அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. |
61 |
2783 |
ஏழினில் ஏழாய் இகழ்ந்தெழுந்து ஏழதாய் ஏழினில் ஒன்றாய் இழிந்துஅமைந்து ஒன்றாகி ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி ஏழிசை நாடகத் தேஇசைந் தானே. |
62 |
2784 |
மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய் மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய் மூன்றின்இலக்கம் முடிவாகி முந்தியே மூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தே. |
63 |
2785 |
தாமுடி வானவர் தம்முடி மேலுறை மாமணி ஈசன் மலரடித் தாளினை வாமணி அன்புடை யார்மனத் துள்ளெழுங் காமணி ஞாலம் கடந்துநின் றானே. |
64 |
2786 |
புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும் தெரிந்தவன் ஆடும் அளவுஎங்கள் சிந்தை புரிந்தவன் ஆடில்பல்பூதங்கள் ஆடும் எரிந்தவன் ஆடல்கண்டு இன்புற்ற வாறே. |
65 |
2787 |
ஆதி நடஞ்செய்தான் என்பர்கள் ஆதர்கள் ஆதி நடஞ்செய்கை யாரும் அறிகிலர் ஆதி நடமாடல் ஆரும் அறிந்தபின் ஆதி நடமாட லாம் அருட் சத்தியே. |
66 |
2788 |
ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து அன்புறு கோணம் அதிபதந்து ஆடிடத் துன்புறு சத்தியுள் தோன்றிநின்று ஆடவே அன்புறு எந்தை நின்று ஆடலுற் றானே. |
67 |
2789 |
தத்துவம் ஆடச் சதாசிவம் தானாடச் சித்தமும் ஆடச் சிவசத்தி தானாட வைத்த சராசரம் ஆட மறையாட அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. |
68 |
2790 |
இருவருங் காண எழில்அம் பலத்தே உருவோடு அருவோடு ஒருபர ரூபமாய்த் திருவருள் சத்திக்குள் சித்தன்ஆ னந்தன் அருளுரு வாகிநின்று ஆடலுற் றானே. |
69 |
2791 |
சிவமாட சத்தியும் ஆடச் சகத்தில் அவமாட ஆடாத அம்பரம் ஆட நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச் சிவமாடும் வேதாந்தச் சித்தாந்தத் துள்ளே. |
70 |
2792 |
நாதத்தின் அந்தமும் நாற்போத அந்தமும் வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னாந்தமும் தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து நாதப் பிரமம் சிவநாட மாமே. |
71 |
2793 |
சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத் தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத் தவமாம் பரன்எங்கும் தானாக ஆடும் தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே. |
72 |
2794 |
கூடிநின் றானொடு காலத்துத் தேவர்கள் வீடநின் றான்விகிர் தா என்னும் நாமத்தைத் தேடநின் றான்திக ழுஞ்சுடர் மூன்றொளி ஆடநின் றான்என்னை ஆட்கொண்ட வாறே. |
73 |
2795 |
நாதத் துவம்கடந்து ஆதி மறைநம்பி பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர் நேதத் துவமும் அவற்றோடு நேதியும் பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே. |
74 |
2796 |
ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலர் ஆனந்த மாநடம் ஆரும் அறிகிலர் ஆனந்த மாநடம் ஆரும் அறிந்தபின் தான் அந்தம் அற்றிடம் ஆனந்த மாமே. |
75 |
2797 |
திருந்துநல் சீஎன்று உதறிய கையும் அருந்தவர் வாஎன்று அணைத்த மலர்க்கையும் பொருந்த அமைப்பில் அவ்வென்ற பொற்கையும் திருந்தநல் தீயாகும் திருநிலை மவ்வே. |
76 |
2798 |
மருவும் துடியுடன் மன்னிய வீச்சு மருவிய அப்பும் அனலுடன் கையும் கருவின் மிதித்த கமலப் பதமும் உருவில் சிவாய நமவென வோதே. |
77 |
2799 |
அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம் அரன் அங்கி தன்னில் அறையிற் சங் காரம் அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி அரனடி என்றும் அனுக்கிரகம் என்னே. |
78 |
2800 |
தீத்திரன் சோதி திகழ்ஒளி உள்ஒளி கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினள் மூர்த்திகள் மூவர் முதல்வன் இடைசெல்லப் பார்த்தனன் வேதங்கள் பாடினள் தானே. |
79 |
2801 |
நந்தியை எந்தையை ஞானத் தலைவனை மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்து அந்தர வானத்தின் அப்புறத்து அப்பர சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே. |
80 |
2802 |
சீய குருநந்தி திருஅம்ப லத்திலே ஆயுறு மேனியை யாரும் அறிகிலர் தீயுறு செம்மை வெளுப்பொடும் அத்தன்மை ஆயுறு மேனி அணைபுக லாமே. |
81 |
2803 |
தானான சத்தியும் தற்பரை யாய்நிற்கும் தானாம் பரற்கும் உயிர்க்கும் தரும் இச்சை ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள் ஆனால் அரனடி நேயத்த தாமே. |
82 |
9. ஆகாசப் பேறு
2804 |
உள்ளத்துள் ஓம்என்ற ஈசன் ஒருவனை உள்ளத்து ளேயங்கி யாய ஒருவனை உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை உள்ளத்து ளேயுடல் ஆகாய மாமே. |
1 |
2805 |
பெருநில மாய் அண்ட மாய்அண்டத்து அப்பால் குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன் பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன் அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே. |
2 |
2806 |
அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன் பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது கொண்ட குறியைக் குலைத்தது தானே. |
3 |
2807 |
பயனறு கன்னியர் போகத்தின் உள்ளே பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி அயனொடு மால்அறி யாவகை நின்றிட்டு உயர்நெறி யாய்ஒளி ஒன்றது வாமே. |
4 |
2808 |
அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும் பிறிவா வலத்தினில் பேரொளி மூன்றும் அறியாது அடங்கிடும் அத்தன் அடிக்குள் பிறியாது இருக்கில் பெரும்காலம் ஆமே. |
5 |
2809 |
ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து ஏகாச மாசுணம் இட்டுஅங்கு இருந்தவன் ஆகாச வண்ணம் அமர்ந்துநின்று அப்புறம் ஆகாச மாய்அங்கி வண்ணனும் ஆமே. |
6 |
2810 |
உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது குயில்கொண்ட பேதை குலாவி உலாவி வெயில்கொண்டு என்உள்ளம் வெளியது ஆமே. |
7 |
2811 |
நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி நணுகிய மின்னொளி சோதி வெளியைப் பணியின் அமுதம் பருகலும் ஆமே. |
8 |
2812 |
புறத்துளா காசம் புவனம் உலகம் அகத்துளா காசம்எம் ஆதி அறிவு சிவத்துளா காசம் செழுஞ்சுடர் சோதி சகத்துளா காசம் தானம்ச மாதியே. |
9 |
10. ஞானோதயம்
2813 |
மனசந் தியில்கண்ட மனநன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதனை வினவுற ஆனந்தம் மீதொழிவுஎன்ப இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே. |
1 |
2814 |
கரியட்ட கையன் கபாலம்கை யேந்தி எரியும் இளம்பிறை சூடும்எம் மானை அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால் கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே. |
2 |
2815 |
மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன் தக்கார் உரைத்த தவநெறியே சென்று புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை நக்கார் சுழல்வழி நாடுமின் நீரே. |
3 |
2816 |
விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே. |
4 |
2817 |
தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின் தத்துவன் அங்கே தலைப்படுந் தானே. |
5 |
2818 |
விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளே அசும்பினின்று ஊறியது ஆர்அமுது ஆகும் பசும்பொன் திகழும் படர்சடை மீதே குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே. |
6 |
2819 |
முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின் கொத்தும் பசும்பொன்னின்தூவொளி மாணிக்கம் ஒத்துஉயிர் அண்டத் துள் அமர் சோதியை எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே. |
7 |
2820 |
நான்என்றும் தான்என்றும் நாடினேன் நாடலும் நான்என்றும் தான்என்றும் இரண்டில்லை என்பது நான்என்ற ஞான முதல்வனே நல்கினான் நான்என்ற நானும் நினைப்பு ஒழிந்தேனே. |
8 |
2821 |
ஞானத்தின் நன்னெறி நாதாந்த நன்னெறி ஞானத்தின் நன்னெறி நானென்று அறிவோர்தல் ஞானத்தின் நல்யோக நன்னிலை யேநிற்றல் ஞானத்தின் நன்மோக நாதாந்த வேதமே. |
9 |
2822 |
உய்யவல் லார்கட்கு உயிர்சிவ ஞானமே உய்யவல் லார்கட்கு உயிர்சிவ தெய்வமே உய்யவல் லார்கட்கு ஒடுக்கம் பிரணவம் உய்யவல் லார்அறி வுள்அறி வாமே. |
10 |
2823 |
காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும் காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும் பேணவல் லார்க்கப் பிழைப்பிலன் பேர்நந்தி ஆணவல் லார்க்கே அவன்துணை யாமே. |
11 |
2824 |
ஓம்என்றும் எழுத் துள்நின்ற ஓசைபோல் மேல்நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள் சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடி ஆய்கின்ற தேவர் அகம்படி யாமே. |
12 |
11. சத்திய ஞானானந்தம்
2825 |
எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே இப்பாழும் இன்னாவாறு என்பதில்லா இன்பத்துத் தற்பரஞா னானந்தர் தானது வாகுமே. |
1 |
2826 |
தொம்பதம் தற்பதஞ் சொன்ன துரியம்போல் நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும் அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச் செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. |
2 |
2827 |
மன்னும் சத்தியாதி மணியொளி மாசோயை அன்னதோடு ஒப்பம் இடல்ஒன்றா மாறது இன்னிய உற்பலம் ஒண்சீர் நிறமணம் பன்னிய சோபை பகர்ஆறும் ஆனதே. |
3 |
2828 |
சத்தி சிவன்பர ஞானமும் சாற்றுங்கால் உய்த்த அனந்தம் சிவமுயர் ஆனந்தம் வைத்த சொருபத்த சத்தி வருகுரு உய்த்த உடல்இவை உற்பலம் போலுமே. |
4 |
2829 |
உருஉற் பலநிறம் ஒண்மணம் சோபை தரநிற்ப போல்உயிர் தற்பரன் தன்னில் மருவச் சிவம்என்ற மாமுப் பதத்தின் சொரூபத்தின் சத்தியாதி தோன்றநின் றானே. |
5 |
2830 |
நினையும் அளவில் நெகிழ வணங்கிப் புனையில் அவனைப் பொதியலும் ஆகும் எனையும் எங்கோன்நந்தி தன்னருள் கூட்டி நினையும் அளவில் நினைப்பித் தனனே. |
6 |
2831 |
பாலொடு தேனும் பழத்துள் இரதமும் வாலிய பேரமு தாகும் மதுரமும் போலும் துரியம் பொடிபடி உள்புகச் சீல மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே. |
7 |
2832 |
அமரத் துவம்கடந்து அண்டம் கடந்து தமரத்து நின்ற தனிமையன் ஈசன் பவளத்து முத்தும் பனிமொழி மாதர் துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே. |
8 |
2833 |
மத்திமம் ஆறாறு மாற்றி மலநீக்கிச் சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப் பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றும் சத்திய ஞா னானந்தம் சார்ந்தனன் ஞானியே. |
9 |
2834 |
சிவமாய் அவமான மும்மலம் தீரப் பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத் தவமான சத்திய ஞானானந் தத்தே துவமார் துரியம் சொரூபம் தாமே. |
10 |
12. சொரூப உதயம்
2835 |
பரம குரவன் பரம்எங்கு மாகித் திரமுற எங்கணும் சேர்ந்துஒழி வற்று நிரவும் சொரூபத்துள் நீடும் சொரூபம் அரிய துரியத்து அணைந்துநின் றானே. |
1 |
2836 |
குலைக்கின்ற நீரின் குவலய நீரும் அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாசம் நிலத்திடை வானிடை நீண்டகன் றானை வரைந்து வலம்செயு மாறுஅறி யேனே. |
2 |
2837 |
அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள் எங்குநின் றாரும் இறைவன் என்று ஏத்துவர் தங்கிநின் றான்தனிநாயகன் எம்இறை பொங்கிநின் றான்புவ னாபதி தானே. |
3 |
2838 |
சமயச் சுவடும் தனையறி யாமல் சுமையற்ற காமாதி காரணம் எட்டும் திமிரச் செயலும் தெளிவுடன் நின்றோர் அமரர்க்கு அதிபதி யாகிநிற் பாரே. |
4 |
2839 |
மூவகைத் தெய்வத்து ஒருவன் முதல்உரு வாய்அது வேறாம் அதுபோல் அணுப்பரன் சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற ஏயும் நெறியென்று இறைநூல் இயம்புமே. |
5 |
2840 |
உருவன்றி யேநின்று உருவம் புணர்க்கும் கருவன்றி யேநின்று தான்கரு வாகும் அருவன்றி யேநின்ற மாயப் பிரானைக் குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே. |
6 |
2841 |
உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர் உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர் உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே. |
7 |
2842 |
பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றாப் பரஞ்சோதி என்னுள் படிந்துஅதன் பின்னைப் பரஞ்சோதி யுள்நான் படியப் படியப் பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே. |
8 |
2943 |
சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி அரியன உற்பலம் ஆமாறு போல மருவிய சத்தியாதி நான்கும் மதித்த சொரூபக்குரவன் சுகோதயத் தானே. |
9 |
2944 |
உரையற்ற ஆனந்த மோன சொரூபத்தின் கரையற்ற சத்தியாதி காணில் அகார மருவுற்று உகாரம் மகாரம தாக உரையற்ற காரத்தில் உள்ளொளி யாமே. |
10 |
2845 |
தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும் புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து கலைநின்ற கள்வனில் கண்டுகொண் டேனே. |
11 |
2846 |
ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள் போமாறு அறிந்தேன் புகுமாறும் ஈதென்றே ஏமாப்ப தில்லை இனியோர் இடமில்லை நாமாம் முதல்வனும் நான்என லாமே. |
12 |
13. ஊழ்
2847 |
செற்றிலென் சீவிலென் செஞ்சாந்து அணியலென் மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென் வித்தகன் நந்தி விதிவழி யல்லது தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே. |
1 |
2848 |
தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால் வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று நான்முன்னம் செய்ததே நன்னில மானதே. |
2 |
2849 |
ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப் பேறிட்டுஎன் உள்ளம் பிரியகில் லாவே. |
3 |
2850 |
வான்நின்று இடிக்கில்என் மாகடல் பொங்கிலன் கான்நின்ற செந்தீக் கலந்துடல் வேகில்என் தான்ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கிலென் நான்ஒன்றி நாதனை நாடுவன் நானே. |
4 |
2851 |
ஆனை துரக்கிலென் அம்பூடு அறுக்கிலென் கானத்து உழுவை கலந்து வளைக்கிலென் ஏனைப் பதியினில் என்பெரு மான்வைத்த ஞானத்து உழவினை நான்உழு வேனே. |
5 |
2852 |
கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன் நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை வீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும் பாடது நந்தி பரிசறி வார்க்கே. |
6 |
14. சிவ தரிசனம்
2853 |
சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும் சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச் சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே. |
1 |
2854 |
வாக்கும் மனமும் மறைந்த மறைபொருள் நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை யாக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே. |
2 |
2855 |
பரனாய்ப் பராபர னாகிஅப் பால்சென்று உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய் தரனாய் தனதென ஆறுஅறி வொண்ணா அரனாய் உலகில் அருள்புரிந் தானே. |
3 |
15. சிவ சொரூப தரிசனம்
2856 |
ஓதும் மயிரக்கால் தோறும் அமு தூரிய பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம் ஆதி சொரூபங்கள் மூன்றுஅகன்று அப்பாலை வேதம் ஓதும் சொரூபிதன் மேன்மையே. |
1 |
2857 |
உணர்வும் அவனே உயிரும் அவனே புணரும் அவனே புலவி அவனே இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே. |
2 |
2858 |
துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரும் முன்னி அவர்தம் குறையை முடித்திடும் மன்னிய கேள்வி மறையவன் மாதவன் சென்னியுள் நின்றதோர் தேற்றத்தின் ஆமே. |
3 |
2859 |
மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும் தன்னுற்ற சோதி தலைவன் இணையிலி பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும் என்னுற்று அறிவன்நான் என்விழித் தானே. |
4 |
2860 |
சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம் சித்தத்தின் நில்லாச் சிவானந்தப் பேரொளி சுத்தப் பிரம துரியம் துரியத்துள் உய்த்த துரியத்து உறுபே ரொளியே. |
5 |
2861 |
பரன்அல்ல நீடும் பராபரன் அல்ல உரன்அல்ல மீதுணர் ஒண்சுடர் அல்ல தரன்அல்ல தான்அவை யாய்அல்ல வாகும் அரன்அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே. |
6 |
2862 |
முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன் பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலால் சுத்தி யகன்றொர் சுகானந்த போதரே. |
7 |
2863 |
துரிய அதீதம் சொல்லறும் பாழாம் அரிய துரியம் அதீதம் புரியில் விரியும் குவியும் விள்ளா மிளிரும்தன் உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே. |
8 |
16. முத்தி பேதம், கரும நிருவாணம்
2864 |
ஓதிய முத்தியடைவே உயிர்பர பேத மில் அச்சிவம் எய்தும் துரியமோடு ஆதி சொரூபம் சொரூபத்த தாகவே ஏதமி லாநிரு வாணம் பிறந்ததே. |
1 |
2865 |
பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள் சுற்றற் றவர்சுற்றுக் கருதிய கண்ணுதல் சுற்றற் றவர்சுற்றி நின்றான் சோதியைப் பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே. |
2 |
17. சூனிய சம்பா?ணை
2866 |
காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய் ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம் ஏய பெருமான்இருந்து பொருகின்ற மாயக் கவற்றின் மறைப்பறி யேனே. |
1 |
2867 |
தூறு படர்ந்து கிடந்தது தூநெறி மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே. |
2 |
2868 |
ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில் சாறுபடுவன நான்கு பனையுள ஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை ஏற்றலு றேன்கடல் ஏழுங்கண் டேனே. |
3 |
2869 |
வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது தொழுதுகொண்டு ஓடினோர் தோட்டக் குடிகண் முழுதும் பழுத்தது வாழைக் கனியே. |
4 |
2870 |
ஐஎன்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர் செய்யுண்டு செய்யின் தெளிவுஅறி வாரில்லை மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம் பொய்யொன்றும் இன்றிப் புகஎளி தாமே. |
5 |
2871 |
பள்ளச்செய் ஒன்றுண்டு பாடச்செய் இரண்டுள கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே. |
6 |
2872 |
மூவணை ஏரும் உழுவது முக்காணி தாமணி கோலித் தறியுறப் பாய்ந்திடும் நாஅணைகோலி நடுவில் செறுஉழார் காலணை கோலிக்களர்உழு வாரே. |
7 |
2873 |
ஏற்றம் இரண்டுள ஏழு துரவுள மூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர் பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில் கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே. |
8 |
2874 |
பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள குட்டிப் பசுக்களோர்ஏழுளு ஐந்துள குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும் பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே. |
9 |
2875 |
ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள ஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால்போதும் காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்து மாற்றுப் பசுக்கள் வரவுஅறி யோமே. |
10 |
2876 |
தட்டான் அசுத்தில் தலையான மச்சின்மேல் மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது வட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத் தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே. |
11 |
2877 |
அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி திரிக்கின்ற ஒட்டம்சிக்கெனக் கட்டி வரிக்கின்ற நல்ஆன் கறவையைப் பூட்டில் விரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே. |
12 |
2878 |
இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக் கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையை மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார் கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே. |
13 |
2879 |
விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம் விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்கு விளைந்து கிடந்தது மேவுமுக் காதமே. |
14 |
2880 |
களர்உழு வார்கள் கருத்தை அறியோம் களர்உழு வார்கள் கருதலும் இல்லைக் களர்உழு வார்கள் களரின் முளைத்த வளர்இள வஞ்சியின்மாய்தலும் ஆமே. |
15 |
2881 |
கூப்பிடு கொள்ளாக் குறுநரி கொட்டகத்து ஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு நாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழை ஏற்பட இல்லத்து இனிதிருந்தானே. |
16 |
2882 |
மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக் குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன் முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே. |
17 |
2883 |
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே. |
18 |
2884 |
ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும் தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும் தாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளன மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே. |
19 |
2885 |
எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத் தெருளாத கன்னி தெறிந்திருந்து ஓத மலராத பூவின் மணத்தின் மதுவைப் பிறவாத வண்டு மணமுண்ட வாறே. |
20 |
2886 |
போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும் கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனி ஆநின்ற வைங்கூழ் அவையுண்ணும் ஐவரும் வேகின்ற கூரை விருத்திபெற் றாரே. |
21 |
2887 |
மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு வேம்பினில் சார்ந்து கிடந்த பனையிலோர் பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பார்இன்றி வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே. |
22 |
2888 |
பத்துப் பரும்புலி யானை பதினைந்து வித்தகர் ஐவர் வினோகர் ஈ ரெண்மர் அத்தகு மூவர் அறுவர் மருத்துவர் அத்தலை ஐவர் அமர்ந்து நின் றாரே. |
23 |
2889 |
இரண்டு கடாவுண்டு இவ்வூரின் உள்ளே இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பின் இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில் இரண்டு கடாவும் ஒருகடா வாமே. |
24 |
2890 |
ஒத்த மனக்கொல்லை உள்ளே சமன்கட்டிப் பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால் முத்தம் கயிறாக மூவர்கள் ஊரினுள் நித்தம் பொருது நிரம்பநின் றாரே. |
25 |
2891 |
கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும் நாகையும் பூழும் நடுவில் உறைவன நாகையைக் கூகை நணுகல் உறுதலும் கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே. |
26 |
2892 |
குலைக்கின்ற நன்னகை யாம்கொங்கு உழக்கின் நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான் உலைக்குப் புறமெனில் ஓடும் இருக்கும் புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே. |
27 |
2893 |
காடுபுக் கார்இனிக் காணார் கருவெளி கூடுபுக்கு ஆனது ஐந்து குதிரையும் மூடுபுக்கு ஆனது ஆறுள ஒட்டகம் மூடு புகாவிடின் மூவனை யாமே. |
28 |
2894 |
கூறையும் சோறும் குழாயகத்து எண்ணெயும் காறையும் நாணும் வளையலும் கண்டவர் பாறையில் உற்ற பறக்கின்ற சீலைபோல் ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே. |
29 |
2895 |
துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல் விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும் வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பாள் ஒருத்திஉள் ளாள்அவர் ஊர்அறி யோமே. |
30 |
2896 |
பருந்துங் கிளியும் படுபறை கொட்டத் திருந்திய மாதர் திருமணப் பட்டார் பெருந்தவப் பூதம் போலுரு வாகும் இருந்திய பேற்றினில் இன்புறு வாரே. |
31 |
2897 |
கூடும் பறவை இரைகொத்தி மற்றதன் ஊடுபுக்கு உண்டி அறுக்குறில் என்ஒக்கும் சூடுஎறி நெய்யுண்டு மைகான்று இடுகின்ற பாடுஅறி வார்க்குப் பயன்எளி தாமே. |
32 |
2898 |
இலைஇல்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லை தலைஇல்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின் குலைஇல்லை கொய்யும் மலர்உண்டு சூடும் தலைஇல்லை தாழ்ந்த கிளைபுல ராதே. |
33 |
2899 |
அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர் மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த் தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே. |
34 |
2900 |
கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம் காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர் காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக் கூப்பிட மீண்டதோர் கூரை கொண் டாரே. |
35 |
2901 |
கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும் கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார் எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே. |
36 |
2902 |
பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக் குடைகொண்ட பாசத்துக் கோலம் உண் டானும் கடைவண்டு தான் உண்ணும் கண்கலந் திட்ட பெடைவண்டு தான்பெற்றது இன்பமும் ஆமே. |
37 |
2903 |
கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதன் எல்லை கடப்பித்து இறையடிக் கூட்டியே வல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லது கொல்லசெய் நெஞ்சம் குறியறி யாதே. |
38 |
2904 |
தட்டத்து நீரிலே தாமரை பூத்தது குட்டத்து நீரில் குவளை எழுந்தது விட்டத்தின் உள்ளே விளங்கவல் லார்கட்குக் குட்டத்தில் கிட்டதோர் கொம்மட்டி யாமே. |
39 |
2905 |
ஆறு பறவைகள் ஐந்தக்து உள்ளன நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன ஏறும் பெரும்பதி ஏழுங் கடந்தபின் மாறுதல் இன்றி மனைபுக லாமே. |
40 |
2906 |
கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள் வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங் கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள் ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாமே. |
41 |
2707 |
ஏழு வளைகடல் எட்டுக் குலவரை யாழும் விசும்பினில் அங்கி மழைவளி தாழு மிருநிலந் தன்மை ய்துகண்டு வாழ நினைக்கில தாலய மாமே. |
42 |
2908 |
ஆலிங் கனஞ்செய்து அகம்சுடச் சூலத்துச் சால்இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர் கோல்இங்கு அமைத்தபின் கூபப் பறவைகள் மால்இங்கன் வைத்துஅது முன்பின் வழியே. |
43 |
2909 |
கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும் கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிதென்பர் கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும் இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே. |
44 |
2910 |
கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர் முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர் பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன் மறையொன்று கண்ட துருவம் போ லாமே. |
45 |
2911 |
கோரை எழுந்து கிடந்த குளத்தினில் ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது நாரை படுக்கின்றாற் போலல்ல நாதனார் பாரை கிடக்கப் படிகின்ற வாறே. |
46 |
2912 |
கொல்லைமுக் காதமும் காடுஅரைக் காதமும் எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி எல்லை மயங்காது இயங்க வல் லார்கட்கு ஒல்லை கடந்துசென்று ஊர்புக லாமே. |
47 |
2913 |
உழவொன்று வித்து ஒருங்கின காலத்து எழுமழை பெய்யாது இருநிலச் செல்வி தழுவி வினைசெய்து தான்பய வாது வழுவாது போவன் வளர்சடை யோனே. |
48 |
2914 |
பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம் ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ மதுங்கிய வார்களி ஆரமுது ஊறப் பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே. |
49 |
2915 |
தோணியொன்று ஏறித் தொடர்ந்து கடல்புக்கு வாணிபம் செய்து வழங்கி வளர்மகன் நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலைதளர்ந்து ஆலிப் பழம்போல் அளிக்கின்ற அப்பே. |
50 |
2916 |
முக்காதம் ஆற்றிலே மூன்றுள வாழைகள் செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர் நக்கு மலருண்டு நடுவுநின் றாரே. |
51 |
2917 |
அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி முடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில் கொடியும் படையும் கோட்சரன் ஐஐந்து மடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே. |
52 |
2918 |
பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம் தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக் குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின் குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே. |
53 |
2919 |
மொட்டித்து எழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக் கட்டுவிட்டு ஓடின் மலர்தலும் காணலாம் பற்றுவிட்டு அம்மனை பாழ்பட நோக்கினால் கட்டுவிட் டார்க்கு அன்றிக் காணஒண் ணாதே. |
54 |
2920 |
நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம் யாவரும் என்றும் அறியவல் லார்இல்லை கூரும் மழைபொழி யாது பொழிபுனல் தேரின் இந் நீர்மை திடரின்நில் லாதே. |
55 |
2921 |
கூகை குருந்தமது ஏறிக் குணம் பயில் மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும் பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே. |
56 |
2922 |
வாழையும் சூரையும் வந்திடம் கொண்டன வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர் வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு வாழை இடம்கொண்டு வாழ்கின்ற வாறே. |
57 |
2923 |
நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப் புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன் விளக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையாது அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே. |
58 |
2924 |
தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில் விளிப்பதோர் சங்குண்டு வேந்தணை நாடிக் களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும் அளிக்கும் பதத்தொன்று ஆய்ந்து கொள் வார்க்கே. |
59 |
2925 |
குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை படைகண்டு மீண்டது பாதி வழியில் உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார் அடையா நெடுங்கடை ஐந்தொடு நான்கே. |
60 |
2926 |
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும் ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும் நாகமும் எட்டொடு நாலு புரவியும் பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே . |
61 |
2927 |
பாசி பாடர்ந்து கிடந்த குளத்திடைக் கூசி யிருக்கும் குருகு இரைதேர்ந்துண்ணும் தூசி மறவன் துணைவழி எய்திடப் பாசங் கிடந்து பதைக்கின்ற வாறே. |
62 |
2928 |
கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு வம்பாய் மலர்ந்ததோர் பூவுடைப் பூவக்குள் வண்டாய்க் கிடந்து மணங்கொள்வன் ஈசனே. |
63 |
2929 |
வீணையும் தண்டும் விரவி இசைமுரல் தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது வாணிபம் சிக்கென்று அதுஅடை யாமுன்னம் காணியும் அங்கே கலக்கின்ற வாறே. |
64 |
2930 |
கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தது வங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லை திங்கள்புக்கால் இருளாவது அறிந்திலர் தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே. |
65 |
2931 |
போதும் புலர்fந்தது பொன்னிறங் கொண்டது தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை ஏதமில் ஈசன்இயங்கு நெறியிது மாதர் இருந்ததோர் மண்டலம் தானே. |
66 |
2932 |
கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலே காமுற்று அகத்தி இடுவர் கடைபொறும் வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி யாமுற்ற அதட்டினால் ஐந்துண்ண லாமே. |
67 |
2933 |
தோட்டத்தில் மாம்பழம் தோண்டி விழுந்தக்கால் நாட்டின் புறத்தில் நரியழைத்து என்செயும் மூட்டிக் கொடுத்து முதல்வனை முன்னிட்டு காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே. |
68 |
2934 |
புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப் புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப் புலம்பின் அவளொடும் போகம் நுகரும் புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே. |
69 |
2935 |
தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது வாணி மிதித்துநின்று ஐவர்கோல் ஊன்றலும் வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை ஆணி கலங்கில் அதுஇது வாமே. |
70 |
18. மோன சமாதி
2936 |
நின்றார் இருந்தார் கிடந்தார் எனஇல்லை சென்றார்தம் சித்தம் மோன சமாதியாம் மன்றுஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்றுண்டு சென்றாங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே. |
1 |
2937 |
காட்டும் குறியும் கடந்த அக் காரணம் ஏட்டின் புறத்தில் எழுதிவைத்து என்பயன் கூட்டும் குருநந்தி கூட்டிடின் அல்லது ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே. |
2 |
2938 |
உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும் உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை உணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம் உணர்வுடை யார்கள் உணர்ந்து கண் டாரே. |
3 |
2939 |
மறப்பது வாய்நின்ற மாயநன் னாடன் பிறப்பினை நீங்கிய பேரரு ளாளன் சிறப்பிடை யான்திரு மங்கையும் தானும் உறக்கமில் போகத்து உறங்கிடுந் தானே. |
4 |
2940 |
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி அரிய துரியம் அதன்மீது மூன்றாய் விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே உரையில் அநுபூ திகத்தினுள் ளானே. |
5 |
2941 |
உருவிலி ஊனிலி ஊனம்ஒன்று இல்லி திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன் பொருவிலி பூதப் படையுடை யாளி மருவிலி வந்துஎன் மனம்புகுந் தானே. |
6 |
2942 |
கண்டறி வார்இல்லைக் காயத்தின் நந்தியை எண்டிசை யோரும் இறைவன் என்று ஏத்துவர் அண்டங் கடந்த அளவிலா ஆனந்தத் தொண்டர் முகந்த துறையறி யோமே. |
7 |
2943 |
தற்பரம் அல்ல சதாசிவன் தான்அல்ல நிட்களம் அல்ல சகள நிலையல்ல அற்புத மாகி அனுபோகக் காமம்போல் கற்பனை இன்றிக் கலந்துநின் றானே. |
8 |
2944 |
முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள் அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே. |
9 |
2945 |
அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச் செப்பு பராபரம் சேர்பர மும்விட்டுக் கப்புறு சொற்பதம் மாயக் கலந்தமை எப்படி அப்படி என்னும் அவ்வாறே. |
10 |
2946 |
கண்டார்க்கு அழகிது காஞ்சிரத் தின்பழம் தின்றார்க்கு அறியலாம் அப்பழத் தின்சுவை பெண்தான் நிரம்பி மடவியள் ஆனால் கொண்டான் அறிவன் குணம்பல தானே. |
11 |
2947 |
நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன உந்தியின் உள்ளே உதித்தெழும் சோதியைப் புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனே. |
12 |
2948 |
விதறு படாவண்ணம் வேறிருந்து ஆய்ந்து பதறு படாதே பழமறை பார்த்துக் கதறிய பாழைக் கடந்ததக் கற்பனை உதறிய பாழில் ஒடுங்குகின் றானே. |
13 |
2949 |
வாடா மலர்புனை சேவடி வானவர் கூடார் அறநெறி நாடொறும் இன்புறச் சேடார் கமலச் செழுஞ்சுடர் உட்சென்று நாடார் அமுதுற நாடார் அமுதமே. |
14 |
2950 |
அதுக்கென்று இருவர் அமர்ந்த சொற் கேட்டும் பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல் சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காண மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே. |
15 |
2951 |
தானும் அழிந்து தனமும் அழிந்துநீடு ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன் வானும் அழிந்து மனமும் அழிந்துபின் நானும் அழிந்தமை நானறி யேனே. |
16 |
2952 |
இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப் பொருளிற் பொருளாய்ப் பொருந்தவுள் ளாகி அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே உருளாத கன்மனம் உற்றுநின் றேனே. |
17 |
2953 |
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம் ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே. |
18 |
19. வரையுரை மாட்சி
2954 |
தான்வரைவு அற்றபின் ஆரை வரைவது தான்அவ னானபின் ஆரை நினைவது காமனை வென்றகண் ஆரை உகப்பது தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே. |
1 |
2955 |
உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள் கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோ திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப் புரையற்று இருந்தான் புரிசடை யோனே. |
2 |
2956 |
மனமாயை மாயைஇம் மாயை மயக்கம் மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை பினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா தனைஆய்ந்து இருப்பது தத்துவந் தானே. |
3 |
20. அணைந்தோர் தன்மை
2957 |
மலமில்லை மாசில்லை மானாபி மானம் குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லை நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே பலமன்னி அன்பில் பதித்துவைப் போர்க்கே. |
1 |
2958 |
ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம் கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன் அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன் செழுஞ்சார் புடைய சிவனைக் கண் டேனே. |
2 |
2959 |
ஆலைக் கரும்பும் அமுதும்அக் காரமும் சோலைத் தண்ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப் பீலிக்கண் அன்ன வடிவுசெய் வாளொரு கோலப்பெண் ணாட்குக் குறை யொன்றும் இல்லையே. |
3 |
2960 |
ஆராலும் என்னை அமட்டஒண் ணாதிதினிச் சீரார் பிரான்வந்தென் சிந்தை புகுந்தனன் சீராடி அங்கே திரிவதால் லால் இனி யார்படுஞ் சாரா அறிவறிந் தேனே. |
4 |
2961 |
பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம் தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை அரிந்தேன் வினையை அயில்மன வாளால் முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே. |
5 |
2962 |
ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும் ஒன்றுகண் டீர்உல குக்குஉயி ராவது நன்றுகண் டீர்இனி நமசிவா யப்பழம் தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே. |
6 |
2963 |
சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன் வந்தென்னை யாண்ட மணிவிளக்கு ஆனவன் அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள் சிந்தையின் மேவித் தியக்கு அறுத் தானே. |
7 |
2964 |
பண்டுஎங்குள் ஈசன் நெடுமால் பிரமனைக் கண்டுஅங்கு இருக்கும் கருத்தறி வாரில்லை விண்டு அங்கே தோன்றி வெறுமனம் ஆயிடில் துண்டு அங்கு இருந்ததோர் தூறுஅது வாமே. |
8 |
2965 |
அன்னையும் அத்தனும் அன்புற்றது அல்லது அன்னையும் அத்தனும் ஆரறி வார்என்னை அன்னையும் அத்தனும் யானும் உடனிருந்து அன்னையும் அத்தனை யான்புரிந் தேனே. |
9 |
2966 |
கொண்ட சுழியும் குலவரை உச்சியும் அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும் எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்துளே உண்டனர் நானினி உய்ந்தொழிந் தேனே. |
10 |
2967 |
தானே திசையொடு தேவருமாய் நிற்கும் தானே வடவரை ஆதியுமாய நிற்கும் தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும் தானே உலகில் தலைவனும் ஆமே. |
11 |
2968 |
நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன் சிவன்வரின் நானுடன் போவது திண்ணம் பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன் தவம்வரும் சிந்தைத் தான்எதிராரே. |
12 |
2969 |
சித்தம் சிவமாய் மலமூன்றும் செற்றவர் சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தம் சுத்தும் சிலகும் கலகமும் கைகாணார் சத்தம் பரவிந்து தானாம்என்று எண்ணியே. |
13 |
2970 |
நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம் வினைப்பற்று அறுக்கும் விமலன் இருக்கும் வினைப்பற்று அறுக்கும் விமலனைத் தேடி நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே. |
14 |
2971 |
சிவபெரு மான்என்று நான்அழைத்து ஏத்தத் தவப்பெரு மான்என்று தான்வந்து நின்றான் அவபெரு மான்என்னை யாளுடை நாதன் பவபெரு மானைப் பணிந்துநின் றேனே. |
15 |
2972 |
பணிந்துநின் றேன்பர மாதி பதியைத் துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டேன் அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத் தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே. |
16 |
2973 |
என்நெஞ்சம் ஈசன் இணையடி தாம் சேர்ந்து முன்னம்செய்து ஏத்த முழுதும் பிறப்பறும் தன்நெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி பின்னம்செய்து என்னைப் பிணக்கறுத் தானே. |
17 |
2974 |
பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத்து எண்ணும் கணக்கறுத் தாண்டவன் காண்நந்தி என்னைப் பிணக்கறுத்து என்னுடன் முன்வந்த துன்பம் வணக்கலுற் றேன்சிவன் வந்தது தானே. |
18 |
2975 |
சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப் பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்டு அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான் அவன்வந்தென் னுள்ளே அகப்பட்ட வாறே. |
19 |
2976 |
கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில் அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம் விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின் கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே. |
20 |
2977 |
உள்ள சரியாதி ஒட்டியே மீட்டென்பால் வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச் செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால் கைவளம் இன்றிக் கருக்கடந் தேனே. |
21 |
2978 |
மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று தூண்டா விளக்கிக் தகளிசெய் சேர்தலும் பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி மாண்டான் ஒருவன்கை வந்தது தானே. |
22 |
2979 |
ஆறே அருவி அகங்குளம் ஒன்றுண்டு நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் கூறே குவிமுலை கொம்பனை யாளொடும் வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே. |
23 |
2980 |
அன்புள் உருகி அழுவன் அரற்றுவன் என்பும் உருக இராப்பகல் ஏத்துவன் என்பொன் மணியை இறைவனை ஈசனைத் தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே. |
24 |
2981 |
மனம்வி ரிந்து குவிந்தது மாதவம் மனம்வி ரிந்து குவிந்தது வாயு மனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர் மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே. |
25 |
21. தோத்திரம்
2982 |
மாயனை நாடி மனநெடும் தேரெறிப் போயின நாடறி யாதே புலம்புவர் தேயமும் நாடும் திரிந்தெங்கள் செல்வனைக் காயம்மின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே. |
1 |
2983 |
மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல் இன்னிசை பாட இருந்தவர் ஆரெனில் முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப் பன்னினர் என்றே பாடறி வீரே. |
2 |
2984 |
முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றை எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனனை அத்தனைக் காணாது அரற்றுகின் றேனையோர் பித்தன் இவனென்று பேசுகின் றாரே. |
3 |
2985 |
புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி புகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன் புகுந்துநின் றானடி யார்தங்கள் நெஞ்சம் புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே. |
4 |
2986 |
பூதக்கண் ணாடியில் புகுந்திலன் போதுளன் வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன் கீதக்கண் ணாடியில் கேட்டுநின் றேனே. |
5 |
2987 |
நாமம் ஓர் ஆயிரம் ஓதுமின் நாதனை ஏமம் ஓர் ஆயிரத் துள்ளே இசைவீர்கள் ஓமம்ஓர் ஆயிரம் ஓதவல் லார்அவர் காமம் ஆயிரம் கண்டொழிந் தாரே. |
6 |
2988 |
போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகழ் ஞானத்தைத் தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தைப் போற்றுகின் றேன்எம் பிரானென்று நானே. |
7 |
2989 |
நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை ஊனார் கமலத்தின் ஊடுசென்று அப்புறம் வானோர் உலகம் வழிபட மீண்டபின் தேனார உண்டு தெவிட்டலும் ஆமே. |
8 |
2990 |
வந்துநின் றான்அடி யார்கட்கு அரும்பொருள் இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும் சுந்தர மாதர் துழனியொன்று அல்லது அந்தர வானத்தின் அப்புறம் ஆமே. |
9 |
2991 |
மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள் எண்ணிற் கலங்கி இறைவன் இவன்என்னார் உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத் தெண்ணீர்ப் படுத்த சிவன்அவன் ஆமே. |
10 |
2992 |
மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக் கைத்தலம் சேர்தரு நெல்லிக் கனியொக்கும் சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள் அத்தனை நாடி அமைந் தொழிந் தேனே. |
11 |
2993 |
அமைந்தொழிந் தேன்அள வில்புகழ் ஞானம் சமைந் தொழிந் தேன்தடு மாற்றம்ஒன் றில்லை புகைந் தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே. |
12 |
2994 |
வள்ளல் தலைவனை வானநன் னாடனை வெள்ளப் புனற்சடை வேதமுதல்வனைக் கள்ளப் பெருமக்கள் காண்பர்கொலோஎன்று உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருந்து ஆளுமே. |
13 |
2995 |
ஆளும் மலர்ப்பதம் தந்த கடவுளை நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர் கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின் வாளும் மனத்தொடும் வைத்தொழிந் தேனே. |
14 |
2996 |
விரும்பில் அவனடி வீர சுவர்க்கம் பொருந்தில் அவனடி புண்ணிய லோகம் திருந்தில் அவனடி தீர்த்தமும் ஆகும் வருந்தி அவனடி வாழ்த்தவல் லார்க்கே. |
15 |
2997 |
வானகம் ஊடறுத் தான்இவ் வுலகினில் தானகம் இல்லாத் தனியாகும் போதகன் கானக வாழைக் கனிநுகர்ந்து உள்ளுறும் பானகச் சோதியைப் பற்றிநின் றேனே. |
16 |
2998 |
விதியது மேலை அமரர் உறையும் பதியது பாய்புனல் கங்கையும் உண்டு துதியது தொல்வினைப் பற்றறு விக்கும் பதியது வவ்விட்டது அந்தமும் ஆமே. |
17 |
2999 |
மேலது வானவர் கீழது மாதவர் தானிடர் மானுடர் கீழது மாதுஅனங் கானது கூவிள மாலை கமழ்சடை ஆனது செய்யும்என் ஆருயிர் தானே. |
18 |
3000 |
சூழுங் கருங்கடல் நஞ்சுண்ட கண்டனை ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பிலி யாழுஞ் சுனையும் அடவியும் அங்குளன் வாழும் எழுந்தைந்து மன்னனும் ஆமே. |
19 |
3001 |
உலகமது ஒத்துமண் ஒத்ததஉயர் காற்றை அலர்கதிர் அங்கிஓத்து ஆதிப் பிரானும் நிலவிய மாமுகில் நீர்ஒத்து மீண்டுஅச் செலவுஒத்து அமர்திகைத் தேவர் பி ரானே. |
20 |
3002 |
பரிசறிந்து அங்குளன் அங்கி அருக்கன் பரிசறிந்து அங்குளன் மாருதத்து ஈசன் பரிசறிந்து அங்குளன் மாமதி ஞானப் பரிசறிந்து அந்நிலம் பாரிக்கும் ஆறே. |
21 |
2903 |
அந்தம் கடந்தும் அதுஅது வாய்நிற்கும் பந்த உலகினில் கீழோர் பெரும் பொருள் தந்த உலகெங்கும் தானே பாராபரன் வந்து படைக்கின்ற மாண்பது வாமே. |
22 |
2904 |
முத்தண்ண ஈரண்ட மேமுடி ஆயினும் அத்தன் உருவம் உலகுஏ ழெனப்படும் அத்தனின் பாதாளம் அளவுள்ள சேவடி மத்தர் அதனை மகிழ்ந்துஉண ராரே. |
23 |
2905 |
ஆதிப் பிரான்நம் பிரான்அவ் அகலிடச் சோதிப் பிரான்சுடர் மூன்றுஒளி யாய்நிற்கும் ஆதிப் பிரான்அண்டத்து அப்புறம் கீழவன் ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே. |
24 |
3006 |
அண்டம் கடந்துஉயர்ந்து ஓங்கும் பெருமையன் பிண்டம் கடந்த பிறவிச் சிறுமையன் தொண்டர் நடந்த கனைகழல் காண்டொறும் தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றானே. |
25 |
3007 |
உலவுசெய் நோக்கம் பெருங்கடல் சூழ நிலம்முழுது எல்லாம் நிறைந்தனன் ஈசன் பலம்முழுது எல்லாம் படைத்தனன் முன்னே புலம்முழு பொன்னிற மாகிநின் றானே. |
26 |
3008 |
பராபர னாகிப் பல்லூழிகள் தோறும் பராபர னாய்இவ் அகலிடம் தாங்கித் தராபர னாய்நின்ற தன்மை யுணரார் நிராபர னாகி நிறைந்துநின் றானே. |
27 |
3009 |
போற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லை ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும் வேற்றுடல் தானென்றும் அதுபெருந் தெய்வமாம் காற்றது ஈசன் கலந்து நின்றானே. |
28 |
3010 |
திகையனைத் தும்சிவ னேஅவ னாகின் மிகையனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே புகையனைத் தும்புறம் அங்கியிற் கூடு முகையனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே. |
29 |
3011 |
அகன்றான் அகலிடம் ஏழும்ஒன்றாகி இவன்தான் எனநின்று எளயனும் அல்லன் சிவன்தான் பலபல சீவனு மாகி நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே. |
30 |
3012 |
கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற தலைவனனை நாடுமின் தத்துவ நாதன் விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப உரையில்லை உள்ளுறும் உள்ளவன் தானே. |
31 |
3013 |
படிகால் பிரமன்செய் பாசம் அறுத்து நெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச் செடியார் தவத்தினில் செய்தொழில் நீக்கி அடியேனை உய்யவைத்து அன்புகொண் டானே. |
32 |
3014 |
ஈசனென்று எட்டுத் திசையும் இயங்கின ஓசையில் நின்றெழு சத்தம் உலப்பிலி தேசமொன்று ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும் வாச மலர்போல் மருவி நின் றானே. |
33 |
3015 |
இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம்இறை நல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன் தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி சொல்லரும் சோதி தொடர்ந்துநின் றானே. |
34 |
3016 |
உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனும் கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும் வள்ளற்பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம் அள்ளற் கடலை அறுத்துநின் றானே. |
35 |
3017 |
மாறெதிர் வானவர் தானவர் நாடொறும் கூறுதல் செய்து குரைகழல் நாடுவர் ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறுத்துளும் வேறுசெய்து ஆங்கே விளக்கொளி யாமே. |
36 |
3018 |
விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன் கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன் பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன் எண்ணில் ஆ னந்தமும் எங்கள் பிரானே. |
37 |
3019 |
உத்தமன் எங்கும் உகக்கும் பெருங்கடல் நித்திலச் சோதியன் நீலக் கருமையன் எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச் சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே. |
38 |
3020 |
நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன் அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம் மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம் புறம்பல காணினும் போற்றகி லாரே. |
38 |
3021 |
இங்குநின் றான்அங்கு நின்றனன் எங்குளன் பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன் கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு எங்குநின் றான்மழை போல்இறை தானே. |
40 |
3022 |
உணர்வது வாயுவே உத்தம மாயும் உணர்வது நுண்ணறிவு எம்பெரு மானைப் புணர்வது வாயும் புல்லிய தாயும் உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே. |
41 |
3023 |
தன்வலி யால்உல கேழும் தரித்தவன் தன்வலி யாலே அணுவினும் தான்நொய்யன் தன்வலி யால்மலை எட்டினும் தான்சாரான் தன்வலி யாலே தடம்கட லாமே. |
42 |
3024 |
ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறை ஊனே சிறுமையும் உட்கலந்து அங்குளன் வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தின் அளவே. |
43 |
3025 |
பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளைக் குண்டாலம் காயத்துக் குதிரை பழுத்தது உண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள் பிண்டத்துஉட் பட்டுப் பிணங்குகின்றார்களே. |
44 |
22. சர்வ வியாபி
3026 |
ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓரொளி ஆயும் அறிவையும் மாயா உபாதியால் ஏய பரிய புரியும் தனதுஎய்தும் சாயும் தனது வியாபகம் தானே. |
1 |
3027 |
நான்அறிந்து அப்பொருள் நாடஇடம் இல்லை நான்அறிந்து அங்கே வழியுற விம்மிடும் ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர் தான்அறிந்து அங்கும் தலைப்பட லாமே |
2 |
3028 |
கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து உடலிடை வாழ்வுகொண்டு உள்ளொளி நாடி உடலிடை வைகின்ற உள்ளுறு தேவனைக் கடலின் மலிதிரைக் காணலும் ஆமே. |
3 |
3029 |
பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித் தெரிந்துட லாய் நிற்கும் தேவர் பிரானும் இருஞ்சுடர் விட்டிட்டு இகலிடம் எல்லாம் பரிந்துடன் போகின்ற பல்கோரை யாமே. |
4 |
3030 |
உறுதியின் உள்வந்த உள்வினைப் பட்டு இறுதியின் வீழ்ந்தார் இரணமது ஆகும் சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி பெறுதியின் மேலோர் பெருஞ்சுட ராமே. |
5 |
3031 |
பற்றி னுள்ளே பரமாய பரஞ்சுடர் முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி நெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரு மற்றவ னாய்னி ன்ற மாதவன் தானே. |
6 |
3032 |
தேவனும் ஆகும் திசைதிசை பத்துளும் ஏவனும் ஆம்விரி நீருலகு ஏழையும் ஆவனு மாம் அமர்ந்து எங்கும் உலகினும் நாவனும் ஆகி நவிற்றுகின் றானே. |
7 |
3033 |
நோக்கும் கருடன் நொடிஏழ் உலகையும் காக்கும் அவனித் தலைவனும் அங்குள நீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி போக்கும் வரவும் புணரல் லானே. |
8 |
3034 |
செழுஞ்சடை யன் செம்பொ னேயொக்கும் மேனி ஒழிந்தன னாயும் ஒருங்குடன் கூடும் கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன் ஒழிந்திலகு ஏழுலகு ஒத்துநின் றானே. |
9 |
3035 |
உணர்வும் அவனே உயிரும் அவனே புணர்வும் அவனே புலனும் அவனே இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே. |
10 |
3036 |
புலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தை நலமையின் ஞான வழக்கமும் ஆகும் விலமையில் வைத்துள் வேதியர் கூறும் பலமையில் எங்கும் பரந்துநின் றானே . |
11 |
3037 |
விண்ணவ னாய்உலகு ஏழுக்கு மேலுளன் மண்ணவ னாய்வலம் சூழ்கடல் ஏழுக்கும் தண்ணவன் ஆயது தன்மையின் நிற்பதோர் கண்ணவ னாகிக் கலந்துநின் றானே. |
12 |
3038 |
நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி நின்றனன் தான்நிலம் கீழொடு மேலென நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல் நின்றனன் தானே வளங்கனி யாயே. |
13 |
3039 |
புவனா பதிமிகு புண்ணியன் எந்தை அவனே உலகில் அடர்பெரும் பாகன் அவனே அரும்பல சீவனும் ஆகும் அவனே இறையென மாலுற்ற வாறே. |
14 |
3040 |
உண்ணின்று ஒளிரும் உலவாப் பிராணனும் விண்ணின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும் மண்ணின்று இயங்கும் வாயுவு மாய் நிற்கும் கண்ணின்று இயங்கும் கருத்தவன் தானே. |
15 |
3041 |
எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப் பண்ணும் திறனும் படைத்த பரமனைக் கண்ணிற் கவரும் கருத்தில் அதுஇது உண்ணின்று உருக்கியோர் ஆயமும் ஆமே. |
16 |
3042 |
இருக்கின்ற எண்டிசை அண்டம்பா தாளம் உருக்கொடு தன்னடு ஒங்கஇவ்வண்ணம் கருக்கொடு எங்கும் கலந்திருந் தானே திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே. |
17 |
3043 |
பலவுடன் சென்றஅப் பார்முழுது ஈசன் செலவுஅறி வார்இல்லை சேயன் அணியன் அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி பலவில தாய் நிற்கும் பான்மைவல் லானே. |
18 |
3044 |
அதுஅறி வானவன் ஆதிப் புராணன் எதுஅறி யாவகை நின்றவன் ஈசன் பொதுஅது வான புவனங்கள் எட்டும் இதுஅறி வானநந்தி எங்கள் பிரானே. |
19 |
3045 |
நீரும் நிலனும் விசும்புஅங்கி மாருதம் தூரும் உடம்புறு சோதியு மாய் உளன் பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை ஊரும் சகலன் உலப்பிலி தானே. |
20 |
3046 |
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம் மூலன் உரைசெய்த முப்பது உபதேசம் மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே. |
21 |
23. வாழ்த்து
3047 |
வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம் வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள் வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே. |
1 |
ஒன்பதாம் தந்திரம் முற்றிற்று.
திருமூலர் திருமந்திரம் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒன்பதாம் தந்திரம் - பத்தாம் திருமுறை - திருமந்திரம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ஆனந்தம், உருவம், எங்கும், சிவசிவ, எட்டும், துள்ளே, கூத்தனை, விளங்கொளி, வாரில்லை, நின்று, ஐந்தும், பரஞ்சோதி, சிந்தை, அந்தமும், செய்து, கிடந்தது, பசுக்கள், சராசரம், நிற்கும், பிரானே, தேவர்கள், அப்புறம், உள்ளொளி, துரியம், கொண்டு, என்னும், தரிசனம், எல்லாம், கூத்தே, லார்கட்கு, அத்தனும், வளங்கொளி, ஒன்றிநின், துளங்கொளி, கூத்தன், கிடந்த, ஒளியும், ஓங்காரத், மூன்றும், தத்துவம், எம்இறை, அங்குளன், மாகும், நந்தியை, நின்றனன், புகுந்துநின், வாகும், வானவர், அல்லது, விளைந்து, ஞானத்தின், தேனும், காலத்து, சத்திய, உள்ளத்து, எங்கள், சிவகதி, நெஞ்சம், ஒருவனை, உள்ளுறும், அத்தன், சத்தியாதி, இரண்டு, அந்தம், ஆனந்தக், நாதாந்த, ஆடினான், பரமாண்டத்து, போகின்ற, நாடுமின், மாநடம், இறைவன், சொரூபம், எண்டிசை, எழுகோடி, தத்துவ, கூத்து, கூத்தனைச், அஞ்செழுத், அகலிடம், புண்ணியன், சிந்தையின், சித்தம், பூதங்கள், கலந்து, மனம்வி, உலகில், நினைப்பவர், தத்துவன், உரைசெய்த, வாழ்கவே, கண்டவர், இயம்புவன், தன்வலி, பரிசறிந்து, அறிகிலர், அண்ணல், அன்னையும், ஓம்எனும், ஐம்பது, உணர்வுடை, யிருக்கும், வாணிபம், அறிந்தபின், மந்திரம், உய்யவல், போதும், பிரானும், யாய்நின்ற, ரிந்து, அரும்பொருள், எவ்வண்ணம், எழுந்ததோர், வார்க்கே, ஒண்சுடர், அத்தனை, அல்லன், அவ்வண்ணம், உயிரும், அறுக்கும், இருக்கும், துரியத்து, கிடந்து, இயங்கும், உய்த்த, உற்பலம், வலிதென்பர், துன்னிநின், தட்டான், கரும்பும், ணாடியில், போற்றுகின், கொட்டுக்கும், வார்கள், களர்உழு, வாழையும், ஒன்றுண்டு, உணர்ந்தேன், குவிந்தது, தலைவன், யார்கட்கு, சோதியைப், கலந்துநின், ஆயிரம், றுள்ளே, அழிந்து, மலைமேல், வேதங்கள், நாடொறும், இருந்த, மாருதம், பேரொளி, தாகும், புவனங்கள், உலகத்து, மானுடர், நீர்போல், சூழ்ந்த, எழுத்தே, பஞ்சாக்கரம், விளக்கொளி, தலைவனும், அறியில், பிரணவம், அளவில், மாபோல், துரியங்கள், குருபரன், நாடும், கூடும், திரிமலம், தான்நெடு, நின்றானே, எம்பெரு, இருப்பது, தலைப்பட, காணவல், யாகித், சிவமாய், நானும், அறிந்தேன், சத்தியும், கலந்திடும், தன்னில், நீரும், அண்டம், மூன்றொளி, உயிர்க்கின்ற, மலர்க்கந்தம், என்றும், ஏழினில், ஒன்பதும், அன்புறு, நான்என்றும், தானும், ஒன்பதாம், புவனம், கடந்து, கூத்தனைப், சிவானந்தக், சுந்தரக், மூவர்கள், ஆடிடும், யார்கள், கூத்துகந், மன்றுள், அப்பால், அண்டங்கள், நன்னெறி