முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » குறுந்தொகை » 123. நெய்தல் - தோழி கூற்று
குறுந்தொகை - 123. நெய்தல் - தோழி கூற்று
(தலைவன் பகலில் வந்து மறைந்து நிற்க, “தலைவர் இன்னும் பாணிப்பாராயின் நம் தமையன்மார் மீன்வேட்டையினின்றும் திரும்பி வருவாராதலின் அவர் நம்மைக் காண்டலரிது; இப்பொழுதே வருவாராயின் நன்றாகும்” என்னும் கருத்துத் தோன்றத் தோழி தலைவிக்குக் கூறியது.)
இருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல் நிலவுக்குவித் தன்ன வெண்மணல் ஒருசிறைக் கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப இன்னும் வாரார் வரூஉம் பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே. |
5 |
- ஐயூர் முடவனார். |
முடிபு: பொழில் புலம்ப, இன்னும் வாரார்; என்னையர் திமில் வரூஉம்.
கருத்து: தலைவர் இப்பொழுதே வருதல் நலம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 121 | 122 | 123 | 124 | 125 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 123. நெய்தல் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், இன்னும், குறுந்தொகை, நெய்தல், கூற்று, வாரார், தலைவர், வரூஉம், புலம்ப, தமையன்மார், எட்டுத்தொகை, சங்க, இப்பொழுதே, தன்ன