முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 148. முல்லை - தலைவி கூற்று
குறுந்தொகை - 148. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் மீண்டு வருவதாகக் கூறிச் சென்ற கார்ப் பருவம் வரவும் அவன் வாராமையால் துன்பமுற்ற தலைவியை நோக்கித் தோழி, “இது பருவமன்று; அவர் பொய்யார்” என வற்புறுத்த, தலைவி, “கொன்றைமரங்கள் பூத்தன; இது கார்ப்பருவந்தான்” எனக் கூறியது.)
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக் காசி னன்ன போதீன் கொன்றை குருந்தோ டலம்வரும் பெருந்தண் காலையும் காரன் றென்றி யாயிற் |
5 |
கனவோ மற்றிது வினவுவல் யானே. | |
- இளங் கீரந்தையார். |
முடிபு: கொன்றை அலம்வரும் காலையும் காரன்றென்றியாயின் கனவோ? யான் வினவுவல்.
கருத்து: தலைவர் இக்கார் காலத்தும் மீண்டும் வந்திலர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 146 | 147 | 148 | 149 | 150 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 148. முல்லை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், முல்லை, கனவோ, கொன்றை, குறுந்தொகை, கூற்று, வினவுவல், யான், கிண்கிணிக், எட்டுத்தொகை, சங்க, காலையும்