முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 8.01. பொய்யடிமை யில்லாத புலவர் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 8.01. பொய்யடிமை யில்லாத புலவர் புராணம்

8.01. பொய்யடிமை யில்லாத புலவர் புராணம்
3939 |
செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும் மெய் உணர்வின் பயன் இதுவே எனத் துணிந்து விளங்கி ஒளிர் மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார் பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார் | 8.1.1 |
3940 | பொற்பு அமைந்த அரவாரும் புரிசடையார் தமை அல்லால் சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர் மற்றவர் தம் பெருமையார் அறிந்து உரைக்க வல்லார்கள் | 8.1.2 |
3941 | ஆங்கு அவர் தம் அடி இணைகள் தலை மேல் கொண்டு அவனி எலாம் தாங்கிய வெண்குடை வளவர் குலம் செய்த தவம் அனையார் ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை உணர் செயல் புரிந்த பூம் கழலார் புகழ்ச் சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம் | 8.1.3 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
8.01. பொய்யடிமை யில்லாத புலவர் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - புலவர்