முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 11.01. பத்தாராய்ப் பணிவார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 11.01. பத்தாராய்ப் பணிவார் புராணம்

11.01. பத்தாராய்ப் பணிவார் புராணம்
4147 |
ஈசருக்கே அன்பு ஆனார் யாவரையும் தாம் கண்டால் கூசி மிகக் குது குதுத்துக் கொண்டாடி மனம் மகிழ்வுற்று ஆசையினால் ஆவின்பின் கன்று அணைந்தால் போல் அணைந்து பேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார் | 11.1.1 |
4148 | தாவரிய அன்பினால் சம்பு வினை எவ்விடத்தும் யாவர்களும் அர்ச்சிக்கும் படி கண்டால் இனிது உவந்து பாவனையால் நோக்கினால் பலர் காணப் பயன் பெறுவார் மேவரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார் | 11.1.2 |
4149 | அங்கணனை அடியாரை ஆராத காதலினால் பொங்கிவரும் உவகையுடன் தாம் விரும்பிப் பூசிப்பார் பங்கய மா மலர் மேலான் பாம்பு அணையான் என்று இவர்கள் தங்களுக்கும் சார்வரிய சரண் சாரும் தவம் உடையார் | 11.1.3 |
4150 | யாதானும் இவ் உடம்பால் செய்வினைகள் ஏறுயர்த்தார் பாதார விந்தத்தின் பால் ஆக எனும் பரிவால் காதார் வெண் குழையவர்க்காம் பணி செய்வார் கருக்குழியில் போதார்கள் அவர் புகழ்க்குப் புவனம் எல்லாம் போதாவால் | 11.1.4 |
4151 | சங்கரனைச் சார்ந்த கதை தான் கேட்கும் தன்மையராய் அங்கணனை மிக விரும்பி அயல் அறியா அன்பினால் கங்கை நதி மதி இதழி காதலிக்கும் திருமுடியார் செங்கமல மலர்ப் பாதம் சேர்வதனுக்கு உரியார்கள் | 11.1.5 |
4152 | ஈசனையே பணிந்து உருகி இன்பம் மிகக் களிப்பு எய்தி பேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின் பெருந் தாரை மாசிலா நீறு இழித்து அங்கு அருவி தர மயிர் சிலிப்பக் கூசியே உடல் கம்பித்திடுவார் மெய்க் குணம் மிக்கார் | 11.1.6 |
4153 | நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் மன்றாடும் மலர்ப்பாதம் ஒரு காலும் மறவாமை குன்றாத உணர்வு உடையார் தொண்டராம் குணம் மிக்கார் | 11.1.7 |
4154 | சங்கரனுக்காளான தவம் காட்டித் தாம் அதனால் பங்கம் அறப் பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார் அங்கணனைத் திருவாரூர் ஆள்வானை அடிவணங்கிப் பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய்ப் போற்றுவார் | 10.1.8 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
11.01. பத்தாராய்ப் பணிவார் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அன்பினால்