பொருநராற்றுப்படை - பத்துப்பாட்டு
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல் நறும்பூங் கண்ணி குறவர் சூடக் கானவர் மருதம் பாட அகவர் |
220 |
நீனிற முல்லைப் பஃறிணை நுவலக் கானக் கோழி கதிர் குத்த மனைக் கோழி தினைக் கவர வரை மந்தி கழி மூழ்க கழி நாரை வரை யிறுப்பத் |
225 |
தண் வைப்பினா னாடு குழீஇ மண் மருங்கினான் மறு வின்றி ஒரு குடையா னென்று கூறப் பெரி தாண்ட பெருங் கேண்மை அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல் |
230 |
அன்னோன் வாழி வென்வேற் குருசில் |
பண் பாடுவதிலும் மயக்கம் நேரும். நெய்தல் நிலத்துப் பரதவர் குறிஞ்சிப்பண் பாடுவர். குறிஞ்சி நிலத்துக் குறவர் நெய்தல் பூவைச் சூடுவர். முல்லை நிலத்துக் கானவர் மருதப்பண் பாடுவர். பாலை நிலத்து அகவர் முல்லைத்திணைப் பண்ணைப் பாடுவர். கானக்கோழி மருத நிலத்து நெற்கதிர்களைக் குத்தித் தின்னும். மருத நிலத்து மனைக்கோழி முல்லை நிலத்துத் தினைக்கதிர்களைக் கவர்ந்துண்ணும். மலையில் வாழும் மந்தி கடலோர உப்பங்கழிகளில் குளிக்கும். உப்பங்கழி நாரை மலைமரங்களில் இருக்கும். இப்படி எங்கும் நீரின் தண்மை-வளம் மிக்க நாடு காவிரி நாடு. மண்ணின் தண்மையால் மறு இல்லாதது. காவிரி நாடு என்னும் பெயரோடு அது ஒன்றுபட்டிருந்தது. இதனை நட்பும் அறனும் பூண்டு ஒருகுடைக்கீழ்ச் செங்கோல் செலுத்திக் கரிகாலன் ஆண்டு வந்தான். அவன் வாழ்க.
காவிரியின் வெள்ளச் சிறப்பு
மன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மாண் எல்லை தருநன் பல்கதிர் பரப்பிக் குல்லை கரியவுங் கோடெரி நைப்பவும் அருவி மாமலை நிழத்தவு மற்றக் |
235 |
கருவி வானங் கடற்கோள் மறப்பவும் பெருவற னாகிய பண்பில் காலையும் நறையும் நரந்தமு மகிலு மாரமும் துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகி நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும். |
240 |
புனலாடு மகளிர் கதுமெனக் குடையக் |
காவிரி நாட்டு வயல் வளம்
கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து சூடுகோ டாகப் பிறக்கி நாடொறும் குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும் |
245 |
சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கு நாடுகிழ வோனே |
கரிகாலன் வெற்றிவேல் வேந்தனாகப் பகைமன்னர் நடுங்க ஆட்சி புரிந்துவந்தான். பகல் தரும் சூரியன் போல் அறத்தையும் தோழமையையும் பரப்பிக்கொண்டு ஆண்டுவந்தான். முல்லை நிலத்தில் குல்லைப் பூக்கள் கரிந்து போகவும், மலைகள் தீப்பற்றி எரியவும், மலையருவிகள் வறண்டுபோகவும், மேகத் தொகுதி கடல்நீர் மொண்டுசெல்வதை மறந்துபோகவும் பெரியதோர் வறட்சி எய்திய காலத்திலும் காவிரியில் வெள்ளம் வரும். நறை, நரந்தம், அகில், ஆரம் முதலான மரங்களைக் கருவாகக் கொண்டு சுமந்துவந்து காவிரித்தாய் துறைகண்ட இடங்களிலெல்லாம் கருவுயிர்த்துச் செல்வாள். நுரை பொங்க ஓசையுடன் காவிரி பாயும்போது மகளிரின் புனலாட்டு நிகழும். உழவர் கூனியிருக்கும் அரிவாளால் வயலில் நெல் அறுக்கவும் கட்டுக் கட்டிக் களத்தில் மலைபோல் குவிக்கவும், குறைவில்லாத நெற்குப்பையை மூட்டைகளாகக் கட்டி ஆங்காங்குள்ள பாதுகாக்கும் இடமெல்லாம் கிடத்தி வைக்கவும், சாலி என்னும் நெல் சிறை வைக்கப்பட்டுக் கிடக்கும் பாதுகாப்பு மிக்க வேலிதான் காவிரி புரக்கும் நாடு. வேலி என்பது நில அளவை. ஒருவேலி நிலத்தில் ஆயிரம் மூட்டை நெல் விளைச்சல் காணும் வளமுள்ளதாகக் காவிரியாறு அந்தாட்டைப் புரந்துவந்தது. அந்த நாட்டை ஆளும் உரிமை பூண்டவன்தான் சோழன் கரிகாற் பெருவளத்தான்.
பொருநராற்றுப்படை முற்றிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொருநராற்றுப்படை - பத்துப்பாட்டு, காவிரி, இலக்கியங்கள், பொருநராற்றுப்படை, நாடு, பாடுவர், முல்லை, நிலத்து, நெல், நெய்தல், பத்துப்பாட்டு, என்னும், சாலி, ஆயிரம், நிலத்தில், வேலி, மிக்க, கிடக்கும், கரிகாலன், நிலத்துக், குறவர், பரதவர், குறிஞ்சி, சங்க, கானவர், அகவர், மருத, நாரை, மந்தி, கோழி, வளம்