அகநானூறு - 5. பாலை
அளிநிலை பொறாஅ தமரிய முகத்தள் |
5 |
கண்ணிய துணரா வளவை யண்ணுதல் வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன் முளிந்த வோமை முதையலங் காட்டுப் பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி மோட்டிரும் பாறை யீட்டுவட் டேய்ப்ப |
10 |
வுதிர்வன படூஉங் கதிர்தெறு கவாஅன் மாய்த்த போல மழுகுநுனை தோற்றி பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல் விரனுதி சிதைக்கும் நிரைநிலை யதர பரன்முரம் பாகிய பயமில், கானம் |
15 |
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ டாகத்து தொடுக்கிய புதல்தன் புன்றலைத் தூநீர் பயந்த துணையமை பிணையன் மோயினள் உயிர்த்த காலை மாமலர் மணியுரு இழந்த வணியிழை தோற்றங் |
20 |
கண்டே கடிந்தனஞ் செலவே யண்டொடி யுழைய மாகவு மினைவோள் பிழையலன் மாதோ பிரிதும்நா மெனினே. |
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மாய்த்த