முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பத்தாம் திருமுறை - திருமந்திரம் » நான்காம் தந்திரம்
பத்தாம் திருமுறை - திருமந்திரம் - நான்காம் தந்திரம்

நான்காம் தந்திரம்
சித்த ஆகமம்
1.அசபை
884 |
போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத் தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே. |
1 |
885 |
ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி ஈரெழுத் தாலே இசைந்துஅங்கு இருவராய் மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை மாவெழுத் தாலே மயக்கமே உற்றதே. |
2 |
886 |
தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றுந் தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றுந் தேவர் உறைகின்ற திருஅம் பலமென்றுந் தேவர் உறைகின்ற தென்பொது வாமே. |
3 |
887 |
ஆமே பொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம் ஆமே திருக்கூத்து அனவரத் தாண்டவம் ஆமே பிரளயம் ஆகும்அத் தாண்டவம் ஆமேசங் காரத்து அருந்தாண் டவங்களே. |
4 |
888 |
தாண்டவ மான தனியெழுத்து ஓரெழுத்து தாண்டவ மானது அனுக்கிரகத் தொழில் தாண்டவக் கூத்துததனிநின்ற தற்பரம் தாண்டவக் கூத்துத் தமனியந் தானே. |
5 |
889 |
தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும் தானே அகார உகாரம தாய்நிற்கும் தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத் தானே தனக்குத் தராதலம் தானே. |
6 |
890 |
தராதல மூலைக்குத் தற்பர மாபரன் தராதலம் வெப்பு நமசி வாயந் தராதலம் சொல்லில் தான்வா சியவாகும் தராதல யோகம் தயாவாசி யாமே. |
7 |
891 |
ஆமே சிவங்கள் அகார உகாரங்கள் ஆமே பரங்கள் அறியா இடம்என்ப ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம் ஆமே சிவகதி ஆனந்த மாமே. |
8 |
892 |
ஆனந்த மூன்றும் அறிவுஇரண்டு ஒன்றாகும் ஆனந்தம் சிவாய அறிவார் பலரில்லை ஆனந்த மோடும் அறியவல் லார்கட்டு ஆனந்தக் கூத்தாய் அகப்படும் தானே. |
9 |
893 |
படுவது இரண்டும் பலகலை வல்லார் படுவது ஓங்காரம் பஞ்சாக் கரங்கள் படுவது சங்காரத் தாண்டவப் பத்தி படுவது கோணம் பரந்திடும் வாறே. |
10 |
894 |
வாறே சதாசிவ மாறிலா ஆகமம் வாறே சிவகதி வண்டுறை புன்னையும் வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள் வாறே பொதுவாகும் மன்றின் அமலமே. |
11 |
895 |
அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம் அமலம் திரோதாயி யாகுமா னந்தமாம் அமலம் சொல் ஆணவம் மாயை காமியம் அமலம் திருக்கூத்து ஆமிடம் தானே. |
12 |
896 |
தானே தனக்குத் தலைவனு மாய்நிற்கும் தானே தனக்குத் தன்மலை யாய்நிற்கும் தானே தனக்குத் தன்மய மாய்நிற்கும் தானே தனக்குத் தலைவனும் ஆமே. |
13 |
897 |
தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத் தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத் தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத் தலைவனு மாய்நின்ற தாளிணை தானே. |
14 |
898 |
இணையார் திருவடி எட்டெழுத் தாகும் இணையார் கழலிணை ஈர்ஐஞ்ச தாகும் இணையார் கழலிணை ஐம்பத் தொன்றாகும் இணையார் கழலிணை ஏழா யிரமே. |
15 49 |
899 |
ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய் ஏழா யிரத்தும் ஏழுகோடி தானாகி ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம் ஏழா யிரண்டாய் இருக்கின்ற வாறே. |
16 |
900 |
இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம் இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணம் தானே. |
17 |
901 |
தானே தனக்குத் தகுநட்டம் தானாகும் தானே அகார உகாரம தாய்நிற்கும் தானே ரீங்காரத் தத்துவக் கூத்துக்குத் தானே உலகில் தனிநடந் தானே. |
18 |
902 |
நடம்இரண்டு ஒன்றே நளினம தாகும் நடம்இரண்டு ஒன்றே நமன்செய்யும் கூத்துலயம் நடம்இரண்டு ஒன்றே நகைசெயா மந்திரம் நடம்சிவ லிங்கம் நலஞ்செம்பு பொன்னே. |
19 |
903 |
செம்பொன் ஆகும் சிவாய நமஎன்னில் செம்பொன் ஆகத் திரண்டது சிற்பரம் செம்பொன் ஆகும் ?யும் கிரீயுமெனச் செம்பொன் ஆன திருஅம் பலமே. |
20 |
904 |
திருஅம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத் திருஅம் பலமாக ஈராறு கீறித் திருஅம் பலமாக இருபத்தைஞ் சாக்கித் திருஅம் பலமாகச் செபிக்கின்ற வாறே. |
21 |
905 |
வாறே சிவாய நமச்சி வாயநம வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம் வாறே செபிக்கில் வரும்செம்பு பொன்னே. |
22 |
906 |
பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது பொன்னான மந்திரம் பொறிகிஞ்சு கத்தாகும் பொன்னான மந்திரம் புகையுண்டு பூரிக்கிற் பொன்னாகும் வல்லோர்க்கு உடம்பு பொற் பாதமே. |
23 |
907 |
பொற்பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும் பொற்பாதத்து ஆணையே செம்புபொன் ஆயிடும் பொற்பாதம் காணத் திருமேனி ஆயிடும் பொற்பாத நன்னடம் சிந்தனை சொல்லுமே. |
24 |
908 |
சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம் நல்ல மடவார் நயத்துட னேவரும் சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும் சொல்லும் திருக்கூத்தின் சூக்குமம் தானே. |
25 |
909 |
சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தாலும்மேல் சூக்கும மான வழியிடைக் காணலாம் சூக்கும மான வினையைக் கெடுக்கலாம் சூக்கும மான சிவனதுஆ னந்தமே. |
26 |
910 |
ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென்று அறைந்திட ஆனந்தம் ஆனந்தம் ஆஈஊஏஓம் என்று அறைந்திடும் ஆனந்தம் ஆனந்தம் அஞ்சுமது ஆயிடும் ஆனந்தம் ஆனந்தம் அம்?ரீம்அம் ?ம் ஆம்ஆகுமே. |
27 |
911 |
மேனி இரண்டும் விலங்காமல் மேற்கொள்ள மேனி இரண்டும் மிகார விகாரியாம் மேனி இரண்டும் ஊஆஈஏஓ என்று மேனி இரண்டும் ஈஓஊஆஏ கூத்தாமே. |
28 |
912 |
கூத்தே சிவாய நமமசி வாயிடும் கூத்தே ஈஊஆஏஓம் சிவாய நம வாயிடும் கூத்தே ஈஊஆஏஓம் சிவயநம வாயிடும் கூத்தே இஊஆஏஓம் நமசிவாய கோளொன்று மாறே. |
29 |
913 |
ஒன்றிரண்டு ஆடவோர் ஒன்றும் உடனாட ஒன்றிரண்டு மூன்றாட ஓரேழும் ஒத்தாட ஒன்றினில் ஆடவோர் ஒன்பதும் உடனாட மன்றினில் ஆடனான் மாணிக்கக் கூத்தே. |
30 |
2. திருஅம்பலச் சக்கரம்
914 |
இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகை இருந்த இரேகைமேல் ஈராறு இருத்தி இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்று இருந்த மனையொன்றில் எய்துவன் தானே. |
1 |
915 |
தான்ஒன்றி வாழிடம் தன்எழுத் தேயாகும் தான்ஒன்றும் அந்நான்கும் தன்பே ரெழுத்தாகும் தான்ஒன்று நாற்கோணம் தன்ஐந் தெழுத்தாகும் தான்ஒன்றி லேஒன்றும் அவ்அரன் தானே. |
2 |
916 |
அரகர என்ன அரியதொன்று இல்லை அரகர என்ன அறிகிலர் மாந்தர் அரகர என்ன அமரரும் ஆவர் அரகர என்ன அறும்பிறப்பு அன்றே. |
3 |
917 |
எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம் எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும் ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப் பட்டது மந்திரம் பான்மொழி யாலே. |
4 |
918 |
மட்fடவிழ் தாமரை மாதுநல் லாளுடன் ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர் விட்ட எழுத்தை விடாத எழுத்துடன் கட்டவில் லாருயிர் காக்கவல் லாரே. |
5 |
919 | ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம் ஆலய மாக அமர்ந்தஇத் தூலம்போய் ஆலய மாக அறிகின்ற சூக்குமம் ஆலய மாக அமர்ந்திருந் தானே. |
6 |
920 |
இருந்த இவ்வட்டம் இருமூன்றுஇ ரேகை இருந்த அதனுள் இரேகை ஐந்தாக இருந்த அறைகள் இருபத்துஐஞ் சாக இருந்த அறையொன்றில் எய்தும் அகாரமே. |
7 |
921 |
மகார நடுவே வளைத்திடும் சத்தியை ஓகாரம் வளைத்திட்டு உம்பிளந்து ஏற்றி அகாரம் தலையாய் இருகண் சிகாரமாய் நகார வகாரநற் காலது நாடுமே. |
8 |
922 |
நாடும் பிரணவம் நடுஇரு பக்கமும் ஆடும் அவர்வாய் அமர்ந்தங்கு நின்றது நாடும் நடுவண் முகம்நம சிவாய ஆடும் சிவாயநம புறவட்டத்து ஆயதே. |
9 |
923 |
ஆயும் சிவாய நமமசி வாயந ஆயும் நமசிவா யயநம சிவா வாயுமே வாய நமசியெனும் மந்திரம் ஆயும் சிகாரம் தொட்டநதத் தடைவிலே. |
10 |
924 |
அடைவினில் ஐம்பதும் ஐஐந்து அறையின் அடையும் அறையொன்றுக்கு ஈரெழுத்து ஆக்கி அடையும் மகாரத்தில் அந்தமாம் ?வ்வும் அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே. |
11 |
925 |
அமர்ந்த அரகர வாம்புற வட்டம் அமர்ந்த அரிகரி யாம் அதனுள் வட்டம் அமர்ந்த அசபை யாம் அதனுள்வட்டம் அமர்ந்தஇ ரேகையும் ஆகின்ற சூலமே. |
12 |
926 |
சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும் சூலத் தலையினில் சூழும்ஓங் காரத்தால் சூலத்து இடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்து ஆலப் பதிக்கும் அடைவதும் ஆமே. |
13 |
927 |
அதுவாம் அகார இகார உகாரம் அதுவாம் எகாரம் ஓகாரமது ஐந்தாம் அதுவாகும் சக்கர வட்டமேல் வட்டம் பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே. |
14 |
928 |
பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது சோர்வுற்ற சக்கர வட்டத்துள் சந்தியின் நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம் ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே. |
15 |
929 |
இயலும் இம் மந்திரம் எய்தும் வழியின் செயலும் அறியத் தெளிவிக்கு நாதன் புயலும் புனலும் பொருந்துஅங்கி மண்விண் முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே. |
16 |
930 |
ஆறெட்டு எழுத்தின்மேல் ஆறும் பதினாலும் ஏறிட்டு அதன்மேல் விந்துவும் நாதமும் சீறிட்டு நின்று சிவாய நமவென்னக் கூறிட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே. |
17 |
931 |
அண்ணல் இருப்பது அவள்அக் கரத்துளே பெண்ணின்நல் லாளும் பிரானக் கரத்துளே எண்ணி இருவர் இசைந்துஅங்கு இருந்திடப் புண்ணிய வாளர் பொருளறி வார்களே. |
18 |
932 |
அவ்விட்டு வைத்தங்கு அரவிட்டு மேல்வைத்து இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும் மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின் தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே. |
19 |
933 |
அவ்வுண்டு சவ்வுண்டு அனைத்தும் அங்கு உள்ளது சவ்வுண்டு நிற்கும் கருத்தறி வார்இல்லை கவ்வுண்டு நிற்கும் கருத்தறி வாளர்க்குச் சவ்வுண்டு சத்தி சதாசிவன் தானே. |
20 |
934 |
அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும் அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம் அஞ்செழுத் தாகிய வக்கர சக்கரம் அஞ்செழுத் துள்ளே அமர்ந்திருந் தானே. |
21 |
935 |
கூத்தனைக் காணுங் குறிபல பேசிடில் கூத்தன் எழுத்தின் முதலெழுத்து ஓதினார் கூத்தனொடு ஒன்றிய கொள்கைய ராய்நிற்பர் கூத்தனைக் காணும் குறியது வாமே. |
22 |
936 |
அத்திசைக் குள்நின்ற அனலை எழுப்பிய அத்திசைக் குள்நின்ற நவ்எழுத்து ஓதினால் அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை அத்திசைக் குள்ளுற வாக்கினன் தானே. |
23 |
937 |
தானே அளித்திடும் தையலை நோக்கினால் தானே அளித்திட்டு மேலுற வைத்திடும் தானே அளித்த மகாரத்தை ஓதிடத் தானே அளித்ததோர் கல்லொளி யாகுமே. |
24 |
938 |
கல்லொளி யேயென நின்ற வடதிசை கல்லொளி யேயென நின்ற னன் இந்திரன் கல்லொளி யேயென நின்ற சிகாரத்தைக் கல்லொளி யேயெனக் காட்டிநின் றானே. |
25 |
939 |
தானே எழுகுணம் தண்சுட ராய்நிற்கும் தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும் தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில் தானே எழுந்த மறையவன் ஆமே. |
26 |
940 |
மறைய வனாக மதித்த பிறவி மறையவ னாக மதித்திக் காண்பர் மறையவன் அஞ்செழுத்து உள்நிற்கப் பெற்ற மறையவன் அஞ்செழுத்து தாம்அது வாகுமே. |
27 |
941 |
ஆகின்ற பாதமும் அந்நாவாய் நின்றிடும் ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம் ஆகின்ற சீயுரு தோள்வவ்வாய்க் கண்டபின் ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே. |
28 |
942 |
அவ்வியல் பாய இருமூன்று எழுத்தையும் செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும் ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடில் பவ்வியல் பாகப் பரந்துநின் றானே. |
29 |
943 |
பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம் வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித் துரந்திடு மந்திரம் சூழ்பகை போக உரந்தரு மந்திரம் ஓமென்று எழுப்பே. |
30 |
944 |
ஓமென்று எழுப்பிதன் உத்தம நந்தியை நாமென்று எழுப்பி நடுவெழு தீபத்தை ஆமென்று எழுப்பிஅவ் வாறுஅறி வார்கள் மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே. |
31 |
945 |
ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்துஐந்தும் பாகொன்றி நின்ற பதங்களில் வார்த்திக்கும் ஆகின்ற ஐம்பத்து ஓரெழுத்து உள்நிற்கப் யாகொன்றி நிற்கும் பராபரன் தானே. |
32. |
946 |
பரமாய அஞ்செழுத்து உள்நடு வாகப் பரமாய நவசிவ பார்க்கில் மவயரசி பரமாய சியநம வாம்பரத்து ஓதில் பரமாய வாசி மயநமாய் நின்றே. |
33 |
947 |
நின்ற எழுத்துகள் நேர்தரு பூதமும் நின்ற எழுத்துகள் நேர்தரு வண்ணமும் நின்ற எழுத்துகள் நேர்தர நின்றிடில் நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே. |
34 |
948 |
நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம் மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக் கன்றது வாகக் கறந்தனன் நந்தியும் குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே. |
35 |
949 | கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல கொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்து கொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்துஐந்தும் கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே. |
36 |
950 |
வெளியில் இரேகை இரேகையி லத்தலை சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி நெளிதரும் கால்கொம்பு நோவிந்து நாதம் தெளியும் பிரகாரம் சிவமந் திரமே. |
37 |
951 |
அகார உகார சிகார நடுவாய் வகாரமோடு ஆறும் வளியுடன் கூடிச் சிகார முடனே சிவன்சிந்தை செய்ய ஓகார முதல்வன் உவந்துநின் றானே. |
38 |
952 |
அற்ற இடத்தே அகாரமது ஆவது உற்ற இடத்தே உறுபொருள் கண்டிடச் செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள் குற்றம் அறுத்த பொன்போலும் குளிகையே. |
39 |
953 |
அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால் உவ்வென்ற முத்தி உருகிக் கலந்திடும் மவ்வென்று என்னுள்ளே வழிப்பட்ட நந்தியை எவ்வணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே. |
40 |
954 |
நீரில் எழுத்துஇவ் வுலகர் அறிவது வானில் எழுத்தொன்று கண்டறிவார் இல்லை யாரிவ்f வெழுத்தை அறிவார் அவர்கள் ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே. |
41 |
955 |
காலை நடுவுறக் காயத்தில் அக்கரம் மாலை நடுவுற ஐம்பதும் ஆவன மேலை நடுவுற வேதம் விளம்பிய மூலம் நடுவுற முத்திதந் தானே. |
42 |
956 |
நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று பாவிகள் அத்தின் பயனறி வாரில்லை ஓவிய ராலும் அறியவொண் ணாத\து தேவியும் தானும் திகழ்ந்திருந் தானே. |
43 |
957 |
அவ்வொடு சவ்வென்ற தரனுற்ற மந்திரம் அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிகிலர் அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிந்தபின் அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே. |
44 |
958 |
மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது உந்தியின் உள்ளே உதயம்பண் ணாநிற்குஞ் சந்திசெய் யாநிற்பர் தாமது அறிகிலர் அந்தி தொழுதுபோய் ஆர்த்துஅகன் றார்களே. |
45 |
959 |
சேவிக்கு மந்திரம் செல்லும் திசைபெற ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன பூவிக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில் ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே. |
46 |
960 |
அருவினில் அம்பரம் அங்கெழு நாதம் பெருகு துடியிடை பேணிய விந்து மருவி யகார சிகார நடுவாய் உருவிட ஊறும் உறுமந் திரமே. |
47 |
961 |
விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடிச் சந்திர னோடே தலைப்படு மாயிடில் அந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும் அங்குதி மந்திரம் ஆகுதி யாமே. |
48 |
962 |
ஆறெழுத்து ஓதும் அறிவார் அறிகிலர் ஆறெழுத்து ஒன்றாக ஓதி உணரார்கள் வேறெழுத்து இன்றி விளம்பவல் லார்கட்கு ஓரெழுத்தாலே உயிர்பெற லாமே. |
49 |
963 |
ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைஞ்சும் ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்றென்பர் சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே. |
50 |
964 |
விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப் பந்தத் தலைவி பதினாறு கலையதாம் சுந்தர வாகரங் கால்உடம்பு ஆயினாள் அந்தமும் இன்றியே ஐம்பத்தொன்று ஆயதே. |
51 |
965 |
ஐம்பது எழுத்தே அனைத்தும்வே தங்களும் ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும் ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின் ஐம்பது எழுத்தும்போய் அஞ்செழுத் தாமே. |
52 |
966 |
அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன் அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன் அஞ்செழுத் தால்இவ் அகலிடம் தாங்கினன் அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே. |
53 |
967 |
வீழ்ந்தெழு லாம்விகிர் தன்திரு நாமத்தைச் சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச் சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும் போந்திடும் என்னும் புரிசடை யோனே. |
54 |
968 |
உண்ணும் மருந்தும் உலப்பிலி காலமும் பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும் விண்ணின்று அமரர் விரும்பி அடிதொழ எண்ணின்று எழுத்துஅஞ்சும் ஆகிநின் றானே. |
55 |
969 |
ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும் ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும் ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும் ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே. |
56 |
970 | வேரெழத் தாய்விண்ணாய் அப்புறமாய் நிற்கும் நீரெழுத் தாய்நிலந் தாங்கியும் அங்குளன் சீரெழுத் தாய்அங்கி யாய்உயி ராம்எழுத்து ஓரெழுத்து ஈசனும் ஓண்சுட ராமே. |
57 |
971 |
நாலாம் எழுத்துஓசை ஞாலம் உருவது நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கியது நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்டு நாலாம் எழுத்தது நன்னெறி தானே. |
58 |
972 |
இயைந்தனள் ஏந்திழை என்னுளம் மேவி நயந்தனள் அங்கே நமசிவ என்னும் பயந்தனை யோரும் பதமது பற்றும் பெயர்ந்தனன் மற்றும் பிதற்றுஅறுத் தேனே. |
59 |
973 |
ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினை 58 ஓமத்தி லேயுதம் பண்ணும் ஒருத்திதன் நாம நமசிவ என்றிருப் பாருக்கு நேமத் தலைவி நிலவிநின் றாளே. |
60 |
974 |
பட்ட பரிசே பரமஞ் செழுத்ததின் இட்டம் அறிந்திட்டு இரவு பகல்வர நட்டமது ஆடும் நடுவே நிலையங்கொண்டு அட்டதே சப்பொருள் ஆகிநின் றாளே. |
61 |
975 |
அகாரம் உயிரே உகாரம் பரமே மகார மலமாய் வருமுப் பதத்தில் சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமாய் யகாரம் உயிரென்று அறையலும் ஆமே. |
62 |
976 |
நகார மகார சிகார நடுவாய் வகாரம் இரண்டும் வளியுடன் கூடி ஓகார முதற்கொண்டு ஒருக்கால் உரைக்க மகார முதல்வன் மனத்தகத் தானே. |
63 |
977 |
அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன அஞ்சையும் கூடத் தடுக்கவல் லார்கட்கே அஞ்சாதி ஆதி அகம்புக லாமே. |
64 |
978 |
ஐந்து கலையில் அகராதி தன்னிலே வந்த நகராதி மாற்றி மகராதி நந்தியை மூலத்தே நாடிப் பரையொடும் சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே. |
65 |
979 |
மருவும் சிவாயமே மன்னும் உயிரும் அருமந்த போகமும் ஞானமும் ஆகும் தெருள்வந்த சீவனார் சென்றுஇவற் றாலே அருள்தங்கி அச்சிவமம் ஆவது வீடே . |
66 |
980 |
அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்தபின் நெஞ்சுகத்து உள்ளே நிலையும் பராபரம் வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை தஞ்சம் இதுவென்று சாற்றுகின் றேனே. |
67 |
981 | சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓதச் சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும் சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள் 59 சிவாயவொடு அவ்வே தெளிந்திருந் தாரே. |
68 |
982 |
சிகார வகார யகார முடனே நகார மகார நடுவுற நாடி ஓகார முடனே ஒருகால் உரைக்க மகார முதல்வன் மதித்துநின் றானே. |
69 |
983 |
நம்முதல் ஓர்ஐந்தின் நாடுங் கருமங்கள் அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை சிம்முதல் உள்ளே தெளியவல் லார்கட்குத் தம்முதல் ஆகும் சதாசிவந் தானே. |
70 |
984 |
நவமும் சிவமும் உயிர்பர மாகும் தவமொன்று இலாதன தத்துவம் ஆகும் சிவம்ஒன்றி ஆய்பவர்ஆதர வால்அச் சிவம்என்ப தானாம் எனும்தெளி வுற்றதே. |
71 |
985 |
கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து ஆடிய ஐவரும் அங்குஉறவு ஆவார்கள் தேடி அதனைத் தெளிந்தறி யீரே. |
72 |
986 |
எட்டும் இரண்டும் இனிதுஅறி கின்றிலர் எட்டும் இரண்டும் அறியாத ஏழையர் எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப் பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே. |
73 |
987 |
எட்டு வரையின்மேல் எட்டு வரைகீறி இட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில் வட்டத்தி லேயறை நாற்பத்தெட் டும்இட்டுச் சிட்டஞ் செழுத்தும் செபிசீக் கிரமே. |
74 |
988 |
தானவர் சட்டர் சதிரர் இருவர்கள் ஆனஇம் மூவரோடு ஆற்றவர் ஆதிகள் ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும் சேனையும் செய்சிவ சக்கரந் தானே. |
75 |
989 |
பட்டனம் மாதவம் ஆறும் பராபரம் விட்டனர் தம்மை விகிர்தா நமஎன்பர் எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம் ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே |
76 |
990 |
சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த அவைமுதல் ஆறிரண்டு ஒன்றொடுஒன்று ஆன அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச் சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே. |
77 |
991 |
வித்தாம் செகமய மாக வரைகீறி நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின் உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலைதொரும் பத்தாம் பிரம சடங்குபார்த்து ஓதிடே. |
78 |
992 |
கண்டெடுந் தேன்கம லம்மலர் உள்ளிடை கொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப் பண்டழி யாத பதிவழி யேசென்று நண்பழி யாமே நமவென வாமே. |
79 |
993 |
புண்ணிய வானவர் பூமழை தூவிநின்று எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம் நண்ணுவர் நண்ணி நமஎன்று நாமத்தைக் கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே. |
80 |
994 |
ஆறெழுத்தாவது ஆறு 1 மந்திரங்கள் ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர் சாவித் திரியில் தலையெழுத்து ஒன்றுள பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே. |
81 |
1 சமயங்கள் |
995 |
எட்டினில் எட்டறை யிட்டு அறையிலே கூட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச் சுட்டி இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டு மட்டும் உயிர்கட்டு உமாபதி யானுண்டே . |
82 |
996 |
நம்முதல் அவ்வொடு நாவினர் ஆகியே அம்முதல் ஆகிய எட்டிடை யுற்றிட்டு உம்முதல் ஆகவே உணர்பவர் உச்சிமேல் உம்முதல் ஆயவன் உற்றுநின் றானே. |
83 |
தம்பனம்
997. | நின்ற அரசம் பலகைமேல் நேராக ஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகம் துன்று மெழுகையுள் பூச்ச் சுடரிடைத் தன்ற வெதுப்பிடத் தம்பனங் காணுமே. |
84 |
மோகனம்
998. | கரண இரளிப் பலகை யமன்திசை மரணம் இட்டு எட்டின் மகார எழுத்திட்டு வரணமில் ஐங்காயம் பூசி அடுப்பிடை முரணிற் புதைத்திட மோகன மாகுமே. |
85 |
உச்சாடனம்
999. | ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில் பாங்கு படவே பலாசப் பலகையில் காங்கரு மேட்டில் கடுப்பூசி விந்துவிட்டு ஓங்காமல் வைத்திடும் உச்சாட னத்துக்கே. |
86 |
மாரணம்
1000 | உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையில் பச்சோலை யில் பஞ்ச காயத்தைப் பாரித்து முச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திட அச்சமற மேலோர் மாரணம் வேண்டிலே. |
87 |
1001 |
ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசி ஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்திட்டு வாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்கு ஏய்ந்தவைத்து எண்பதி னாயிரம் வேண்டிலே. |
88 |
ஆகர்?ணம்
1002 | எண்ணாக் கருடனை ஏட்டில் உகாரமிட்டு எண்ணாப் பொனefனாளிf எழுவெள்ளி பூசிடா வெண்ணாவல் பலகையில் இட்டுமேற் கேநோக்கி எண்ணா எழுத்தோடுஎண்ணாயிரம் வேண்டிலே. |
89 |
3. அருச்சனை
1003 |
அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல் வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம் தும்பை வகுளம் சுரபுனனை மல்லிகை செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே. |
1 |
1004 |
சாங்கம தாகவே சந்தொடு சந்தனம் தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில் பாங்கு படப்பனி நீரால் குழைத்துவைத்து ஆங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே. |
2 |
1005 |
அன்புடனே நின்று அமுதமும் ஏற்றியே பொன்செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும் துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால் இன்புட னேவந்து எய்திடும் முத்தியே. |
3 |
1006 |
எய்தி வழிப்படில் எய்தா தனஇல்லை எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமுன் எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும் எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே. |
4 |
1007 |
நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார் மண்ணிய நைவேத் தியம்அனு சந்தான நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபமென்னும் மன்னும் மனம்பவ னத்தோடு வைகுமே. |
5 |
1008 |
வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோர் வேண்டார்கள் கன்மம் அதில்இச்சை அற்றபேர் வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள் வேண்டார்கள் கன்மம் மிகுதியோர் ஆய்ந்தன்பே. |
6 |
1009 |
அறிவரு ஞானத்து எவரும் அறியார் பொறிவழி தேடிப் புலம்புகின்றார்கள் நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில் எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே. |
7 |
1010 |
இருளும் வெளியும்போல் இரண்டாம் இதயம் மருளறி யாமையும் மன்னும் அறிவு மருளிவை விட்டெறி யாமை மயங்கும் மருளும் சிதைத்தோர் அவர்களாம் அன்றே. |
8 |
1011 |
தான்அவ னாக அவனேதான் ஆயிட ஆன இரண்டில் அறிவன் சிவமாகப் போனவன் அன்பிது நாலாம் மரபுறத் தான்அவன் ஆகும்ஓ ராசித்த தேவரே. |
9 |
1012 |
ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும் நீங்கா வகாரமும் நீள்கண்டத்து ஆயிடும் பாங்கார் நகாரம் பயில்நெற்றி உற்றிடும் வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே. |
10 |
1013 |
நமவது ஆசனம் ஆன பசுவே சிவமது சித்திச் சிவமாம் பதியே நமவற ஆதி நாடுவது அன்றாம் சிவமாகும் மாமோனம் சேர்தல்மெய் வீடே. |
11 |
1014 |
தெளிவரு நாளில் சிவஅமுது ஊறும் ஒளிவரு நாளில் ஓர்ஏட்டில் உகளும் ஒளிவரும் அப்பதத்து ஓர் இரண்டு ஆகில் வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே. |
12 |
4. நவகுண்டம்
1015 |
நவகுண்டம் ஆனவை நான்உரை செய்யின் நவகுண்டத்து உள்ளெழும் நற்றீபம் தானும் நவகுண்டத்து உள்ளெழும் நன்மைகள் எல்லாம் நவகுண்டம் ஆனவை நான்உரைப் பேனே. |
1 |
1016 |
உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும் நகைத்தெழு நாற்கோணம் நன்மை கள்ஐந்தும் பகைத்திடு முப்புரம் பாரங்கி யோடே மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே. |
2 |
1017 |
மேலெறிந்து உள்ளே வெளிசெய்த அப்பொருள் கால்அறிந்து உள்ளே கருத்துற்ற செஞ்சுடர் பார்அறிந்து அண்டம் சிறகற நின்றது நான்அறிந்து உள்ளே நாடிக்கொண் டேனே. |
3 |
1018 |
கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியாய் அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம் பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம் இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே. |
4 |
1019 |
எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில் பதித்த கலைகளும் பாலித்து நிற்கும் கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே கொதித்தெழும் வல்லினை கூடகி லாவே. |
5 |
1020 |
கூடமுக் கூடத்தின் உள்ளெழு குண்டத்துள் ஆடிய ஐந்தும் அகம்புறம் பாய்நிற்கும் பாடிய பன்னீர் இராசியும் அங்குஎழ நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே. |
6 |
1021 |
நற்சுட ராகும் சிரமுக வட்டமாம் கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளிற் பைச்சுடர் மேனி பதைப்பற்று இலிங்கமும் நற்சுட ராய்எழு நல்லதென் றாளே. |
7 |
1022 |
நல்லதென் றாளே நமக்குற்ற நாயகம் சொல்லதென் றாளே சுடர்முடி பாதமோ மெல்லநின் றாளை வினவகில் லாதவர் கல்லதென் றாளையும் கற்றும் வின் வாளே. |
8 |
1023 |
வின்னா விளம்பிறை மேவிய குண்டத்துச் சொன்னால் இரண்டும் சுடர்நாகம் திக்கென்று பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர் என்ஆகத் துள்ளே இடங்கொண்ட வாறே. |
9 |
1024 |
இடங்கொண்ட பாதம் எழிற்சுடர் ஏக நடங்கொண்ட பாதங்கள் நண்ணீர் அதற்குச் சுகங்கொண்ட கையிரண்டு ஆறும் தழைப்ப முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே. |
10 |
1025 |
முக்கணன் தானே முழுச்சுடர் ஆயவன் அக்கணன் தானே அகிலமும் உண்டவன் திக்கணன் ஆகித் திகைஎட்டும் கண்டவன் எக்கணன் தானுக்கும் எந்தை பிரானே. |
11 |
1026 |
எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த் தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால் கந்தன் சுவாமி கலந்தங்கு இருந்தலான் மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே. |
12 |
1027 |
மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள் ஆட்டிய காலொன்றும் இரண்டும் அலர்ந்திடும் வாட்டிய கையிரண்டு ஒன்று பதைத்தெழு நாட்டும் சுரரிவர் நல்லொளி தானே. |
13 |
1028 |
நல்லொளி யாக நடந்துல கெங்கும் கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும் சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம் கல்லொளி கண்ணுள மாகிநின் றாளே. |
14 |
1029 |
நின்றஇக் குண்டம் நிலையாது கோணமாய்ப் பண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறும் கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழ விண்ணுளம் என்ன எடுக்கலு மாமே. |
15 |
1030 |
எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தைக் கடுத்த முகம்இரண்டு ஆறுகண் ஆகப் படித்துஎண்ணும் நாவெழு கொம்பொரு நாலும் அடுத்தெழு கண்ணான தந்தமி லாற்கே. |
16 |
1031 |
அந்தமில் லானுக்கு அகலிடம் தானில்லை அந்தமில் லானை அளப்பவர் தாமில்லை அந்தமில் லானுக்கு அடுத்தசொல் தானில்லை அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே. |
17 |
1032 |
பத்திட்டுஅங்கு எட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை கட்டிட்டு நின்று கலந்தமெய் யாகவும் பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே. |
18 |
1033 |
பார்ப்பதி பாகன் பரந்தகை நால்ஐஞ்சு காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும் பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி நாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே. |
19 |
1034 |
அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐஐந்தம் மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங்கு இருத்தலால் பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர் கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே. |
20 |
1035 |
முத்திநற் சோதி முழுச்சுடர் ஆயவன் கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும் பற்றற நாடிப் பரந்தொளி யூடு போய்ச் செற்றற்து இருந்தவர் சேர்ந்திருந் தாரே. |
21 |
1036 |
சேர்ந்த கலையஞ்சும் சேரும்இக் குண்டமும் ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும் பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக் காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே. |
22 |
1037 |
மெய்கண்ட மாம்விரி நீருல கேழையும் உய்கண்டம் செய்த ஒருவனைச் சேருமின் செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள் பொய்கண்டம் இல்லாப் பொருள்கலந் தாரே. |
23 |
1038 |
கலந்திரு பாதம் இருகர மாகும் மலர்ந்திரு குண்ட மகாரத்தார் யிமூக்கு மலர்ந்தெழு செம்முகம் மற்றைக்கண் நெற்றி உணர்ந்திரு குஞ்சி அங்கு உத்தம னார்க்கே. |
24 |
1039 |
உத்தமன் சோதி உளனொரு பாலனாய் மத்திம னாகி மலர்ந்தங்கு இருந்திடும் பச்சிம திக்கும் பரந்து குழிந்தன சத்திமா னாகத் தழைத்த கொடியே. |
25 |
1040 |
கொடியாறு சென்று குலாவிய குண்டம் அடியிரு கோணமாய் அந்தமும் ஒக்கும் படிஏழ் உலகும் பரந்த சுடரை மடியாது கண்டவர் மாதன மாமே. |
26 |
1041 |
மாதன மாக வளர்கின்ற வன்னியைச் சாதன மாகச் சமைந்த குருவென்று போதன மாகப் பொருந்த உலகாளும் பாதன மாகப் பரிந்தது பார்த்தே. |
27 |
1042 |
பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார் இல்லை காத்துடல் உள்ளே கருதி இருந்தவர் மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே. |
28 |
1043 |
உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க அகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும் பகங்கண்டு கொண்டஇப் பாய்கரு வொப்பச் சகங்கண்டு கொண்டது சாதன மாமே. |
29 |
1044 |
சாதனை நாலு தழல்மூன்று வில்வயம் வேதனை வட்டம் விளையாறு பூநிலை போதனை போதுஐஞ்சு பொய்கய வாரணம் நாதனை நாடு நவகோடி தானே. |
30 |
5. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம்
1045 |
மாமாயை மாயை வயிந்தவம் வைகரி ஓமாயை உள்ளொளி ஓராறு கோடியில் தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள் ஆமாய் அலவாந் திரிபுரை யாங்கே. |
1 |
1046 |
திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப் பரிபுரை நாரணி யாம்பல வன்னத்தி இருள்புரை ஈசி மனோன்மனி என்ன வருபல வாய்நிற்கும் மாமது தானே. |
2 |
1047 |
தானா அமைந்தஅம் முப்புரம் தன்னிடைத் தானான மூவுரு ஓருருத் தன்மையுள் தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள்கல்வி தானான போகமும் முத்தியும் நல்குமே. |
3 |
1048 |
நல்குந் திரிபுரை நாதநா தாந்தங்கள் பல்கும் பரவிந்து பாரண்ட மானவை நல்கும் பரைஅபி ராமி அகோசரி புல்கும் அருளும்அப் போதந்தந் தாளுமே. |
4 |
1049 |
தாளணி நூபுரம் செம்பட்டுத் தானுடை வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில் ஏரணி அங்குச பாசம் எழில்முடி காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே. |
5 |
1050 |
குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள் கொண்ட அரத்த நிறமன்று கேலாத்தின் கண்டிகை ஆரம் கதிர் முடி மாமதிச் சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றானே. |
6 |
1051 |
நின்ற திரிபுரை நீளும் புராதனி குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை நன்றறி கண்டிகை நாற்கால் கரீடணி துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே. |
7 |
1052 |
தத்துவம் பாரத் தனத்தி சுகோதயள் வத்துவம் ஆய்ஆ ளும் மாசத்தி மாபரை அத்தகை யாவும் அணோரணி தானுமாய் வைத்தஅக் கோல மதியவள் ஆகுமே. |
8 |
1053 |
அவளை அறியா அமரரும் இல்லை அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே. |
9 |
1054 |
அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர் அறிவா ரருவுரு வாம்அவள் என்பர் அறிவார் கருமம் அவள்இச்சை என்பர் அறிவார் பரனும் அவளிடத் தானே. |
10 |
1055 |
தான்எங்கு உளன்அங்கு உளதுதையல் மாதேவி ஊன்எங் குள அங்கு உள்ளுயிர்க் காலவன் வான் எங் குளஅங் குளேவந்தும் அப்பாலாம் கோன் எங்கும் நின்ற குறிபல பாரே. |
11 |
1056 |
பராசத்தி மாசத்தி பல்வகை யாலும் தராசத்தி யாய்நின்ற தன்மை யுணராய் உராசத்தி ஊழிகள் தோறும் உடனே பராசத்தி புண்ணிய மாகிய போகமே. |
12 |
1057 |
போகஞ்செய் சத்தி புரிகுழ லாளொடும் பாகஞ்செய்து ஆங்கே பராசத்தி யாய்நிற்கும் ஆகஞ்செய்து ஆங்கே அடியவர் நாள்தொறும் பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே. |
13 |
1058 |
கொம்புஅனை யாளைக் குவிமுலை மங்கையை வம்பவிழ் கோதையை வானவிர் நாடியைச் செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை நம்பி என் உள்ளே நயந்துவைத் தேனே. |
14. |
1059 |
வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும் பத்து முகமும் பரையும் பராபரைச் சித்தக் கரணச் செயல்களும் செய்திடும் சத்தியும் வித்தைத் தலையவ ளாமே. |
15 |
1060 |
தலைவி தடமுலை மேல்நின்ற தையல் தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை கலைபல வென்றிடும் கன்னியென் உள்ளம் நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே. |
16 |
1061 |
நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற என்றன் அகம்படிந்து ஏழுல கும்தொழ மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி ஒன்றெனொடு ஒன்றிநின்று ஒத்துஅடைத்தாளே. |
17 |
1062 |
ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே. |
18 |
1063 |
உணர்ந்துட னேநிறகும் உள்ளொளி யாகி மணங்கமழ் பூங்குழல் மங்கையும் தானும் புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக் கணிந்தெழு வார்க்குக் கதியளிப் பாளே. |
19 |
1064 |
அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி புளியுறு புன்பழம் போலுள்ள நோக்கித் தெளியுறு வித்துச் சிவகதி காட்டி ஒளியுற வைத்தென்னை உய்யவுண் டானே. |
20 |
1065 |
உண்டில்லை என்றது உருச்செய்து நின்றது வண்தில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது கண்டிலர் காரண காரணி தம்மொடு மண்டல முன்றுற மன்னிநின் றாளே. |
21 |
1066 |
நின்றாள் அவன்தன் உடலும் உயிருமாய்ச் சென்றான் சிவகதி சேரும் பராசத்தி ஒன்றாக என்னுள் புகுந்துணர் வாகியே நின்றான் பரஞ்சுடர் ஏடங்கை யாளே. |
22 |
1067 |
ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி வேடம் படிகம் விரும்பும்வெண் தாமரை பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள் சூடுமின் சென்னிவாய்த் தோத்திரம் சொல்லுமே. |
23 |
1068 |
தோத்திரம் செய்து தொழுது துணையடி வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிடும் பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும் பார்த்திடும் பூம்பிள்ளை ஆருமாம் ஆதிக்கே. |
24 |
1069 |
ஆதி விதமிகுத் தண்தந்த மால்தங்கை நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப் பாதியில் வைத்துப் பல்காற் பயில்விரல் சோதி மிகுந்துமுக் காலமும் தோன்றுமே. |
25 |
1070 |
மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல் வேதாதி நூலின் விளங்கும் பராபரை ஆதார மாகியே ஆயந்த பரப்பினள் நாதாதி நாதத்து நல்லரு ளாளே. |
26 |
1071 |
அருள்பெற்றவர் சொல்ல வாரீர் மனிதர் பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார் மருளுற்ற சிந்தையை மாற்றி யருமைப் பொருளுற்ற சேவடி போற்றுவன் நானே. |
27 |
1072 |
ஆன வராக முகத்தி பதத்தினள் ஈன வராகம் இடிக்கும் முசலத்தோடு ஏனை உழுபடை ஏந்திய வெண்ணகை ஊன மறஉணர்ந் தாரஉளத்து ஓங்குமே. |
28 |
1073 |
ஓங்காரி என்பாள் அவளொரு பெண்பிள்ளை நீங்காத பச்சை நிறத்தை உடையவள் ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு ரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே. |
29 |
1074 |
தானே தலைவி எனநின்ற தற்பரை தானே உயிர்வித்துத் தந்த பதினாலும் வானோர் தலமும் மனமும்நற் புத்தியும் தானே சிவகதி தன்மையும் ஆமே. |
30 |
6. வயிரவி மந்திரம்
1075 |
பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி தன்னில் ஆகாரமும் மாயையும் கற்பித்துப் பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும் சொல்நிலை சோடம் அந்தம் என்று ஓதிடே. |
1 |
1076 |
அந்தம் பதினாலும் அதுவே வயிரவி முந்து நடுவும் முடிவும் முதலாகச் சிந்தை கமலத்து எழுகின்ற மாசத்தி அந்தமும் ஆதியும் ஆகின்றாளே. |
2 |
1077 |
ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர் போகின்ற பூதம் பொருந்து புராதரர் சார்கின்ற சாரவுழிச் சாரார் கதிர்பெறப் போகுந் திரிபுரை புண்ணியத் தோரே. |
3 |
1078 |
புண்ணிய நந்தி புனிதன் திருவாகும் எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி பண்ணிய வன்னி பகலோன் மதியீறு திண்ணிய சிந்தைதன் தென்னனும் ஆமே. |
4 |
1079 |
தென்னன் திருநந்தி சேவகன் தன்னொடும் பொன்னங் கிரியில் பூதலம் போற்றிடும் பன்னும் பரிபிடி அந்தம் பகவனோடு உன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே. |
5 |
1080 |
ஓதிய நந்தி உணரும் திருவருள் நீதியில் வேத நெறிவந்து உரைசெய்யும் போதம் இருபத்து எழுநாள் புணர்மதி சோதி வயிரவி சூலம்வந்து ஆளுமே. |
6 |
1081 |
சூலம் கபாலம் கை ஏந்திய சூலிக்கு நாலாங் கரமுள நாகபா சாங்குச மாலங் லயனறி யாத வடிவுக்கு மேல்அங்க மாய்நின்ற மெல்லிய லாளே. |
7 |
1082 |
மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை கல்லியல் ஒப்fபது காணும் திருமேனி பல்லியல் ஆடையும் பன்மணி தானே. |
8 |
1083 |
பன்மணி சந்திர கோடி திருமுடி சொன்மணி குண்டலக்காதி உழைக்கண்ணி நன்மணி சூரிய சோம நயனத்தள் பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே. |
9 |
1084 |
பூரித்த பூவிதழ் எட்டினுக்கு உள்ளேயோர் ஆரியத் தாள்உண்டுஅங்கு எண்மர் கன்னியர் பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும் சாரித்துத் சத்தியைத் தாங்கள் கண்டாரே. |
10 |
1085 |
கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம் எண்டிசை யோகி இறைவி பராசக்தி அண்டமோடு எண்டிசை தாங்கும் அருட்செல்வி புண்டரி கத்தினுள் பூசனை யாளே. |
11 |
1086 |
பூசனை கெந்தம் புனைமலர் மாகொடி யோசனை பஞ்சத்து ஒலிவந்து உரைசெய்யும் வாசம்இ லாத மணிமந் திரயோகம் தேசம் திகழும் திரிபுரை காணே. |
12 |
1087 |
காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும் பேணும் சிவனும் பிரமனும் மாயனும் காணும் தலைவிநற் காரணி காணே. |
13 |
1088 |
காரணி மந்திரம் ஓதுங் கமலத்துப் பூரண கும்ப விரேசம் பொருந்திய நாரணி நந்தி நடுஅங்கு உரைசெய்த ஆரண வேதநூல் அந்தமும் ஆமே. |
14 |
1089 |
அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல் வந்த வழிமுறை மாறி உரை செய்யும் செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு நந்தி இதனை நவம் உரைத்தானே. |
15 |
1090 |
உரைத்த நவசத்தி ஒன்று முடிய நிரைத்த இராசி நெடுமுறை எண்ணிப் பிரைச்சதம் எட்டுமுன் பேசிய நந்தி நிரைத்து நியதி நியமம்செய் தானே. |
16 |
1091 |
தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற ஏமத்து இருளற வீசும் இளங்கொடி ஓமப் பெருஞ்சுடர் உள்எழு நுண்புகை மேவித்து அழுதொடு மீண்டது காணே. |
17 |
1092 |
காணும் இருதய மந்திர முங்கண்டு பேணும் நமஎன்று பேசும் தலைமேலே வேணு நடுவு மிகநின்ற ஆகுதி பூணு நடுஎன்ற அந்தம் சிகையே. |
18 |
1093 |
சிகைநின்ற அந்தக் கவசங்கொண்டு ஆதிப் பகைநின்ற அங்கத்தைப் பாரென்று மாறித் தொகைநின்ற நேத்திர முத்திரை சூலம் வகைநின்ற யோனி வகுத்தலும் ஆமே. |
19 |
1094 |
வருத்தம் இரண்டும் சிறுவிரன் மாறிப் பொருந்தி அணிவிரல் சுட்டிப் பிடித்து நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே பெருத்த விரல்இரண்டு உள்புக்குப் பேசே. |
20 |
1095 |
பேசிய மந்திரம் இராகம் பிரித்துரை கூசமி லாத சகாரத்தை முன்கொண்டு வாசிப் பிராணன் உபதேசம் ஆகைக்குக் கூசியவிந்து வுடன் கொண்டு கூவே. |
21 |
1096 |
கூவிய சீவன் பிராணன் முதலாகப் பாவிய சவ்வுடன் பண்ணும் யகாரத்தை மேவிய மாயை விரிசங்கு முத்திரை தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே. |
22 |
1097 |
நின்ற வயிரவி நீலி நிசாசரி ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச் சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே. |
23. |
1098 |
சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம் நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை ஆற்றலொடு ஆய்நிற்கும் ஆதி முதல்வியே. |
24 |
1099 |
ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம் பேதை உலகிற் பிறவிகள் நாசமாம் ஓத உலவாக் கோலம் ஒன்று ஆகுமே. |
25 |
1100 |
கோலக் குழவி குலாய புருவத்துள் நீலக் குவளை மலரன்ன கண்ணினாள் ஆலிக்கும் இன்னமுது ஆனந்த சுந்தரி மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே . |
26 |
1101 |
வெளிப்படு வித்து விளைவுஅறி வித்துத் தெளிப்படு வித்துஎன் சிந்தையின் உள்ளே களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி ஒளிப்படு வித்துஎன்னை உய்ய்க்கொண்டாளே. |
27 |
1102 |
கொண்டனள் கோலங் கோடி அநேகங்கள் கண்டனள் எண்ணென் கலையின் கண் மாலைகள் விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும் தண்டலை மேல்நின்ற தையல் நல் லாளே. |
28 |
1103 |
தையல் நல் லாளைத் தவத்தின் தலைவியை மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப் பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின் வெய்ய பவம்இனி மேவகி லாவே. |
29 |
1104 |
வேயன தோளி விரையுறு மென்மலர் ஏய குழலி இளம்பிறை ஏந்திழை தூய கடைமுடிச் சூலினி சுந்தரி ஏயெனது உள்ளத்து இனிதுஇருந் தாளே. |
30 |
1105 |
இனியதென் மூலை இருக்குங் குமரி தனியொரு நாயகி தானே தலைவி தனிப்படு வித்தனள் சார்வு படுத்து நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே. |
31 |
1106 |
நாடிகள் மூன்று நடுஎழ ஞானத்துக் கூடி யிருந்த குமரி குலக்கன்னி பாடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலி ஊடக மேவி உறங்குகின் றாளே. |
32 |
1107 |
உறங்கும் அளவில் மனோன்மணி வந்து கறங்கும் வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப் பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு உறங்கல்ஐ யாஎன்று உபாயம்செய் தாளே. |
33 |
1108 |
உபாயம் அளிக்கும் ஒருத்தியென் உள்ளத்து அபாயம் அறக்கெடுத்து அன்பு விளைத்துச் சுவாவை விளக்கும் சுழியாகத் துள்ளே அவாவை அடக்கிவைத்து அஞ்சல்என் றாளே. |
34 |
1109 |
அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை தஞ்சமென்று எண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கு இன்சொல் அளிக்கும் இறைவியென் றாரே. |
35 |
1110 |
ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை காரியல் கோதையுள் காரணி நாரணி ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும் கோரியென் உள்ளம் குலாவிநின் றாளே. |
36 |
1111 |
குலாவிய கோலக் குமரியென் னுள்ளம் நிலாவி யிருந்து நெடுநாள் அணைந்தும் உலாவி இருந்துணர்ந்து உச்சியின் உள்ளே கலாவி இருந்த கலைத்தலை யாளே. |
37 |
1112 |
கலைத்தலை நெற்றியோர் கண்ணுடைக் கண்ணுள் முலைத்தலை மங்கை முயங்கி இருக்கும் சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி அலைத்தபூங் கொம்பினள் அங்கிருந் தாளே. |
38 |
1113 |
இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப் பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித் திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்fறி அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே. |
39 |
1114 |
ஆதி அனாதி அகாரணி காரணி சோதிய சோதி சுகபர சந்தரி மாது சமாதி மனோன்மணி மங்கலி ஓதிஎன் உள்ளத்து உடன்இயைந் தாளே. |
40 |
1115 |
இயைந்தனள் ஏந்திழை என்உள்ளம் மேலி நயந்தனள் அங்கே நமசிவ என்னும் அயன்தனை ஓரும் பதமது பற்றும் பெயர்ந்தனள் மற்றும் பிதற்றுஅறுத் தாளே. |
41 |
1116 |
பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர் முயற்றியின் முற்றி அருளும் முதல்வி கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய் முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே. |
42 |
1117 |
உள்ளத்து இதயத்து நெஞ்சத்தொரு மூன்றுள் பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது வள்ளல் திருவின் வயிற்றுனுள் மாமாயைக் கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே. |
43 |
1118 |
கன்னியுங் கன்னி அழிந்தனள் காதலி துன்னியங fகைவரைப் பெற்றனள் தூய்மொழி பன்னிய நன்னூற் பகவரும் அங்குள என்னேஇம் மாயை இருளது தானே. |
44 |
1119 |
இருளது சத்தி வெளியதுஎம் அண்ணல் பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம் தெருளது சிந்தையைத் தெய்வம்என்று எண்ணில் அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே. |
45 |
1120 |
ஆதி அனாதியும் ஆய பராசக்தி பாதிபராபரை மேலுறை பைந்தொடி மாது சமாதி மனோன்மணி மங்கலி ஓதும்என் உள்ளத்து உடன்முகிழ்த் தாளே. |
46 |
1121 |
ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை ஆதியில் வேதமே யாம்என்று அறிகிலர் சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பன் ஆதியென்று ஓதினள் ஆவின் கிழத்தியே. |
47 |
1122 |
ஆவின் கிழத்திநல் ஆவடு தண்துறை நாவின் கிழத்தி நலம்புகழ்ந்து ஏத்திடும் தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை மேவும் கிழத்தி வினைகடிந் தாளே. |
48 |
1123 |
வினைகடிந் தார்உள்ளத்து உள்ளொளி மேவித் தனைஅடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள் எனைஅடிமை கொண்ட ஏந்திழை ஈசன் கணவனைக் காண அனாதியும் ஆமே. |
49 |
1124 |
ஆதி அனாதி அகாரணி காரணி வேதமது ஆய்ந்தனள் வேதியர்க் காய்நின்ற சோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும் பாதி பராபரை பன்னிரண்டு ஆதியே. |
50 |
7. பூரண சக்தி
1125 |
அளந்தேன் அகலிடத்து அந்தமும் ஈறும் அளந்தேன் அகலிடத்து ஆதிப் பிரானை அளந்தேன் அகலிடத்து ஆணொடு பெண்ணும் அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே. |
1 |
1126 |
உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சக்தி புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள் கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி கொணர்ந்த வழிகொண்டு கும்பகமாமே. |
2 |
1127 |
கும்பக் களிறுஐந்தும் கோலொடு பாகனும் வம்பில் திகழும் மணிமுடி வண்ணனும் இன்பக் கலவி இனிதுறை தையலும் அன்பிற் கலவியுள் ஆயொழிந் தாரே. |
3 |
1128 |
இன்பக் கலவியில் இட்டொழு கின்றதோர் அன்பிற் புகவல்ல னாம்எங்கள் அப்பனும் துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள் என்பிற் பாரசக்தி என்னம்மை தானே. |
4 |
1129 |
என்னம்மை என்னப்பன் என்னும் செருக்கற்று உன்னம்மை ஊழித் தலைவனும் அங்குளன் மன்னம்மை யாகி மருவி உரைசெய்யும் பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே. |
5 |
1130 |
தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன் பார்மேல் இருப்பதொரு நூறு தானுள பூமேல் உறைகின்ற போதகம் வந்தனள் நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே. |
6 |
1131 |
ஆணையமாய்வருந் தாதுள் இருந்தவர் மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின் பாணைய மாய பரத்தை அறிந்தபின் தாணைய மாய தானதனன் தானே. |
7 |
1132 |
தானே எழுந்தஇத் தத்துவ நாயகி வானோர் எழுந்து மதியை விளக்கினள் தேனார் எழகின்ற தீபத்து ஒளியுடன் மானே நடமுடை மன்றறி யீரே. |
8 |
1133 |
அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத்து அறிவான மங்கை அருளது சேரில் பிரியா அறிவறி வார்உளம் பேணும் நெறியாய சித்த நிறைந்திருந் தாளே. |
9 |
1134 |
இரவும் பகலும் இலாத இடத்தே குரவம் செய்கின்ற குழலியை நாடி அரவம்செய் யாமல் அருளுடன் தூங்கப் பருவம்செய் யாததோர் பாலனும் ஆமே. |
10 |
1135 |
பாலனும் ஆகும் பராசத்தி தன்னோடு மேலனு காவிந்து நாதங்கள் விட்டிட மூலம தாமெனும் முத்திக்கு நேர்படச் சாலவு மாய்நின்ற தற்பரத் தானே. |
11 |
1136 |
நின்ற பராசக்தி நீள்பரன் தன்னோடு நின்றறி ஞானமும் இச்சையு மாய் நிற்கும் நன்றறி யும்கிரி யாசக்தி நண்ணவே மற்றன வற்றுள் மருவிடுந் தானே. |
12 |
1137 |
மருவொத்த மங்கையும் தானும் உடனே உருவொத்துநின்றமை ஒன்றும் உணரார் கருவொத்து நின்று கலக்கின போது திருவொத்த சிந்தைவைத்து எந்தைநின் றானே. |
13 |
1138 |
சிந்தையின் உள்ளே திரியும் சிவசத்தி விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள் சந்திர பூமி சடாதரி சாத்தவி அந்தமொடு ஆதிய தாம்வண் ணத்தாளே. |
14 |
1139 |
ஆறி யிருந்த அமுத பயோதரி மாறி யிருந்த வழியறி வாரில்லை தேறி யிருந்துநல் தீபத்து ஒளியுடன் ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே. |
15 |
1140 |
உடையவன் அங்கி உருத்திர சோதி விடையவன் ஏறி விளங்கி இருக்கும் கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து அடையது வாகிய சாதகர் தாமே. |
16 |
1141 |
தாமேல் உறைவிடம் ஆறிதழ் ஆனது பார்மேல் இதழ்பழி னெட்டிரு நூறுன பூமேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள் பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே. |
17 |
1142 |
பைந்தொடி யாளும் பரமன் இருந்திடத் திண்கொடி யாகத் திகழ்திரு சோதியாம் விண்கொடி யாகி விளங்கி வருதலால் பெண்கொடி யாக நடந்தது உலகே. |
18 |
1143 |
நடந்தது அம்மலர் நாலுடன் அஞ்சாய் இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப் படர்ந்தது தன்வழி பங்கயத் துள்ளே தொடர்ந்தது உள்வழி சோதி யடுத்தே. |
19 |
1144 |
அடுக்குத் தாமரை ஆதி இருப்பிடம் எடுக்கும் தாமரை இல்லகத்து உள்ளது மடுக்கும் தாமரை மத்தகச் தேசெல முடுக்கும் தாமரை முச்சது ரத்தே. |
20 |
1145 |
முச்சது ரத்தே எழுந்த முளைச்சுடர் எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக் கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற எச்சது ரத்தும் இருந்தனள் தானே. |
21 |
1146 |
இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்ப் பரந்தன வாயு திசை தோறும் குவிந்தன முத்தின் முகவொளி நோக்கி நடந்தது தேறல் அதோமுகம் அம்பே. |
22 |
1147 |
அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மணி கொம்பன்ன நுண்ணிடை கோதை குலாவிய செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும் நம்பனை நோக்கி நவிலுகின் றா\ளே. |
23 |
1148 |
நவிலும் பெருந்தெய்வம் நான்மறைச் சத்தி துகிலுடை யாடை நிலம்பொதி பாதம் அகிலமும் அண்ட முழுதும் செம்மாந்தும் புகலும்முச் சோதி புனையநிற் பாளே. |
24 |
1149 |
புனையவல் லாள் புவனத்துஇறை எங்கள் வனையவல் லாள் அண்டகோடிகள் உள்ளே புனையவல் லாள்மண் லடத்தொளி தன்னைப் புனையவல் லாளையும் போற்றியென் பேனே. |
25 |
1150 |
போற்றியென் பேன்புவ னாபதி அம்மையென் ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண்பிள்ளை சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை கூற்றம் துரக்கின்ற கொள்பைந் தொடியே. |
26 |
1151 |
தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி வடிவார் திரிபுரை யாமங்கை கங்கைச் செடியார் வினைகெடச் சேர்வரை என்றென் அடியார் வினைகெடுத்து ஆதியும் ஆமே. |
27 |
1152 |
மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி புல்லிசைப் பாவை யைப் போகத் துரந்திட்டு வல்லிசைப் பாவை மனம்புகுந் தானே. |
28 |
1153 |
தாவித தவப்பொருள் தான்அவன் எம்இறை பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து மேவிப் பராசக்தி மேலொடு கீழ்தொடர்ந்து ஆவிக்கும் அப்பொருள் தானது தானே. |
29 |
1154 |
அதுஇது என்பர் அவனை அறியார் கதிவர நின்றதோர் காரணம் காணார் மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை திதமது உன்னார்கள் தேர்ந்துஅறி யாரே. |
30 |
8. ஆதாரவாதேயம்
1155 |
நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு தானிதழ் ஆனவை நாற்பத்து நாலுள பாலிதழ் ஆனவள் பங்கய மூலமாய்த் தானிதழ் ஆகித் தரித்திருந் தாளே. |
1 |
1156 |
தரித்திருந் தாள்அவள் தண்ணொளி நோக்கி விரித்திருந் தாள்அவள் வேதப் பொருளைக் குறித்திருந் தாள்அவள் கூறிய ஐந்து மறித்திருந் தாள்அவள் மாதுநல் லாளே. |
2 |
1157 |
மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப் பாதிநல் லாளும் பகவனும் ஆனது சோதிநல் லாளைத் துணைப் பெய்ய வல்லிரேல் வேதனை தீர்தரும் வௌfளடை யாமே. |
3 |
1158 |
வௌfளடை யான்இரு மாமிகு மாமலர்க் கள்ளடை யாரக் கமழ்குழ லார்மனம் மள்ளடை யானும் வகைத்திற மாய்நின்ற பெண்ணொரு பாகம் பிறவிப் பெண் ஆமே. |
4 |
1159 |
பெண்ணொரு பெண்ணை புணர்ந்திடும் பேதைமை பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது பெண்ணுடை ஆண்என் பிறப்பறிந்து ஈர்க்கின்ற பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே. |
5 |
1160 |
பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை மாச்சற்ற சோதி மனோன்மணி மங்கையாங் காச்சற்ற சோதி கடவு ளுடன்புணர்ந்து தாச்சற்றெ னுள்புகுந் தாலிக்கும் தானே. |
6 |
1161 |
ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மணி பாலித்து உலகில் பரந்துபெண் ஆகும் வேலைத் தலைவியை வேத முதல்வியை ஆலித்து ஒருவன் உகந்துநின் றானே. |
7 |
1162 |
உலந்துநின் நான்நம்பி ஒண்ணுதற் கண்ணோடு உகந்துநின் றான்நம் உழைபுக நோக்கி உகந்துநின் றான்இவ் வுலகங்கள் எல்லாம் உகந்துநின் றான்அவன் தன்தோள் தொகுத்தே. |
8 |
1163 |
குத்து முலைச்சி குழைந்த மருங்கினள் துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத் தொத்த கருத்துச் சொல்லகில் லேனே. |
9 |
1164 |
சொல்லஒண்ணாத அழற்பொதி மண்டலம் சொல்லஒண் னாத திகைத்தங்கு இருப்பர்கள் வெல்லஒண் ணாத வினைத்தனி நாயகி மல்லஒண் ணாத மனோன்மணி தானே. |
10 |
1165 |
தானே இருநிலம் தாங்கிலிண் ணாய்நிற்கும் தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும் தானே மழைபொழி தையலுமாய் நிற்கும் தானே வடவரைத் தண்கடற் கண்ணே. |
11 |
1166 |
கண்ணுடை யாளைக் கலந்தங்கு இருந்தவர் மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணப் பண்ணுடை யார்கள் பதைப்பற்று இருந்தவர் விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே. |
12 |
1167 |
கண்டுஎன் திசையும் கலந்து வருங்கன்னி பண்டுஎன் திசையும் பராசக்தி யாய்நிற்கும் விண்டுஎன் திசையும் விரைமலர் கைக்கொண்டு தொண்டுஎன் திசையும் தொழநின்ற கன்னியே . |
13 |
1168 |
கன்னி ஔiயென நின்றஇச் சந்திரன் மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறம் சென்னி யிருப்பிடம் சேர்பதி னாறுடன் பன்னி யிருப்பப் பராசக்தி யாமே. |
14 |
1169 |
பராசத்தி என்றென்று பல்வகை யாலும் தராசத்தி யான தலைப்பிர மாணி இராசத்தி யாமள ஆகமத் தாளாகும் குராசத்தி கோலம் பலவுணர்ந் தேனே. |
15 |
1170 |
உணர்ந்த உலகு ஏழையும் யோகினி சத்தி உணர்ந்துஉயி ராய்நிற்கும் உன்னதன் ஈசன் புணர்ந்தொரு காலத்துப் போகமது ஆதி இணைந்து பரமென்று இசைந்துஇது தானே. |
16 |
1171 |
இதுஅப் பெருந்தகை எம்பெரு மானும் பொதுஅக் கல்வியும் போகமும் ஆகி மது அக் குழலி மனோன்மணி மங்கை அதுஅக் கல்வியுள் ஆயுழி யோகமே. |
17 |
1172 |
யோகநற் சத்தி ஔiபீடம் தானாகும் யோகநற் சத்தி ஔiமுகம் தெற்காகும் யோகநற் சத்தி உதர நடுவாகும் யோகநற் சத்திதான் உத்தரந் தேரே. |
18 |
1173 |
தேர்ந்தெழு மேலாம் சிவன்அங்கி யோடுற வார்ந்தெழு மாயையும் அந்தம தாய்நிற்கும் ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிட கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே. |
19 |
1174 |
தானான ஆறுஎட்ட தாம்பரைக் குண்மிசை தானான ஆறும்ஈ ரேழும் சமகலை தானான விந்து சகமே பரமெனும் தானாம் பரவா தனையெனத் தக்கதே. |
20 |
1175 |
தக்க பராவித்தை தானிரு பானேழில் தக்கெழும் ஓர்உத் திரம்சொல்லச் சொல்லவே மிக்கிடும் எண்சக்தி வெண்ணிற முக்கண்ணி தொக்க கதையோடு தொன்முத் திரையாளே. |
21 |
1176 |
முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தன் தத்துவ மாய்அல்ல வாய சகலத்தள் வைத்த பராபர னாய பராபரை சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே. |
22 |
1177 |
கொங்குஈன்ற கொம்பின் குரும்பைக் குலாங்கன்னி
பொங்கிய குங்குமத் தொளி பொருந்தினள் அங்குச பாசம் எனும்அகி லம் கனி தங்கும் அவள்மனை தான்அறி வாயே. |
23 |
1178 |
வாயு மனமும் கடந்த மனோன்மணி பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத் தாயும் மகளும்நல் தாரமும் ஆமே. |
24 |
1179 |
தாரமும் ஆகுவள் தத்துவ மாய்நிற்பள் காரண காரிய மாகும் கலப்பினள் பூரண விந்து பொதிந்த புராதனி பாரள வாந்திசை பத்துடை யாளே. |
25 |
1180 |
பத்துமுடை யாள்நம் பராசத்தி வைத்தனள் ஆறங்க நாலுடன் தான்வேதம் ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே நித்தமாய் நின்றாள்எம் நேரிழை கூறே. |
26 |
1181 |
கூறிய கன்னி குலாய புருவத்தள் சீறிய ளாய்உல கேழும் திகழ்ந்தவள் ஆரிய நங்கை அமுத பயோதரி பேருயி ராளி பிறிவறுத் தாளே . |
27 |
1182 |
பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பேதை குறியொன்றி நின்றிடும் கோமளக் கொம்பு பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே அறிவொன்றி நின்றனள் ஆருயி ருள்ளே. |
28 |
1183 |
உள்ளத்தின் உள்ளே உடனிருந்து ஐவர்தம் கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக் கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து வள்ளல் தலைவி மருட்டிப் புரிந்தே. |
29 |
1184 |
புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார் பொருந்தி யிருந்த புதல்விபூ வண்ணத்து இருந்த இலக்கில் இனிதிருந் தாளே. |
30 |
1185 |
இருந்தனள் ஏந்திழை என்னுளம் மேவித் திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந்து உன்னி நிரந்தர மாகிய நிரதி சயமொடு பொருந்த விலக்கில் புணர்ச்சி அதுவே. |
31 |
1186 |
அதுஇது என்னும் அவாவினை நீக்கித் துதியது செய்து சுழியுற நோக்கில் விதியது தன்னையும் வென்றிட லாகும் மதிமல ராள்சொன்ன மண்டலம் மூன்றே. |
32 |
1187 |
மூன்றுள மண்டலம் மோகினி சேர்விடம் ஏன்றுள ஈராறு எழுகலை உச்சியில் தோன்றும் இலக்குற ஆகுதல் மாமாயை ஏன்றனள் ஏழிரண்டு இந்துவோடு ஈறே. |
33 |
1188 |
இந்துவின் நின்றொழு நாதம் இரவிபோல் வந்துபின் நாக்கின் மதித்தெழு கண்டத்தில் உந்திய சோதி இதயத்து எழும்ஒலி இந்துவின் மேலுற்ற ஈறது தானே. |
34 |
1189 |
ஈறது தான்முதல் எண்ணிரண்டு ஆயிரம் மாறுதல் இன்றி மனோவச மாய் எழில் தூறது செய்யும் சுகந்தச் சுழியது பேறது செய்து பிறந்திருந் தாளே. |
35 |
1190 |
இருந்தனள் ஏந்திழை ஈறதி லாகத் திருந்திய ஆனந்தம் செந்நெறி நண்ணிப் பொருந்து புவனங்கள் போற்றிசெய்து ஏத்தி வருந்த இருந்தனள் மங்கைநல் லாளே. |
34 |
1191 |
மங்கையும் மாரனும் தம்மொடு கூடிநின்று அங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர் கொங்கைநல் லாளும் குமாரர்கள் ஐவரும் தங்களின் மேவிச் சடங்குசெய் தாரே. |
35 |
1192 |
சடங்கது செய்து தவம்புரி வார்கள் கடந்தனின் உள்ளே கருதுவர் ஆகில் தொடர்ந்தெழு சோதி துளைவழி ஏறி அடங்கிடும் அன்பினது ஆயிழை பாலே. |
36 |
1193 |
பாவித் திருக்கும் பனிமலர் ஆறினும் ஆலித் திருக்கும் அவற்றின் அகம்படி சீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திரம் மூலத்து மேலது முத்தது வாமே. |
37 |
1194 |
முத்து வதனத்தி முகந்தொறும் முக்கண்ணி சத்தி சதிரி சகளி சடாதரி பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி வித்தகி என்னுளம் மேவிநின் றாளே. |
38 |
1195 |
மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ்எரி தாவிய நற்பதத் தள்மதி யங்கதிர் மூவரும் கூடி முதல்வியாய் முன்நிற்பார் ஓவினும் மேலிடும் உள்ளொளி யாமே. |
39 |
1196 |
உள்ளொளி மூவிரண்டு ஓங்கிய அங்கங்கள் வௌfளொளி அங்கியின் மேவி அவரொடும் கள்ளவிழ் கோதை கலந்துடனே நிற்கும் கொள்ள விசுத்திக் கொடியமு தாமே. |
40 |
1197 |
கொடியதுஇ ரேகை குருவுள் இருப்பப் படியது வாருணைப் பைங்கழல் ஈசன் வடிவது ஆனந்தம் வந்து முறையே இடுமுதல் ஆறங்கம் ஏந்திழை யாளே. |
41 |
1198 |
ஏந்திழை யாளும் இறைவர்கள் மூவரும் காந்தாரம் ஆறும் கலைமுதல் ஈரெட்டும் ஆந்த குளத்தியும் மந்திரர் ஆயவும் சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே. |
42 |
1199 |
சத்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளை முத்திக்கு நாயகி என்பது அறிகிலர் பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள் கத்திய நாய்போல் கதறுகின் றாரே. |
43 |
1200 |
ஆரே திருவின் திருவடி காண்பார்கள் நேரே நின்றுஓதி நினையவும் வல்லார்க்குக் காரேர் குழலி கமல மலரன்ன சீரேயும் சேவடி சிந்தைவைத் தாளே. |
44 |
1201 |
சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து முந்தையில் வைத்துத்தம் மூலத்திலே வைத்து நிந்தையில் வையா நினைவதிலே வைத்துச் சந்தையில் வைத்துச் சமாதி செய் வீரே. |
47 |
1202 |
சமாதிசெய்வார்கட்குத் தான் முத லாகிச்
சிவாதியி லாரும் சிலைநுத லாளை நவாதியி லாக நயந்தது ஓதில் உவாதி அவளுக்கு உறைவில தாமே. |
48 |
1203 |
உறைபதி தோறும் முறைமுறை மேவி நறைகமழ் கோதையை நாடொறும் நண்ணி மறையுட னேநிற்கும் மற்றுள்ள நான்கும் இறைதினைப் போதினில் எய்திடலாமே. |
49 |
1204 |
எய்திட லாகும் இருவினை யின்பயன் கொய்தளிர் மேனிக் குமரி குலாங்கன்னி மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு கைதவம் இன்றி கருத்துறும் வாறே. |
50 |
1205 |
கருத்துறுங் காலம் கருது மனமும் திருத்திஇ இருந்தவை சேரு நிலத்து ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மண்மேல் இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆமே. |
51 |
1206 |
ஆமையொன்று ஏறி அகம்படி யான்என ஓம்என்று ஓதிஎம் உள்ளொளி யாய்நிற்கும் தாம நறுங்குழல் தையலக் கண்டபின் சோம நறுமலர் சூழநின் றாளே. |
52 |
1207 |
சூடிடும் அங்குச பாசத் துளைவழி கூடும் இருவளைக் கோலக்கைக் குண்டிகை நாடும் இருபத நன்னெடு ருத்திரம் ஆடிடும் சீர்புனை ஆடக மாமே. |
53 |
1208 |
ஆயமன் மால்அரன் ஈசன் சதாசிவன் தாமடி சூழநின்று எய்தினார் தம்பதம் காமனும் சாமன் இரவி கனலுடன் சோமனும் வந்தடி சூடநின் றாளே. |
54 |
1209 |
சூடும் இளம்பிறை சூலி கபாலினி நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை நாடி நடுவிடை ஞானம் உருவநின்று ஆடும் அதன்வழி அண்ட முதல்வியே. |
55 |
1210 |
அண்டமுதலாய் அவனிபரி யந்தம் கண்டதுஒன்று இல்லைக் கனங்குழை அல்லது கண்டதும் கண்டியும் ஆகி ய காரணம் குண்டிகை கோளிகை கண்டத ளாலே. |
56 |
1211 |
ஆலம்உண் டான்அமுது ஆங்கவர் தம்பதம் சாலவந்து எய்தும் தவத்துஇன்பம் தான்வரும் கோலிவந்து எய்தும் குவிந்த பதவையோடு ஏலவந்து ஈண்டி இருந்தனள் மேலே. |
57 |
1212 |
மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்தெய்தக் காலால் வருந்திக் கழிவர் கணத்திடை நாலா நளினநின்று ஏத்திநட் டுச்சிதன் மேலாம் எழுத்தினள் ஆமத்தி னாளே. |
58 |
1213 |
ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினள் ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள் நாம் நமசிவ என்றுஇருப்பார்க்கு நேமத் துணைவி நிலாவிநின் றாளே. |
59 |
1214 |
நிலாமய மாகிய நீள்படி கத்தின் சிலாமய மாகும் செழுந்த ரளத்தின் சுலாமய மாகும் சுரிகுழற் கோதை கலாமய மாகக் கலந்துநின் றாளே. |
60 |
1215 |
கலந்துநின் றாள்கன்னி காதல னோடும் கலந்துநின் றாள்உயிர் கற்பனை எல்லாம் கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாம் கலந்துநின் றாள்கன்னி காலமு மாயே. |
61 |
1216 |
காலவி எங்கும் கருத்தும் அருத்தியும் கூலவி ஒன்றாகும் கூட இழைத்தனள் மாலின் மாகுலி மந்திர சண்டிகை பாலினி பாலவன் பாகம் தாமே. |
62 |
1217 |
பாகம் பராசத்தி பைம்பொன் சடைமுடி ஏகம் இருதயம் ஈரைந்து திண்புயம் மோக முகம்ஐந்து முக்கண் முகந்தொறும் நுaகம் உரித்து நடஞ்செய்யும் நாதர்க்கே. |
63 |
1218 |
நாதனும் நால்ஒன் பதின்மரும் கூடிநின்று ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உளஅவை வேதனும் ஈரொன்ப தின்மரும் மேவிநின்று ஆதியும் அந்தமும் ஆகிநின் றாளே. |
64 |
1219 |
ஆகின்ற நாள்கலை ஐம்பத்து ஒருவர்கள் ஆகிநின் றார்களில் ஆருயி ராம்அவள் ஆகிநின் றாளுடன் ஆகிய சக்கரத்து ஆகிநின் றான்அவன் ஆயிழை பாடே. |
65 |
1220 |
ஆயிழை யாளொடும் ஆதிப் பரமிடம் ஆயதொர் அண்டவை யாறும் இரண்டுள ஆய மனந்தொறு அறுமுகம் அவைதனில் ஏயவார் குழலி இனிதுநின் றாளே. |
66 |
1221 |
நின்றனள் நேரிழை யோடுடன் நேர்பட இன்றென் அகம்படி ஏழு உயிர்ப்பெய்தும் துன்றிய ஓர்ஒன் பதின்மரும் சூழலுள் ஒன்றுயர் ஓதி உணர்ந்துநின் றாளே. |
67 |
1222 |
உணர்ந்தெழு மந்திரம் ஓம்எனும் உள்ளே மணந்தெழும் ஆங்கதி யாகிய தாகும் குணந்தெழு சூதனும் சூதியும் கூடிக் கணந்தெழும் காணும்அக் காமுகை யாமே. |
68 |
1223 |
ஆமது அங்கியும் ஆதியும் ஈசனும் மாமது மண்டல மாருதம் ஆதியும் ஏமது சீவன் சிகையங்கு இருண்fடிடக் கோமலர்க் கோதையும் கோதண்ட மாகுமே. |
69 |
1224 |
ஆகிய கோதண்டத் தாகு மனோன்மணி ஆகிய ஐம்பத்துடனே அடங்கிடும் ஆகும் பராபரை யோடுஅப் பரையவள் ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே. |
70 |
1225 |
தானிகழ fமோகினி சார்வண யோகினி போன மயமுடை யார்அடி போற்றுவர் ஆனவர் ஆவியின் ஆகிய அச்சிவம் தானாம் பரசிவம் மேலது தானே. |
71 |
1226 |
தானந்த மேலே தருஞ்சிகை தன்னுடன் ஆனந்த மோகினி யாம்பொன் திருவொடு மோனையில் வைத்து மொழிதரு கூறது ஆனவை யோமெனும் அவ்வுயிர் மார்க்கமே. |
72 |
1227 |
மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி மங்கலி
யார்க்கும் அறிய அரியாள் அவளாகும் வாக்கும் மனமும் மருவி ஒன்றாய் விட்ட நோக்கும் பெருமைக்கு நுண்ணறிவு ஆமே. |
73 |
1228 |
நுண்ணறி வாகும் நுழைபுலன் மாந்தர்க்குப் பின்னறி வாகும் பிரான்அறிவு அத்தடம் செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத் தன்னெறி யாவது சன்மார்க்கம் ஆமே. |
74 |
1229 |
சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமும் துன்மார்க்க மானவை எல்லாம் துரந்திடும் நன்மார்க்க தேவரும் நன்னெறி யாவதும் சன்மார்க்க தேவியும் சத்தியென் பாளே. |
75 |
1230 |
சத்தியம் நானும் சயம்புவம் அல்லது முத்தியை யாரும் முதல்அறி வாரில்லை அத்திமேல் வித்திடில் அத்தி பழுத்தக்கால் மத்தியில் ஏற வழியது வாமே. |
76 |
1231 |
அதுஇது என்றுஅவ மேகழி யாதே மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப் பதிமது மேவிப் பணியவல் லார்க்கு விதிவழி தன்னையும் வென்றிட லாமே. |
77 |
1232 |
வென்றிட லாகும் விதிவழி தன்னையும் வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை வென்றிட லாகும் விழைபுலன் தன்னையும் வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே. |
78. |
1233 |
ஓர்ஐம் பதின்மருள் ஒன்றியே நின்றது பாரம் பரியத்து வந்த பரமிது மாரன் குழலாளும் அப்பதி தானும்முன் சாரும் பதமிது சத்திய மாமே . |
79 |
1234 |
சத்தியி னோடு சயம்புவம் நேர்படில் வித்தது இன்றியே எல்லாம் விளைந்தன அத்தகை யாகிய ஐம்பத்து ஒருவரும் சித்தது மேவித் திருந்திடு வாரே. |
80 |
1235 |
திருந்துசிவனும் சிலைநுத லாளும் பொருந்திய வானவர் போற்றிசெய்து ஏத்த அருந்திட அவ்விடம் ஆரமுது ஆக இருந்தனள் தான்அங்கு இளம்பிறை என்றே. |
81 |
1236 |
என்றும் எழுகின்ற ஏரினை எய்தினார் அன்றது ஆகுவர் தார்குழ லாளொடு மன்றரு கங்கை மதியொடு மாதவர் துன்றிய தாரகை சோதிநின் றாளே. |
82 |
1237 |
நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட ஒன்றிய உள்ளொளி யாலே உணர்ந்தது சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய துன்றிடு ஞானங்கள் தோன்றிடும் தானே. |
83 |
1238 |
தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி ஈன்றிடும் ஆங்கவள் எய்திய பல்கலை மான்தரு கண்ண்iயும் மாரனும் வந்தெதிர் கான்றது வாகுவர் தாம்அவள் ஆயுமே. |
84 |
1239 |
ஆயும் அறிவும் கடந்தணு ஆரணி மாயம தாகி மதோமதி ஆயிடும் சேய அரிவை சிவானந்த சுந்தரி நேயம தாநெறி யாகிநின் றாளே. |
85 |
1240 |
நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப் பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும் குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும் அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே. |
86 |
1241 |
ஆம்அயன்மால் அரன் ஈசன்மா லாங்கதி ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத் தேமயன் ஆளும் தெனாதென என்றிடும் மாமய மானது வந்தெய்த லாமே. |
87 |
1242 |
வந்தடி போற்றுவர் வானவர் தானவர் இந்து முதலாக எண்டிசை யோர்களும் கொந்தணி யுங்குழ லாள்ஒரு கோனையும் வந்தனை செய்யும் வழிநவில் வீரே. |
88 |
1243 |
நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபம் கவற்றிய கந்தம் கவர்ந்துஎரி தீபம் பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்fசனை தானே. |
89 |
1244 |
தாங்கி உலகில் தரித்த பராபரன் ஓங்கிய காலத்து ஒருவன் உலப்பிலி பூங்கிளி தங்கும் புரிகுழ லாள்அன்று பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே. |
90 |
1245 |
பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவர் அற்கொடி மாதுமை ஆர்வத் தலைமகள் நற்கொடி மாதை நயனங்கள் மூன்றுடை விற்கொடி மாதை விரும்பி விளங்கே. |
91 |
1246 |
விளங்கொளி யாய விரிசுடர் மாலை துளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கத் களங்கொள் மணியுடன் காம வினோதம் உளங்கொள் இலம்பியம் ஒன்று தொடரே. |
92 |
1247 |
தொடங்கி உலகினில் சோதி மணாளன் அடங்கி இருப்பதென் அன்பின் பெருமை விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை ஒடுங்கி உமையொடும் ஓருரு வாமே. |
93 |
1248 |
உருவம் பலஉயி ராய்வல்ல நந்தி தெருவம் புகுந்தமை தேர்வுற நாடில் புரிவளைக் கைச்சிஎம் பொன்னணி மாதை மருவி இறைவன் மகிழ்வன மாயமே. |
94 |
1249 |
மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித் தாயம் புணர்க்கும் சலநதி அமலனைக் காயம் புணர்க்கும் கலவியுள் மாசத்தி ஆயம் புணர்க்கும்அவ் வியோனியும் ஆமே. |
95 |
1250 |
உணர்ந்துஒழிந் தேன்அவன் னாம் எங்கள் ஈசனை புணர்ந்துஒழிந் தேன்புவ னாபதி யாரை அணைந்துஒழிந் தேன்எங்கள் ஆதிதன் பாதம் பிணைந்துஒழிந்த தேன்தன் அருள்பெற்ற வாறே. |
96 |
1251 |
பெற்றாள் பெருமை பெரிய மனோன்மணி நற்றாள் இறைவனே நற்பயனே என்பர் கற்றான் அறியும் கருத்தறி வார்கட்குப் பொற்றாள் உலகம் புகல்தனி யாமே. |
97 |
1252 |
தனிநா யகன்த னோடுஎன்நெஞ்சம் நாடி
இனியார் இருப்பிடம் ஏழுலகு என்பர் பனியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக் கனியாய் நினைவதென் காரணம் அம்மையே. |
98 |
1253 |
அம்மனை அம்மை அரிவை மனோன்மணி செம்மனை செய்து திருமங்கை யாய்நிற்றும் இம்மனை செய்த இன்னில மங்கையும் அம்மனை யாகி அமர்ந்து நின்றானே. |
99 |
1254 |
அம்மையும் அத்தவனும் அன்புற்றது அல்லது அம்மையும் அத்தனும் ஆர்அறி வார்என்னை அம்மையொடு அத்தனும் யானும் உடனிருந்து அம்மையொடு அத்தனை யான்புரிந் தேனே. |
100 |
9. ஏரொளிச் சக்கரம்
1255 |
ஏரொளி உள்ளெழு தாமரை நாலிதழ் ஏரொளி விந்துவி னால்எழு நாதமாம் ஏரொளி அக்கலை எங்கும் நிறைந்தபின் ஏரொளிச் சக்கரம் அந்நடு வன்னியே. |
1 |
1256 |
வன்னி எழுத்தவை மாபலம் உள்ளன வன்னி எழுத்தவை வானுற ஓங்கின வன்னி எழுத்தவை மாபெரும் சக்கரம் வன்னி எழுத்திடு வாறுஅது சொல்லுமே. |
2 |
1257 |
சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம் சொல்லிடும் அப்பதி அவ்எழுத் தாவன சொல்லிடும் நூறொடு நாற்பத்து நாலுரு சொல்லிரு சக்கர மாய்வரு மேலதே. |
3 |
1258 |
மேல்வரும் விந்துவும் அவ்எழுத் தாய்விடும் மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன் மேல்வரும் அப்பதி அவ்எழுத் தேவரின் மேல்வரும் சக்கர மாய்வரும் ஞாலமே. |
4 |
1259 |
ஞாலம தாக விரிந்தது சக்கரம் ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும் ஞாலம தாயிடும் அப்பதி யோசனை ஞாலம தாக விரிந்தது எழுத்தே. |
5 |
1260 |
விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும் விரிந்த எழுத்தது சக்கர மாக விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே. |
6 |
1261 |
அப்பஅது வாக விரிந்தது சக்கரம் அப்பினில் அப்புறம் அவ்அனல் ஆயிடும் அப்பினில் அப்புறம் மாருத மாய்எழ அப்பினில fஅப்புறம் ஆகாச மாமே. |
7 |
1262 |
ஆகாச அக்கரம் ஆவது சொல்லிடில் ஆகாச அக்கரத்து உள்ளே எழுத்தவை ஆகாச அவ்எழுத்து ஆகிச் சிவானந்தம் ஆகாச அக்கரம் ஆவது அறிமினே. |
8 |
1263 |
அறிந்திடும் சக்கரம் ஐ அஞ்சு விந்து அறிந்திடும் சக்கரம் நாத முதலா அறிந்திடும் அவ்எழுத்து அப்பதி யோர்க்கும் அறிந்திடும் அப்பக லோன்நிலை யாமே. |
9 |
1264 |
அம்முதல் ஆறும்அவ் ஆதி எழுத்தாகும் அம்முதல் ஆறும்அவ் அம்மை எழுத்தாகும் இம்முதல் நாலும் இருந்திடு வன்னியே இம்முதல் ஆகும் எழுத்தலை எல்லாம். |
10 |
1265 |
எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும் எழுத்தவை ஆறது அந்நடு வன்னி எழுத்தவை அந்நடு அச்சுட ராகி எழுத்தவை தான்முதல் அந்தமும் ஆமே. |
11 |
1266 |
அந்தமும் ஈறு முதலா னவையற அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால் அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின் அந்தமும் இந்துகை ஆருடம் ஆனதே. |
12 |
1267 |
ஆவினம் ஆனவை முந்நூற்று அறுபதும் ஆவினம் அப்பதின் ஐந்தின மாயுறும் ஆவினம் அப்பதி னெட்டுடன் ஆயுறும் ஆவினம் அக்கதி ரோன்வர வந்தே. |
13 |
1268 |
வந்திடும் ஆகாசம் ஆறது நாழிகை
வந்திடும் அக்கரம் முப்பதி ராசியும் வந்திடு நாளது முந்நூற் றறுபதும் வந்திடு ஆண்டு வகுத்துறை அவ்வியே. |
14 |
1269 |
அவ்வின மூன்றும்அவ் ஆடது வாய்வரும் எவ்வின மூன்றும் கிளர்தரு ஏறதாம் சவ்வின மூன்றும் தழைத்திடும் தண்டதாம் இவ்வின மூன்றும் இராகிகள் எல்லாம். |
15 |
1270 |
இராசியுள் சக்கரம் எங்கும் நிறைந்தபின் இராசியுள் சக்கரம் என்றறி விந்துவாம் இராசியுள் சக்கரம் நாதமும் ஒத்தபின் இராசியுள் சக்கரம் நின்றிடு மாறே. |
16 |
1271 |
நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெல்லாம் நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன் நின்றிடும் அப்பதி அவ்வெழுத் தேவரில் நின்றிடும் அப்புறம் தாரகை யானதே. |
17 |
1272 |
தாரகை யாகச் சமைந்தது சக்கரம் தாரகை மேலோர் தழைத்தது பேரொளி தாரகை சந்திரன் நற்பக லோன்வரத் தாரகை தாரகை தாரகை கண்டதே. |
18 |
1273 |
கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம் கண்டிடு நாதமும் தன்மேல் எழுந்திடக் கண்டிடு வன்னிக் கொழுந்தன ஒத்தபின் கண்டிரும் அப்புறம் காரொளி யானதே. |
19 |
1274 |
காரொளி ஆண்டம் பொதிந்துஉலகு எங்கும் பாரொளி நீரொளி சாரொளி காலொளி வானொளி ஒக்க வளர்ந்து கிடந்துபின் நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே. |
20 |
1275 |
நின்றது அண்டமும் நீளும் புலியெலாம் நின்றவிவ் வண்ட நிலைபெறக் கண்டிட நின்றவிவ் வண்டமு மூல மலம்ஒக்கும் நின்றஇவ் வண்டம் பலமது விந்துவே. |
21 |
1276 |
விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திfடில் விந்துவும் நாதமும் ஒக்க விரையதாம் விந்திற் குறைந்திடு நாதம் எழுந்திடில் விந்துவை எண்மடி கொண்டது வீசமே. |
22 |
1277 |
வீசம் இரண்டுள நாதத்து எழுவன வீசமும் ஒன்று விரைந்திடு மேலுற வீசமும் நாதமும் எழுந்துடன் ஒத்தபின் வீசமும் விந்து விரிந்தது காணுமே. |
23 |
1278 |
விரிந்தது விந்துவும் கெட்டது வீசம் விரிந்தது விந்துவும் நாதத்தும் அளவினில் விரிந்தது உட்கட்ட எட்டெட்டும் ஆகில் விரிந்தது விந்து விரையது வாமே. |
24 |
1279 |
விரையது விந்து விளைந்தன எல்லாம் விரையது விந்து விளைந்த உயிரும் விரையது விந்து விளைந்தவிஞ் ஞாலம் விரையது விந்து விளைந்தவன் தானே. |
25 |
1280 |
விளைந்த எழுத்தது விந்துவும் நாதமும் விளைந்த எழுத்தது சக்கர மாக விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும் விளைந்த எழுத்தவை மந்திர மாமே. |
26 |
1281 |
மந்திரம் சக்கரம் ஆனவை சொல்லிடில் தந்திரத்து உள்ளெழுத்து ஒன்றுஎரி வட்டமாம் தந்திரத் துள்ளும்இ ரேகையில ஒன்றில்லை பந்தமது ஆகும் பிரணவம் உன்னிடே. |
27 |
1282 |
உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம் பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை தன்னிட்டுஎழுந்த தகைப்பறப் பின்னிற்கப் பன்னிட்ட மந்திரம் பார்க்கலும் ஆமே. |
28 |
1283 |
பார்க்கலும் ஆகும் பகையறு சக்கரம் காக்கலும் ஆகும் கருத்தில் கடமெங்கும் நோக்கலும் ஆகும் நுணுக்கற்ற நுண்பொருள் ஆக்குலும் ஆகும் அறிந்துகொள் வார்க்கே. |
29 |
1284 |
அறிந்திடும் சக்கரம் ஆதி எழுத்து விரிந்திடும் சக்கரம் மேலெழுத்து அம்மை பரிந்திடும் சக்கரம் பாரங்கி நாலும் குவிந்திடும் சக்கரம் கூறலும் ஆமே. |
30 |
1285 |
கூறிய சக்கரத்து உள்ளெழு மந்திரம் ஆறியல் பாக அமைந்து விரிந்திடும் தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரண மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே. |
31 |
1286 |
மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும் மதித்திடும் அம்மையும் அங்கனல் ஒக்கும் மதித்தங்கு எழுந்தவை காரணம் ஆகில் கொதித்தங்கு எழுந்தலை கூடகி லாவே. |
32 |
1287 |
கூடிய தம்பனம் மாரணம் வசியம் ஆடியல் பாக அமைந்து செறிந்திடும் பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார் தேடியுள் ளாகத் தௌiந்துகொள் வார்க்கே. |
33 |
1288 |
தௌiந்திடும் சக்கர மூலத்தின் உள்ளே அளித்த அகாரத்தை அந்நாடு வாக்கிக் குளிர்ந்த அரவினைக் கூடியுள் வைத்து வளிந்தவை அங்கெழு நாடிய காலே. |
34 |
1289 |
கால்அரை முக்கால் முழுதெனும் மந்திரம் ஆலித்து எழுந்துஅமைந்து ஊறி எழுந்தாய்ப் பாலித்து எழுந்து பகையற நின்றபின் மாலுற்ற மந்திரம் மாறிக்கொள் வார்க்கே. |
35 |
1290 |
கொண்டஇம் மந்திரம் கூத்தன் எழுத்ததாய்ப் பண்டையுள் நாவில் பகையற விண்டபின் மன்று நிறைந்த மணிவிளக் காயிடும் இன்றும் இதயத்து எழுந்து நமஎனே. |
36 |
10. வயிரவச் சக்கரம்
1291 |
அறிந்த பிரதமையோடு ஆறும் அறிஞ்சு அறிந்தஅச் சத்தமி மேல்இவை குற்றம் அறிந்துஅவை ஒன்றுவிட்டு ஒன்றுபத் தாக அறிந்து வலமது வாக நடவே. |
1 |
1292 |
நடந்து வயிரவன் சூல கபாலி நடந்த பகைவனைக் கண்ணது போக்கித் தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது படர்ந்த உடல்கொடு பந்தாட லாமே. |
2 |
1293 |
ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன் ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டுஅங்கு ஆமே தமருக பாசமும் கையது வாமே சிரத்தொடு வாளது கையே. |
3 |
1294 |
கையவை யாறும் கருத்துற நோக்கிடும் மெய்யது செம்மை விளங்கு வயிரவன் துய்யரு ளத்தில் துளங்கு மெய் யுற்றதாய்ப் பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே. |
4 |
1295 |
பூசனை செய்யப் பொருந்துஓர் ஆயிரம் பூசனை செய்ய மதுவுடன் ஆகுமாம் பூசனை சாந்து சவாது புழுகுநெய் பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே. |
5 |
1296 |
வேண்டிய வாறு கலகமும் ஆயிடும் வேண்டிய ஆறினுள் மெய்யது பெற்றபின் வேண்டிய வாறு வரும்வழி நீநட வேண்டிய வாறது வாகும் கருத்தே. |
6 |
11. சாம்பவி மண்டலச் சக்கரம்
1297 |
சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில் ஆம்பதம் எட்டாக விட்fடிடின் மேல்தரங்f காண்பதம் தத்துவ நாலுள் நயனமும் நாம்பதம் கண்டபின் நாடறிந் தோமே. |
1 |
1298 |
நாடறி மண்டலம் நல்லவிக் குண்டத்துக் கோடறி வீதியும் தொடர்ந்துள் இரண்டழி பாடறி பத்துடன் ஆறு நடுவீதி ஏடற நால்ஐந்து இடவகை யாமே. |
2 |
1299 |
நால்ஐந்து இடவகை உள்ளதோர் மண்டலம் நாலுநல் வீதியுள் நல்ல இலிங்கமாய் நாலுநற் கோணமும் நந்நால் இலிங்கமாய் நாலுநற் பூநடு நண்ணல்அவ் வாறே. |
3 |
1300 |
ஆறிரு பத்துநால் அஞ்செழுத்து அஞ்சையும் வேறுரு வாக விளைந்து கிடந்தது தேறி நிருமல சிவாய நமவென்று கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே. |
4 |
1301 |
குறைவதும் இல்லை குரைகழற் கூடும் அறைவதும் ஆரணம் அவ்எழுத்து ஆகித் திறமது வாகத் தௌiயவல் லார்க்கு இறவில்லை என்றென்று இயம்பினர் காணே. |
5 |
1302 |
காணும் பொருளும் கருதிய தெய்வமும் பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும் ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக் காணும் கனகமும் காரிகை யாமே. |
6 |
1303 |
ஆமே எழுத்தஞ்சும் ஆம்வழி யேயாகப் போமே அதுதானும் போம்வழியே போனால் நாமே நினைத்தனை செய்யலு மாகும் பார்மேல் ஒருவர் பகையில்லை தானே. |
7 |
1304 |
பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால் நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும் வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை தகையில்லை தானும் சலமது வாமே. |
8 |
1305 |
ஆரும் உரைசெய்ய லாம்அஞ் செழுத்தாலே யாரும் அறியாத ஆனந்த ரூபமாம் பாரும் விசும்பும் பகலும் மதியதி ஊனும் உயிரும் உணர்வது வாமே . |
9 |
1306 |
உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே அணைந்தெழும் ஆங்கதன் ஆதியது ஆகும் குணர்ந்தெழு சூதனும் சூதியும் கூடிக் கணந்தெழும் காணும் அக் காமுகை யாலே. |
10 |
12. புவனபதி சக்கரம்
1307 |
ககராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை அகராதி ஓராறு அரத்தமே போலும் சகராதி ஓர்நான்கும் தான்சுத்த வெண்மை ககராதி மூவித்தை காமிய முத்தியே. |
1 |
1308 |
ஓரில் இதுவே உரையும் இத் தெய்வத்தைத் தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள் வாரித் திரிகோண மனம்இன்ப முத்தியும் தேரில் அறியும் சிவகாயம் தானே. |
2 |
1309 |
ஏக பராசக்தி ஈசற்குஆம் அங்கமே யாகம் பராவித்தை யாமுத்தி சித்தையே ஏகம் பராசக்தி யாகச் சிவகுரு யோகம் பராசத்தி உண்மைஎட் டாமே. |
3 |
1310 |
எட்டா கியசத்தி எட்டாகும் யோகத்துக் கட்டாகு நாதாந்தத்து எட்டும் கலப்பித்தது ஒட்டாத விந்துவும் தானற்று ஒழிந்தது கிட்டாது ஒழிந்தது கீழான மூடர்க்கே. |
4 |
1311 |
ஏதும் பலமாம் இயந்திரா சன்அடி ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச் சாதங் கெடச்செம்பிற் சட்கோணம் தானிட்டே. |
5 |
1312 |
சட்கோணம் தன்னில் ?ம்?ரீம் தானிட்டு அக்கோணம் ஆறின் தலையில்ரீங் கராமிட்டு எக்கோண மும்சூழ எழில்வட்டம் இட்டுப்பின் மிக்கீர்எட்டு அக்கரம் அம்முதல் மேலிடே. |
6 |
1313 |
இட்ட இதழ்கள் இடைஅந் தரத்திலே அட்ட?வ் விட்டதின்மேலே உவ்விட்டுக் கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம் இட்டுவா மத்துஆங்கு கிரோங் கென்று மேவிடே. |
7 |
1314 |
மேவிய சக்கர மீது வலத்திலே கோவை அடையவே குரோங்கிரோங் கென்றிட்டுத் தாவில் ரீங் காரத்தால் சக்கரம் சூழ்ந்து பூவைப் புவனா பதியைப் பின் பூசியே. |
8 |
1315 |
பூசிக்கும் போது புவனா பதிதன்னை ஆசற்று அகத்தினில் ஆவா கனம்பண்ணிப் பேசிய பிராணப் பிரதிட்டை யதுசெய்து தேசுற் றிடவே தியானம் அதுசெய்யே. |
9 |
1316 |
செய்ய திருமேனி செம்பட்டு உடைதானும் கையிற் படைஅங் குசபாசத் தோடபய வெய்யில் அணிகலன் இரத்தின மாமேனி துய்ய முடியும் அவயவத்தில் தோற்றமே. |
10 |
1317 |
தோற்போர்வை நீக்கித் துதித்தடைவிற் பூசித்துப் பாற்பே னகமந் திரத்தால் பயின்றேத்தி நாற்பால நாரதா யாசுவா காஎன்று சீர்ப்பாகச் சேடத்தை மாற்றிப் பின் சேவியே. |
11 |
1318 |
சேவிப் பதன்முன்னே தேவியைஉத் வாகனத்தால் பாவித்து இதய கமலத்தே பதிவித்துஅங்கு யாவர்க்கும் எட்டா இயந்திர ராசனை நீவைத்துச் சேவி நினைந்தது தருமே. |
12 |
13. நவாக்கரி சக்கரம்
1319 |
நவாக்கரி சக்கரம் நானுரை செய்யின் நவாக்கரி ஒன்று நவாக்கரி யாக நவாக்கரி எண்பத் தொருவகை யாக நவாக்கரி அக்கிலீ சௌமுதல் ஈறே. |
1 |
1320 |
சௌமுதல் அவ்வொரு ?வுட னாங்கிரீம் கௌவுள் உடையுளும் கலந்திரீம் கிரீமென்று ஒவ்fவில் எழுங்கிலி மந்திர பாதமாச் செவ்வுள் எழுந்து சிவாய நமஎன்னே. |
2 |
1321 |
நவாக்கரி யாவது நானறி வித்தை நவாக்கரி உள்ளெழும் நன்மைகள் எல்லாம் நவாக்கரி மந்திர நாவுளே ஓத நவாக்கரி சத்தி நலந்தருந் தானே. |
3 |
1322 |
நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம் உரந்தரு வல்வினை உம்மை விட்டோடும் சிரந்தரு தீவினை செய்வது அகற்றி வரந்தரு சோதியும் வாய்த்திடும் காணே . |
4 |
1323 |
கண்டிடும் சக்கரம் வௌfளிபொன் செம்பிடை கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை வென்றிடு மண்டலம் வெற்றி தருவிக்கும் நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே. |
5 |
1324 |
நினைத்திடும் அச்சிரீம் அக்கிலீம் ஈறா நினைத்திடும் சக்கரம் ஆதியும் ஈறு நினைத்திடும் நெல்லொடு புல்லினை யுள்ளே நினைத்திடும் அருச்சனை நேர்தரு வாளே. |
6 |
1325 |
நேர்தரும் அத்திரு நாயகி ஆனவள் யாதொரு வண்ணம் அறிந்திடும் பொற்பூவை கார்தரு வண்ணம் கருதின கைவரும் நார்தரு வண்ணம் நடந்திடு நீயே. |
7 |
1326 |
நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம் கடந்திடும் காலனும் எண்ணிய நாளும் படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போல அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே. |
8 |
1327 |
அடைந்திடும் பொன்வௌfளி கல்லுடன் எல்லாம் அடைந்திடும் ஆதி அருளும் திருவும் அடைந்திடும் அண்டத்து அமரர்கள் வாழ்வும் அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே. |
9 |
1328 |
அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத் தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன் பரிந்திடும் வானவன் பாய்புனல் சூடி முரிந்திடு வானை முயன்றடு வீரே. |
10 |
1329 |
நாபணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள் பாரணி யும் ?ரீ முன்?மீறாந் தாரணி யும் புகழ்த் தையல் நல் லாள்தன்னைக் காரணி யும்பொழில் கண்டுகொள் ளீரே. |
11 |
1330 |
கண்டுகொள் ளும் தனி நாயகி தன்னையும் மொண்டுகொ ளும்முக வசியம தாயிடும் பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர் நின்றுகொ ளும்நிலை பேறுடை யாளையே. |
12 |
1331 |
பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில் நாடுடை யார்களும் நம்வச மாகுவர் மாறுடை யார்களும் வாழ்வது தானிலை கூறுடை யாளையும் கூறுமின் நீரே. |
13 |
1332 |
கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை ஆறுமின் அண்டத்து அமரர்கள் வாழ்வென மாறுமின் வையம் வரும்வழி தன்னையும் தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே. |
14 |
1333 |
சேவடி சேரச் செறிய இருந்தவர் நாவடி யுள்ளே நவின்றுநின்று ஏத்துவர் பூவடி யிட்டுப் பொலிய இருந்தவர் மாவடி காணும் வகையறி வாரே. |
15 |
1334 |
ஐம்முத லாக வளர்ந்தெழு சக்கரம் ஐம்முத லாக அமர்ந்திரீம் ஈறாகும் அம்முத லாகி அவர்க்குஉடை யாள்தனை மைம்முத லாக வழுத்திடு நீயே. |
16 |
1335 |
வழுத்திடு நாவுக் கரசிவன் தன்னைப் பகுத்திடும் வேதமெய் ஆகமம் எல்லாம் தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை முகத்துளும் முன்னெழக் கண்டுகொள் ளீரே. |
17 |
1336 |
கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடில் கொண்டஇம் மந்திரம் கூத்தன் குறியதாம் மன்றினுள் வித்தையும் மானுடர் கையதாய் வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே. |
18 |
1337 |
மெல்லியல் ஆகிய மெய்ப்பொரு ளாள்தன்னைச் சொல்லிய லாலே தொடர்ந்தங்கு இருந்திடும் பல்லிய லாகப் பரந்தெழு நாள்பல நல்லியல் பாலே நடந்திடுந் தானே. |
19 |
1338 |
நடந்திடு நாவினுள் நன்மைகள் எல்லாம் தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள் தானும் நடந்திடும் கல்விக் கரசிவ ளாகப் படர்ந்திடும் பாரில் பகையில்லை தானே. |
20 |
1339 |
பகையில்லை கௌமுத லயது வீறா நகையில்லை சக்கரம் நன்றறி வார்க்கு மிகையில்லை சொல்லிய பல்லுறு எல்லாம் வகையில்லை யாக வணங்கிடம் தானே. |
21 |
1340 |
வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை நலங்கிடு நல்லுயி ரானவை எல்லாம் நலங்கிடும் காம வெகுளி மயக்கந் துலங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே. |
22 |
1341 |
தானே கழறித் தணியவும் வல்லனாய்த் தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த் தானே தனிநடங் கண்டவள் தன்னையும் தானே வணங்கித் தலைவனும் ஆமே. |
23 |
1342 |
ஆமே அமைத்துயிராகிய அம்மையும் தாமே சகலமும் ஈன்றஅத் தையலும் ஆமே அவளடி போற்றி வணங்கிடிற் போமே வினைகளும் புண்ணியன் ஆகுமே. |
24 |
1343 |
புண்ண்iய னாகிப் பொருந்தி உலகெங்கும் கண்ணிய னாகிக் கலந்தங்கு இருந்திடும் தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும் அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே. |
25 |
1344 |
தானது கிரீம் கௌவது ஈறாம் நானது சக்கரம் நன்றறி வார்க்கெல்லாம் கானது கன்னி கலந்த பராசக்தி கேளது வையங் கிளரொளி யானதே. |
26 |
1345 |
ஔiக்கும் பராசக்தி உள்ளே அமரில் களிக்கும் இச் சிந்தையில் காரணம் காட்டித் தௌiக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும் அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே. |
27 |
1346 |
அறிந்திடும் சக்கரம் அருச்சனை யோடே எறிந்திடும் வையத்து இடரவை காணின் மறிந்திடு மன்னனும் வந்தனை செய்யும் பொறிந்திடும் சிந்தை புகையில்லை தானே. |
28 |
1347 |
புகையில்லை சொல்லிய பொன்னொளி யுண்டாம் குகையில்லை கொல்வது இலாமையி னாலே வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாம் சிகையில்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே. |
29 |
1348 |
சேர்ந்தவர் என்றும் திசையொளி யானவர் காய்ந்தெழு மேல்வினை காண்கி லாதவர் பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது மாய்ந்தது காரிருள் மாறொளி தானே. |
30 |
1349 |
ஔiயது ?முன் கிரீமது ஈறாம் களியது சக்கரம் கண்டறி வார்க்குத் தௌiவது ஞானமும் சிந்தையும் தேறப் பணிவது பஞ்சாக் கரமது வாமே. |
31 |
1350 |
ஆமே சதாசிவ நாயகி யானவள் ஆமே அதோமுகத்துள் அறி வானவள் ஆமே சுவைஔi ஊறுஓசை கண்டவள் ஆமே அனைத்துயிர் தன்னுளும் ஆமே. |
32 |
1351 |
தன்னுளும் ஆகித் தரணி முழுதுங்கொண்டு என்னுளும் ஆகி இடம்பெற நின்றவள் மண்ணுளும் நீர்அனல் காலுளும் வானுளும் கண்ணுளும் மெய்யுளும் காணலும் ஆமே . |
33 |
1352 |
காணலும் ஆகும் கலந்துயிர் செய்வன காணலும் ஆகும் கருத்துள் இருந்திடின் காணலும் ஆகும் கலந்து வழிசெயக் காணலும் ஆகும் கருத்துற நில்லே. |
34 |
1353 |
நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக் கண்டிடும் உள்ளம் கலந்தெங்கும் தானாகக் கொண்டிடும் வையம் குணம்பல தன்னையும் விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே. |
35 |
1354 |
மெய்ப்பொருள் ஔமுதல் ?வது ஈறாக் கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம் தற்பொரு ளாகச் சமைந்தமு தே?வரி நற்பொரு ளாக நடுவிருந் தாளே. |
36 |
1355 |
தாளதின் உள்ளே சமைந்தமு தே?வரி காலது கொண்டு கலந்துற வீசிடில் நாளது நாளும் புதுமைகள் கண்டபின் கேளது காயமும் கேடில்லை காணுமே. |
37 |
1356 |
கேடில்லை காணும் கிளரொளி கண்டபின் நாடில்லை காணும் நாண்முதல் அற்றபின் மாடில்லை காணும் வரும்வழி கண்டபின் காடில்லை காணும் கருத்துற்று இடத்துக்கே. |
38 |
1357 |
உற்றிடம் எல்லாம் உலப்பில்பா ழாக்கிக் கற்றிடம் எல்லாம் கடுவௌi யானது மற்றிடம் இல்லை வழியில்லை தானில்லைச் சற்றிடம் இல்லை சலிப்பற நின்றிடே. |
39 |
1358 |
நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம் நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானொக்கும் நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட நின்றிடும் மேலை விளக்கொளி தானே. |
40 |
1359 |
விளக்கொளி ?முதல் ஔவது ஈறா விளக்கொளி சக்கரம் மெய்ப்பொரு ளாகும் விளக்கொளி யாகிய மின்கொடி யானை விளக்கொளி யாக விளங்கிடு நீயே. |
41 |
1360 |
விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின் விளங்கிடு மெல்லிய லானது வாகும் விளங்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே. |
42 |
1361 |
தானே வௌiயென எங்கும் நிறைந்தவன் தானே பரம வௌiயது வானவள் தானே சகலமும் ஆக்கி அழித்தவன் தானே அனைத்துள அண்ட சகலமே. |
43 |
1362 |
அண்டத்தி னுள்ளே அளப்பரி யானவன் பிண்டத்தி னுள்ளே பெருபௌi கண்டவன் குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும் கண்டத்தில் நின்ற கலப்பறி யார்களே. |
44 |
1363 |
கலப்பறி யார்கடல் சூழ்உலகு எல்லாம் உலப்பறி யாருடல் ஓடுயிர் தன்னைச் சிலப்பறி யார்சில தேவரை நாடித் தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே. |
45 |
1364 |
தானே எழுந்த அச்சக்கரம் சொல்லிடின் மானே மதிவரை பத்திட்டு வைத்தபின் தேனே இரேகை திகைப்பற ஒன்பதில் தானே கலந்த வறை எண்பத் தொன்றுமே. |
46 |
1365 |
ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில் வென்றிகொள் மேனி மதிவட்டம் பொன்மையாம் கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில் என்றியல் அம்மை எழுத்தலை பச்சையே. |
47 |
1366 |
ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய வாய்ந்தஇப் பெண்எண்பத் தொன்றில் நிரைத்தபின் காய்ந்தவி நெய்யுள் கலந்துடன் ஓமமும் ஆம்தலத்து ஆமுயிர் ஆகுதி பண்ணுமே. |
48 |
1367 |
பண்ணிய பொன்னைப் பரப்பற நீபிடி எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும் நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்தபின் துண்ணென நேயநற் நோக்கலும் ஆமே. |
49 |
1368 |
ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி போகின்ற சாந்து சவாது புழுகுநெய் ஆகின்ற கற்பூரம் ஆகோ சனநீரும் சேர்கின்ற ஒன்பதும் சேரநீ வைத்திடே. |
50 |
1369 |
வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில் கைச்சிறு கொங்கை கலந்தெழு கன்னியைத் தச்சிது வாகச் சமைந்தஇம் மந்திரம் அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே. |
51 |
1370 |
சிந்தையின் உள்ளே திகழ்தரு சோதியாய் எந்தை கரங்கள் இருமூன்றும் உள்ளது பந்தமா சூலம் படைபாசம் வில்லம்பு முந்தை கிலீம்எழ முன்னிருந் தாளே . |
52 |
1371 |
இருந்தனர் சத்திகள் அறுபத்தி நால்வர் இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர் இருந்தனர் சூழ எதிர்சக் கரத்தே இருந்த கரம்சூழ வில்லம்பு கொண்டே. |
53 |
1372 |
கொண்ட கனகம் குழைமுடி யாடையாய்க் கண்டஇம் மூர்த்தம் கனல்திரு மேனியாய்ப் பண்டமர் சோதிப் படரிதழ் ஆனவள் உண்டு அங்கு ஒருத்தி உணரவல் லாருக்கே. |
54 |
1373 |
உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கில் கலந்திருந்து எங்கும் கருணை பொழியும் மணந்தெழும் ஓசை ஔiயது காணும் தணந்தெழு சக்கரம் தான்தரு வாளே. |
55 |
1374 |
தருவழி யாகிய தத்துவ ஞானம் குருவழி யாகும் குணங்களுள் நின்று கருவழி யாகும் கணக்கை அறுத்துப் பெருவழி யாக்கும் பேரொளி தானே. |
56 |
1375 |
பேரொளி யாய பெரிய பெருஞ்சுடர் சீரொளி யாகித் திகழ்தரு நாயகி காரொளி யாகிய கன்னிகை பொன்னிறம் பாரொளி யாகிப் பரந்துநின் றாளே. |
57 |
1376 |
பரந்த கரம்இரு பங்கயம் ஏந்திக் குவிந்த கரம்இரு கொய்தளிர்ப் பாணி பரிந்தருள் கொங்கைகண் முத்தார் பவளம் இருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே. |
58 |
1377 |
மணிமுடி பாதம் சிலம்பணி மங்கை அணிபவள் அன்றி அருளில்லை யாகும் தணிபவர் நெஞ்சினுள் தன்னருள் ஆகிப் பணிபவர்க்கு அன்றோ பரிகதி யாமே. |
59 |
1378 |
பரந்திருந்து உள்ளே அறுபது சத்தி கரந்தன கன்னிகள் அப்படிச் சூழ மலர்ந்திரு கையின் மலரவை ஏந்தச் சிறந்தவர் ஏத்தும் சிறீம்தன மாமே. |
60 |
1379 |
தனமது வாகிய தையலை நோக்கி மனமது ஓடி மரிக்கிலோர் ஆண்டில் கனமவை யற்றுக் கருதிய நெஞ்சம் தினகரன் ஆரிட செய்திய தாமே. |
61 |
1380 |
ஆகின்ற மூலத்து எழுந்த முழுமலர் போகின்ற பேரொளி யாய மலரதாய்ப் போகின்ற பூரண மாக நிறைந்தபின் சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே. |
62 |
1381 |
ஆகின்ற மண்டலத்து உள்ளே அமர்ந்தவள் ஆகின்ற ஐம்பத்து அறுவகை யானவள் ஆகின்ற ஐம்பத்து அறுசத்தி நேர்தரு ஆகின்ற ஐம்பத்து அறுவகை சூழவே. |
63 |
1382 |
சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமாய் ஆங்கணி முத்தம் அழகிய மேனியும் தாங்கிய கையவை தார்கிளி ஞானமாய் ஏந்து கரங்கள் எடுத்தமர் பாசமே. |
64 |
1383 |
பாசம தாகிய வேரை யறுத்திட்டு நேசம தாக நினைத்திரும் உள்முளே நாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டில் காசினி மேலமர் கண்ணுதல் ஆகுமே. |
65 |
1384 |
கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி பண்ணுறு நாதம் பகையற நின்றிடில் விண்ணமர் சோதி விளங்க ?ரீங்கார மண்ணுடை நாயகி மண்டல மாகுமே. |
66 |
1385 |
மண்டலத்து உள்ளே மலர்ந்தெழு தீபத்தை கண்டகத்து உள்ளே கருதி யிருந்திடும் விண்டகத்து உள்ளே விளங்கி வருதலால் தண்டகத்து உள்ளவை தாங்கலும் ஆமே. |
67. |
1386 |
தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்து ஓங்கி எழுங்கலைக்கு உள்ளுணர் வானவள் ஏங்க வரும்பிறப்பு எண்ணி அறுத்திட வாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே. |
68. |
1387 |
நாவுக்கு நாயகி நன்மணி பூணாரம் பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாம் பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தள் ஆவுக்கு நாயகி அங்கமர்ந் தாளே. |
69 |
1388 |
அன்றிரு கையில் அளந்த பொருள்முறை இன்றிரு கையில் எடுத்தவெண் குண்டிகை மன்றது காணும் வழியது வாகவே கண்டுஅங்கு இருந்தவர் காரணி காணுமே. |
70 |
1389 |
காரணி சத்திகள் ஐம்பத்து இரண்டெனக் காரணி கன்னிகள் ஐம்பத்து இருவராய்க் காரணி சக்கரத்து உள்ளே கரந்தெங்கம் காரணி தன்னருள் ஆகிநின் றாளே. |
71 |
1390 |
நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடில் கண்டஇவ் வன்னி கலந்திடும் ஓராண்டில் கொண்ட விரதநீர் குன்றாமல் நின்றிடின் மன்றினில் ஆடும் மணியது காணுமே. |
72 |
1391 |
கண்ட இச்சத்தி இருதய பங்கயம் கொண்டஇத் தத்துவ நாயகி யானவள் பண்டையவ் வாயுப் பகையை அறுத்திட இன்றென் மனத்துள் இனிதிருந் தாளே. |
73 |
1392 |
இருந்தஇச் சத்தி இருநாலு கையில் பரந்தஇப் பூங்கிளி பாச மழுவாள் கரந்திடு கேடதும் வில்லம்பு கொண்டங்கு குரந்தங்கு இருந்தவள் கூத்துகந் தாளே. |
74 |
1393 |
உகந்தனள் பொன்முடி முத்தார மாகப் பரந்த பவளமும் பட்டாடை சாத்தி மலர்ந்தெழு கொங்கை மணிக்கச்சு அணிந்து தழைந்தங்கு இருந்தவள் தான்பச்சை யாமே. |
75 |
1394 |
பச்சை இவளுக்கு பாங்கிமார் ஆறெட்டு கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால் கூச்சணி கொங்கைகள் கையிரு காப்பதாய் எச்ச இடைச்சி இனிதிருந் தாளே. |
76 |
1395 |
தாளதின் உள்ளே தாங்கிய சோதியைக் காலது வாகக் கலந்து கம் ?ம்f என்று மாலது வாக வழிபாடு செய்துநீ பாலது போலப் பரந்தெழு விண்ணிலே. |
77 |
1396 |
விண்ணமர் நாபி இருதயம் ஆங்கிடைக் கண்ணமர் கூபம் கலந்து வருதலால் பண்ணமர்ந்து ஆதித்த மண்டல மானது தண்ணமர் கூபம் தழைத்தது காணுமே. |
78 |
1397 |
கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள தாபத்துச் சத்தி தயங்கி வருதலால் ஆபத்துக் கைகள் அடைந்தனநாலைந்து பாசம் அறுக்கப் பரந்தன சூலமே. |
79 |
1398 |
சூலம்தண்டு ஓள்வாள் சுடர்பறை ஞானமாய் வேல்அம்பு தமருகம் மாகிளி விற்கொண்டு காலம்பூப் பாசம் மழுகத்தி கைக்கொண்டு கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே. |
80 |
1399 |
எண்ணமர் சத்திகள் நாற்பத்து நாலுடன் எண்ணமர் சத்திகள் நாற்பத்து நால்வராம் எண்ணிய பூவிதழ் உள்ளே இருந்தவள் எண்ணிய எண்ணம் கடந்துநின் றாளே. |
81 |
1400 |
கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு தொடர்ந்தணி முத்து பவளம்கச் சாகப் படர்ந்தல்குல்பட்டாடை பாதச் சிலம்பு மடந்தை சிறியவள் வந்துநின் றாளே. |
82 |
1401 |
நின்ற இச்சத்தி நிரந்தர மாகவே கண்டிடு மேரு அணிமாதி தானாகிப்f பண்டைய ஆனின் பகட்டை அறுத்திட ஒன்றிய தீபம் உணர்ந்தார்க்குண் டாமே. |
83 |
1402 |
உண்டோர் அதோமுகம் உத்தம மானது கண்டஇச் சத்தி சதாசிவ நாயகி கொண்ட முகம்ஐந்து கூறும் கரங்களும் ஒன்றிரண் டாகவே மூன்றுநா லானதே. |
84 |
1403 |
நன்மணி சூலம் கபாலம் கிளியுடன் பன்மணி நாகம் மழுகத்தி பந்தாகும் கன்மணி தாமரை கையில் தமருகம் பொன்மணி பூணாரம் பூசனை யானதே. |
85 |
1404 |
பூசனைச் சத்திகள் எண்ஐவர் சூழவே நேசவன் கன்னிகள் நாற்பத்து நேரதாய்க் காசினைச் சக்கரத் துள்ளே கலந்தவள் மாசடை யாமல் மகிழ்ந்திருந் தார்களே. |
86 |
1405 |
தாரத்தின் உள்ளே தங்கிய சோதியைப் பாரத்தின் உள்ளே பரந்து எழுந்திட வேரது ஒன்றிநின்று எண்ணு மனோமயம் காரது போலக் கலந்தெழு மண்ணிலே |
87 |
1406 |
மண்ணில் எழுந்த அகார உகாரங்கள் விண்ணில் எழுந்து சிவாய நமவென்று கண்ணில் எழுந்தது காண்பரிது அன்றுகொல் கண்ணில் எழுந்தது காட்சிதர என்றே. |
88 |
1407 |
என்றுஅங்கு இருந்த அமுத கலையிடைச் சென்றுஅங்கு இருந்த அமுத பயோதரி கண்டம் கரம்இரு வௌfளிபொன் மண்ணடை கொண்டங்கு இருந்தது வண்ணம் அமுதே. |
89 |
1408 |
அமுதம தாக அழகிய மேனி படிகம தாகப் பரந்தெழும் உள்ளே குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக் கெழுதம தாகிய கேடிலி தானே. |
90 |
1409 |
கேடிலி சத்திகள் முப்பத் தறுவரும் நாடிலி கன்னிகள் நால்ஒன் பதின்மரும் பூவிலி பூவிதழ் உள்ளே இருந்தவர் நாளிலி தன்னை நணுகிநின் றார்களே. |
91 |
1410 |
நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும் கண்டது சோதி கருத்துள் இருந்திடக் கொண்டது ஓராண்டு கூடி வருகைக்கு விண்டஔ காரம் விளங்கின அன்றே. |
92 |
1411 |
விளங்கிடு வானிடை நின்றலை எல்லாம் வணங்கிடு மண்டலம் மன்னுயி ராக நலங்கிளர் நன்மைகள் நாரணன் ஒத்துக் கணங்கிடை நின்றவை சொல்லலும் ஆமே. |
93 |
1412 |
ஆமே ஆதோமுக மேலே அமுதமாய்த் தாமே உகாரம் தழைத்தெழும் சோமனும் காமேல் வருகின்ற கற்பக மானது பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே. |
94 |
1413 |
பொற்கொடி யாளுடைப் பூசனை செய்திட அக்களி யாகிய ஆங்காரம் போயிடும் மற்கட மாகிய மண்டலம் தன்னுள்ளே பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே. |
95 |
1414 |
பேதை இவளுக்குப் பெண்மை அழகாகும் தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும் மானத அவளுக்கு மண்ணும் திலகமாய் கோதையர் சூழக் குவிந்திங் காணுமே. |
96 |
1415 |
குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர் நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப் பரந்திதழ் ஆகிய பங்கயத் துள்ளே இருந்தனள் காணும் இடம்பல கொண்டே. |
97 |
1416 |
கொண்டங்கு இருந்தனர் கூத்தன் ஔiயினைக்
கண்டங்கு இருந்தனர் காரணத்து உள்ளது பண்டை மறைகள் பரந்தெங்கும் தேடுமால் இன்றுஎன் மனத்துள்ளே இல்லடைந்து ஆளுமே. |
98 |
1417 |
இல்லடைந் தானுக்கும் இல்லாதது ஒன்றில்லை இல்லடைந் தானுக்கு இரப்பது தானில்லை இல்லடைந் தானுக்கு இமையவர் தாம்ஒவ்வர் இல்லடைந் தானுக்கு இல்லாதுஇல் ஆனையே. |
99 |
1418 |
ஆனை மயக்கும் அறுபத்து நால்தறி ஆனை யிருக்கும் அறுபத்து நால்ஔi ஆனை யிருக்கும் அறுபத்து நால்அறை ஆனையும் கோடும் அறுபத்து நாலிலே. |
100 |
நான்காம் தந்திரம் முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் தந்திரம் - பத்தாம் திருமுறை - திருமந்திரம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சக்கரம், மந்திரம், எல்லாம், விந்துவும், காணும், நாதமும், ஆகின்ற, இரண்டும், மனோன்மணி, இருந்த, ஆனந்தம், நிற்கும், பராசத்தி, நின்றிடும், துள்ளே, எழுத்தவை, விந்து, அந்தமும், தத்துவ, நவாக்கரி, இருந்தனள், பராசக்தி, உறைகின்ற, இருந்தவர், நின்றது, மண்டலம், அஞ்செழுத், ஏந்திழை, திரிபுரை, எங்கும், உள்ளொளி, தன்னையும், அப்பதி, விரிந்தது, ஐம்பத்து, காணுமே, ஆகிநின், சத்திகள், கண்டபின், அஞ்செழுத்து, பெண்பிள்ளை, நேரிழை, கல்லொளி, அறிகிலர், அறிந்திடும், மாய்நின்ற, கன்னிகள், ஆயிடும், வண்ணம், தானும், வார்க்கே, நின்று, நன்மைகள், கலந்துநின், மாகும், சுந்தரி, எழுத்தது, என்பர், சொல்லிய, கூத்தே, நோக்கி, இருந்தனர், நாற்பத்து, அறிவார், தனக்குத், சிவகதி, விளங்கிடு, பரஞ்சுடர், திருஅம், ஆதியும், அவ்வொடு, எட்டும், விரையது, அம்மையும், மேல்வரும், அப்புறம், அம்முதல், விளைந்த, காணலும், என்னும், நாலாம், வேண்டிய, விளக்கொளி, வாகும், அங்குச, வென்றிட, எண்ணிய, அக்கரம், அறுபத்து, மந்திர, மங்கலி, செய்கின்ற, செய்து, வயிரவி, அந்தம், செய்யும், உள்ளத்து, எழுத்தே, பராபரை, லாகும், விரிந்த, என்றும், எழுந்து, வருதலால், காரணம், உள்ளெழு, இருந்திடும், வட்டம், நேர்தரு, மாய்நிற்கும், கூத்தன், சக்கரத், லாளும், எழுந்த, தலைவனு, இருக்கின்ற, யாகும், ஒன்றிய, மாசத்தி, உள்ளது, ஆயிரம், நன்றறி, தாகும், தலைவனும், குண்டம், கண்டுகொள், யாய்நிற்கும், ஆவினம், நாலும், அந்தமில், புண்ணிய, இணையார், பார்ப்பதி, மலர்ந்தெழு, அத்திசைக், பதினாலும், எய்தும், பேணும், நாடும், போகின்ற, தாள்அவள், வைத்து, பார்மேல், ஒன்றும், பைந்தொடி, யிருந்த, அளந்தேன், உகந்துநின், செம்பொன், முக்கண்ணி, உகாரம், மங்கையும், யுள்ளே, சத்தியும், மெல்லியல், திசையும், கலந்து, இனிதிருந், யோகநற், உள்ளம், தானில்லை, அடைந்திடும், சிவாயவொடு, இராசியுள், வார்கள், நினைத்திடும், மூன்றும், பகையில்லை, நந்தியை, உயிரும், தாய்நிற்கும், அறிந்தபின், இல்லடைந், நடுவுற, கையில், கொண்டஇச், ஐந்தின், திருக்கூத்து, ஐம்பது, படுவது, ஞானமும், ஒத்தபின், பேரொளி, முத்தியே, வேண்டார்கள், கன்மம், கண்டிடு, வழிப்படில், திருமேனி, புனையவல், அதுஇது, சொல்லுமே, பொன்முடி, நடந்தது, நாலுடன், பொன்னான, காணலாம், சதாசிவ, நடம்இரண்டு, கரம்இரு, மண்டலத்து, அறுத்திட, தாங்கிய, சொல்லிடில், சூக்குமம், கரங்கள், மேவித், இருந்தவள், கிழத்தி, வாயிடும், வீசமும், தானுக்கு, அகலிடத்து, தன்னருள், பயோதரி, விளங்கி, சூக்கும, கொண்டங்கு, அவ்எழுத்து, பூமேல், இதயத்து, தாயிடும், புணர்க்கும், தராதலம், அகம்படி, நின்றிடு, கழலிணை, நிறைந்தபின், நடந்திடும், சிந்தையில், வைத்துச், சக்கரத்து, கூறுமின், பதின்மரும், வரும்வழி, குண்டிகை, அல்லது, உலகில், அந்நடு, கலந்தெழு, காரொளி, ஓரெழுத்து, பொற்கொடி, வில்லம்பு, னுள்ளே, வானவள், யானவள், அவ்எழுத், நின்றனள், மெய்ப்பொரு, மனமும், மேலாம், வயிரவன், கூடிக், அகாரம், வேண்டிலே, முச்சது, ஏய்ந்த, அருச்சனை, எய்திடும், மாரணம், மாகுமே, பன்னிரண்டு, வானவர், நோக்கிடில், இருமூன்று, அறியார், நிலைபெற, பாலித்து, எழுகுணம், சுடர்முடி, பாதங்கள், ஆவதும், குண்டத்தின், நோக்கில், நவகுண்டம், உள்ளெழும், மறையவன், சன்மார்க்க, தானாம், சந்திர, நடுவாய், குணம்பல, எழுத்திட்டு, அகலிடம், முதல்வன், றார்களே, வாரில்லை, மெய்ப்பொருள், இடத்தே, அனாதியும், மன்றது, நீளும், போகமும், பராபரன், வல்வினை, தத்துவம், மன்னும், என்னுளம், பெருமையே, பாலனும், நின்றிடில், எழுத்துகள், கலந்தங்கு, வைத்திடும், பூவிதழ், நன்மணி, எண்டிசை, அமர்ந்திருந், பொருந்திய, பன்மணி, சேயிழை, பிரணவம், மூவரும், உரைசெய்யும், கலந்திடும், எழுத்துடன், முத்திரை, இருப்பிடம், அளிக்கும், அருந்தவப், ஒன்பதும், இளம்பிறை, மாதுநல், பொருந்தி, சிந்தையின், தலைவியை, நோக்கும், அமர்ந்த, மாயையும், கொண்டது, நந்தியும், கருத்தறி, மனோன்மனி, பரந்தெழு, குலாவிய, அறிந்துகொள், கருத்துள், குள்நின்ற, திருந்திய, கொங்கை, மோகினி, பூங்குழல், தோற்றிடும், வானோர், தன்னில், அண்ணல், தோறும், துன்றிய, அத்தகை, அருந்தவம், சவ்வுண்டு, மேவிப்