கவிதைத் தொகுப்புகள் - ஒற்றை இறகு - கோடை
- வசந்த் தாகத்தால் தவித்தலைகின்றன காற்றும், வெயிலும். இரண்டுக்கும் கைகளுண்டு. வாயில்லை. குடிப்பதற்கு வழியின்றிக் குழப்பத்தில் அலைகின்றன. கோபத்தில் காற்று சூடாகச் சுழன்றடிக்கிறது. வெயில் தன் கைகளால் எதிர்ப்படுபவரையெல்லாம் "சுள்'ளென்று கிள்ளித் தொலைக்கிறது. ஒளிந்துகொள்கிறார்கள் ஒவ்வொருவராய். குடிப்பதற்கு வழியில்லாத கோபத்தில் குதிக்கின்றன இரண்டும். ஆற்றைத் தழுவியதன் மேலாடையைக் கலைத்துப் போடுகிறது காற்று. மேலெல்லாம் விழுந்து தன் மேனியைச் சூடாக்குகிறது வெயில். காண்கிற மரமெல்லாம் தங்கியதன் தலைகலைத்து விடுகிறது காற்று. அதன் ஆடைகளையெல்லாம் பிய்த்துத்தறி அம்மணமாக்க முயற்சிசெய்கிறது வெயில். கொடுப்பதற்கென்றே கைகளை விரித்துக் கொண்டிருக்கிற மரம் நிழலாய்க் கொட்டுகிறது. இருப்பதைத்தானே கொடுக்க முடியும்? |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 29 | 30 | 31 | 32 | 33 | ... | 33 | 34 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒற்றை இறகு - கோடை - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - வெயில், காற்று