புறநானூறு - 172. பகைவரும் வாழ்க!
பாடியவர்: வடமண்ணக்கன் தாமோதரனார்.
பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன்.
திணை: பாடாண்.
துறை: இயன்மொழி.
ஏற்றுக உலையே; ஆக்குக சோறே; கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக; அன்னவை பலவும் செய்க ; என்னதூஉம் பரியல் வெண்டா வருபதம் நாடி, |
5 |
ஐவனங் காவல் பெய்தீ நந்தின். ஒளிதிகழ் திருந்துமணி நளியிருள் அகற்றும் வன்புல நாடன், வயமான் பிட்டன்; ஆரமர் கடக்கும் வேலும், அவனிறை மாவள் ஈகைக் கோதையும். |
10 |
மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 170 | 171 | 172 | 173 | 174 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 172. பகைவரும் வாழ்க!, இலக்கியங்கள், பிட்டன், வாழ்க, பகைவரும், புறநானூறு, இரவில், ஒளிரும், காவல், எட்டுத்தொகை, கோதையும், சங்க