முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » சைவ சித்தாந்த சாத்திரங்கள் » திருக்களிற்றுப்படியார்
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
மெல்வினையே யென்ன 1*வியனுலகு ளோர்க்கரிய வல்வினையே யென்ன வருமிரண்டுஞ் - சொல்லிற் சிவதன்ம மாமவற்றிற் சென்றதிலே 2*செல்வார் பவகன்ம நீங்கும் படி. |
16 |
1*வியனுள்ளார் கட்கரிய : வியனுலகில் ஆற்றரிய2*செல்வாய் |
ஆதியை யர்ச்சித்தற் கங்கமு மங்கங்கே தீதில் திறம்பலவுஞ் செய்வனவும் - வேதியனே நல்வினையா மென்றே நமக்குமெளி தானவற்றை மெல்வினையே *யென்றதுநாம் வேறு. |
17 |
*என்றது நான் |
வரங்கடருஞ் செய்ய வயிரவர்க்குத் தங்கள் கரங்களினா லன்றுகறி யாக்க - இரங்காதே கொல்வினையே செய்யுங் கொடுவினையே யானவற்றை வல்வினையே யென்றதுநா மற்று. |
18 |
*பாதக மென்றும் பழியென்றும் பாராதே தாதையை வேதியனைத் தாளிரண்டுஞ் - சேதிப்பக் கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே தண்டீசர் தஞ்செயலாற் றான். |
19 |
*பாதகமேயென்றும் |
செய்யி லுகுத்த திருப்படி மாற்றதனை ஐய விதுவமுது செய்கென்று - பையவிருந் தூட்டி யறுத்தவர்க்கே யூட்டியறுத்தவரை நாட்டியுரை செய்வதென்னோ நாம். |
20 |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தாந்த, திருக்களிற்றுப்படியார், சாத்திரங்கள், வல்வினையே, யென்ன, இலக்கியங்கள், மெல்வினையே