நெஞ்சு விடு தூது - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
6. குதிரை
வானம் புவன மலைகடலேழ் பாதாள முனைந்து பூதத் துயிருணர்ச்சி - ஞானமா யெல்லாமா யல்லவா யெண்ணுவாரெண்ணத்துள் நில்லாம னிற்குநீள் வாசியான் - சொல்லாரும் |
7. யானை
பாதாள மூடுருவிப் பாரேழும் விண்ணேழு மாதார மாகி யகண்டநிறைந் - தோத அரிதா யெளிதா யருமறையா றங்கத் துருவா யுயிரா யுணர்வாய்ப் - பெரிதாய வெய்யதுயர்ப் பாசமற வீசியே வெம்பிறவித் துய்ய கடலைத் துகளெழுப்பி - யையமுறுங் காமக் குரோத மத மாச்சரியங் காய்ந்தடர்த்துச் சாமத் தொழிலின் றலைமிதித்து - நாமத்தாற் கத்துஞ் சமயக் கணக்கின்விறற் கட்டழித்துத் தத்தம் பயங்கொலைகள் தாங்கழித்தே - தத்திவரும் பாசக் குழாத்தைப் படவடித்துப் பாவையர்த மாசைக் கருத்தை யறவீசி - நேசத்தா லானவே கங்கொண் டருண்மும் மதத்தினா லூனையார் தத்துவங்க ளுள்புகுந்து - தேனைப் பருகிக் களித்துயர்ந்து பன்மறைநாற் கோட்டான் மருவித் திகழ்ஞான வானையா - னிருமுச் |
8. கொடி
சமையங் கடந்து தனக்கொப் பிலாத சுமைதுன்ப நீக்குந் துவசன் - கமையொன்றித் |
9. முரசு
தம்மை மறந்து தழலொளியுள் ளேயிருத்தி இம்மை மறுமை யிரண்டகற்றிச் - செம்மையே வாயுவை யோடா வகைநிறுத்தி வானத்து வாயுவையு மாங்கே யுறவமைத்துத் - தேயுறவே என்று மொறுதகைமை யாயிருக்கு மின்பருளே நின்று முழங்கு நெடுமுரசோன் - அன்றியும் |
10. ஆணை
மாலு மயனும் வகுத்தளித்த வையமெலாஞ் சாலுமிதற் கப்பாலு மெப்பாலு - மேலை யுலகு முலகா லுணரவொண்ணா வூரு மிலகி நடக்குமெழி லாணையான் - அலகிறந்த |
இறைவன் பெருமை
காட்சியான் காட்சிக்குங் காணான் கலைஞான வாட்சியா னாட்சிக்கு மாயிலான் - சூட்சியான் பாரும் திசையும் படரொளியா லேநிறைந்தான் றூருந் தலையுமிலாத் தோன்றலான் - வேராகி வித்தாகி வித்தின் விளைவாகி மேவுதனுச் சத்தாதி பூதங்க டாமாகிச் - சுத்த வெறுவெளியாய்ப் பாழாய் வெறும்பாழுக் கப்பா லுறுபொருளாய் நின்ற வொருவன் - பொறியிலியேன் |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெஞ்சு விடு தூது - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சாத்திரங்கள், நெஞ்சு, சித்தாந்த, தூது, விடு, பாதாள, இலக்கியங்கள்