முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 11.05. முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 11.05. முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்

11.05. முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்
4160 |
எப்போதும் இனிய பிரான் இன் அருளால் அதி கரித்து மெய்ப் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமே அப்போதைக்கு அப்போதும் ஆர்வம் மிகும் அன்பினராய் முப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவராம் முனிவர் | 11.5.1 |
4161 | தெரிந்து உணரின் முப்போதும் செல் காலம் நிகழ் காலம் வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின் விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அப் பெரும் தகையார் குலப் பெருமை ஆம் புகழும் பெற்றியதோ | 11.5.2 |
4162 | நாரணர்க்கும் நான் முகர்க்கும் அறிய ஒண்ணா ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும் காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர் தங்கள் பூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர் செயல் 11.5.3 | |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
11.05. முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - முப்போதும்