கவிதைத் தொகுப்புகள் - நட்புக்காலம் - பகுதி 4
சேர்ந்து நிழற்படம் எடுத்துக் கொண்டு அடிக்கடி மடல் எழுதுவதாகச் சொல்லிக் கொண்டு பிரிகிற நட்பின் வலியை மறைத்துக் கொள்வதற்காகத்தான் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் பேத்திகளிடமும் கூட சிர்க்கச் சிர்க்கப் பேசுகிறார்கள் இவர்கள் எதைப் பற்றித்தான் நாம் பேசிக் கொள்ளவில்லை காதல் காமம் குல்சாரி தெறி ஈழம் அகிரா குரசேவா புல்லாங்குழல்... காற்றுக்குள் மிதக்கும் நம் உரையாடல்களைச் சேகரிக்க நாளையேனும் ஒரு கருவி கிடைக்குமா கண்களை வாங்கிக் கொள்ள மறுக்கிறவள் காதலியாகிறாள் கண்களை வாங்கிக் கொண்டு உன்னைப்போல் கண்கள் தருகிறவள்தான் தோழியாகிறாள் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் தாமதமாய் வந்து என்னை எழுப்பாமலேயே நீ சொல்லியபடி நான் சமைத்து வைத்திருந்த உணவை நிதானமாகச் சாப்பிட்டுவிட்டு என் பக்கத்திலேயே வந்து படுத்துத் தூங்கிவிட்டும் போயிருக்கிறாய் என்பதைச் சொல்லிப் பரிகசித்தன என் தலையணையில் சில மல்லிகைகள் என் துணைவியும் உன் கணவரும் கேட்கும்படி நம் பழைய மடல்களையெல்லாம் படித்துப் பார்க்க ஒரு மழை தொடங்கும் நாள் வேண்டும் அந்தப் பந்தியில் நான் மேற்பார்வை செய்து கொண்டிருக்கையில் உனது இலையிலிருந்து காற்றில் பறந்துவந்து விழுந்த உடைந்ததே அந்த அப்பளத்திற்குத்தான் முதலில் நாம் நன்றி சொல்ல வேண்டும் இரண்டு இரவுகள் ஒரு பகல் ஈரக் காற்றுகளால் நெய்த அந்த அந்திப் பொழுது யாவும் பாழாக அந்தத் தொடர் வண்டிப் பயணத்தில் எனக்கு எதிரிலேயே அமர்ந்து, தூங்கி, சாப்பிட்டு, படித்துப் பேசாமலேயே இறங்கிப் போக பெண்ணே உனக்குக் கற்றுக் கொடுத்தது யார் எனக்குத் தெரியும் நீ சாப்பிடும் நேரத்தின் கடைசி குவளை தண்ணீரில் இருக்கிறேன் நான் அந்த மொட்டை மாடியின் வெளிச்சம் குறைந்த இரவின் தனிமையில் நம்மை அருகருகே படுக்க வைத்துவிட்டு நாம் பேசிக்கொண்டே போய்வந்த பாதைகளைத் தாம் பகலில் வண்ணத்துப் பூச்சிகள் வரைந்து பார்க்கின்றன |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நட்புக்காலம் - பகுதி 4 - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - அந்த, நான், நாம், கொண்டு