அகநானூறு - 184. முல்லை
கடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய புதல்வற் பயந்த புகழ் மிகு சிறப்பின் நன்னராட்டிக்கு அன்றியும், எனக்கும் இனிது ஆகின்றால்; சிறக்க, நின் ஆயுள்! அருந் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு |
5 |
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட, வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப் புன் தலை புதைத்த கொழுங் கொடி முல்லை ஆர் கழல் புதுப் பூ உயிர்ப்பின் நீக்கி, |
10 |
தௌ அறல் பருகிய திரிமருப்பு எழிற் கலை புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண், கோடுடைக் கையர், துளர் எறி வினைஞர், அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்க, செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச் |
15 |
செக்கர் வானம் சென்ற பொழுதில், கற் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்த் தார் மணி பல உடன் இயம்ப சீர் மிகு குருசில்! நீ வந்து நின்றதுவே. |
தலைமகன் வினைவயிற் பிரிந்து வந்து எய்திய இடத்து, தோழி புல்லு மகிழ்வு உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 182 | 183 | 184 | 185 | 186 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு, Agananooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வந்து, மிகு, முல்லை