கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - இசை
- வசந்த் துளைகளின் மேலொரு நாட்டியம் போல் என் விரல்களாட மெல்ல... மெல்ல இசைத்தேன். அசைவனவெல்லாம் அசையாதாயின. ஆர்ப்பரித்தது கூட்டம். கையெழுத்திட்டேன். இசையரசன் பட்டம் கொண்டேன். கருவியைப் பத்திரமாய் வைத்துக் கொண்டேன். கால்கள் மிதக்க மிதக்க நடந்துகொண்டிருந்தேன். எதிர்வந்த காற்று முகத்திலறைந்து என்னைக் கடந்தபோது கேட்டது தூர இருக்கும் சவுக்கு மரத்தோப்பில் காற்றடித்த சீட்டியொலி. அதிர்ச்சியில் தரைதொட்டன என் கால்கள். முட்டாள் நான். கருவியைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். ஒரே ஒருவர்தான் காற்றைப் பத்திரமாக வைத்திருக்கிறார். |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 27 | 28 | 29 | 30 | 31 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - இசை - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -