திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு
வலைவயின் உயரிய பலர்புகழ் திணிதோள் உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும் |
வெள்ளைக் காளைமாட்டுக் கொடியை வெற்றிச் சின்னமாக உயர்த்திப் பிடித்துக் கொண்டிருப்பவன் சிவபெருமான். பலரும் புகழும் அவனது வலிமை மிக்க தோள்களில் ஒன்றை அவன் மனைவி விரும்பிப் பெற்று விளையாடுகிறாள். அவன் மூன்று கண் கொண்டவன். விண்ணில் பறக்கும் மூன்று கோட்டைகளை அரசோடு அழித்தவன்.
நூற்றுப்பத்துஅடுக்கியநாட்டத்துநூறுபல் | 155 |
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத் தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும், |
இந்திரன் ஆயிரம் கண்ணை உடையவன். நூற்றூக் கணக்கான வேள்விகளில் வெற்றி கண்டு நான்கு தந்தம் கொண்ட யானையைப் பெற்று அதன்மீது ஏறி அழகொளி வீசிக்கொண்டு செல்பவன். அவனது யானையின் துதிக்கை மிகவும் நீளமாகத் தாழ்ந்திருக்கும்.
பிரமனுக்காகத் திரண்டு வந்த தேவர்கள்
நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய . | 160 |
உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப் பலர்புகழ் மூவரும் தலைவ ராக |
திருமால், சிவன், இந்திரன், பிரமன் என்போர் நான்கு பெருந்தெய்வங்கள். திருவாவினன்குடியில் இவர்களுக்குக் கோயில்கள் இருந்தன. பலராலும் புகழப்படும் மேலே சொன்ன நால்வரும் ஒத்த கருத்துடையராய் உலகினைக் காப்பாற்றி வருகின்றனர். இவர்கள் தலைவர்கள்.
ஏமுறு ஞாலந் தன்னில் தோன்றித் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக ஒருவற் சுட்டிக் காண்வர |
165 |
நான்முகன் என்னும் பிரமன் உலகில் திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றியவன். காலத்தைப் படைத்தவன். ஆதலால் அவன் ஊழிமுதல்வன். இவனைச் சுட்டிப் பெயர் சொல்லி அழைத்தனர். இவன் வந்தான். இவனது மேற்பார்வையில் பழனியில் முருக வழிபாடு நடை பெற்றது.
பகலிற் றோன்றும் இகலில் காட்சி நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர் |
தேவர்கள் வருகின்ற காட்சி
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத் |
170 |
தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய உறுகுறை மருங்கிந்தம் பெறுமுறை கொண்மார் அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத் |
முருகன் மடந்தையோடு வீற்றிருத்தல்
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் | 175 |
ஆவினன்குடி அசைதலும் உரியன்: அதான்று, |
அவனைக் காண வருவோர் பாகுபாடோ வேறுபாடோ இல்லாமல் ஒன்றாகக் கூடிக் கண்டு களித்தனர். முருகனும் பாகுபாடோ வேறுபாடோ இல்லாமல் காட்சி தந்து கொண்டிருந்தான். மக்களிடம் நால்வேறு இயற்கைப் பாங்குகள் உண்டு. (மனம், மொழி, செயல், இயல்பு – என்பன அவை.) 11 வகைத் தேவர் (மருத்துவர்), 18 வகைத் தேவர் என்னும் பாகுபாடுகளும் உண்டு. எல்லாருமே உயர்நிலை உலகம் பெறுவதற்காக வானத்தில் மீன் பூத்திருப்பது போல் தோன்றி மருகனை வழிபட்டனர். இவர்கள் காற்றைப்போல் விரைந்து செல்லக் கூடியவர்கள். தீயைப்போல் அழிக்கும் திறம் பெற்றவர்கள். முருகன் பெயரை மின்னலில் தோன்றும் இடியைப்போல் முழங்கினர். வரிசை முறையில் காத்திருந்து தம் குறையைச் சொல்லி வரம் பெற வேண்டி அந்தரத்திலும் சுழன்று வந்து கொண்டிருந்தனர். இவர்களுக்கெல்லாம் தன் மனைவியோடு காட்சி தந்தவண்ணம் மருகன் ஆவினன்குடியில் சிலநாள் அசைந்தாடும் உரிமையும் உடையவன். அதுவன்றி…
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு, காட்சி, தன்ன, இலக்கியங்கள், அவன், திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, உயர்நிலை, இயற்கைப், சொல்லி, நால்வேறு, வேறுபாடோ, வகைத், தேவர், உண்டு, இல்லாமல், பாகுபாடோ, என்னும், முருகன், பிரமன், பெற்று, மூன்று, அவனது, செல்வனும், சங்க, பலர்புகழ், இந்திரன், உடையவன், உலகம், இவர்கள், தேவர்கள், நான்கு, கண்டு, தாவில்