முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 283. அழும்பிலன் அடங்கான்!
புறநானூறு - 283. அழும்பிலன் அடங்கான்!
பாடியவர்: அடை நெடுங் கல்வியார்
திணை: தும்பை
துறை: பாண்பாட்டு (பாடாண் பாட்டும் ஆம்).
ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி, வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப் பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி மாறுகொள் முதலையொடு ஊழ்மாறு பெயரும் அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும், |
5 |
வலம்புரி கோசர் அவைக்களத் தானும், மன்றுள் என்பது கெட .. .. .. னே பாங்கற்கு ஆர்சூழ் குவட்டின் வேல்நிறத்து இங்க, உயிர்புறப் படாஅ அளவைத் தெறுவரத், தெற்றிப் பாவை திணிமணல் அயரும், |
10 |
மென்தோள் மகளிர் நன்று புரப்ப, .. .. .. .. .. ண்ட பாசிலைக் கமழ்பூந் தும்பை நுதல் அசைத் தோனே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 281 | 282 | 283 | 284 | 285 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 283. அழும்பிலன் அடங்கான்!, அழும்பிலன், இலக்கியங்கள், அடங்கான், புறநானூறு, மகளிர், ஊரில், கோசர், தும்பை, எட்டுத்தொகை, சங்க, நீர்நாய்