முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 317. குறிஞ்சி - தோழி கூற்று
குறுந்தொகை - 317. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாளாகிய தலைவியை நோக்கி,"தலைவன் குறித்த பருவத்தே வருவான்" என்று தோழி கூறி வற்புறுத்தியது.)
புரிமட மரையான் கருநரை நல்லேறு தீம்புளி நெல்லி மாந்தி யயலது தேம்பாய் மாமலர் நடுங்க வெய்துயிர்த் தோங்குமலைப் பைஞ்சுனை பருகு நாடன் நம்மைவிட் டமையுமோ மற்றே கைம்மிக |
5 |
வடபுல வாடைக் கழிமழை தென்புலம் படருந் தண்பனி நாளே. |
|
- மதுரைக் கண்டரதத்தனார். |
முடிபு: நாடன், தண்பனி நாளில் நம்மைவிட்டு அமையுமோ?
கருத்து: தலைவன் குறித்த பருவத்தில் வந்துவிடுவான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 315 | 316 | 317 | 318 | 319 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 317. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தலைவன், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, நாடன், தண்பனி, சங்க, எட்டுத்தொகை, குறித்த