பொருநராற்றுப்படை - பத்துப்பாட்டு
மண்ணமை முழவின் பண்ணமை சீறியாழ் ஒண்ணுதல் விறலியர் பாணி தூங்க |
110 |
மகிழ்ப்பதம் பன்னாட் கழிப்பி யொருநாள் அவிழ்ப்பதங் கொள்கென் றிரப்ப முகிழ்த்தகை முரவை போகிய முரியா அரிசி விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல் பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப. |
115 |
அயின்ற காலைப் பயின்றினி திருந்து |
மண்ணல்.என்பது குளித்தல். மண்ணுமங்கலம் என்னும்போது இப்பொருள் தருவது காண்க. அடித்தாலும் மண்ணும் முழவை முழக்கினோம். சீறியாழ் என்பது ஏழு நரம்புகள் கொண்டது. நரம்பு எண்ணிக்கையில் சிறிய யாழில் பண்ணமைத்துப் பாடினோம். முகவெட்டுள்ள விறலியர் பாடலின் பாணிக்கேற்ப ஆடினர். இப்படி மயங்கிய பதத்தில் பலநாள் கழித்தோம். ஒருநாள் மடைமாற்று நாளாக அமைந்தது. அன்று புலால் உணவை மாற்றிக் காய்கறி உணவைத் தரலானான். முரியா அரிசியில் புழுக்கிய பதமான சோறு அவிழ்ந்நிருந்தது. இதனை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அவன் கெஞ்சினான். புலாலைப் பிடிக்கக் கைவிரல் மூடும். சோற்றை அள்ள இப்போது கைவிரல்கள் நிமிர்ந்து அவிழ்ந்தன. கருனைக் கிழங்குப் புளிக்குழம்பு மிதக்குமாறு ஊற்றப்பட்டிருந்தது. சோறும் குழம்பும் அயின்றோம். பின் பலரோடும் பயின்று அளவளாவிக் கொண்டு இனிதிருந்தோம்.
கொல்லை உழுகொழு ஏய்ப்பப் பல்லே எல்லையு மிரவும் ஊன்றின்று மழுங்கி உயிர்ப்பிடம் பெறாஅ தூண்முனிந் தொருநாள் |
ஊருக்குச் செல்லப் பரிசிலன் விரும்புதல
செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய | 120 |
செல்வ சேறுமெந் தொல்பதிர் பெயர்ந்தென மெல்லெனக் கிளந்தன மாக, வல்லே |
அரசன் பிரிய மனமின்றிப் பரிசு வழங்கி அனுப்புதல்
அகறி ரொவெம் ஆயம் விட்டென சிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு |
கொல்லை என்னும் புன்செய் நிலத்தை உழும் கொழுவைப் போல எங்களின் பல்லானது இரவும் பகலும் புலால் உணவைத் தின்று தின்று மழுங்கிப் போயிற்று. மூச்சு முட்ட முட்ட உணவைத் தின்று விட்டோம். அதனால் உணவைக் கண்டாலே வெறுப்பால் கோவம் வந்தது. எனவே ஒருநாள் வாய் திறந்து சொல்லி விட்டோம் “உன்மீது சினந்தெழுந்த பகைவரின் திறைப்பொருள் உனது துறையெல்லாம் பரந்து கிடக்க வைத்திருக்கும் செல்வத் திருமகனே. நாங்கள் எங்களது சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்கிறோம்” – என்று மெதுவாகச் சொன்னோமாக… “எம் தோழமையை விட்டுச் செல்கிறீர்களா” என்று சொல்லிச் சினங்கொண்டவன் போலப் பார்த்தான்.
துடியடி யன்ன தூங்குநடைக் குழவியொடு | 125 |
பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத் தன்னறி யளவையின் தரத்தர யானும் என்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண்டு இன்மை தீர வந்தனென், வென்வேல் |
உடுக்கு போல் அடி வைக்கும் குட்டியானையோடும், பெண்யானையோடும் சேர்ந்து நிற்கும் ஆண்யானை என்று பலவற்றையும் கொண்டுவந்து நிறுத்தினான். வேண்டியவற்றைக் கொண்டு செல்லுங்கள் என்றான். அவனுக்குத் தெரிந்த எண்ணிக்கை அளவில் அவன் மேலும் மேலும் கொண்டு வந்து நிறுத்தினான். எங்களது தகுதியை நாங்கள் அளந்து பார்த்துக் கொண்ட நிலையில் வேண்டுவனவற்றை மட்டும் கொண்டுவந்து விட்டோம். எங்களது வறுமை தீரும் அளவுக்குக் கொண்டுவந்து விட்டோம்.
கரிகால் வளவனது சிறப்புக்கள்
உருவப் பஃறேர் இளையோன் சிறுவன் | 130 |
முருகற் சீற்றத் துருகெழு குருசில் தாய்வயிற் றிருந்து தாய மெய்தி எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச் செய்யார் தேஎம் தெருமரல் கலிப்பப் பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி |
135 |
வெல்வெஞ் செல்வன் விசும்புபடர்ந் தாங்குப் பிறந்துதவழ் கற்றதற் றொட்டுச் சிறந்தநன் னாடுசெகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப |
சோழர் அரசியலில் செல்வாக்குப் பெற்றிருந்த நலங்கிள்ளியின் கால்வழிக்கூட காணமுடியும். இதனால் தாய்வயிற்றில் இருக்கும்போதே கரிகாலன் அரசுரிமை பெற்றவனாக விளங்கினான். இவன் முருகனைப் போன்ற அழகும் பகைவரை அழிக்கும் சினமும் கொண்டவன். அதனால் இவன் தாக்காமலேயே இவனது பகைமன்னர் பலர் இவனுக்கு அடிபணிந்து இவன் சொன்னதை யெல்லாம் கேட்டனர்.இவன் அருள் செய்யாத நாடுகள் குழப்பத்துக்கு உள்ளாயின. கடலில் தோன்றி ஒளி வீசிக்கொண்டு வானத்தில் உலாவும் கதிரவனைப்போல இவன் பிறந்து தவழக் கற்றது முதலே தன் நாட்டைத் தன் தோளில் சுமக்க வேண்டியதாயிற்று.இப்படிச் சுமக்கும் குழந்தை யாகவே இவன் வளர்க்கப் பட்டான்.
வெண்ணிப் போர் வெற்றி
ஆளி நன்மான் அணங்குடைக் குருளை மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி |
140 |
முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத் தலைக்கோள் வேட்டங் களிறட் டாஅங்கு இரும்பனம் போந்தைத் தோடுங் கருஞ்சினை அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும் ஒங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த |
145 |
இருபெரு வேந்தரு மொருகளத் தவிய வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாட் கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன் தாணிழல் மருங்கி னணுகுபு குறுகித் தொழுதுமுன் னிற்குவி ராயிற், பழுதின் |
150 |
இந்த நூலின் தலவன் பெயர் கரிகால்வளவன் என்று இங்குக் குறிப்பிடப்படுகிறான். ஆளும் விலங்கு ஆளி. ஆளியின்வழி வந்தது அரிமான் என்று போற்றப்படும் சிங்கம். ஆளியை நன்மான் என்று பாடல் குறிப்பிடுகிறது. அதன் குட்டிகூட விலங்குகளை வருத்தும். பால் குடிக்கும் ஆளிக்குட்டி ஞெரேர் எனப் பாய்ந்து முதன் முதலாக வேட்டைக்குச் செல்லும் போதே யானையை அழிப்பது போலக் கரிகாலன் வெண்ணி என்னுமிடத்தில் நடந்த போரில் இருபெரு வேந்தரையும் வென்றான். பனந்தோட்டு மாலை அணிந்த சேரனையும், வேப்பந்தழை மாலை அணிந்த பாண்டியனையும் ஆத்தி மாலையைச் சூடிய கரிகாலன் வென்றான். அப்போர்க்களத்திலேயே சேரனும் பாண்டியனும் மாண்டனர். வெற்றிகண்ட கரிகால்வளவனைத் தொழுது அவன்முன் நிற்பீர் ஆயின்,
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொருநராற்றுப்படை - பத்துப்பாட்டு, இவன், இலக்கியங்கள், விட்டோம், உணவைத், கொண்டு, பொருநராற்றுப்படை, கொண்டுவந்து, எங்களது, தின்று, கரிகாலன், பத்துப்பாட்டு, மாலை, அணிந்த, வென்றான், யளவையின், நிறுத்தினான், நன்மான், மேலும், இருபெரு, கரிகால், முட்ட, போகிய, முரியா, விறலியர், சீறியாழ், சங்க, என்பது, ஒருநாள், அதனால், வந்தது, தெவ்வர், அவன், புலால், நாங்கள்