முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 285. தலைபணிந்து இறைஞ்சியோன்!
புறநானூறு - 285. தலைபணிந்து இறைஞ்சியோன்!
பாடியவர்: அரிசில் கிழார்
திணை: வாகை
துறை: சால்பு முல்லை
பாசறை யீரே ! பாசறை யீரே ! துடியன் கையது வேலே ; அடிபுணர் வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப் பாணன் கையது தோலே ; காண்வரக் கடுந்தெற்று மூடையின் .. .. .. |
5 |
வாடிய மாலை மலைந்த சென்னியன்; வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு நெடுநகர் வந்தென, விடுகணை மொசித்த மூரி வேண்டோள் .. .. .. .. .. சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ! |
10 |
மாறுசெறு நெடுவேல் மார்புஉளம் போக; நிணம்பொதி கழலொடு நிலம் சேர்ந் தனனெ; அதுகண்டு, பரந்தோர் எல்லாம்-புகழத் தலைபணிந்து இறைஞ்சி யோனே, குருசில் ! _ பிணங்குகதிர் அலமரும் கழனித் தண்ணடை ஒழிய; |
15 |
இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர் கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 283 | 284 | 285 | 286 | 287 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 285. தலைபணிந்து இறைஞ்சியோன்!, அவன், தலைபணிந்து, இலக்கியங்கள், இறைஞ்சியோன், அவனது, வந்தான், புறநானூறு, போர்ப்பாசறையில், நிலம், இருப்பவர்களே, குரு, குருதிச், பாணன், சங்க, எட்டுத்தொகை, பாசறை, யீரே, வாடிய, கையது, மூரி