முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 318. நெய்தல் - தலைவி கூற்று
குறுந்தொகை - 318. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் சிறைப்புறத்தே நிற்பத்தோழிக்குக் கூறுவாளாய்,"தலைவன் பிரியேனென்று சூள்செய்தான். அதனைக் காப்பாற்றுதல்அவன் கடன். அதனை அவனே அறியவேண்டுமன்றி யான் கூறுதலாற்பயனில்லை" என்று தலைவி கூறி விரைவில் வரைய வேண்டுமென்னும்குறிப்பை உணர்த்தியது.)
எறிசுறாக் கலித்த இலங்குநீர்ப் பரப்பின் நறுவீ ஞாழலொடு புன்னை தாஅய் வெறியயர் களத்தினில் தோன்றுந் துறைவன் குறியா னாயினும் குறிப்பினும் பிறிதொன் றறியாற் குரைப்பலோ யானே யெய்த்தவிப் |
5 |
பணையெழின் மென்றோ ளணைஇய வந்நாட் பிழையா வஞ்சினஞ் செய்த கள்வனும் கடவனும் புனைவனுந் தானே. |
|
- அம்மூவனார். |
முடிபு: துறைவன் குறியானாயினும் குறிப்பினும், அறியாற்கு யான்உரைப்பலோ! அணைஇய அந்நாள் வஞ்சினஞ் செய்து கள்வனும் கடவனும்புணைவனும் தானே.
கருத்து: தலைவன் தன் மொழி தவறாது வரைந்து கொள்ளவேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 316 | 317 | 318 | 319 | 320 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 318. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, நெய்தல், தலைவன், கூற்று, குறுந்தொகை, கள்வனும், தானே, வரைந்து, வஞ்சினஞ், துறைவன், சங்க, புன்னை, எட்டுத்தொகை, குறிப்பினும்