அகநானூறு - 186. மருதம்
வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும் மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை நீர்மிசை நிவந்த நெடுந் தாள் அகல் இலை இருங் கயம் துளங்க, கால் உறுதொறும் |
5 |
பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு எழுந்த கௌவையோ பெரிதே; நட்பே, கொழுங் கோல் வேழத்துப் புணை துணையாகப் புனல் ஆடு கேண்மை அனைத்தே; அவனே, ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட, |
10 |
ஈர்ந் தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப, தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து, இன்னும் பிறள் வயினானே; மனையோள் எம்மொடு புலக்கும் என்ப; வென் வேல், மாரி அம்பின், மழைத்தோற் பழையன் |
15 |
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என் செறிவளை உடைத்தலோ இலெனே; உரிதினின் யாம் தன் பகையேம்அல்லேம்; சேர்ந்தோர் திரு நுதல் பசப்ப நீங்கும் கொழுநனும் சாலும், தன் உடன் உறை பகையே. |
20 |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, இல்லிடைப் பரத்தை சொல்லி நெருங்கியது. -பரணர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 184 | 185 | 186 | 187 | 188 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், -