முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 9.02. காரிநாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 9.02. காரிநாயனார் புராணம்
9.02. காரிநாயனார் புராணம்
4064 |
மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து வண் தமிழின் துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கிப் பொருள் மறையக் குறையாத தமிழ்க் கோவை தம் பெயரால் குலவும் வகை முறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர் பால் பயில்வார் | 9.2.1 |
4065 | அங்கு அவர் தாம் மகிழும் வகை அடுத்தவுரை நயம் ஆக்கி கொங்கலர்தார் மன்னவர் பால் பெற்ற நிதிக் குவை கொண்டு வெம் கண் அராவொடு கிடந்து விளங்கும் இளம் பிறைச் சென்னிச் சங்கரனார் இனிது அமரும் தானங்கள் பல சமைத்தார் | 9.2.2 |
4066 | யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப மொழிப் பயன் இயம்பத் தேவர்க்கு முதல்தேவர் சீர் அடியார் எல்லார்க்கும் மேவுற்ற இருநிதியம் மிக அளித்து விடையவர்தம் காவுற்ற திருக்கயிலை மறவாத கருத்தினர் ஆய் | 9.2.3 |
4067 | ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி ஆய்ந்த உணர்வு இடை அறா அன்பினராய் அணி கங்கை தோய்ந்த நெடும் சடையார்தம் அருள் பெற்ற தொடர்பினால் வாய்ந்த மனம் போலும் உடம்பும் வடகயிலை மலை சேர்ந்தார் | 9.2.4 |
4068 | வேரியார் மலர்க் கொன்றை வேணியார் அடிபேணும் காரியார் கழல் வணங்கி அவர் அளித்த கருணையினால் வாரியார் மதயானை வழுதியர் தம் மதி மரபில் சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம் | 9.2.5 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
9.02. காரிநாயனார் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் -