திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு
3. திருவாவினன்குடி
முன் செல்லும் முனிவரது இயல்புகள்
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு வலம்புரி புரையும் வால்நரை முடியினர் மாசுஅற இமைக்கும் உருவினர் மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல். |
130 |
பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும் கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத் தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை |
135 |
யாவதும் அறியா இயல்பினர் மேவரத் துனியில் காட்சி முனிவர் முற்புக |
முனிவர்கள் காவியில் தோய்த்த மரநிற ஆடையை உடுத்திருந்தனர். அவர்களின் தலைமுடி வலம்புரி நிறம்போல சீராக வெளுத்திருந்தது. யாரையும் குற்றம் காணாத பார்வையும் யாரும் குற்றம் காண முடியாத உருவமும் கொண்டிருந்தனர். தைத்த மான்தோலை அணிந்திருந்த அவர்கள் ஊன் வற்றி எலும்பு தெரியும் மார்புடன் காணப்பட்டனர். நண்பகல் உணவும் பலநாள் இல்லாமல் சிலநாட்களில் மட்டுமே உண்டனர். அவர்கள் பிறரோடு மாறுபாடு இல்லாத பிறர்மீது சினம் கொள்ளாத மனத்தினர். கற்றோரும் இவர்களைப்பற்றி எதனையும் அறிய முடியாத பேரறிவினர். கற்றவர்களுக்கு எல்லை கட்டிய தலைவர்கள். காமத்தையும் கடுஞ்சினத்தையும் விலக்கிக் கட்டிவைத்த பண்புடன் காட்சி தருபவர். துன்பம் எதையுமே அறியாது இன்பமாகக் காணும் இயல்புடையவர். இவர்கள் எல்லாரையும் விரும்புவதால் பிணக்கின்றிக் காட்சி தருபவர். இவர்கள் முருகன் உலாவரும்போது முன்னே சென்றனர்.
பாடுவார் இயல்பு
புகைமுகந் தன்ன மாசில் தூவுடை முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச் செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின். |
140 |
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலர் இன்னரம்பு உளர |
வெண்புகையை முகந்து வைத்தது போல் தூய ஆடையை மகளிர் உடுத்தியிருந்தனர். அவர்களின் நெஞ்சு முகடுகள் மொட்டுகள் போல் இல்லை. வாய் விரிந்த மொட்டைப் போல அவிழ்ந்து கிடந்தன. யாழின் திவவு காதைப்போல் வளைந்திருக்கும். அந்த யாழ்த்திவவு போல் அவர்களின் நெஞ்சு கூனியிருந்தது. அவர்கள் மென்சொல் நவில விரும்பினர். முடியவில்லை. யாழின் நரம்பு போல் ஒலிதான் வந்தது.
பாடும் மகளிர் இயல்பு
நோயின்று இயன்ற யாக்கையர் மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும் பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப் |
145 |
பருமம் தாங்கிய பணிந்தேந்து அல்குல் மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்க |
நோயில்லாத உடலிலேயே இந்த நிலை. மேனி மாந்தளிர் போல் இருந்தது. அதில் பொன்னை உரைத்த கல்லைப் போலத் திதலைநிறம் பூத்திருந்தது. வாயிலே இனிய புன்சிரிப்பு. பணிந்து உயர்ந்த பெண்ணுறுப்பைப் பருமம் என்னும் ஆடை மூடியிருந்தது. இத்தகைய மாசு மறுவற்ற மகளிர் முருகனைச் சூழ்ந்து வந்தனர்.
திருமால், சிவன், இந்திரன், ஆகியோரின் இயல்புகள்
கடுவொடு ஒடுங்கிய தூம்படை வால்எயிற்று அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல் பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் |
150 |
புள்ளணி நீள்கொடிச் செல்வனும், வெள்ளேறு |
பாம்புப் பல்லின் துளையில் நஞ்சு ஒடுங்கியிருக்கும். பாம்பு தீயைப் போல் பெருமூச்சு விடும். கண்டவுடன் மக்கள் அஞ்சி ஒதுங்கும் திறம் கொண்டது பாம்பு. இத்தகைய பாம்பை உணவுக்காகக் கொல்லும் திறம் படைத்ததாய்க் கழுத்தும் வயிறும் வெளுத்திருப்பது கருடப் பறவை. இதனைக் கொடியாகக் கொண்டவன் திருமால்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு, போல், இலக்கியங்கள், திருமுருகாற்றுப்படை, காட்சி, மகளிர், அவர்களின், பத்துப்பாட்டு, நெஞ்சு, சங்க, மாசில், இயல்பு, யாழின், பருமம், திறம், பாம்பு, திருமால், இத்தகைய, இவர்கள், தருபவர், யாவதும், மனத்தினர், யாக்கையர், புரையும், அறியா, தைஇய, முடியாத, குற்றம், இயல்புகள், ஆடையை, வலம்புரி