முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 171. வாழ்க திருவடிகள்!
புறநானூறு - 171. வாழ்க திருவடிகள்!
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன்.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
சிறப்பு: 'ஈவோர் அரிய இவ்வுலகத்து வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே' என்னும் வாழ்த்தில், உலகின் தன்மையைக் காணலாம்.
இன்று செலினுந் தருமே; சிறுவரை நின்று செலினுந் தருமே ; பின்னும், முன்னே தந்தனென் என்னாது, துன்னி வைகலும் செலினும், பொய்யலன் ஆகி, யாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்; |
5 |
தான்வேண்டி யாங்குத் தன்இறை உவப்ப அருந்தொழில் முடியரோ, திருந்துவேல் கொற்றன்; இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும், களமலி நெல்லின் குப்பை வேண்டினும், அருங்கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை |
10 |
பிறர்க்கும் அன்ன அறத்தகை யன்னே, அன்னன் ஆகலின், எந்தை உள்ளடி முள்ளும் நோவ உற்றாக தில்ல! ஈவோர் அரியஇவ் உலகத்து, வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே! |
15 |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 169 | 170 | 171 | 172 | 173 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 171. வாழ்க திருவடிகள்!, தருவான், அவன், வாழ்க, இலக்கியங்கள், கேட்டாலும், பின்னும், சென்றாலும், வேண்டினும், நாம், திருவடிகள், ஈவோர், புறநானூறு, அதனால், கொற்றன், பெருந்தகை, இன்று, சங்க, எட்டுத்தொகை, அரிய, வாழ்வோர், செலினுந், தாள், தருமே