முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 147. பாலை - தலைவன் கூற்று
குறுந்தொகை - 147. பாலை - தலைவன் கூற்று
(தலைவன் தலைவியைப் பிரிந்து சென்ற இடத்துத் துயிலும் பொழுது அவளைக் கனாவிற் கண்டு பிரிவாற்றாமற் சொல்லியது.)
வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன மயிரேர் பொழுகிய வங்கலுழ் மாமை நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல இன்றுயில் எடுப்புதி கனவே எள்ளார் அம்ம துணைப்பிரிந் தோரே. |
5 |
- கோப்பெருஞ் சோழன். |
முடிபு: கனவே, இன்றுயில் எடுப்புதி; துணைப் பிரிந்தோர் எள்ளார்.
கருத்து: தலைவியைக் கொணர்ந்து காட்டிய கனவிற்கு யாது கைம்மாறு செய்வேன்!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 145 | 146 | 147 | 148 | 149 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 147. பாலை - தலைவன் கூற்று, தலைவன், இலக்கியங்கள், கனவே, கூற்று, குறுந்தொகை, பாலை, எள்ளார், கொணர்ந்து, பிரிந்தோர், இன்றுயில், எட்டுத்தொகை, சங்க, எடுப்புதி