கவிதைத் தொகுப்புகள் - நட்புக்காலம் - பகுதி 4
நண்பர்கள் என்றவர்கள் காதலர்களாகியிருக்கிறார்கள் எனக்குத் தெரிய அண்ணன் தங்கை என்று ஆரம்பித்தவர்களே கணவன் மனைவியாகவும் ஆகியிருக்கிறார்கள் ஆனாலும் சொல்கிறேன் நட்பு என்பது நம்மைப்போல் என்றும் நட்பாகவே இருப்பதுதான் உனக்கான பதில்களை என்னிடமிருந்து நீ எதிர்பார்க்காமல் பேசுகிற போதெல்லாம் தலைமுறைகளைத் தாண்டிய நம் பாட்களின் உறைந்து கிடைக்கும் மௌனங்களையெல்லாம் உருக்கிக் கொள்கிறாய் என்றே நான் கருதுகிறேன் துளியே கடல் என்கிறது காமம் கடலும் துளி என்கிறது நட்பு அந்த விளையாட்டுப் போட்டியைப் பார்க்க நாம் ஒன்றாகச் சென்றோம் இரசிக்கையில் இரண்டானோம் திரும்பினோம் மறுபடியும் ஒன்றாகவே உனது அந்தரங்கத்தின் அனுமதியற்ற எல்லையை ஒரு நாள் தற்செயலாக நான் மீறிவிட்ட கோபத்தில் ஏறக்குறைய நாற்பது நாள்கள் என்னோடு நீ பேசாமல் இருந்தாய் ஓர் அதிகாலையில் முதலாவதாக எழுப்பி எனக்கு நீ பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லிய போதுதான் பிறந்தேன் மறுபடியும் புதிதாய் நான் உனது சிறிய பிரிவிற்கான வலியைச் சமாதானப்படுத்திக் கொள்வதற்காகப் பெரிய பிரிவுகளுக்கான விடைபெறுதல்கள் நிறைந்த அந்த விமான நிலையத்திற்குள் போய் அமர்ந்து விட்டு வந்தேன் போகிற இடத்தில் என்னை விட அழகாய் அறிவாய் ஒருவன் இருந்து விடுவானோ என்கிற பயம் நல்லவேளை நட்பிற்கு இல்லை |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நட்புக்காலம் - பகுதி 4 - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - நான்