திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு
அஞ்சும் முகம் தோன்றின், ஆறுமுகம் தோன்றும்; வெஞ் சமரில்,'அஞ்சல்' என வேல் தோன்றும்; - நெஞ்சில் ஒரு கால் நினைக்கின், இரு காலும் தோன்றும் 'முருகா!' என்று ஓதுவார் முன். |
6 |
முருகா என்னும் பெயரை ஓதுவார் முன், அஞ்சுதலாகிய முகம் தோன்றினால் ஆறுதல் தரும் முகமாக ஆறுமுகம் (முருகன்) தோன்றும். துனபத்தோடு போராடும்போது ‘அஞ்சாதே’ என்று சொல்லி அதனைக் கொல்லும் வேல் தோன்றும். நெஞ்சில் ஒருமுறை நினைத்தால், அவனது இரண்டு அடிகளும் (காவடி = காப்பாற்றும் அடி) தோன்றும். கவலை வேண்டா.
முருகனே! செந்தி முதல்வனே! மாயோன் மருகனே! ஈசன் மகனே! - ஒரு கை முகன் தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன், நான். |
7 |
முருகனே, செந்தில் முதல்வனே, மாயோனின் மருமகனே, ஈசனின் மகனே, ஒரு கை ஆனைமுகனின் தம்பியே, உன் தண்டை (கழல்) அணிந்த கால்களைஐ நம்பிநே எப்பொழுதும் தொழுகின்றேன்.
காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால், ஆர்க்குப் பரம் ஆம் அறுமுகவா! - பூக்கும் கடம்பா! முருகா! கதிர் வேலா! நல்ல இடம்காண்; இரங்காய், இனி! |
8 |
காக்கக் கடமைப்பட்ட நீ காப்பாற்றாமல் இருந்தால் நான் யாரைப் பரம்பொருளாகக் கொள்வேன். ஆறுமுகவா, பூக்கும் கடம்பை அணிந்தவனே, முருகா, கதிர்வேலா, நல்ல இடம் கண்டு இனிமேலாவது இரக்கம் காட்டு.
பரங்குன்றில் பன்னிரு கைக் கோமான்தன் பாதம் கரம் கூப்பி, கண் குளிரக் கண்டு, - சுருங்காமல், ஆசையால், நெஞ்சே! அணி முருகு ஆற்றுப்படையைப் பூசையாக் கொண்டே புகல். |
9 |
நெஞ்சே, பரங்குன்றில் இருக்கும் பன்னிருகைக் கோமானின் திருவடிகளைக் கண் குளிரக் கண்டதனோடு விட்டுவிடாமல் திருமுருகாற்றுப்படையை பூசைப் பாடலாகக் கொண்டு சொல்லிக்கொண்டே இரு.
நக்கீரர்தாம் உரைத்த நல் முருகு ஆற்றுப்படையை தற்கோல, நாள்தோறும் சாற்றினால், - முன் கோல மா முருகன் வந்து, மனக் கவலை தீர்த்தருளி, தான் நினைத்த எல்லாம் தரும். |
10 |
நக்கீரர் உரைத்த திருமுருகாற்றுப்படையை தன் கோலம் எனக் கொண்டு நாள்தோறும் சொல்லிவந்தால், முருகன் முன்னே வந்து, மனக்கவலையைத் தீர்ப்பதோடு மட்டுமல்லாமல் அவன் நினைத்த எல்லா நன்மைகளையும் தருவான்.
*-*-*-*-*
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு, தோன்றும், இலக்கியங்கள், முருகா, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, முருகன், முன், குளிரக், பரங்குன்றில், கண்டு, பூக்கும், நல்ல, நெஞ்சே, முருகு, நாள்தோறும், வந்து, உரைத்த, கொண்டு, காக்கக், திருமுருகாற்றுப்படையை, நினைத்த, முதல்வனே, நெஞ்சில், கால், வேல், ஆறுமுகம், சங்க, முகம், ஓதுவார், தரும், தம்பியே, எப்பொழுதும், மகனே, முருகனே, கவலை, நான்