முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 7.02. சிறப்புலி நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 7.02. சிறப்புலி நாயனார் புராணம்

7.02. சிறப்புலி நாயனார் புராணம்
3654 |
பொன்னி நீர் நாட்டின் நீடும் பொன் பதி புவனத்து உள்ளேர் இன்மையால் இரந்து சென்றோர்க்கு இல்லை என்னாதே ஈயும் தன்மையார் என்று நன்மை சார்ந்த வேதியரைச் சண்பை மன்னனார் அருளிச்செய்த மறைத் திரு ஆக்கூர் அவ்வூர் | 7.2.1 |
3655 | தூ மலர்ச் சோலை தோறும் சுடர் தொடுமாடம் தோறும் மா மழை முழக்கம் தாழ மறை ஒலி முழக்கம் ஓங்கும் பூ மலி மறுகில் இட்ட புகை அகில் தூபம் தாழ ஓம நல் வேள்விச் சாலை ஆகுதித் தூபம் ஓங்கும் | 7.2.2 |
3656 | ஆலை சூழ் பூக வேலி அத்திரு ஆக்கூர் தன்னில் ஞாலம் ஆர் புகழின் மிக்கார் நான் மறைக் குலத்தில் உள்ளார் நீலம் ஆர் கண்டத்து எண் தோள் நிருத்தர்தம் திருத்தொண்டு ஏற்ற சீலராய்ச் சாலும் ஈகைத் திறத்தினில் சிறந்த நீரார் | 7.2.3 |
3657 | ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த போது அடியில் தாழ்ந்து மூளும் ஆதரவு பொங்க முன்பு நின்று இனிய கூறி நாளும் நல் அமுதம் ஊட்டி நயந்தன எல்லாம் நல்கி நீளும் இன்பத்து உள் தங்கி நிதிமழை மாரி போன்றார் | 7.2.4 |
3658 | அஞ்சு எழுத்து ஓதி அங்கி வேட்டு நல் வேள்வி எல்லாம் நஞ்சு அணி கண்டர் பாதம் நண்ணிடச் செய்து ஞாலத்து எஞ்சலில் அடியார்க்கு என்றும் இடை அறா அன்பால் வள்ளல் தஞ்செயல் வாய்ப்ப ஈசர் தாள் நிழல் தங்கினாரே | 7.2.5 |
3659 | அறத்தினில் மிக்க மேன்மை அந்தணர் ஆக்கூர் தன்னில் மறைப் பெரு வள்ளலார் வண் சிறப்புலி யார் தாள் வாழ்த்திச் சிறப்புடைத் திருச் செங்காட்டங் குடியினில் செம்மை வாய்ந்த வீரர் சிறுத் தொண்டர் செய்த திருத்தொழில் விளம்பல் உற்றேன் | 7.2.6 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
7.02. சிறப்புலி நாயனார் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ஆக்கூர்