முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பத்தாம் திருமுறை - திருமந்திரம் » ஏழாம் தந்திரம்
பத்தாம் திருமுறை - திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

ஏழாம் தந்திரம்
1. ஆறு ஆதாரம்
1704 |
நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும் கோவிமேல் நின்ற குறிகள் பதினாறும் மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும் காலங்கண் டான்அடி காணலும் ஆமே. |
1 |
1705 |
ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின் மேதாதி நாதாந்த மீதாம் பாராசக்தி போதா லயத்துஅ விகாரந்தனிற்போத மேதாதி ஆதார மீதான உண்மையே. |
2 |
1706 |
மேல்என்றும் கீழ்என்று இரண்டற் காணுங்கால் தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும் பார்எங்கும் ஆகிப் பரந்த பராபரம் கார்ஒன்று கற்பகம் ஆகிநின்றானே. |
3 |
1707 |
ஆதார சோதனை யால்நாடி சுத்திகள் மேதாதி ஈரெண் காலந்தத்து விண்ணொளி போதா லயத்துப் புலன்கர ணம் புத்தி சாதா ரணங்கெட்டான் தான்சக மார்க்கமே. |
4 |
1708 |
மேதாதி யாலே விடாதுஓம் எனத்தூண்டி ஆதார சோதனை அத்துவ சோதனை தாதுஆர மாசுவே தானெழச் சாதித்தால் ஆதாரஞ் செய்போக மாவது காயமே. |
5 |
1709 |
ஆறந்த மும்கூடி யாரும் உடம்பினில் கூறிய ஆதார மற்றும் குறிக்கொண்மின் ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே ஊறிய ஆதாரத்து ஓரெழுத்து ஆமே. |
6 |
1710 |
ஆகும் உடம்பும் அழிகின்ற அவ்வுடல் போகும் உடம்பும் பொருந்திய வாறுதான் ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம் ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே. |
7 |
1711 |
ஆயு மலரின் அணிமலர் மேலது ஆய இதழும் பதினாறும் அங்குள தூய அறிவு சிவானந்த மாகிப்போய் மேய அறிவாய் விளைந்தது தானே. |
8 |
2. அண்டலிங்கம் (உலக சிவம்)
1712 |
இலிங்கம தாவது யாரும் அறியார் இலிங்கம தாவது எண்டிசை எல்லாம் இலிங்கம் தாவது எண்ணெண் கலையும் இலிங்கம தாக எடுத்தது உலகே. |
1 |
1713 |
உலகில் எடுத்தது சத்தி முதலா உலகில் எடுத்தது சத்தி வடிவாய் உலகில் எடுத்தது சத்தி குணமாய் உலகில் எடுத்த சதாசிவன் தானே. |
2 |
1714 |
போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும் ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பாலாம் ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம் ஆகம அத்துவா ஆறும் சிவமே. |
3 |
1715 |
ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் ஈசனை வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்று ஆர்த்தினர் அண்டங் கடந்து அப் புறநின்று காத்தனன் என்னும் கருத்தறி யாரே. |
4 |
1716 |
ஒண்சுட ரோன் அயன் மால்பிர சாபதி ஒண்சுட ரான இரவியோடு இந்திரன் கண்சுட ராகிக் கலந்தெங்கும் தேவர்கள் தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே. |
5 |
1717 |
தாபரத் துள்நின்று அருளவல் லான்சிவன் மாபரத் துண்மை வழிபடு வாரில்லை மாபரத் துண்மை வழிபடு வாளர்க்கும் பூவகத்து உள்நின்ற பொற்கொடி யாகுமே. |
6 |
1718 |
தூவிய விமானமும் தூலமது ஆகுமால் ஆய சதாசிவம் ஆகுநற் சூக்குமம் ஆய பலிபீடம் பத்திர லிங்கமாம் ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே. |
7 |
1719 |
முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும் கொத்தும்அக்கொம்பு சிலைநீறு கோமளம் அத்தன்தன் ஆகமம் அன்னம் அரிசியாம் உய்த்த்தின் சாதனம் பூமண லிங்கமே. |
8 |
1720 |
துன்றும் தயிர்நெய் பால்துய்ய மெழுகுடன் கன்றிய செம்பு கனல்இர தம்சலம் வன்திறல் செங்கல் வடிவுடை வில்வம்பொன் தென்தியங்கு ஒன்றை தெளிசிவ லிங்கமே. |
9 |
1721 |
மறையவர் அர்ச்சனை வண்படி கந்தான் இறையவர் அர்ச்சனை யேயபொன் னாகும் குறைவிலா வசியர்க்குக் கோமள மாகும் துறையடைச் சூத்திரர் தொல்வாண லிங்கமே. |
10 |
1722 |
அது வுணர்ந் தோன்ஒரு தன்மையை நாடி எதுஉண ராவகை நின்றனன் ஈசன் புதுஉணர் வான புவனங்கள் எட்டும் இது உணர்ந்து என்னுடல் கோயில்கொண்டானே. |
11 |
1723 |
அகலிட மாய்அறி யாமல் அடங்கும் உகலிட மாய்நின்ற ஊனதன் உள்ளே பகலிட மாம்முனம் பாவ வினாசன் புகலிட மாய்நின்ற புண்ணியன் தானே. |
12 |
1724 |
போது புனைசூழல் பூமிய தாவது மாது புனைமுடி வானக மாவது நீதியுள் ஈசன் உடல்விசும் பாய்நிற்கும் ஆதியுற நின்றது அப்பரி சாமே. |
13 |
1725 |
தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம் திரைபொரு நீரது மஞ்சன சாலை வரைதவழ் மஞ்சுநீர் வானுடு மாலை கரையற்ற நந்திக் கலையும்திக்காமே. |
14 |
3. பிண்டலிங்கம் (உடற் சிவம்)
1726 |
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம் மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம் மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே. |
1 |
1727 |
உலந்திலர் பின்னும் உளரென நிற்பர் நிலந்திரு நீர்தெளி யூனவை செய்யப் புலந்திரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக வலந்தரு தேவரை வந்திசெய் யீரே. |
2 |
1728 |
கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும் வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர் தாயில்கொண் டாற்போல் தலைவன்என் உட்புக வாயில்கொண் டு ஈசனும் ஆளவந் தானே. |
3 |
1729 |
கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு வாயில்கொண் டான் எங்கள் மாநந்தி தானே. |
4 |
4. சதாசிவ லிங்கம் (உலக முதற் சிவம்)
1730 |
கூடிய பாதம் இரண்டும் படிமிசை பாடிய கையிரண்டு எட்டுப் பரந்தெழும் தேடு முகம்ஐந்து செங்கையின் மூவைந்து நாடும் சதாசிவம் நல்லொளி முத்தே. |
1 |
1731 |
வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன் மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும் ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும் சாதா ரணமாம் சதாசிவந் தானே. |
2 |
1732 |
ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை ஆகின்ற சத்தியின் உள்ளே கதிரெழ ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின் ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே. |
3 |
1733 |
அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம் அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம் அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடு அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே. |
4 |
1734 |
சமயத்து எழுந்த அவத்தையீர் ஐந்துள சமயத்து எழுந்த இராசி ஈராறுள சமயத்து எழுந்த சரீரம்ஆ றெட்டுள சமயத்து எழுந்த சதாசிவந் தானே. |
5 |
1735 |
நடுவு கிழக்குத் தெற்குஉத் தரமேற்கு நடுவு படிகநற் குங்குமவன்னம் அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால் அடியேற்கு அருளிய முகம்இவை அஞ்சே. |
6 |
1736 |
அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள அஞ்சினொ டுஅஞ்சு கரதலம் தானுள அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென் நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே. |
7 |
1737 |
சத்தி தராதலம் அண்டம் சதாசிவம் சத்தி சிவமிக்க தாபர சங்கமம் சத்தி உருவம் அருவம் சதாசிவம் சத்தி சிவதத்துவ முப்பத் தாறே. |
8 |
1738 |
தத்துவ மாவது அருவம் சராசரம் தத்துவ மாவது உருவம் சுகோதயம் தத்துவம் எல்லாம் சகலமு மாய்நிற்கும் தத்துவம் ஆகும் சதாசிவம் தானே. |
9 |
1739 |
கூறுமின் ஊறு சதாசிவன் எம்இறை வேறோர் உரைசெய்து மிகைப்பொரு ளாய்நிற்கும் ஏறுரை செய்தொழில் வானவர் தம்மொடு மாறுசெய் வான் என் மனம்புகுந் தானே. |
10 |
1740 |
இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும் சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும் அருளார்ந்த சிந்தையெம் ஆதிப் பிரானைத் தெருளார்ந்தென் உள்ளே தெளிந்திருந் தேனே. |
11 |
1741 |
சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் காற்றிடில் உத்தமம் வாமம் உரையத்து இருந்திடும் தத்துவம் பூருவம் தற்புரு டன்சிரம் அத்தரு கோரம் மருடத்துஈ சானனே. |
12 |
1742 |
நாணுநல் ஈசானன் நடுவுச்சி தானாகும் தாணுவின் தன்முகம் தற்புருட மாகும் காணும் அகோரம் இருதயம் குய்யமாம் மாணுற வாமம்ஆம் சத்திநற் பாதமே. |
13 |
1743 |
நெஞ்சு சிரம்சிகை நீள்கவ சம்கண்ணாம் வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாம் செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும் செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே. |
14 |
1744 |
எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம் விண்ணிற் பரைசிரம் மிக்க சிகையாதி வண்ணங் கவசம் வனப்புடை இச்சையாம் பண்ணுங் கிரியை பரநேந் திரத்திலே. |
15 |
1745 |
சத்திநாற் கோணம் சலமுற்று நின்றிடும் சத்திஅறு கோண சயனத்தை உற்றிடும் சத்தி வட்டம் சலமுற்று இருந்திடும் சத்தி உருவாம் சதாசிவன் தானே. |
16 |
1746 |
மான் நந்தி எத்தனை காலம் அழைக்கினும் தான் நந்தி அஞ்கின் தனிச்சுடை ராய்நிற்கும் கால் நந்தி உந்தி கடந்து கமலத்தில் மேல் நந்தி ஒன்பதின் மேவிநின் றானே. |
17 |
1747 |
ஒன்றிய வாறும் உடலின் உடன்கிடந்து என்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பது தென்தலைக்கு ஏறத் திருந்து சிவனடி நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே. |
18 |
1748 |
உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக் கொணர்ந்தேன் குவலயம் கோயிலென் நெஞ்சம் புணர்ந்தேன் புனிதனும் பொய்யல்ல மெய்யே பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே. |
19 |
1749 |
ஆங்கவை Yமூன்றினும் ஆரழல் வீசிடத் தாங்கிடும் ஈரேழு தான்நடு வானதில் ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆமென ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே. |
20 |
1750 |
தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும் தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும் தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாய் தன்மேனி தானாகும் தற்பரம் தானே. |
21 |
1751 |
ஆரும் அறியார் அகாரம் அவனென்று பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி தாரம் இரண்டும் தரணி முழுதுமாய் மாறி எழுந்திடும் ஓசையதாமே. |
22 |
1752 |
இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம் இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம் இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம் இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே. |
23 |
5. ஆத்மலிங்கம் (உயிர்ச்சிவம் )
1753 |
அகார முதலா அனைத்துமாய் நிற்கும் உகார முதலா உயிர்ப்பெய்து நிற்கும் அகார உகாரம் இரண்டும் அறியில் அகார உகாரம் இலிங்கம் தாமே. |
1 |
1754 |
ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும் மேதாதி நாதமும் மீதே விரிந்தன ஆதார விந்து ஆதிபீட நாமே போதாஇ லிங்கப் புணர்ச்சிய தாமே. |
2 |
1755 |
சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம் சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம் சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம் சத்தி சிவமாகும் தாபரம் தானே. |
3 |
1756 |
தானேர் எழுகின்ற சோதியைக் காணலாம் வானேர் எழுகின்ற ஐம்பது அமர்ந்திடம் பூரேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன் தானேர் எழுகின்ற அகாரமது ஆமே. |
4 |
1757 |
விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம் விந்துவ தேபீட நாதம் இலிங்கமாம் அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய் வந்து கருஐந்தம் செய்யும் அவைஐந்தே. |
5 |
1758 |
சத்திநற் பீடம் தகுநல்ல ஆன்மா சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும் சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம் சத்திநல் ஆன்மாச் சதாசிவம் தானே. |
6 9 |
1759 |
மனம்புகுந்து என்னுயிர் மன்னிய வாழ்க்கை மனம்புகுந்து இன்பம் பொழிகின்ற போது நலம்புகுந்து என்னொடு நாதனை நாடும் இனம்புகுந்து ஆதியும் மேற்கொண்டவாறே. |
7 |
1760 |
பராபரன் எந்தை பனிமதி சூடி தராபரன் தன்னடி யார்மனக் கோயில் சிராபரன் தேவர்கள் சென்னியின் மன்னும் அராபரன் மன்னி மனத்துஉறைந் தானே. |
8 |
1761 |
பிரான்அல்ல நாம்எனில் பேதை உலகம் குரால்என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன் அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும் பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே. |
9 |
1762 |
அன்று நின் றான்கிடந் தான்அவன் என்று சென்றுநின்று எண்டிசை ஏத்துவர் தேவர்கள் என்றுநின்று ஏத்துவன் எம்பெரு மான்தன்னை ஒன்றியென் உள்ளத்தின் உள்ளிருந் தானே. |
10 |
6. ஞான லிங்கம் (உணர்வுச் சிவம் )
1763 |
உருவும் அருவும் உருவோடு அருவும் மருவு பரசிவன் மன்பல் உயிர்க்கும் குருவு மெனநிற்கும் கொள்கையன் ஆகும் தருவென நல்கும் சதாசிவன் தானே. |
1 |
1764 |
நாலான கீழது உருவம் நடுநிற்க மேலான நான்கும் அருவம் மிகுநாப்பண் நாலான ஒன்றும் அருவுரு நண்ணலால் பாலாம் இவையாம் பரசிவன் தானே. |
2 |
1765 |
தேவர் பிரானைத் திசைமுக நாதனை நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை ஏவர் பிரான்என்று இறைஞ்சுவர் அவ்வழி யாவர் பிரானடி அண்ணலும் ஆமே. |
3 |
1766 |
வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற ஆண்டொரு திங்களும் நாளும் அளக்கின்ற காண்டகை யானொடும் கன்னி உணரினும் மூண்டகை மாறினும் ஒன்றது வாமே. |
4 |
1767 |
ஆதி பரந்தெய்வம் அண்டத்து நல்தெய்வம் சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம் நீதியுள் மாதெய்வம் நின்மலர் எம்இறை பாதியுள் மன்னும் பராசத்தி யாமே. |
5 |
1768 |
சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே சுத்த சிவபதம் தோயாத தூவொளி அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம் ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே. |
6 |
1769 |
கொழுந்தினைக் காணில் குவலயம் தோன்றும் எழுந்திடம் காணில் இருக்கலும் ஆகும் பரந்திடம் காணில் பார்ப்பதி மேலே திரண்டெழக் கண்டவன் சிந்தையு ளானே. |
7 |
1770 |
எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும் முந்த உரைத்து முறைசொல்லின் ஞானமாம் சந்தித்து இருந்த இடம்பெருங் கண்ணியை உந்தியின் மேல்வைத்து உகந்து இருந்தானே. |
8 |
1771 |
சத்தி சிவன்விளை யாட்டாம் உயிராகி ஒத்த இருமாயா கூட்டத்து இடையூட்டிச் சுத்தம தாகும் துரியம் பிறிவித்துச் சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே. |
9 |
1772 |
சத்தி சிவன்தன் விளையாட்டுத் தாரணி சத்தி சிவமுமாம் சிவன்சத் தியுமாகும் சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லை சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே. |
10 |
7. சிவலிங்கம் ( சிவகுரு )
1773 |
குரைக்கின்ற வாரிக் குவலய நீரும் பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும் நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை வரைத்து வலம்செயு மாறுஅறி யேனே. |
1 |
1774 |
வரைத்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டு நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி உரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்குப் புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே. |
2 |
1775 |
ஒன்றெனக் கண்டோம் ஈசன் ஒருவனை நன்றென்று அடியிணை நான்அவனைத்தொழ வென்றுஐம் புலமும் மிகக்கிடந்து இன்புற அன்றுஎன்று அருள்செய்யும் ஆதிப் பிரானே. |
3 |
1776 |
மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன் பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம் நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப் பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே. |
4 |
1777 |
மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று ஆவி எழும்அள வன்றே உடலுற மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும் பாவித்து அடக்கிற் பரகதி தானே. |
5 |
8. சம்பிரதாயம் ( பண்டை முறை )
1778 |
உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கி கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே. |
1 |
1779 |
உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான வியவார் பரமும்பின் மேவும் பிராணன் செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கே உயலார் குருபரன் உய்யக் கொண்டானே. |
2 |
1780 |
பச்சிம திக்கலே வைத்தஆ சாரியன் நிச்சலும் என்னை நினையென்ற அப்பொருள் உச்சிக்கும் கீழது உள்நாக்கு மேலது வைச்ச பதமிது வாய்திற வாதே. |
3 |
1781 |
பிட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவோனை ஒட்டடித்து உள்ளமர் மாசெலாம் வாங்கித் தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும் வட்டமது ஒத்தது வாணிபம் வாய்த்ததே. |
4 |
1782 |
தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன் இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார் பிரிக்கின்ற விந்து பிணக்கறுத்து எல்லாம் கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்டேனே. |
5 |
1783 |
கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டு நாடி அடிவைத்து அருள்ஞான சத்தியால் பாடல் உடலினில் பற்றற நீக்கியே கூடிய தானவ னாம்குளிக் கொண்டே. |
6 |
1784 |
கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ளக் கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினைக் கொண்டான் பலமுற்றும் தந்தவன் கோடலால் கொண்டான் எனஒன்றும் கூறகி லானே. |
7 |
1785 |
குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன் பறிக்கின்ற காயத்தைப் பற்றியநேர்மை பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே. |
8 |
1786 |
உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும் உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம் உணர்வுடை யார்கண் உணர்ந்துகண் டாரே. |
9 |
1787 |
காயப் பரப்பில் அலைந்து துரியத்துச் சால விரிந்து குவிந்து சகலத்தில் ஆயஅவ் ஆறாறு அடைந்து திரிந்தோர்க்குத் தூய அருள்தந்த நந்திக்கு என் சொல்வதே. |
10 |
1788 |
நானென நீயென வேறில்லை நண்ணுதல் ஊனென ஊனுயிர் என்ன உடனின்று வானென வானவர் நின்று மனிதர்கள் தேனென இன்பம் திளைக்கின்ற வாறே. |
11 |
1789 |
அவனும் அவனும் அவனை அறியார் அவனை அறியில் அறிவானும் இல்லை அவனும் அவனும் அவனை அறியில் அவனும் அவனும் அவனிவன் ஆமே. |
12 |
1790 |
நானிது தானென நின்றவன் நாடோறும் ஊனிது தானுயிர் போலுணர் வானுளன் வானிரு மாமுகில் போற்பொழி வானுளன் நானிது அம்பர நாதனும் ஆமே. |
13 |
1791 |
பெருந்தன்மை தானென யானென வேறாய் இருந்ததும் இல்லைஅது ஈசன் அறியும் பொருந்தும் உடல்உயிர் போல்உமை மெய்யே திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே. |
14 |
9. திருவருள் வைப்பு
1792 |
இருபத மாவது இரவும் பகலும் உருவது ஆவது உயிரும் உடலும் அருளது ஆவது அறமும் தவமும் பொருவது உள்நின்ற போகமது ஆமே. |
1 |
1793 |
காண்டற்கு அரியன் கருத்திலன் நந்தியும் தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும் வேண்டிக் கிடந்து விளக்கொளி யான்நெஞ்சம் ஈண்டிக் கிடந்தங்கு இருளறும் ஆமே. |
2 |
1794 |
குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும் வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும் செறிப்புறு சிந்தையைக் சிக்கென நாடில் அறிப்புறு காட்சி அமரரும் ஆமே. |
3 |
1795 |
தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள் பேர்ந்தறி வான் எங்கள் பிஞ்ஞகன் எம்இறை ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாமெனச் சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே. |
4 |
1796 |
தானே அறியும் வினைகள் அழிந்தபின் நானே அறிகிலன் நந்தி அறியுங்கொல் ஊனே உருகி உணர்வை உணர்ந்தபின் தேனே யனையன் நம் தேவர் பிரானே. |
5 |
1797 |
நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை வான்அறிந் தார் அறி யாது மயங்கினர் ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர் தான்அறி யான்பின்னை யார்அறி வாரே? |
6 |
1798 |
அருள்எங்கு மான அளவை அறியார் அருளை நுகர்அமு தானதும் தேரார் அருள்ஐங் கருமத்து அதிசூக்கம் உன்னார் அருள்எங்கும் கண்ணானது ஆர்அறி வாரே. |
7 |
1799 |
அறிவில் அணுக அறிவது நல்கிப் பொறிவழி யாசை புகுத்திப் புணர்ந்திட்டு அறிவது ஆக்கி அடியருள் நல்கும் செறிவொடு நின்றார் சிவம்ஆயி னாரே. |
8 |
1800 |
அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு அருளில் அழிந்துஇளைப் பாறி மறைந்திட்டு அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி அருளால் என்நந்தி அகம்புகுந் தானே. |
9 |
1801 |
அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி அருளால் அடிபுணைந்து ஆர்வமும் தந்திட்டு அருளானஆனந்தந்து ஆரமுது ஊட்டி அருளால் என்நந்தி அதும்புகுந் தானே. |
10 |
1802 |
பாசத்தில் இட்டது அருள்அந்தப் பாசத்தின் நேசத்தை விட்டது அருள்அந்தநேசத்தில் கூசற்ற முத்தி அருள்அந்தக் கூட்டத்தின் நேசத்துத் தோன்றா நிலையரு ளாமே. |
11 |
1803 |
பிறவா நெறிதந்த பேரரு ளாளன் மறவா அருள் தந்த மாதவன் நந்தி அறவாழி அந்தணன் ஆதிப்பராபரன் உறவாகி வந்துஎன் உளம்புகுந் தானே. |
12 |
1804 |
அகம்புகுந் தான்அடி யேற்குஅரு ளாலே அகம்புகுந் தும்தெரி யான்அருள் இல்லோர்க்கு அகம்புகுந்து ஆனந்த மாக்கிச் சிவமாய் அகம்புகுந் தான்நந்தி ஆனந்தி யாமே. |
13 |
1805 |
ஆயும் அறிவோடு அறியாத மாமாயை ஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும் ஆய பலஇந் திரியம் அவற்றுடன் ஆய அருள்ஐந்து மாம் அருட் செய்கையே. |
14 |
1806 |
அருளே சகலமும் ஆய பவுதிகம் அருளே சராசர மாய அமலமே இருளே வெளியே யெனும்எங்கும் ஈசன் அருளே சகளத்தின் அன்றிஇன் றாமே. |
15 |
1807 |
சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து தவமான ஐம்முகன் ஈசன் அரனும் பவமுறும் மாலும் பதுமத்தோன் ஈறா நவம்அவை யாகி நடிப்பவன் தானே. |
16 |
1808 |
அருட்கண்இ லாதார்க்கு அரும்பொருள் தோன்றா அருட்கண்உ ளோர்க்குஎதிர் தோன்றும் அரனே இருட்கண்ணி னோர்க்குஅங்கு இரவியும் தோன்றாத் தெருட்கண்ணி னோர்க்குஎங்கும் சீரொளி யாமே. |
17 |
1809 |
தானே படைத்திடும் தானே அளித்திடும் தானே துடைத்திடும் தானே மறைத்திடும் தானே இவைசெய்து தான்முத்தி தந்திடும் தானே வியாபித் தலைவனும் ஆமே. |
18 |
1810 |
தலையான நான்கும் தனதுஅரு வாகும் அலையா அருவுரு வாகும் சதாசிவம் நிலையான கீழ்நான்கு நீடுரு வாகும் துலையா இறைமுற்று மாய் அல்லது ஒன்றே. |
19 |
1811 |
ஒன்றது வாலே உலப்பிலி தானாகி நின்றது தான்போல் உயிர்க்குயி ராய்நிலை துன்றி அவைஅல்ல வாகும் துணையென்ன நின்றது தான்விளை யாட்டென்னுள் நேயமே. |
20 |
1812 |
நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு ஆயக் குடிலைகள் நாதம் அடைந்திட்டுப் போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டு வீயத் தகாவிந்து வாக விளையுமே. |
21 |
1813 |
விளையும் பரவிந்து தானே வியாபி விளையும் தனிமாயை மிக்கமா மாயை கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம் அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே. |
22 |
10. அருள் ஒளி
1814 |
அருளில் தலைநின்று அறிந்துஅழுந் தாதார் அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார் அருளின் பெருமை அறியார் செறியார் அருளில் பிறந்திட்டு அறிந்துஅறி வாரே. |
1 |
1815 |
வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி ஆரா அமுதளித்து ஆனந்தி பேர்நந்தி பேரா யிரமுடைப் பெம்மான்பேர் ஒன்றினில் ஆரா அருட்கடல் ஆடுகென் றானே. |
2 |
1816 |
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும் கண்டேன் சிவன்பெரும் தன்மையைக் கூடிய வாறே குறியாக் குறிதந்தென் ஊடுநின் றான்அவன் தன்னருள் உற்றே. |
3 |
1817 |
உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும் பற்றிய மாயாப் படலம் எனப் பண்ணி அத்தனை நீயென்று அடிவைத்தேன் பேர்நந்தி கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே. |
4 |
1818 |
விளக்கினை யேற்றி வெளியை அறிமின் விளக்கினை முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே. |
5 |
1819 |
ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா ஒளியு ளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும் ஒளியுருள் கண்டகண் போலவே றாயுள ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே. |
6 |
1820 |
புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி நிறமே புகுந்தென்னை நின்மலன் ஆக்கி அறமே புகுந்தெனக்கு ஆரமுது ஈந்த திறம்ஏதென்று எண்ணித் திகைத்திருந் தேனே. |
7 |
1821 |
அருளது என்ற அகலிடம் ஒன்றும் பொருளது என்ற புகலிடம் ஒன்றும் மருளது நீங்க மனம்புகுந் தானைத் தெருளுறும் பின்னைச் சிவகதி தாமே. |
8 |
1822 |
கூறுமின் நீர்முன் பிறந்திங்கு இறந்தமை வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும் பாறணி யும்உடல் வீழலிட்டு ஆருயிர் தேறுஅணிவோம்இது செப்பவல் லீரே. |
9 |
11. சிவபூசை
1823 |
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே. |
1 |
1824 |
வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக் காட்டவும் நாம்இலம் காலையும் மாலையும் ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும் பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே. |
2 |
1825 |
பான்மொழி பாகன் பராபரன் தானாகும் ஆன சதாசிவன் தன்னைஆ வாகித்து மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு சீன்முகம் செய்யச் சிவனவன் ஆகுமே. |
3 |
1826 |
நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால் கனைகழல் ஈசனைக் காண அரிதாம் கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார் புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே. |
4 |
1827 |
மஞ்சன மாலை நிலாவிய வானவர் நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம் அஞ்சமு தாம்உப சாரம்எட்டு எட்டோடும் அஞ்சலி யோடும் கலந்துஅர்ச்சித் தார்களே. |
5 |
1828 |
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு அண்ணல் அதுகண்டு அருள்புரி யாநிற்கும் எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை நண்ணறி யாமல் நழுவுகின் றாரே. |
6 |
1829 |
அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள் ஒத்தமெய்ஞ் ஞானத்து உயர்ந்தார் பதத்தைச் சுத்தம தாக விளக்கித் தெளிக்கவே முத்தியாம் என்று நம்மூலன் மொழிந்ததே. |
7 |
1830 |
மறப்புற்று இவ்வழி மன்னிநின் றாலும் சிறப்பொடு பூநீர் திருந்தமுன் ஏந்தி மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம் அறப்பெற வேண்டும் அமரர் பிரானே. |
8 |
1831 |
ஆரா தனையும் அமரர் குழாங்களும் தீராக் கடலும் நிலத்துஉம தாய்நிற்கும் பேரா யிரமும் பிரான்திரு நாமமும் ஆரா வழியெங்கள் ஆதிப் பிரானே. |
9 |
1832 |
ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணம்தொழத் தான்அந்த மில்லாத் தலைவன் அருளது தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்ததோர் பார்ஐங் குணமும் படைத்துநின் றானே. |
10 |
1833 |
உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி மழைக்கொண்ட மாமுகில் மேற்சென்று வானோர் தழைக்கொண்ட பாசம் தயங்கிநின்று ஏத்தப் பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே. |
11 |
1834 |
வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு கள்ளக் கடல்விட்டுக்கைதொழ மாட்டாதார் அள்ளக் கடலுள் அழுந்துகின் றாரே. |
12 |
1835 |
கழிப்படுந் தண்கடற் கௌவை யுடைத்து வழிப்படு வார்மலர் மொட்டுஅறி யார்கள் பழிப்படு வார்பல ரும்பழி வீழ வெளிப்படு வோர்உச்சி மேவிநின் றானே. |
13 |
1836 |
பயனறிவு ஒன்றுண்டு பன்மலர் தூவிப் பயனறி வார்க்குஅரன் தானே பயிலும் நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே. |
14 |
1837 |
ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்று ஆர்த்தெமது ஈசன் அருட்சே வடியென்றன் மூர்த்தியை மூவா முதலுறு வாய்நின்ற தீர்த்தனை யாரும் துதித்துஉண ராரே. |
15 |
1838 |
தேவர்க ளோடுஇசை வந்துமண் ணோடுறும் பூவொடு நீர்சுமந்து ஏத்திப் புனிதனை மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள் நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே. |
16 |
1839 |
உழைக்கவல் லோர்நடு நீர்மலர் ஏந்திப் பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி இழைக்கொண்ட பாதத்து இனமலர் தூவி மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே. |
17 |
1840 |
வென்று விரைந்து விரைப்பணி என்றனர் நின்று பொருந்த இறைபணி நேர்படத் துன்று சலமலர் தூவித் தொழுதிடில் கொண்டிடும் நித்தலும் கூறியஅன்றே. |
18 |
1841 |
சாத்தியும் வைத்தும் சயம்புஎன்று ஏத்தியும் ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார் ஆத்தி மலக்கிட்டு அகத்துஇழுக்கு அற்றக்கான் மாத்திக்கே செல்லும் வழியது வாமே. |
19 |
1842 |
ஆவிக் கமலத்தில் அப்புறத்து இன்புற மேவித் திரியும் விரிசடை நந்தியைக் கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத் தாவிக்கு மந்திரம் தாமறி யாரே. |
20 |
1843 |
காண்ஆகத் துள்ளேஅழுந்திய மாணிக்கம் காணும் அளவும் கருத்தறி வாரில்லை பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு மாணிக்க மாலை மனம்புகுந் தானே. |
21 |
1844 |
பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி இருந்தன்மை யாலும் என் நெஞ்சுஇடங் கொள்ள வருந்தன்மை யாளனை வானவர் தேவர் தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றாரே. |
22 |
1845 |
சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும் அமையும் விசேடமும் ஆனமந் திரசுத்தி சமையநிர் வாணம் கலாசுத்தி யாகும் அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே. |
23 |
1846 |
ஊழிதோ றூழி உணர்ந்தவர்க்கு அல்லது ஊழில் உயிரை உணரவும் தான்ஒட்டா ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர் ஊழி கடந்தும் ஓர்உச்சியு ளானே. |
24 |
12. குருபூசை
1847 |
ஆகின்ற நந்தி அடித்தா மரைபற்றிப் போகின்றுபதேசம் பூசிக்கும் பூசையும் ஆகின்ற ஆதாரம் ஆறாறு அதனின்மேல் போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே. |
1 |
1848 |
கானுறு கோடி கடிகமழ் சந்தனம் வானுற மாமலர் இட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது தேனமர் புங்குழல் சேரஒண் ணாதே. |
2 |
1849 |
மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன் ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம் சேவடி சேரல் செயலறல் தானே. |
3 |
1850 |
உச்சியும் காலையும் மாலையும் ஈசனை நச்சுமின் நச்சி நமவென்று நாமத்தை விச்சிமின் விச்சு விரிசுடர் மூன்றினும் நச்சுமின் பேர்நந்தி நாயகன் ஆகுமே. |
4 |
1851 |
புண்ணிய மண்டலம் பூசைநா றாகுமாம் பண்ணிய மேனியும் பத்துநூ றாகுமாம் எண்ணிலிக்கு ஐயம் இடில்கோடி யாகுமால் பண்ணிடில் ஞானிஊண் பார்க்கில் விசேடமே. |
5 |
1852 |
இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம் இந்துவும் பானுவும் இலங்காத் தலத்திடை வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே. |
6 |
1853 |
இந்துவும் பானுவும் என்றெழு கின்றதோர் விந்துவும் நாதமும் ஆகிமீ தானத்தே சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே. |
7 |
1854 |
மனபவ னங்களை மூலத்தான் மாற்றி அனித உடல்பூத மாக்கி அகற்றிப் புனிதன் அருள்தனில் புக்கிருந்து இன்பத் தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே. |
8 |
1855 |
பகலும் இரவும் பயில்கின்ற பூசை இயல்புடை ஈசர்க்கு இணைமல ராகப் பகலும் இரவும் பயிலாத பூசை சகலமும் தான்கொள்வன் தாழ்சடை யோனே. |
9 |
1856 |
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து பராக்குஅற ஆனந்தத் தேறல் பருகி இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து இராப்பகல் மாயை இரண்டுஇடத் தேனே. |
10 |
13. மகேசுவர பூசை
1857 |
படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே. |
1 |
1858 |
தண்டுஅறு சிந்தை தபோதனார் தாம்மகிழ்ந்து உண்டது மூன்று புவனமும் உண்டது கொண்டது மூன்று புவனமும் கொண்டதுஎன்று எண்திசை நந்தி எடுத்துரைத் தானே. |
2 |
1859 |
மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை ஆத்தனுக்கு ஈந்த அரும்பொரு ளானது மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும் தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே. |
3 |
1860 |
அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என் சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில்என் பகரு ஞானி பகல்ஊண் பலத்துக்கு நிகரில்லை என்பது நிச்சயம் தானே. |
4 |
1861 |
ஆறிடும் வேள்வி அருமறை நூலவர் கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில் நீறிடும் தொண்டர் நினைவின் பயனிலை பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே. |
5 |
1862 |
ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள் ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்று வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே. |
6 |
1863 |
சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை நான்நொந்து நொந்து வருமளவுஞ் சொல்லப் பேர்நந்தி என்னும் பிதற்குஒழி யேனே. |
7 |
1864 |
அழிதகவு இல்லா அரன்அடி யாரைத் தொழுகை ஞாலத்துத் தூfங்கிருள் நீங்கும் பழுது படாவண்ணம் பண்பனை நாடித் தொழுதெழ வையகத்து ஓர்இன்பம் ஆமே. |
8 |
1865 |
பகவற்குஏதா கிலும் பண்பில ராகிப் புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும் முகமத்தோடு ஒத்துநின்று ஊழிதோ றூழி அகமத்த ராகிநின்று ஆய்ந்தொழிந் தா ரே |
9 |
1866 |
வித்தக மாகிய வேடத்தர் உண்டஊன் அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம் சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின் முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே. |
10 |
1867 |
தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம் ஆழ்வினை ஆழ அவர்க்கே அறஞ்செய்யும் ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும் போழ்வினை தீர்க்கும் அப் பொன்னுலகு ஆமே. |
11 |
14. அடியார் பெருமை
1868 |
திகைக்குரி யானொரு தேவனை நாடும் வகைக்குரி யானொரு வாது இருக்கில் பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும் அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே. |
1 |
1869 |
அவ்வுல கத்தே பிறந்துஅவ் உடலோணடும் அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர் அவ்வுல கத்தே அரனடி கூடுவர் அவ்வுல கத்தே அருள்பெறு வாரே. |
2 |
1870 |
கொண்ட குறியும் குலவரை உச்சியும் அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும் எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்தினுள் உண்டெனில் நாம்இனி உய்ந்தொழிந் தோமே. |
3 |
1871 |
அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும் கொண்ட சராசரம் முற்றும் குணங்களும் பண்டை மறையும் படைப்பளிப்பு ஆதியும் கண்டசிவனும்என் கண்ணன்றி இல்லையே. |
4 |
1872 |
பெண்ணல்ல ஆணல்ல பேடல்ல மூடத்துள் உள்நின்ற சோதி ஒருவர்க்கு அறியொணாக் கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிரும் அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. |
5 |
1873 |
இயங்கும் உலகினில் ஈசன் அடியார் மயங்கா வழிசெல்வர் வானுலகு ஆள்வர் புயங்களும் எண்டிசை போதுபா தாள மயங்காப் பகிரண்ட மாமுடி தானே. |
6 |
1874 |
அகம்படி கின்றநம் ஐயனை ஒரும் அகம்படி கண்டவர் அல்லலில் சேரார் அகம்படி உட்புக்கு அறிகின்ற நெஞ்சம் அகம்படி கண்டுஆம் அழிக்கலும் எட்டே. |
7 |
1875 |
கழிவும் முதலும் காதல் துணையும் அழிவும் தாய்நின்ற ஆதிப் பிரானைப் பழியும் புகழும் படுபொருள் முற்றும் ஒழியும்என் ஆவி உழவுகொண் டானே |
8 |
1876 |
என்தாயோடு என்அப்பன் ஏழ்ஏழ் பிறவியும் அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம் ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான் நின்றான் முகில்வண்ணன் நேர்எழுத் தாமே. |
9 |
1877 |
துணிந்தார் அகம்படி துன்னி உறையும் பணிந்தார் அகம்படி பால்பட்டு ஒழுகும் அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக் கணிந்தார் ஒருவர்க்கு கைவிடலாமே. |
10 |
1878 |
தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப் புலைமிசை நீங்கிய பொன்னுலகு ஆளும் பலமிசை செய்யும் படர்சடை யோனே. |
1 1 |
1879 |
அறியாப் பருவத்து அரன்அடி யாரைக் குறியால் அறிந்தின்பம் கொண்டது அடிமை குறியார் சடைமுடி கட்டி நடப்பார் மறியார் புனல்மூழ்க மாதவம் ஆமே. |
12 |
1880 |
அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள் சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லன் அவன்பால் அணுகியே நாடும் அடியார் இவன்பால் பெருமை இலயமது ஆமே. |
13 |
1881 |
முன்னிருந் தார்முழுது எண்கணத் தேவர்கள் எண்ணிறந்து அன்பால் வருவர் இருநிலத்து எண்இரு நாலு திசைஅந் தரம் ஒக்கப் பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே. |
14 |
1882 |
சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம் அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும் நவயோகம் கைகூடும் நல்லியல் காணும் பவயோகம் இன்றிப் பரலோகம் ஆமே. |
15 |
1883 |
மேலுணர் வான்மிகு ஞாலம் படைத்தவன் மேலுணர் வான்மிகு ஞாலம் கடந்தவன் மேலுணர் வார்மிகு ஞாலத்து அமரர்கள் மேலுணுர் வார்சிவன் மெய்யடி யார்களே. |
16 |
15. போசன விதி
1884 |
எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு கட்ட அடிசில் அழுதென்று எதிர்கொள்வர் ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம் விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே. |
1 |
1885 |
அச்சிவன் உள்நின்ற அருளை அறிந்தவர் உச்சியம் போதாக உள்ளமர் கோவிற்குப் பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து இச்சைவிட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே. |
2 |
16. பிட்சா விதி
1886 |
விச்சுக் கலம் உண்டு வேலிச்செய் ஒன்றுண்டு உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது அச்சம்கெட்டு அச்செயல் அறுத்துண்ண மாட்டாதார் இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே. |
1 |
1887 |
பிச்சையது ஏற்றான் பிரமன் தலைதன்னில் பிச்சையது ஏற்றான் பிரியா அறஞ்செய்யப் பிச்சையது ஏற்றான் பிரமன் சிரங்காட்டிப் பிச்சையது ஏற்றான் பிரமன் பரமாகவே. |
2 |
1888 |
பரந்துலகு ஏழும் படைத்த பிரானை இரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும் நிரந்தக மாக நினையும் அடியார் இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே. |
3 |
1889 |
வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன் தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம் பொரஇருந் தான்புக லேபுக லாக வரஇருந் தால்அறி யான்என்ப தாமே. |
4 |
1890 |
அங்கார் பசியும் அவாவும் வெகுளியும் தங்கார் சிவனடி யார்சரீரத்திடைப் பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும் தங்கார் சிவனைத் தலைப்படு வாரே. |
5 |
1891 |
மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும் கையதும் நீண்டார் கடைத்தலைக் கேசெல்வர் ஐயம் புகாமல் இருந்த தவசியார் வையகம் எல்லாம் வரஇருந்தாரே. |
6 |
முத்திரை பேதம்
1892 |
நாலேழு மாறவே நண்ணிய முத்திரை பாலான மோன மொழியில் பதிவித்து மேலான நந்தி திருவடி மீதுய்யக் கோலா கலங்கெட்டுக் கூடுநன் முத்தியே. |
1 |
1893 |
துரியங்கள் மூன்று சொருகுஇட னாகி அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி மருவிய சாம்பவி கேசரி உண்மை பெருகிய ஞானம் பிறழ்முத் திரையே. |
2 |
1894 |
சாம்பவி நந்தி தன்னருள் பார்வையாம் ஆம்பவம் இல்லா அருட்பாணி முத்திரை ஓம்பயில் ஒங்கிய உண்மைய கேசரி நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத் திரையே. |
3 |
1895 |
தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும் ஞானத்தின் உள்ளே நற்சிவம் ஆதலால் ஏனைச் சிவமாம் சொரூபம் மறைந்திட்ட மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே. |
4 |
1896 |
வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம் வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம் வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரே ஆக்கும் அச் சுத்த்ததை யார்அறி வார்களே. |
5 |
1897 |
யோகத்தின் முத்திரை ஓர்அட்ட சித்தியாம் ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால் ஆகத் தகும்வேத கேசரி சாம்பவி யோகத்துக் கேசரி யோகமுத் திரையே. |
6 |
1898 |
யோகிஎண் சித்தி அருளொலி வாதனை போகி தன் புத்தி புருடார்த்த நன்னெறி ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை ஏகமும் கண்டொன்றில் எய்திநின் றானே. |
7 |
1899 |
துவாதச மார்க்கமென் கோடச மார்க்கமாம் அவாஅறும் ஈர்ஐ வகைஅங்கம் ஆறும் தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை நவாஅக மோடுஉன்னல் நற்சுத்த சைவமே. |
8 |
1900 |
மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை தேனிக்கும் முத்திரை சித்தாந்த முத்திரை கானிக்கும் முத்திரை கண்ட சமயமே. |
9 |
1901 |
தூநெறி கண்ட சுவடு நடுவுஎழும் பூநெறி கண்டுஅது பொன்னக மாய்நிற்கும் மேல்நெறி கண்டது வெண்மதி மேதினி நீல்நெறி கண்டுள நின்மலன் ஆமே. |
10 |
18. பூரணக் குகை நெறிச் சமாதி
1902 |
வளர்பிறை யில்தேவர் தம்பாலின் முன்னி உளரொளி பானுவின் உள்ளே ஒடுங்கித் தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள் உளதுறும் யோகி உடல்விட்டால் தானே. |
1 |
1903 |
தான்இவை ஒக்கும் சமாதிaக கூடாது போன வியோகி புகலிடம் போந்துபின் ஆனவை தீர நிரந்தர மாயோகம் ஆனவை சேர்வார் அருளின் சார் வாகியே. |
2 |
1904 |
தான்இவ் வகையே புவியோர் நெறிதங்கி ஆன சிவயோகத்து ஆமாறுஆம் அவ்விந்து தானதில் அந்தச் சிவயோகி ஆகுமுன் ஊனத்தோர் சித்திவந்து ஓர்காயம் ஆகுமே. |
3 |
1905 |
சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால் தவலோகம் சேர்ந்துபின் தான்வந்து கூடிச் சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பர் புவலோகம் போற்றும்நற் புண்ணியத்தோரே. |
4 |
1906 |
ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால் தானற மோனச் சமாதியுள் தங்கியே தானவன் ஆகும் பரகாயம் சாராதே ஊனமில் முத்தராய் மீளார் உணர்வுற்றே. |
5 |
1907 |
செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில் செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில் செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம் செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே. |
6 |
1908 |
உன்னக் கருவிட்டு உரவோன் அரன்அருள் பன்னப் பரமே அருட்குலம் பாலிப்பன் என்னப் புதல்வர்க்கும் வேண்டி யிடுஞானி தன்இச்சைக்கு ஈசன் உருச்செய்யும் தானே. |
7 |
1909 |
எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத் தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம் அங்காங்கு எனநின்று சகமுண்ட வான்தோய்தல் இங்கே இறந்துஎங்கு மாய்நிற்கும் ஈசனே. |
8 |
19. சமாதிக் கிரியை
1910 |
அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில் வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில் நொந்து நாய்நரி நுகரின் நுண்செரு வந்துநாய் நரிக்கு உணவாகும் வையகமே. |
1 |
1911 |
எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில் அண்ணல்தம் கோயில் அழல்இட்டது ஆங்கு ஒக்கும் மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம் எண்ணரு மன்னர் இழப்பார் அரசே. |
2 |
1912 |
புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும் மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம் மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல்மண்டியே. |
3 |
1913 |
அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால் அந்த உடல்தான் குகைசெய்து இருந்திடில் சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும் அந்தமில் இன்ப அருள்பெறு வாரே. |
4 |
1914 |
நவமிகு சாணாலே நல்லாழம் செய்து குவைமிகு சூழஐஞ் சாணாகக் கோட்டித் தவமிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப் பவமறு நற்குகை பத்மா சனமே. |
5 |
1915 |
தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை நன்மலர்ச் சோலை நகரின்நற் பூமி உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல் இந்நிலம் தான்குகைக்கு எய்தும் இடங்களே. |
6 |
1916 |
நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய் நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப் பொற்பமா ஓசமும் மூன்றுக்கு மூன்றுஅணி நிற்பவர் தாம் செய்யும் நேர்மைய தாமே. |
7 |
1917 |
பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து விஞ்சப் படுத்துஅதன் மேல்ஆ சனம்இட்டு முஞ்சிப் படுத்துவெண் ணீறு இட்ட தன்மேலே பொன்செய் நற்சுண்ணம் பொதியலும் ஆமே. |
8 |
1918 |
நள்குகை நால்வட்டம் படுத்துஅதன் மேல்சாரக் கள்ளவிழ தாமம் களபம்கத் தூரியும் தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே. |
9 |
1919 |
ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம் மீதினில் இட்டுஆ சனத்தினின் மேல் வைத்துப் போதறு கண்ணமும் நறும் பொலிவித்து மீதில் இருத்தி விரித்திடு வீரே. |
10 |
1920 |
விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து பொரித்த கறிபோ னகம் இள நீரும் குருத்தலம் வைத்துஓர் குழைமுகம் பார்வை தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே. |
11 |
1921 |
மீது சொரிந்திடும் வெண்ணீறும் கண்ணமும் போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும் பாத உதகத்தான் மஞ்சனம் செய்துபார் மீதுமூன் றுக்குமூன்று அணிநிலம் செய்யுமே. |
12 |
1922 |
ஆதன மீதில் அரசு சிவலிங்கம் போதும் இரண்டினில் ஒன்றைத் தாபித்து மேதரு சந்நிதி மேவுத் தரம்பூர்வம் காதலில் சோடசம் காண்உப சாரமே. |
13 |
20. விந்துற்பனம்
1923 |
உதயத்தில் விந்துவில் ஓங்குகுண் டலியும் உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான் விதியில் பிரமாதி கள்மிகு சத்தி கதியில் கரணம் கலைவை கரியே. |
1 |
1924 |
செய்திடும் விந்துபே தத்திறன் ஐ ஐந்தும் செய்திடும் நாதபேதத்திற னால் ஆறும் செய்திடும் மற்றவை ஈர்இரண்டில்திறம் செய்திடும் ஆறுஆறு சேர்தத் துவங்களே. |
2 |
1925 |
வந்திடு பேத மெலாம்பர விந்துமேல் தந்திடு மாமாயை வாகேசி தற்பரை உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே. |
3 |
1926 |
விளங்கு நிவர்த்தாதி மேலக ராதி வளங்கொள் உகாரம் மகாரத் துள்விந்து களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி உளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே. |
4 |
1927 |
அந்தமும் ஆதியும் ஆகிப் பராபரன் வந்த வியாபி எனலாய அந்நெறி கந்தம தாகிய காரண காரியம் தந்துஐங் கருமமும் தான்செய்யும் வீயமே. |
5 |
1928 |
வீயம தாகிய விந்துவின் சத்தியால் ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக் காயஐம் பூதமும் காரிய மாயையில் ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே. |
6 |
1929 |
புறம்அகம் எங்கும் புகுந்துஒளிர் விந்து நிறமது வெண்மை நிகழ்நாதம் செம்மை உறமகிழ் சத்தி சிவபாதம் ஆயுள் திறனொடு வீடுஅளிக் கும்செயல் கொண்டே. |
7 |
1930 |
கொண்டஇவ் விந்து பரமம்போல் கோதற நின்ற படம்கட மாய்நிலை நிற்றலின் கண்டக லாதியின் காரண காரியத்து அண்டம் அனைத்துமாய் மாமாயை ஆகுமே. |
8 |
1931 |
அதுவித்தி லேநின்று அங்கு அண்ணிக்கும் நந்தி இதுவித்தி லேஉள வாற்றை உணரார் மதுவித்தி லேமலர் அன்னம தாகிப் பொதுவித்திலே நின்ற புண்ணியன் தானே. |
9 |
1932 |
வித்தினில் அன்றி முளையில்லை அம்முளை வித்தினில் அன்றி வெளிப்படு மாறில்லை வித்தும் முளையும் உடனன்றி வேறில்லை அத்தன்மை யாரும் அரன்நெறி காணுமே. |
10 |
1933 |
அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம் பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்னத் திருந்தும் உடன்மன மாம் கூறு சேர்ந்திட்டு இருந்தன முன்னாள் இரதமது ஆகுமே. |
11 |
1934 |
இரதம் முதலான ஏழ்தாது மூன்றில் உரிய தினத்தில் ஒருபுல் பனிபோல் அரிய துளிவிந்து வாகும்ஏழ் மூன்றின் மருவிய விந்து வளரும்கா யத்திலே. |
12 |
1935 |
காயத்தி லேமூன்று நாளில் கலந்திட்டுக் காயத்துள் தன்மனம் ஆகும் கலாவிந்து நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின் மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே. |
13 |
1936 |
அழிகின்ற விந்து அளவை அறியார் கழிகின்ற தன்னையுட் காக்கலும் தேரார் அழிகின்ற காயத்து அழிந்துஅயர் உற்றோர் அழிகின்ற தன்மை அறிந்தொழி யாரே. |
14 |
21. விந்து ?யம் - போக சரவோட்டம்
1937 |
பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய் ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப் பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே. |
1 |
1938 |
தானே அருளால் சிவயோகம் தங்காது தானேஅக் காமாதி தங்குவோ னும் உட்கும் தானே அதிகாரம் தங்கில் சடங்கெடும் ஊனே அவற்றுள் உயிர்ஒம்பா மாயுமே. |
2 |
1939 |
மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டில் ஓயா இருபக்கத்து உள்வளர் பக்கத்துள் ஏயாஎண் நாள்இன்ப மேல்பனி மூன்றிரண்டு ஆயா அபரத்துள் ஆதிநாள் ஆறாமே. |
3 |
1940 |
ஆறுஐந்து பன்னொன்றும் அன்றிச் சகமார்க்கம் வேறுஅன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம்தோடு ஏறும் இருபத் தொருநாள் இடைத்தோங்கும் ஆறின் மிகுந்தோங்கும் அக்காலம் செய்யவே. |
4 |
1941 |
செய்யும் அளவில் திருநான் முகூர்த்தமே எய்யும் கலைகாலம் இந்து பருதிகால் நையுமிடத்து ஓடி நன்கா நூல்நெறி செய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே. |
5 |
1942 |
விடுங்காண் முனைந்துஇந் திரியங்க ளைப் போல் நடுங்காது இருப்பானும் ஐஐந்தும் நண்ணப் படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக் கடுங்காற் கரணம் கருத்துறக் கொண்டே. |
6 |
1943 |
கொண்ட குணனே நலமேநற் கோமளம் பண்டை உருவே பகர்வாய் பவளமே மிண்டு தனமே மிடைய விடும் போதில் கண்ட கரணம் உட் செல்லக்கண் டேவிடே. |
7 |
1944 |
விட்டபின் கர்ப்பஉற் பத்தி விதியிலே தொட்டுறுங் காலங்கள் தோன்றக் கருதிய கட்டிய வாழ்நாள் சாம்நாள் குணம் கீழ்மைசீர்ப் பட்ட நெறியிதுஎன்று எண்ணியும் பார்க்கவே. |
8 |
1945 |
பார்த்திட்டு வையத்துப் பரப்பற்று உருப்பெற்று வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே சேர்த்துற்று இருதிங்கள் சேராது அகலினும் மூப்புற்றே பின்னாளில் ஆம்எல்லாம் உள்ளவே. |
9 |
1946 |
வித்திடு வோர்க்கு அன்றி மேலோர் விளைவில்லை வித்திடு வோர்க்கு அன்றி மிக்கோர் அறிவில்லை வித்தினில் வித்தை விதற உணர்வரேல் மத்தில் இருந்ததோர் மாங்கனி யாமே. |
10 |
1947 |
கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும் கருத்துளன் ஈசன் கருஉயிரோடும் கருத்தது வித்தாய்க் காரண காரியம் கருத்தறு மாறுஇவை கற்பனை தானே. |
11 |
1948 |
ஒழியாத விந்து வுடன்நிற்க நிற்கும் அழியாப் பிராணன் அதிபலஞ் சத்தி ஒழியாத புத்தி தபஞ்செப மோனம் அழியாத சித்தியுண் டாம்விந்து வற்றிலே. |
12 |
1949 |
வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித் துற்ற சுழியனல் சொருகிக் சுடருற்று முற்று மதியத்து அமுதை முறைமுறை செற்றுண் பவரே சிவயோகி யாரே. |
13 |
1950 |
யோகியும் ஞானியும் உத்தம சித்தனும் யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும் மோகம் உறினும் முறைஅமிர்து உண்போனும் ஆகிய விந்து அழியாத அண்ணலே. |
14 33 |
1951 |
அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும் மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும் கண்ணும் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்து உண்ணில் அமிர்தாகி யோகிக்கு அறிவாமே. |
15 |
1952 |
அறியாது அழிகின்ற ஆதலால் நாளும் பொறியால் அழிந்து புலம்புகின் றார்கள் அறிவாய் நனவில் அதீதம் புரியச் செறிவாய் இருந்து சேரவே வாயுமே. |
16 |
1953 |
மாதரை மாய வரும் கூற்றம் என்றுன்னக் காதலது ஆகிய காமம் கழிந்திடும் சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும் சோதியின் உள்ளே துரிசறும் காலமே. |
17 |
1954 |
காலம் கடந்தவன் காண்விந்து செற்றவன் காலம் கடந்தழிந் தான்விந்து செற்றவன் காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை காலின்கண் வந்த கலப்பறி யாரே. |
18 |
1955 |
கலக்கு நாள் முன்னாள் தன்னிடைக் காதல் நலத்தக வேண்டில் அந் நாரி யுதரக் கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை விலக்கு வனசெய்து மேலணை வீரே. |
19 |
1956 |
மேலா நிலத்தெழு விந்துவும் நாதமும் கோலால் நடத்திக் குறிவழி யேசென்று பாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால் மாலா னதுமான மாளும் அவ்விந்துவே. |
20 |
1957 |
விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும் அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும் நந்திய நாசமும் நாதத்தால் பேதமும் தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே. |
21 |
1958 |
விந்துஎன் வீசத்தை மேவிய மூலத்து நந்திய அங்கிய னாலே நயந்தெரிந்து அந்தமில் பானுஅதிகண்ட மேலேற்றிச் சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே. |
22 |
1959 |
அமுதச் சசிவிந்து வாம்விந்து மாள அமுதப் புனலோடி அங்கியின் மான அமுதச் சிவயோகம் ஆதலால் சித்தி அமுதப் பலாவனம் ஆங்குறும் யோகிக்கே. |
23 |
1960 |
யோகம் அவ் விந்து ஒழியா வகையுணர்ந்து ஆகம்இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப் போகம் சிவபோகம் போகிநற் போகமா மோகங் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே. |
24 |
1961 |
மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்து காதலி னால்விடார் யோகம் கலந்தவர் மாதர் உயிராசை கைக்கொண்ட வாடுவர் காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே. |
25 |
1962 |
சாற்றிய விந்து சயமாகும் சத்தியால் ஏற்றிய மூலத் தழலை எழமூட்டி நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோடு ஆற்றி அமுதம்அருந்தவித் தாமே. |
26 |
1963 |
விந்துவும் நாதமும் மேலக் கனல்மூல வந்த அனல் மயிர்க் கால்தோறும் மன்னிடச் சிந்தனை மாறச் சிவம்அக மாகவே விந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே. |
27 |
1964 |
வித்துக்குற் றுண்பான் விளைவுஅறி யாதவன் வித்துக்குற் றுண்ணாமல் வித்துச் சுட்டு உண்பான் வித்துகுற் றுண்பானில் வேறலன் ஈற்றவன் வித்துக்குற் றுண்ணாமல் வித்துவித்தான் அன்றே. |
28 |
1965 |
அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட வன்னத் திருவிந்து மாயும் கா யத்திலே. |
29 |
1966 |
அன்னம் பிராணன்என் றார்க்கும் இருவிந்து தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச் சொன்ன மாம்உருத் தோன்றும்எண் சித்தியாம் அன்னவர் எல்லாம் அழிவற நின்றதே. |
30 |
1967 |
நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய் ஒன்றும் மகாரம் ஒருமூன்றோடு ஒன்றவை சென்று பராசக்தி விந்து சயந்தன்னை ஒன்ற உரைக்க உபதேசம் தானே. |
31 |
1968 |
தானே உபதேசம் தானல்லாது ஒன்றில்லை வானே உயர்விந்து வந்த பதினான்கு மானேர் அடங்க அதன்பின்பு புத்தியும் தானே சிவகதி தன்மையும் ஆமே. |
32 |
1969 |
விந்துவும் நாதமும் விளைய விளைந்தது வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம் அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும் விந்து அடங்க விளையும் சிவோகமே. |
33 |
1970 |
வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி நிறுக்கின்ற வாறும் அந் நீள்வரை ஒட்டிப் பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை அறுக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை அறுக்கின்ற நாள்வரும் அத்திப் பழமே. |
34 |
1971 |
விந்துவும் நாதமும் மேவியுடன் கூடிப் சந்திர னோடே தலைப்படு மாயிடில் சுந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும் அங்குஉதி மந்திரம் ஆகுதி யாகுமே. |
35 |
1972 |
மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம் கனத்த இரதம் அக் காமத்தை நாடிலே. |
36 |
1973 |
சத்தமும் சத்த மனமும் மனக்கருத்து ஒத்துஅறி கின்ற இடமும் அறிகிலர் மெய்த்து அறிகின்ற இடம்அறி வாளர்க்கு அத்தன் இருப்பிடம் அவ்விடம் தானே. |
37 |
1974 |
உரம்அடி மேதினி உந்தியில் அப்பாம் விரவிய தன்முலை மேவிய கீழ்அங்கி கருமலை மீமிசை கைக்கீழிற் காலாம் விரவிய சுந்தரம் மேல்வெளி யாமே. |
38 |
22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்
1975 |
செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள் மஞ்சுடை மேரு வலம்வரு காரணம் எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி தஞ்சுட ராக வணங்கும் தவமே. |
1 |
1976 |
பகலவன் மாலவன் பல்லுயிர்க்கு எல்லாம் புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன் இகலற ஏழுல கும்உற வோங்கும் பகலவன் பல்லுயிர்க்கு ஆதியும் ஆமே. |
2 |
1977 |
ஆதித்தன் அன்பினோடு ஆயிர நாமமும் சோதியின் உள்ளே சுடரொளி யாய்நிற்கும் வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும் ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே. |
3 |
1978 |
தானே உலகுக்குத் தத்துவனாய் நிற்கும் தானே உலகுக்குத் தையலு மாய்நிற்கும் தானே உலகுக்குச் சம்புவு மாய்நிற்கும் தானே உலகுக்குத் தண்சுட ராகுமே. |
4 |
1979 |
வவையமுக் கோணம் வட்டம் அறுகோணம் துலையிரு வட்டம் துய்ய விதம்எட்டில் அலையுற்ற வட்டத்தில் ஈர்எட்டு இதழாம் மலைவுற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே. |
5 |
1980 |
ஆதித்தன் உள்ளி லானமுக் கோணத்தில் சோதித்து இலங்கும்நற் சூரியன் நாலாம் கேத முறுங்கேணி சூரியன் எட்டில் சோதிதன் நீட்டில் சோடசம் தானே. |
6 |
1981 |
ஆதித்த னோடே அவனி இருண்டது பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற வேதப் பொருளை விளங்குகி லீரே. |
7 |
1982 |
பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள் நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன் ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே. |
8 |
1983 |
மண்ணை இடந்துஅதின் கீழொடும் விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும் கண்ணை இடந்து களிதந்த ஆனந்தம் எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே. |
9 |
1984 |
பாரை இடந்து பகலோன் வரும்வழி யாரும் அறியார் அருங்கடை நூலவர் தீரன் இருந்த திருமலை சூழ்என்பர் ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே. |
10 |
23. பிண்டாதித்தன்
1985 |
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன் கொன்று மலங்கன் குழல்வழி ஓடிட வென்று விளங்கும் விரிசுடர் காணுமே. |
1 |
1986 |
ஆதித்தன் ஓடி அடங்கும் இடங்கண்டு சாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர் பேதித்து உலகம் பிதற்றும் பிதற்றெல்லாம் ஆதித்த னோடே அடங்குகின் றாரே. |
2 |
1987 |
உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்து சொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லை சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே. |
3 |
24. மன ஆதித்தன்
1988 |
எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும் எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்ப விரிகதிர் உள்ளே இயங்கும் என் ஆவி ஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே. |
1 |
1989 |
சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை முந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறை அந்த இரண்டும் உபய நிலத்தில் சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே. |
2 |
1990 |
ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதி ஆகும் கலையிடை நான்குஎன லாம்என்பர் ஆகும் அருக்கன் அனல்மதி யோடுஒன்ற ஆகும்அப் பூரணை யாம்என்று அறியுமே. |
3 |
1991 |
ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளி ஓர் அண்டத் தார்க்கும் உணரா உணர்வது பேர்அண்டத்து ஊடே பிறங்கொளி யாய்நின்று ஆர் அண்டத் தக்கார் அறியத்தக் காரே. |
4 |
1992 |
ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும் ஒன்பதும் ஈசன் இயல்அறி வார்இல்லை முன்புஅதின் மேவி முதல்வன் அருளிலார் இன்பம் இலார்இருள் சூழநின் றாரே. |
5 |
25. ஞானாதித்தன்
1993 |
விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்து அந்த அபரம் பரநாத மாகியே வந்தன தம்மில் பரங்கலை யாதிவைத்து உந்தும் அருணோ தயமென்ன உள்ளத்தே. |
1 |
1994 |
உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான் தெள்ளும் பரநாதத் தின்செயல் என்பதால் வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்கு உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே. |
2 |
1995 |
தேவர் பிரான்திசை பத்துஉத யஞ்செய்யும் மூவர் பிரான்என முன்னொரு காலத்து நால்வர் பிரான்நடு வாயுரை யாநிற்கும் மேவு பிரான்என்பர் விண்ணவர் தாமே. |
3 |
1996 |
பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை மையிருள் நீக்கும் மதிஅங்கி ஞாயிறு செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன் கையிருள் நீங்கக் கலந்தெழுந் தானே. |
4 |
1997 |
தனிச்சுடர் ஏற்றித் தயங்கிருள் நீங்க அனித்திடும் மேலை அருங்கனி ஊறல் கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன் நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே. |
5 |
1998 |
நேரறி வாக நிரம்பிய பேரொளி போரறி யாது புவனங்கள் போய்வரும் தேரறி யாத திசையொளி யாயிடும் ஆரறி வாரிது நாயக மாமே. |
6 |
1999 |
மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன் கண்டிதத் துள்ளே கதிரொளி ஆயிடும் சென்றிடத்து எட்டுத் திசையெங்கும் போய்வரும் நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே. |
7 |
2000 |
நாபிக்கண் நாசிநயன நடுவினும் தூபியோடு ஐந்தும் சுடர்விடு சோதியைத் தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும் மூவரு மாக உணர்ந்திருந் தாரே. |
8 |
26. சிவாதித்தன்
2001 |
அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும் சென்றிடு ஞானச் சிவப்பர காசத்தால் ஒன்றும் இருசட ராம்அரு ணோதயம் துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே. |
1 |
2002 |
கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில் அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான் விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து அடங்கிட நின்றதும் அப்பரி சாமே. |
2 |
2003 |
தானே விரிசுடர் மூன்றும்ஒன்றாய் நிற்கும் தானே அயன்மால் எனநின்று தாபிக்கும் தானே உடலுயிர் வேறன்றி நின்றுளன் தானே வெளியொளி தானிருட் டாமே. |
3 |
2004 |
தெய்வச் சுடர்அங்கி ஞாயிறும் திங்களும் வையம் புனல்அனல் மாருதம் வானகம் சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர் ஐவர்க்கு இடம்இடை ஆறங்கம் ஆமே. |
4 |
27. பசு இலக்கணம்
2005 |
உன்னும் அளவில் உணரும் ஒருவனைப் பன்னு மறைகள் பயிலும் பரமனை என்னுள் இருக்கும் இளையா விளக்கினை அன்ன மயமென்று அறிந்துகொண் டேனே. |
1 |
2006 |
அன்னம் இரண்டுள ஆற்றம் கரையினில் துன்னி இரண்டும் துணைப்பிரி யாதுஅன்னம் தன்னிலை அன்னம் தனியொன்றது என்றக்கால் பின்ன மடஅன்னம் பேறணு காதே. |
2 |
28. புருடன்
2007 |
வைகரி யாதியும் மாயா மலாதியும் பொய்கரி யான புருடாதி பேதமும் மெய்கரி ஞானம் கிரியா விசேடத்துச் செய்கரி ஈசன் அனாதியே செய்ததே. |
1 |
2008 |
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு அணுவில் அணுவை அணுகலும் ஆமே. |
2 |
2009 |
படர்கொண்ட ஆலதின் வித்தது போலச் சுடர்கொண்டு அணுவினைத் தூவழி செய்ய இடர்கொண்ட பாச இருளற ஒட்டி நடர்கொண்ட நல்வழி நாடலும் ஆமே. |
3 |
2010 |
அணுவுள் அவனும் அவனுள் அணுவும் கணுஅற நின்ற கலப்பது உணரார் இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித் தணிவற நின்றான் சராசரம் தானே. |
4 |
29. சீவன்
2011 |
மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிரம் ஆயினால் ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே. |
1 |
2012 |
ஏனோர் பெருமையின் ஆயினும் எம்மிறை ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன் வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தின் அளவே. |
2 |
2013 |
உண்டு தெளிவன் உரைக்க வியோகமே கொண்டு பயிலும் குணமில்லை யாயினும் பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக் கண்டு சிவனுருக் கொள்வர் கருத்துளே. |
3 |
2014 |
மாயா உபாதி வசத்ததாகும் சேதனத்து ஆய குருஅரு ளாலே அதில்தூண்ட ஓயும் உபாதியோடு ஒன்றின் ஒன் றாது உயிர் ஆய துரியம் புகுந்தறி வாகவே. |
4 |
30. பசு
2015 |
கற்ற பசுக்கள் கதறித் திரியினும் கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போலும் மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே. |
1 |
2016 |
கொல்லையின் மேயும் பசுக்களைச் செய்வதென் எல்லைக் கடப்பித்து இறைவன் அடிகூட்டி வல்லசெய்து ஆற்ற மதித்தபின் அல்லது கொல்லை செய் நெஞ்சம் குறிப்பறி யாதே. |
2 |
31. போதன் (அறிஞன்)
2017 |
சீவன் எனச்சிவன் என்னவே றில்லை சீவ னார்சிவ னாரை அறிகிலர் சீவ னார்சிவ னாரை அறிந்தபின் சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே. |
1 |
2018 |
குணவிளக் காகிய கூத்தப் பிரானும் மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம் பணவிளக் காகிய பல்தலை நாகம் கணவிளக் காகிய கண்காணி யாகுமே. |
2 |
2019 |
அறிவாய் அறியாமை நீங்கி யவனே பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போதன் அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன் செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே. |
3 |
2020 |
ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின் ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின் றானே. |
4 |
2021 |
சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஓரார் அவமாம் மலம்ஐந்தும் ஆவது அறியார் தவமான செய்து தலைப்பறி கின்றார் நவமான தத்துவம் நாடாகி லாரே. |
5 |
2022 |
நாடோறும் ஈசன் நடத்தும் தொழில்உள்ளார் நாடோறும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார் நாடோறும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால் நாடோறும் நாடார்கள் நாள்வினை யாளரே. |
6 |
32. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை
2023 |
ஆக மதத்தன ஐந்து களிறுள ஆக மதத்தறி யோடுஅணை கின்றில பாகனும் எய்த்துஅவை தாமும் இளைத்தபின் யோகு திருந்துதல் ஒன்றிஅறி யோமே. |
1 |
2024 |
கருத்தின்நன் னூல்கற்று கால்கொத்திப் பாகன் திருத்தலும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே வருத்தினும் அம்மா வழிநட வாதே. |
2 |
2025 |
புலம் ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும் நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன் உலம்வந்து போம்வழி ஒன்பது தானே. |
3 |
2026 |
அஞ்சுள சிங்கம் அடவியல் வாழ்வன அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சுஅக மேபுகும் அஞ்சின் உகிரும் எயிரும் அறுத்திட்டால் எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே. |
4 |
2027 |
ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள் ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர் ஐவரும் ஐந்த சினத்தொட நின்றிடில் ஐவர்க்கு சிறைஇறுத்து ஆற்றகி லோமே. |
5 |
2028 |
சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும் சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும் கொல்லநின் றோடும் குதிரைஒத் தேனே. |
6 |
2029 |
எண்ணிலி இல்லி அடைத்துஅவ் இருட்டறை எண்ணிலி இல்லியோடு ஏகில் பிழைதரும் எண்ணிலி இல்லியோடு ஏகாமை காக்குமேல் எண்ணிலி இல்லதோடு இன்பமது ஆமே. |
7 |
2030 |
விதியின் பெருவலி வேலைசூழ் வையம் துதியின் பெருவலி தொல்வான் உலகம் மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை நிதியின் பெருவலி நீர்வலி தானே. |
8 |
33. ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை
2031 |
குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம் வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன பட்டன மீன்பல பரவன் வகைகொணர்ந்து இட்டனன் யாம்இனி ஏதம்இ லோமே. |
1 |
2032 |
கிடக்கும் உடலின் கிளர்இந் திரியம் அடக்க லுறும் அவன்தானே அமரன் விடக்கிண்டு இன்புற மேவுறு சிந்தை நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே. |
2 |
2033 |
அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை அஞ்சும் அடக்கிய அசேதன மாம்என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே. |
3 |
2034 |
முழக்கி எழுவன மும்மத வேழம் அடக்க அறிவென்றும் கோட்டையை வைத்தேன் பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக் கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே. |
4 |
2035 |
ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே. |
5 |
2036 |
பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென் விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம் பெருக்கிற் பெருக்கம் சுருக்கிற் சுருக்கம் அருத்தமும் அத்தனை ஆராய்ந்துகொள் வார்க்கே. |
6 |
2037 |
இளைக்கின்ற வாறுஅறிந்து இன்னுயிர் வைத்த கிளைக்குஒன்றும் ஈசனைக் கேடில் புகழோன் தளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கத் துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே. |
7 |
2038 |
பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி சார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டிட்டு வாய்ந்துகொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில் வேய்ந்துகொள் மேலை விதியது தானே. |
8 |
2039 |
நடக்கின்ற நந்தியை நாடோறும் உன்னில் படர்க்கின்ற சிந்தையப் பைய ஒடுக்கிக் குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில் வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே. |
9 |
2040 |
சென்றன நாழிகை நாள்கள் சிலபல நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்துஒத்து வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள் குன்று விழவதில் தாங்கலும் ஆமே. |
10 |
2041 |
போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப் போற்றிசெய் மீட்டே புலன்ஐந்தும் புத்தியால் நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை ஊற்றுக உள்ளத்து ஒருங்கலும் ஆமே. |
11 |
2042 |
தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார் சிரிக்கின்ற வாறு சிலபல பேசில் வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே. |
12 |
2043 |
கைவிட லாவது ஒன்று இல்லை கருத்தினுள் எய்தி அவனை இசையினால் ஏத்துமின் ஐவருடைய அவாவினில் தோன்றிய பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே. |
13 |
34. அசற்குரு நெறி
2044 |
உணர்வுஒன்று இலாமூடன் உண்மைஒ ராதோன் கணுவின்றி வேதா கமநெறி காணான் பணிஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன் அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே. |
1 |
2045 |
மந்திர தந்திர மாயோக ஞானமும் பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர் சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண்பொருட்டு அந்தகர் ஆவோர் அசற்குரு வாமே. |
2 |
2046 |
ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன் காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன் கோமான் அலன்அசத் தாகும் குரவனே. |
3 |
2047 |
கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால் தற்பாவங் குன்றும் தனக்கே பகையாகும் நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடென்றே முற்பால நந்தி மொழிந்துவைத் தானே. |
4 |
2048 |
குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர் முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின் குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவே குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே. |
5 |
35. சற்குரு நெறி
2049 |
தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன் தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன் தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே. |
1 |
2050 |
தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள் தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம் தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம் தவிரவைத் தான் பிற வித்துயர் தானே. |
2 |
2051 |
கறுத்த இரும்பே கனகமது ஆனால் மறித்துஇரும் பாகா வகையது போலக் குறித்தஅப் போதே குருவருள் பெற்றான் மறித்துப் பிறவியல் வந்தணு கானே. |
3 |
2052 |
பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும் நேசத்து நாடி மலமற நீக்குவோர் ஆசற்ற சற்குரு வாவோர் அறிவற்றுப் பூசற்கு இரங்குவோர் போதக் குருவன்றே. |
4 |
2053 |
நேயத்தே நிற்கும் நிமலன் மலமற்ற நேயத்தை நல்கவல் லோன்நித்தன் சுத்தனே ஆயத்த வர்தத் துவம் உணர்ந் தாங்குஅற்ற நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே. |
5 |
2054 |
பரிசன வேதி பரிசித்தது எல்லாம் வரிசை தரும்பொன் வகையாகு மாபோல் குருபரி சித்த குவலயம் எல்லாம் திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே. |
6 |
2055 |
தானே எனநின்ற சற்குரு சந்நிதி தானே எனநின்ற தன்மை வெளிப்படில் தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெற ஊனே எனநினைந்து ஓர்ந்துகொள் உன்னிலே. |
7 |
2056 |
வரும்வழி போம்வழி மாயா வழியைக் கருவழி கண்டவர் காணா வழியைக் பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக் குருவழியே சென்று கூடலும் ஆமே. |
8 |
2057 |
குருஎன் பவனே வேதாக மங்கூறும் பரஇன்ப னாகிச் சிவயோகம் பாவித்து ஒருசிந்தை யின்றி உயிர்பாசம் நீக்கி வருநல் குரவன்பால் வைக்கலும் ஆமே. |
9 |
2058 |
சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச் சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச் சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல் அத்தன் அருட்குரு வாம்அவன் கூறிலே. |
10 |
2059 |
ஊற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினை பற்றறு நாதன் அடியில் பணிதலால் சுற்றிய பேதம் துரியம் மூன் றால்வாட்டித் தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே. |
11 |
2060 |
எல்லாம் இறைவன் இறைவி யுடன்இன்பம் வலலார் புலனும் வருங்கால் உயிர்தோன்றிச் சொல்லா மலம்ஐந்து அடங்கிட்டு ஓங்கியே செலலாச் சிவகதி சேர்தல்விளை யாட்டே. |
12 |
2061 |
ஈனப் பிறவியில் இட்டது மீட்டுட்டித் தானத்துள் இட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும் ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று மோனத்துள் வைத்தலும் முத்தன்தன் செய்கையே. |
13 |
2062 |
அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம் சித்தொடு அசித்துஅறத் தெளிவித்த சீவனைச் சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச் சத்துடன் ஐங்கரு மத்திடும் தன்மையே. |
14 |
2063 |
ஈசத்து வங்கடந்து இல்லையென்று அப்புறம் பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை தேசத்தை எல்லாம் தெளியவைத் தானே. |
15 |
2064 |
மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம் ஆணிப்பொன் நின்றங்கு அமுதம் விளைந்தது பேணிக்கொண்டு உண்டார் பிறப்பற்று இருந்த ஊனுக்கு இருந்தார் உணராத மாக்களே. |
16 |
2065 |
அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க இசைத்திடு பாசப்பற்று ஈங்குஅறு மாறே அசைத்துஇரு மாயை அனுத்தானும் ஆங்கே இசைத்தானும் ஒன்றறி விப்போன் இறையே. |
17 |
2066 |
ஏறு நெறியே மலத்தை எரித்தலால் ஈறில் உரையால் இருளை அறுத்தலான் மாறில் பசுபாசம் வாட்டலால் வீடுக கூறு பரனே குருவாம் இயம்பிலே. |
18 |
36. கூடா ஒழுக்கம்
2067 |
கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார் கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால் கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக் கண்காணி கண்டார் களஒழிந் தாரே. |
1 |
2068 |
செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர் தொழச் செய்வான் மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே. |
2 |
2069 |
பத்துவிற் றுண்டு பகலைக் கழிவிடும் மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும் பித்தர்கட்கு என்றும் பிறப்பில்லை தானே. |
3 |
2070 |
வடக்கு வடக்கென்பர் வைத்ததுஒன்று இல்லை நடக்க உறுவரே ஞானமி ல்லாதார் வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம் அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே. |
4 |
2071 |
காயக் குழப்பனைக் காயநன் னாடனைக் காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத் தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவர்கள் காயத்துள் நின்ற கருத்தறி யாரே. |
5 |
2072 |
கண்காணி யாகவே கையகத் தேயெழும் கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும் கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும் கண்காணி யாகிய காதலன் தானே. |
6 |
2073 |
கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை மன்னிய மாதவம் செய்வோர் ஒருசிறை தன்னியல்பு உன்னி உணர்ந்தோர் ஒருசிறை என்னிது ஈசன் இயல்புஅறி யாரே. |
7 |
2074 |
காணாத கண்ணில் படலமே கண்ணொளி காணாத வர்கட்கும் காணாதது அவ்வொளி காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக் காணாது கண்டார் களவொழிந் தாரே. |
8 |
2075 |
பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி உய்த்தொன்று மாபோல் விழியும் தன் கண்ணொளி அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச் சித்தம் தெளிந்தோன் செயல் ஒழிந்தேனே. |
9 |
2076 |
பிரான்பல மாகப் பெயர்ந்தன எட்டும் பராமயம் என்றெண்ணிப் பள்ளி யுணரார் சுராமயம் முன்னிய சூழ்வினை யாளர் நிராமய மாக நினைப் பொழிந் தாரே. |
10 |
2077 |
ஒன்றுஇரண் டாகிநின்று ஒன்றிஒன் றாயினோர்க்கு ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா ஒன்றுஇரண்டு என்றே உரைதரு வோர்க்கெலாம் ஒன்றுஇரண் டாய் நிற்கும் ஒன்றோடுஒன் றானதே. |
11 |
2078 |
உயிரது நின்றால் உணர்வுஎங்கு நிற்கும் அயர்அறி வில்லையால் ஆருடல் வீழும் உயிரும் உணலும் ஒருங்கிக் கிடக்கும் பயிரும் கிடந்துள்ளப் பாங்கு அறி யாரே. |
12 |
2079 |
உயிரது வேறாய் உணர்வுஎங்கும் ஆகும் உயிரை அறியில் உணர்வுஅறி வாகும் உயிர்அன்று உடலை விழுங்கும் உணர்வை அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே. |
13 |
2080 |
உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன் நிலவாணி ஐந்தினுள் தேருற நிற்கும் சிலவாணி யாகிய தேவர் பிரானைத் தலைவாணி செய்வது தன்னை அறிவதே. |
14 |
2081 |
தான்அந்த மாம்என நின்ற தனிச்சுடர் ஊன்அந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர் தேன்அந்த மாய்நின்று சிற்றின்பம் நீஒழி கோன்அந்தம் இல்லாக் குணத்தரு ளாமே. |
15 |
2082 |
உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும் கல்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை நல்முதல் ஏறிய நாமம் அறநின்றால் தன்முதல் ஆகிய தத்துவம் ஆமே. |
16 |
2083 |
இந்தியம் அந்தக் கரணம் இவைஉயிர் வந்தன சூக்க உடலன்று மானது தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும் முந்துளம் மன்னும் ஆறாறு முடிவிலே. |
17 |
37. கேடு கண்டு இரங்கல்
2084 |
வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார் அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள் உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார் முற்றொளி தீயின் முனிகின்ற வாறே. |
1 |
2085 |
போது சடக்கெனப் போகின் றதுகண்டும் வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து ஆதியை அன்பில் அறியகில் லார்களே. |
2 |
2086 |
கடன்கொண்டு நெற்குத்துக் கையரை உடம்பினை ஓம்பி உயிராத் திரிவார் தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி இடங்கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே. |
3 |
2087 |
விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து புரந்தகல் லால்நிழல் புண்ணியன் சொன்ன பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர் உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே. |
4 |
2088 |
நின்ற புகழும் நிறைதவத்து உண்மையும் என்றுஎம் ஈசன் அடியவர்க் கேநல்கும் அன்றி உலகம் அதுஇது தேவுஎன்று குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே. |
5 |
2089 |
இன்பத்து ளேபிறந்து இன்பத்து ளேவளர்ந்து இன்பத்து ளேநினைக் கின்றது இதுமறந்து துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்று துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே. |
6 |
2090 |
பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும் பெறுதற்கு அரிய பிரானடி பேணார் பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம் பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே. |
7 |
2091 |
ஆர்வ மனமும் அளவில் இளமையும் ஈரமும் நல்லஎன்று இன்புறு காலத்துத் தீர வருவதோர் காமத் தொழில்நின்று மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே. |
8 |
2092 |
இப்பரி சேஇள ஞாயிறு போலுரு அப்பரிசு அங்கியின் உள்ளுறை அம்மானை இப்பரி சேகம லத்துறை ஈசனை மெய்ப்பரி சேவினை வாதுஇருந் தோமே. |
9 |
2093 |
கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள் பாடகில் லார்அவன் செய்த பரிசறிந்து ஆடவல் லார்அவர் பேறெது வாமே. |
10 |
2094 |
நெஞ்சு நிறைந்தங்கு இருந்த நெடுஞ்சுடர் நம்செம் பிரான்என்று நாதனை நாடொறும் துஞ்சும் அளவும் தொழுமின் தொழாவிடில் அஞ்சுஅற்று விட்டதோர் ஆனையும் ஆமே. |
11 |
2095 |
மிருக மனிதர் மிக்கோர் பறவை ஒருவர்செய்து அன்புவைத்து உன்னாதது இல்லை பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர் திருமருவு மாதவம் சேர்ந்துஉணர்ந் தோரே. |
12 |
2096 |
நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனைச் சோதியி லாரும் தொடர்ந்துஅறி வாரில்லை ஆதி பயனென்று அமரர் பிரான்என்ற நாதியே வைத்தது நாடுகின் றேனே. |
13 |
2097 |
இருந்தேன் மலர்அளைந்து இன்புற வண்டு பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார் வருந்தேன் நுகராது வாய்புகு தேனை அருந்தேனை யாரும் அறியகி லாரே. |
14 |
2098 |
கருத்தறி யாது கழிந்தன காலம் அருத்தியுள் ளான்அம ராபதி நாதன் ஒருத்தன்உள் ளான் உல கத்துயிர்க்கு எல்லாம் வருத்திநில் லாது வழுக்கின் றாரே. |
15 |
2099 |
குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய் விதித்தென நாள்களும் வீழ்ந்து கழிந்த விதிர்திருந்து என்செய்தீர் ஆறுதிர் ஆகில் கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே. |
16 |
2100 |
கரைஅருகு ஆறாக் கழனி வளைந்த திரைஅரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும் வரைஅருகு ஊறிய மாதவ நோக்கின் நரைஉரு வாச்செல்லும் நாள்கில வாமே. |
17 |
2101 |
வரவுஅறி வானை மயங்கிருள் ஞாலத்து இரவுஅறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை அரவுஅறி வார்முன் ஒருதெய்வம் என்று விரவுஅறி யாமலே மேல்வைத்த வாறே. |
18 |
38. இதோபதேசம்
2102 |
மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும் பறந்துஅல மந்து படுதுயர் தீர்ப்பான் சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே. |
1 |
2103 |
செல்லும் அளவு செலுத்துமின் சிந்தையை வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை நல்ல அரநெறி நாடுமின் நீரே. |
2 |
2014 |
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே. |
3 |
2105 |
போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை நாற்றிசைக் கும்நடு வாய்கின்ற நம்பனைக் காற்றிசைக் கும் கமழ்ஆக்கையைக் கைக்கொண்டு கூற்றுதைத் தான்தன்மைக் கூறிநின்று உய்ம்மினே. |
4 |
2106 |
இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில் புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின் எக்காலத்து இவ்வுடல் வந்துஎமக்கு ஆனதென்று அக்காலம் உன்ன அருள்பெற லாமே. |
5 |
2107 |
போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள் ஆகின்ற போதும் அரன்அறிவான்உளன் சாகின்ற போதும் தலைவனை நாடுமின் ஆகின்ற அப்பொருள் அக்கரை ஆகுமே. |
6 |
2108 |
பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின் இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும் சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப் பிறப்பொன்றும் இலாமையும் பேருல காமே. |
7 |
2109 |
கூடியும் நின்றும் தொழுதுஎம் இறைவனைப் பாடியுளே நின்று பாதம் பணிமின்கள் ஆடியு ளேநின்று அறிவுசெய் வார்கட்கு நீடிய ஈற்றுப் பசுவது ஆமே. |
8 |
2110 |
விடுகின்ற சிவனார் மேல்எழும் போது நடுநின்று நாடுமின் நாதன்தன் பாதம் கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன் இடுகின்றான் உம்மை இமையவ ரோடே. |
9 |
2111 |
ஏறுடை யாய்இறை வாஎம்பி ரான்என்று நீறிடு வார்அடி யார்நிகழ் தேவர்கள் ஆறணி செஞ்சுடை அண்ணல் திருவடி வேறுஅணி வார்க்கு வினையில்லை தானே. |
10 |
2112 |
இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை அன்புறு விர்தவம் செய்யும்மெய்ஞ் ஞானத்து பண்புறு வீர்பிற வித்தொழி லேநின்று துன்புறு பாசத்து உழைத்துஒழிந் தீரே. |
11 |
2113 |
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின்றோர்க்கே. |
12 |
2114 |
சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல்வண்ணன் பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும் கூர்ந்தவர்க்கு அங்கே குரைகழல்காட்டிடும் சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே. |
13 |
2115 |
முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன் அத்தகு சோதி அதுவிரும் பாரே. |
14 |
2116 |
நியமத்த னாகிய நின்மலன் வைத்த உகம்எத் தனையென்று ஒருவரும் தேறார் பவமத்தி லேவந்து பாய்கின்றது அல்லால் சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே. |
15 |
2117 |
இங்கித்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும் துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை விஞ்சத்து உறையும் விகிர்தா எனநின்னை நஞ்சுஅற் றவர்க்குஅன்றி நாடஒண் ணாதே. |
16 |
2118 |
பஞ்சமும் ஆம்புவி சற்குறுபால்முன்னி வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்தம்மை அஞ்சுவன் நாதன் அருநர கத்துஇடும் செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே. |
17 |
2119 |
சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர் அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும் குருவை வழிபடின் கூடலும் ஆமே. |
18 |
2120 |
நரரும் சுரரும் பசுபாசம்நண்ணிக் கருமங்க ளாலே கழிதலில் கண்டு குருஎன் பவன்ஞானி கோதிலன் ஆனால் பரம்என்றல் அன்றிப் பகர்ஒன்றும் இன்றே. |
19 |
2121 |
ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற மேற்கொண்டவர்வினை போயற நாடொறும் நீர்க்கின்ற செஞ்சுடை நீளன் உருவத்தின் மேற்கொண்ட வாறுஅல்லை வீவித்து ளானே. |
20 |
ஏழாம் தந்திரம் முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் தந்திரம் - பத்தாம் திருமுறை - திருமந்திரம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - விந்து, எல்லாம், முத்திரை, விந்துவும், நிற்கும், சதாசிவம், ஆகின்ற, கண்காணி, அறியார், தேவர்கள், நாதமும், இரண்டும், ஒன்றும், ஆதியும், ஆதித்தன், அவனும், தத்துவம், அகம்படி, யாரும், பேர்நந்தி, கோயில், அத்தன், எழுகின்ற, அருளால், சதாசிவன், நின்மலன், அருளில், எண்ணிலி, மாய்நிற்கும், நாடோறும், இன்பம், நின்றிடும், அண்ணல், வானவர், ஒன்றுண்டு, வட்டம், சிவகதி, வாகும், இருந்த, பிரானே, அறியும், அடியார், அவ்வுல, செய்யும், சிவயோகி, நின்று, உகாரம், கருத்தறி, ஐந்தும், அன்னம், மேதாதி, மானுடர், அழிகின்ற, உள்நின்ற, செய்து, ஒருசிறை, குள்ளே, இன்புற, தோன்றும், நாடுமின், மேற்கொள்ள, உள்ளம், தாள்தந்து, சிந்தை, செய்திடும், தவிரவைத், வித்துக்குற், அல்லது, என்னும், எண்டிசை, அகம்புகுந், உலகில், ஏற்றான், எடுத்தது, இறைவன், பிச்சையது, உணர்வுடை, கொண்டான், வாக்கு, மனமும், இலிங்கம், அறிவாய், பெறுதற்கு, தற்பரம், ஈசனைக், உணரார், அந்தமில், இன்பத்து, காணும், தானாகும், புண்ணிய, பயிலும், நாடும், லிங்கம், பசுக்கள், ஒடுங்கில், எம்இறை, ஐந்தில், எழுந்த, சமயத்து, அஞ்சும், பெருவலி, அத்திசைக், நீக்கி, அடங்கும், வாயில்கொண், சிவமாம், நின்றது, அறியில், இந்துவும், ஞானத்து, தன்மேனி, புண்ணியன், அந்தமும், அணுவில், கிடக்கும், சற்குரு, குவலயம், சிவலிங்கம், நெஞ்சம், மாதவம், பானுவும், இராப்பகல், லாவதோர், ஆயிரம், ளேநின்று, அருந்தவம், சிந்தனை, மூன்று, சிவயோகம், வார்இல்லை, விரிசுடர், இடந்து, வரும்வழி, சூரியன், ஞாயிறு, எம்மிறை, அடக்கும், நாடொறும், ஆறாறின், அசற்குரு, னார்சிவ, உலகுக்குத், ஆதித்த, திரையே, ஆதலால், சாம்பவி, வையகம், பிரமன், செத்தார், போதும், வழியைக், சொருகிக், அளவில், வித்தினில், மேலுணர், பல்லுயிர்க்கு, வாறும், நடக்கும், பகலவன், செஞ்சுடர், சத்திநற், பிரானைத், இருந்திடும், தாபரம், பராபரன், நாளும், அண்டத்து, காணில், பிரானை, ஏத்துவர், மன்னும், நீரும், மனம்புகுந், சராசரம், இலிங்கம, வாரில்லை, யாகுமே, விளைந்தது, அக்கரம், டான்அடி, புத்தி, லிங்கமே, அர்ச்சனை, உருவம், அருவம், நெஞ்சு, சத்தியின், ஐவரும், ஐம்முகன், துரியம், சித்தம், மாமாயை, நேயத்தே, விளையும், அமுதப், ஆரமுது, அமரரும், ஒண்சுடர், அருளின், பெருமை, செல்லும், போகின்ற, வென்று, மாமலர், விளக்கினை, விரிசடை, அருளது, பகலும், உயிரும், பிராணன், அப்பொருள், கொண்டு, பரவிந்து, வேறில்லை, அயன்மால், எங்கும், தன்னையும், நந்திக்கு, இரவும், யார்கள், கொண்டே, ஆதாரம், சத்தியால், ஞானத்தின்