முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » பத்தொன்பதாம் அதிகாரம்
எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - பத்தொன்பதாம் அதிகாரம்

பத்தொன்பதாம் அதிகாரம்
19. மணம் சிறப்புரைத்தல்
பேரின்பக் கிளவி
மணஞ்சிறப் புரைத்தல் வரும் ஓர் ஒன்பதும் உயிர்சிவ மணம்பெற்(று) உண்மைஇன் பாகிய பரைகடந் தின்பப் பண்பாய் நிற்றல். |
1. மணமுரசு கூறல்
பிரசம் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார் முரசம் திகழும் முருகியம் நீங்கும் எவர்க்குமுன்னாம் அர(சு)அம் பலத்துநின்(று) ஆடும் பிரானருள் பெற்றவரின் புரைசந்த மேகலை யாய்துயர் தீரப் புகுந்துநின்றே. |
299 |
கொளு வரைவு தோன்ற மகிழ்வுறு தோழி நிரைவ ளைக்கு நின்று ரைத்தது. |
2. மகிழ்ந்துரைத்தல்
இருந்துதி என்வயின் கொண்டவன் யான்எப் பொழுதும்உன்னும் மருந்து திசைமுகன் மாற்கரி யோன்தில்லை வாழ்த்தினர்போல் இருந்து திவண்டன வால்எரி முன்வலம் செய்(து)இடப்பால் அருந்துதி காணும் அளவும் சிலம்பன் அருந்தழையே. |
300 |
கொளு மன்னிய கடியிற் பொன்னறுங் கோதையை நன்னுதல் தோழி தன்னின் மகிழ்ந்தது. |
3. வழிபாடு கூறல்
சீரியல் ஆவியும் யாக்கையும் என்ன சிறந்தமையால் காரியல் வாட்கண்ணி எண்ணக லார்கம லங்கலந்த வேரியம் சந்தும் வியல்தந் தெனக்கற்பின் நிற்பர்அன்னே காரியல் கண்டவர்வண் தில்லை வணங்கும்எம் காவலரே. |
301 |
கொளு மணமனை காண வந்தசெவி லிக்குத் துணைமலர்க் குழலி தோழி சொல்லியது. |
4. வாழ்க்கை நலங்கூறல்
தொண்டினம் மேவும் கடர்க்கழ லோன்தில்லைத் தொல்நகரில் கண்டின மேவும்இல் நீஅவள் நின்கொழு நன்செழுமெல் தண்டின மேவுதிண் தோளவன் யானவள் தற்பணிவோள் வண்டின மேவும் குழலாள் அயல்மன்னும் இவ்அயலே. |
302 |
கொளு மணமனைச் சென்று மகிழ்தரு செவிலி அணிமனைக் கிழத்திக்(கு) அதன்சிறப்(பு) உரைத்தது. |
5. காதல் கட்டுரைத்தல்
பொட்டணி யான்நுதல் போயிறும் பொய்போல் இடையெனப்பூண் இட்டணி யான்தவி சின்மலர் அன்றி மிதிப்பக் கொடான் மட்டணி வார்குழல் வையான் மலர்வண் டுறுதல் அஞ்சிக் கட்டணி வார்சடை யோன்தில்லை போலிதன் காதலனே. |
303 |
கொளு சோதி வேலவன் காதல்கட் டுரைத்தது. |
6. கற்பறிவித்தல்
தெய்வம் பணிகழ லோன்தில்லைச் சிற்றம் பலம்அனையாள் தெய்வம் பணிந்தறி யாள்என்று நின்று திறைவழங்காத் தெய்வம் பணியச்சென் றாலும்மன் வந்தன்றிச் சேர்ந்தறியான் பெளவம் பணிமணி யன்னார் பரி(சு)இன்ன பான்மைகளே. |
304 |
கொளு விற்பொல நுதலி கற்பறி வித்தது. |
7. கற்புப் பயப்புரைத்தல்
சிற்பம் திகழ்தரு திண்மதில் தில்லைச் சிற்றம்பலத்துப் பொற்பந்தி யன்ன சடையவன் பூவணம் அன்னபொன்னின் கற்பந்தி வாய்வட மீனும் கடக்கும் படிகடந்தும் இற்பந்தி வாயன்றி வைகல் செல்லாதவன் ஈர்ங்களிறே. |
305 |
கொளு கற்புப் பயந்த அற்புதம் உரைத்தது. |
8. மருவுதல் உரைத்தல்
மன்னவன் தெம்முனை மேற்செல்லு மாயினும் மாலரியே(று) அன்னவன் தேர்புறத்(து) அல்கல்செல் லாது வரகுணனாம் தென்னவன் ஏத்துசிற்றம் பலம் தான்மற்றைத் தேவர்க்கெல்லாம் முன்னவன் மூவல்அன் னாளும்மற்(று) ஓர் தெய்வம் முன்னலளே. |
306 |
கொளு இருவர் காதலும் மருவுதல் உரைத்தது. |
9. கலவி இன்பம் கூறல்
ஆனந்த வெள்ளத்(து) அழுந்தும்ஓர் ஆருயிர் ஈருருக் கொண்(டு) ஆனந்த வெள்ளத் திடைத்திளைத் தால்ஒக்கும் அம்பலஞ்சேர் ஆனந்த வெள்ளத்(து) அறைகழ லோன்அருள் பெற்றவரின் ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற்றா(து)இவ் வணிநலமே. |
307 |
கொளு நன்னுதல் மடந்தை தன்னலங் கண்டு மகிழ்தூங்(கு) உளத்தோ(டு) இகுளை கூறியது. |
மணம் சிறப்புரைத்தல் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பத்தொன்பதாம் அதிகாரம் - எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - தெய்வம், வெள்ளத், உரைத்தது