முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 170. உலைக்கல்லன்ன வல்லாளன்!
புறநானூறு - 170. உலைக்கல்லன்ன வல்லாளன்!
பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார்.
பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன்.
திணை: வாகை.
துறை: வல்லாண் முல்லை; தானை மறமும் ஆம்.
மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப், பரலுடை முன்றில், அங்குடிச் சீறூர், எல்அடிப் படுத்த, கல்லாக் காட்சி வில்லுழுது உண்மார் நாப்பண், ஒல்லென, இழிபிறப் பாளன் கருங்கை சிவப்ப, |
5 |
வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி, புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோடு இரட்டும் மலைகெழு நாடன் கூர்வேல் பிட்டன், குறுகல் ஓம்புமின், தெவ்விர்; அவனே சிறுகண் யானை வெண்கோடு பயந்த |
10 |
ஒளிதிகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து, நார்பிழிக் கொண்ட வெங்கள் தேறல் பண்அமை நல்யாழ்ப் பாண்கடும்பு அருத்தி, நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு இரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன் |
15 |
விசைத்துஎறி கூடமொடு பொருஉம் உலைக்கல் அன்ன, வல்லா ளன்னே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 168 | 169 | 170 | 171 | 172 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 170. உலைக்கல்லன்ன வல்லாளன்!, இலக்கியங்கள், உலைக்கல்லன்ன, புறநானூறு, வல்லாளன், கொண்ட, எட்டுத்தொகை, சங்க