அகநானூறு - 6. மருதம்
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை, அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை, இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை, மழை வளம் தரூஉம் மா வண் தித்தன், பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் |
5 |
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம், குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு, வேழ வெண் புணை தழீஇ, பூழியர் கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு, ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய, |
10 |
நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து, 'ஆக வன முலை அரும்பிய சுணங்கின், மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என, மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம் முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல! |
15 |
இளமை சென்று தவத் தொல்லஃதே; இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே? |
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது. - பரணர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பொய்ம்மொழி