கவிதைத் தொகுப்புகள் - நட்புக்காலம் - பகுதி 6
ஆய்வை முடிக்கிறவரை காதலனை வரவேண்டாம் என்று கட்டளையிட்டாய் வந்துகொண்டே இருக்க வேண்டும் என்று என்னிடம் கெஞ்சினாய் உன்னைக் காதலிப்பவனும்தான் எவ்வளவு உயர்ந்தவன் உணர்ந்து கொண்ட மௌனத்திற்கென்றே ஒரு புன்னகை இருக்கத்தான் செய்கிறது என்பதை அவன்தானே எனக்குச் சொல்லிக் கொடுத்தான் எல்லாவற்றிலும் எனக்குப் பிடித்ததையே நீ தேர்ந்தெடுத்தாய் உனக்குப் பிடித்ததையே நான் தேர்ந்தெடுத்தேன் அதனால்தான் நட்பு நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது சன்னலில்லாத விடுதி அறையும் அட்டவணைச் சமையலும் நம்மை வாடகைக்கு வீடெடுக்க வைத்தன கல்லூரிக்கு வெளியே அறைக்குள் வந்து இல்லறத்திற்காகவே கூடுதேடும் இந்தச் சிட்டுகளுக்குத் தெரியுமா நமது நட்பு ஒரு நள்ளிரவில் கதவு தட்டும் ஒலிகேட்டு வந்து திறந்தேன் காதலனோடு கைபிடித்தபடி சோர்ந்த முகத்தோடு நின்றாய் போய் வருகிறேன் அடுத்த வாரம் சந்திக்கலாம் என்று புறப்பட்ட காதலனுக்குக் கையசைத்தாய் என் தோளில் சாய்ந்தபடி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நட்புக்காலம் - பகுதி 6 - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -