முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » இருபத்திநான்காம் அதிகாரம்
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - இருபத்திநான்காம் அதிகாரம்

இருபத்திநான்காம் அதிகாரம்
24. பொருள் வயின் பிரிவு
பேரின்பக் கிளவி
பொருட்பிரிவு இருபதும் அருட்பிரி வுயிரே ஆனந்த மாகி அதுவே தானாய்த் தானே அதுவாய்ப் பேசிய கருணை. |
1. வாட்டங் கூறல்
முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியுமெனப் பனிவருங் கண்பர மன்திருச் சிற்றம் பலமனையாய் துனிவரு நீர்மையி(து) என்னென்று தூநீர் தெளித்தளிப்ப நனிவரு நாளிது வோஎன்று வந்திக்கும் நன்னுதலே. |
332 |
கொளு பிரிவு கேட்ட அரிவை வாட்டம் நீங்கல் உற்றவன் பாங்கிக்கு உரைத்தது. |
2. பிரிவு நினைவுரைத்தல்
வறியார் இருமை அறியார் எனமன்னும் மாநிதிக்கு நெறியார் அருஞ்சுரம் செல்லலுற் றார்நமர் நீண்டிருவர் அறியா அளவுநின் றோன்தில்லைச் சிற்றம்பலம் அனைய செறிவார் கருங்குழல் வெண்ணகைக் செவ்வாய்த் திருநுதலே. |
333 |
கொளு பொருள்வயின் பிரியும் பொருவே லவனெனக் கருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது. |
3. ஆற்றாது புலம்பல்
சிறுவாள் உகிருற்(று) உறாமுன்னம் சின்னப் படுங்குவளைக்(கு) எறிவாள் கழித்தனள் தோழி எழுதிற் கரப்பதற்கே அறிவாள் ஒழுகுவ(து) அஞ்சனம் அம்பல வர்ப்பணியார் குறியாழ் நெறிசெல்வர் அன்பரென்(று) அம்ம கொடியவளே. |
334 |
கொளு பொருள்தரப் பிரியும் அருள்தரு பவளெனப் பாங்கி பகரப் பூங்கொடி புலம்பியது. |
4. ஆற்றாமை கூறல்
வானக் கடிமதில் தில்லைஎம் கூத்தனை ஏத்தலர்போல் கானக் கடஞ்செல்வர் காதலர் என்னக் கதிர்முலைகள் மானக் கனகம் தரும்மலர்க் கண்கள்முத் தம்வளர்க்கும் தேனக்க தார்மன்னன் என்னோ இனிச் சென்று தேர்பொருளே. |
335 |
கொளு ஏழை யழுங்கத் தோழி சொல்லியது. |
5. திணை பெயர்த்து உரைத்தல்
கருள்தரு செஞ்சடை வெண்சுடர் அம்பல வன்மலயத்(து) இருள்தரு பூம்பொழில் இன்னுயிர் போலக் கலந்திசைத்த அருள்தரும் இன்சொற்கள் அத்தனை யும்மறந்து அத்தம்சென்றோ பொருள்தரக் கிற்கின் றதுவினை யேற்குப் புரவலரே. |
336 |
கொளு துணைவன் பிரியத் துயருறு மனத்தோடு திணை பெயர்த்திட்டுத் தேமொழி மொழிந்தது. |
6. பொருத்தம் அறிந்து உரைத்தல்
மூவர்நின்(று) ஏத்த முதலவன் ஆடமுப் பத்துமுல்லைத் தேவர்சென்(று) ஏத்தும் சிவன்தில்லை அம்பலம் சீர்வழுத்தாப் பாவர்சென்(று) அல்கும் நரகம் அனைய புனையழற்கான் போவர்நம் காதலர் என்நாம் உரைப்பது பூங்கொடியே. |
337 |
கொளு பொருள்வயின் பிரிவோன் பொருத்த நினைந்து கருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது. |
7. பிரிந்தமை கூறல்
தென்மாத் திசைவசை தீர்தரத் தில்லைச்சிற் றம்பலத்துள் என்மாத் தலைக்கழல் வைத்தெரி யாடும் இறைதிகழும் பொன்மாப் புரிசைப் பொழில்திருப் பூவணம் அன்னபொன்னே வன்மாக் களிற்றொடு சென்றனர் இன்றுநம் மன்னவரே. |
338 |
கொளு எதிர் நின்று பிரியின் கதிர் நீ வாடுதற்கு உணர்த்தா(து) அகன்றான் மணித்தேரோன் என்றது. |
8. இரவுறு துயரத்திற்கு இரங்கி உரைத்தல்
ஆழியன்(று) ஈர்அடி யும்இலன் பாகன்முக் கண்தில்லையோன் ஊழியன் றாதன நான்கும்ஐம் பூதமும் ஆறொடுங்கும் ஏழியன் றாழ்கட லும்எண் திசையும் திரிந்திளைத்து வாழியன் றோஅருக் கன்பெருந் தேர்வந்து வைகுவதே. |
339 |
கொளு அயில்தரு கண்ணியைப் பயில்தரும் இரவினுள் தாங்குவ(து) அரிதெனப் பாங்கி பகர்ந்தது. |
9. இகழ்ச்சி நினைந்து அழிதல்
பிரியார் எனஇகழ்ந் தேன்முன்னம் யான்பின்னை எற்பிரியின் தரியாள் எனஇகழ்ந் தார்மன்னர் தாந்தக்கன் வேள்விமிக்க எரியார் எழில்அழிக் கும்எழில் அம்பலத் தோன்எவர்க்கும் அரியான் அருளிலர் போலன்ன என்னை அழிவித்தவே. |
340 |
கொளு உணர்த்தாது பிரிந்தாரென மணித்தாழ் குழலி வாடியது. |
10. உறவு வெளிப்பட்டு நிற்றல்
சேணும் திகழ்மதில் சிற்றம் பலவன்தெண் ணீர்க் கடல்நஞ்(சு) ஊணும் திருத்தும் ஒருவன் திருத்தும் உலகின்னல்லாம் காணும் திசைதொறும் கார்க்கய லும்செங் கனியடுபைம் பூணும் புணர்முலை யுங்கொண்டு தோன்றுமொர் பூங்கொடியே. |
341 |
கொளு பொருள்வயின் பிரிந்த ஒளியுறு வேலவன் ஓங்கழற் கடத்துப் பூங்கொடியை நினைந்தது. |
11. நெஞ்சொடு நோதல்
பொன்னணி ஈட்டிய ஒட்டரும் நெஞ்சம்இப் பொங்குவெங்கா னின்னணி நிற்கும்இ(து) என்னென்ப தேஇமை யோர்இறைஞ்சும் மன்னணி தில்லை வளநகர் அன்னஅன் னந் நடையாள் மின்னணி நுண்ணிடைக் கோபொருட் கோநீ விரைகின்றதே. |
342 |
கொளு வல்லழற் கடத்து மெல்லியலை நினைந்து வெஞ்சுடர் வேலோன் நெஞ்சொடு நொந்தது. |
12. நெஞ்சொடு புலத்தல்
நாய்வயின் உள்ள குணமும்இல் லேனைநற் றொண்டுகொண்ட தீவயின் மேனியன் சிற்றம் பலமன்ன சின்மொழியைப் பேய்வயி னும்அரி தாகும் பிரி(வு)எளி தாக்குவித்துச் சேய்வயின் போந்தநெஞ் செஅஞ்சத் தக்க(துஐஉன் சிக்கெனவே. |
343 |
கொளு அழறகடத்(து) அழுக்க மிக்கு நிழற்கதிர் வேலோன் நீடு வாடியது. |
13. நெஞ்சொடு மறுத்தல்
தீமே வியநிருத் தன்திருச் சிற்றம் பலம்அனைய பூமே வியபொன்னை விட்டுப்பொன் தேடியிப் பொங்குவெங்கான் நாமே நடக்க ஒழிந்தனம் யாம்நெஞ்சம் வஞ்சியன்ன வாமே கலையைவிட் டோபொருள் தேர்ந்தெம்மை வாழ்விப்பதே. |
344 |
கொளு நீணெறி சென்ற நாறிணர்த் தாரோன் சேணெறி யஞ்சி மீணெறி சென்றது. |
14. நாள் எண்ணி வருந்தல்
தெண்ணீர் அணிசிவன் சிற்றம் பலம்சிந்தி யாதவரின் பண்ணீர் மொழியிவ ளைப்பையுள் எய்தப் பனித்தடங்கண் உண்ணீர் உகஒளி வாடிய நீடுசென் றார்சென்றநாள் எண்ணீர் மையின்நிலனுங் குழி யும்விரல் இட்டறவே. |
345 |
கொளு சென்றவர் திறத்து நின்றுநணி வாடும் குழிருங் கூந்தற்குத் தோழிநனி வாடியது. |
15. ஏறு வரவு கண்டு இரங்கி உரைத்தல்
சுற்றம் பலம்இன்மை காட்டித்தன் தொல்கழல் தந்ததொல்லோன் சிற்றம் பலமனை யாள்பர மன்றுதிண் கோட்டின்வண்ணப் புற்றங்(கு) உதர்த்துநல் நாகொடும் பொன்னார் மணிபுலம்பக் கொற்றம் மருவுகொல் ஏறுசெல்லா நின்ற கூர்ஞ்செக்கரே. |
346 |
கொளு நீடிய பொன்னின் நெஞ்சம் நெகிழ்ந்து வாடியவன் வரவுற்றது. |
16. பருவங் கண்டு இரங்கல்
கண்ணுழை யாதுவிண் மேகம் கலந்து கணமயில்தொக்(கு) எண்ணுழை யாத்தழை கோலிநின்(று) ஆலும் இனமலர்வாய் மண்ணுழை யாவும் அறிதில்லை மன்னன(து) இன்னருள்போல் பண்ணுழை யாமொழி யாள்என்ன ளாங்கொல்மன் பாவியற்கே. |
347 |
கொளு மன்னிய பருவம் முன்னிய செலவின் இன்னல் எய்தி மன்னன் ஏகியது. |
17. முகிலொடு கூறல்
அற்படு காட்டில்நின்(று) ஆடிசிற் ற்ம்பலத் தான்மிடற்றின் முற்படு நீள்முகில் என்னின்முன் னேல்முது வோர்குழுமி விற்படு வாணுத லாள்செல்லல் தீர்ப்பான் விரைமலர்தூய் நெற்படு வான்பலி செய்(து)அய ராநிற்கும் நீள்நகர்க்கே. |
348 |
கொளு எனைப்பல துயரமோ(டு) ஏகா நின்றவன் துனைக்கார் அதற்குத் துணிந்துசொல் லியது. |
18. தேர் வரவு கூறல்
பாவியை வெல்லும் பரிசில்லை யேமுகில் பாவையஞ்சீர் ஆவியை வெல்லக் கறுக்கின்ற போழ்தத்தின் அம்பலத்துக் காவியை வெல்லும் மிடற்றோன் அருளிற் கதுமெனப் போய் மேவிய மாநிதி யோ(டு)அன்பர் தேர்வந்து மேவினதே. |
350 |
கொளு வேந்தன் பொருளோடு விரும்பி வருமென ஏந்திழைப் பாங்கிஇனி(து)இயம் பியது. |
19. இளையர் எதிர்கோடல்
யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலத் தான்அமைத்த ஊழின் வலியதொன்(று) என்னை ஒளிமே கலையுகளும் வீழும் வரிவளை மெல்லியல் ஆவிசெல் லாதமுன்ன சூழும் தொகுநிதி யோ(டு)அன்பர் தேர்வந்து தோன்றியதே. |
351 |
கொளு செறிக ழலவன் திருநகர் புகுதர ஏறிவேல் இளைஞர் எதிர்கொண்டது. |
20. உள் மகிழ்ந்து உரைத்தல்
மயில் மன்னு சாயல்இம் மானைப் பிரிந்து பொருள்வளர்ப்பான் வெயில் மன்னு வெஞ்சுரம் சென்றதெல்லாம் விடை யோன்புலியூர்க் குயில் மன்னு சொல்லிமென் கொங்கைஎன் அங்கத் திடைகுளிப்பத் துயில் மன்னு பூவணை மேலணை யாமுன் துவள் உற்றதே. |
352 |
கொளு பெருநிதி யோடு திருமனை புகுந்தவன் வளமனைக் கிழத்தியோ(டு) உள்மகிழ்ந்(து) உரைத்தது. |
பொருள் வயின் பிரிவு முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இருபத்திநான்காம் அதிகாரம் - எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சிற்றம், உரைத்தல், பிரிவு, நெஞ்சொடு, வாடியது, தேர்வந்து, நினைந்து, சொல்லியது, பொருள்வயின்