சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
உலகப் படைப்பின் பயன்
ஏற்றவிவை யரனருளின் றிருவிளையாட் டாக வியம்புவர்க ளணுக்களிடர்க் கடனின்று மெடுத்தே யூற்றமிக வருள்புரித லேது வாக வுரைசெய்வ ரொடுக்கமிளைப் பொழித்தன் மற்றைத் தோற்மல பாகம்வரக் காத்தல் போகந் துய்ப்பித்த றிரோதாயி தகநிறுத்த லாகும் போற்வரு மருளருளே யன்றி மற்றுப் புகன்றவையு மருளொழியப் புகலொ ணாதே. |
இரண்டாம் சூத்திரம்
2. பசுவியல்பு
எண்ணரிதாய் நித்தமா யிருண்மலத்தி னழுந்தி யிருவினையின் றன்மைகளுக் கீடான யாக்கை யண்ணலரு ளானண்ணி யவையவரா யதனால் அலகினிகழ் போகங்க ளருந்து மாற்றாற் புண்ணியபா வம்புரிந்து போக்குவரவுடைத்தாய்ப் புணருமிருண் மலபாகம் பொருந்தியக்கா லுண்ணிலவு மொளியதனா லிருளகற்றிப் பாத முற்றிடுநற் பசுவருக்க மெனவுரைப்பருணர்ந்தோர். |
3.பாச வியல்பு
மலமும் திரோதனமும்
ஏகமாய்த் தங்கால வெல்லைகளின் மீளும் எண்ணரிய சத்தியதாயிரு ளொளிரவிருண்ட மோகமாய்ச் செம்பிலுரு களிம்பேய்ந்து நித்த மூலமல மாயறிவு முழுதினையு மறைக்கும் பாகமாம் வகைநின்று திரோதான சத்தி பண்ணுதலான் மலமெனவும் பகர்வரதுபரிந்து நாகமா நதிமதியம் பொதிசடையா னடிக ணணுகும்வகை கருணைமிக நயக்குந் தானே. |
சுத்தமாயையின் காரியம்
உன்னலரும் பரசிவன்ற னருளாலே நாத முதிக்கு மிருங் குடிலைதனில் விந்துவரு நாதந் தன்னிலதி னொளிவளருஞ் சதாசிவரா மவரில் தயங்கவரு மீசர்வித்தை தனையளிப்ப ரதனான் மன்னுவரிவ் வகையைவர் வாய்மையினான் முன்னே வந்திடுமென் றுரைசெய்த விந்துவழா வகையே முன்னுதவுஞ் சூக்குமாதி யொருநான்கு மென்று மொழிந்திடுவரருங்கலைகண் முதிர்ந்துளோரே. |
மாயையின் இயல்பு
உருவாதி சதுர்விதமா யொன்றொன்றொவ்வா உண்மையதாய் நித்தமா யொன்றா யென்று மருவாகிக் கன்மாந்த மணுக்க ளியார்க்கு மாவார மாயசித்தா யசல மாகி விரிவாய தன்செயலின் வியாபியா யெல்லாம் விரிந்தவகை புரிந்தடைவின் மேவியவை யொடுங்க வருகால முயிர்களெல்லா மருவிடமாய் மலமாய மன்னியிடு மரனருளான் மாயை தானே. |
மாயையின் உண்மை
என்னையிது வெனினுலகுக் குபாதான மில்லை பிறைவனல தெனினசித்துத் சித்தினிடத் துதியா மன்னியுள தேனமுதல்வ னெனகொ லென்னின் மாயைதா னசித்துருவாய் மருவ மாட்டா தன்னவனு மிதுவொழிய வாக்க மாட்டான் அசத்தனா மெனினதுவு மவன்போ னித்த முன்னவனவ் வசித்தைவிரித் தெவையு மாக்கு முதன்மையது கொடுத்ததென மொழிந்திடாரே. |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தாந்த, சிவப்பிரகாசம், சாத்திரங்கள், மாயையின், தானே, இலக்கியங்கள், நித்தமா