சைவ சித்தாந்த சாத்திரங்கள் - வினா வெண்பா - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சிற்றறிவு முற்சிதையிற் சோர்வாரின் றாஞ்சிறிது மற்றதனி நிற்கிலருண் மன்னாவாந் துற்றமுகின் மின்கொண்ட சோலை வியன்மருதைச் சம்பந்தா வென்கொண்டு காண்பேனி யான். |
6 |
உன்னரிய நின்னுணர்வ தோங்கியக்காலொண் தன்னளவு நண்ணரிது தானாகு - மென்னறிவு கருவி தானறிய வாரா தடமருதைச் சம்பந்தா யானறிவ தெவ்வா றினி. |
7 |
அருவே லுருவன் றுருவே லருவன் றிருவேறு மொன்றிற் கிசையா - வுருவோரிற் காணி லுயர்கடந்தைச் சம்பந்தா கண்டவுடல் பூணுமிறைக் கென்னாம் புகல். |
8 |
இருமலத்தார்க் கில்லை யுடல்வினையென் செய்யு மொருமலத்தார்க் காரை யுரைப்பேன் - திரிமலத்தார் ஒன்றாக வுள்ளா ருயர்மருதைச் சம்பந்தா வன்றாகி லாமா றருள். |
9 |
ஒன்றிரண்டாய் நின்றொன்றி லோர்மையதா மொன்றாக நின்றிரண்டா மென்னிலுயிர் நேராகுந் துன்றிருந்தார் தாங்கியவாழ் தண்கடந்தைச் சம்பந்தா யானாகி யோங்கியவா றெவ்வா றுரை. |
10 |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - வினா வெண்பா - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சம்பந்தா, சாத்திரங்கள், சித்தாந்த, வினா, வெண்பா, shaiva